தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 042ன் உன் சுவாசம் என் மூச்சில் எனது பார்வையில். எழில்விழி தனக்கு விருப்பம் இருந்தாலும் பெற்றோரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு வாழும் பெண். தன்னுடைய விருப்பத்தை நடத்திக் கொண்டு வாழும் கதிரவன். இருவரின் திருமணம் நடைபெறுகிறது. ஆணாதிக்க சிந்தனை கொண்ட கதிரவனின் குணம் எழில்விழியை பயம் கொள்ள வைக்கிறது. தன் அம்மா மற்றும் அண்ணி விழியை சிரமப்படுத்துவதால் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுகிறான். ஆனாலும் அவன் அவளை அவள் எண்ணப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். விழி அவனிடம் பயப்படவும் செய்கிறாள் அவனை மிகவும் விரும்பவும் செய்கிறாள். கதிரவன் அவளை விரும்புவதை உணராமல் இருந்தாலும் அவளுக்காக எல்லாம் செய்கிறான். இப்படி முரண்பாடுகள் இருந்தாலும் இரண்டு குழந்தைகளின் பெற்றோராக வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இந்த மாதிரி சரிசெய்து சமாதானமாக வாழும் தம்பதிகள்தான் நம்மில் அதிக சதவீதம். அழகாக யதார்த்தமான கதையை யதார்த்தமான நிகழ்வுகளுடன் தந்திருக்கிறார் எழுத்தாளர். இன்னும் எபிலாக் இருக்கிறது. வாழ்த்துகள்.