விமர்சனம் பார்த்து கதை படிக்க ஆரம்பிச்சேன்...ஆரம்பித்திலேயே புதுமணப்பெண் இறப்பு உடனேயே மறுமணம் மகாவின் பேச்சு என்று கதையின் போக்கு இருந்தப்ப அஷோக்கின் வரவு என்ன பிரச்சனை என நிமிர்ந்து உட்கார வைக்கிறது...பாண்டியன் எதையோ மறைக்கிறார் என கண்டுபிடிப்பதிலும் சரி மகாவிடம் பொறுமையாக இருந்து பின் அதிரடியாக மாறுவதிலும் சரி ஈஸ்வர் ஸ்கோர் செய்கிறான்?....ஏதோ அவனுக்கு பிடிக்கும்றதுக்காக போனா போகுதுனு மகாவை ஏத்துக்கிறோம்..என்னா வாய்?...எல்லாம் இந்த பாண்டியன் கொடுத்த செல்லம்?...அஷோக்கிற்கும் அவன் கூட்டாளிக்கும் மகாவே தண்டனை கொடுத்தது நல்லா இருந்தாலும் கொஞ்சம் பயமாவும் இருந்தது...ஏதாவது பிரச்சனை வந்தா இவள் தான தண்டனை அனுபவிக்கனும்...நிவேதா அனிதாக்கு நடந்த மாதிரினு இல்லாம தானா போய் வலைல சிக்கி இக்கட்டில் மாட்டி உயிரை மாய்த்துக் கொள்ளுவதும் நடக்கிறது..இதற்கெல்லாம் எப்போது விடிவு காலமோ...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.