Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-03

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-03

“உன் பார்வையில் கலந்தேனே..

உன் மூச்சியில் பறந்தேனே...

உன் இதழ் உரசியதில் கரைந்தேனே...”

காலேஜ் முடிந்தவுடன் , அசோக், “மச்சான் அங்க பாரு தேனு யார்கூட பேசீட்டு இருக்கா”...

இனியன் அந்தபக்கம் பார்வையை வீசினான், நவின்ராஜ்யுடன் தேனு பேசியபடி நடந்து வந்தாள்...” இன்னிக்கு கார் வரல பஸ்ஸல தான் போனும் நவின்”...

“இன்னைக்கு என்கூட கார்ல வாங்க தேனு, நான் டராப் செய்யறேன்.”

சரி என்று தலையை அசைத்தாள், அவர்களை தாண்டி போகும் போது...”ஏய் தேனு இங்க வா “என்று இனியன் அதட்டி கூப்பிட்டான்...

இருவரும் இனியனிடம் வந்தார்கள், “நவினை பார்த்து உன்ன கூப்பிட்டனா, நீயா தேனு” ...நவின் அவனை பார்த்து முறைக்க..

அதற்குள் அசோக், “டேய் என்ன முறைப்பு அவனுடைய அத்தை பொண்ணு, அவளை கூட்டிட்டு போகதான் நிற்கிறான்...நீ வேலையை பார்த்துட்டு கிளம்பு... ஹாங் நம்ம கூட்டுற ஆயம்மாவுக்கு பஸ் வரலையாம், அவங்களுக்கு கம்பனி கொடு என்ன”...

“போடா ராசா.. உன் நடப்பை எங்ககிட்ட காட்டாதே”, இனியன் கலாய்க்க..

“ச்சே யூ ஸ்டூப்பிட் பாயிஸ்.. தேனு நாளைக்கு பார்க்கலாம்..பாய்..”

“ஓகே பாய் நவின்”...

“ஏய் இது நம்ம ஊரு நினைச்சிட்டு இருக்கீயா... இங்கபாரு ஏமாத்திடுவாங்க... அதுவும் இந்த எருமை சரியில்ல புரியுதா..அவன் கூட போறேன் சொல்லுற... இந்த மகாராணியை தனியா விட்டு அங்க மொத்தம் குடும்பமும் என்ன பண்ணுது... பாசக்காற குடும்பம் ஆச்சே..”

முகத்தை தொங்கப்போட்டு நின்றாள்.. “சரி கால் டாக்ஸி பிடிச்சி தரேன்..நீ போ”...

“கால் டாக்ஸியில போக கூடாதுன்னு அத்தை சொல்லுச்சு..”.

“யாரு உங்க சூர்பனகை அத்தையா... “

ஆமாம்..

“அதுக்கு எங்க மூளையிருக்கு...அப்போ ஆட்டோ பிடிச்சி தரவா..”

“வேணாம்.. நான் உன்கூடதான் வருவேன்..”, என்று பிடிவாதமாக நின்றாள்.

“என்னது.. பார்த்தீயா அசோக் , இவ எப்படி ப்ளான் போடுறா..ஏய் கிளம்புடி ஆட்டோ பிடிக்கிறேன்.. “

“எங்க பாட்டிம்மா ஆட்டோல வரக்கூடாது சொல்லுச்சு... அழகான பொண்ணா இருந்தா கடத்திட்டு போயிடுவாங்களாம்.. “

“அப்பறம் அங்க இனியன்னு இளிச்சவாயன் இருக்கான் அவனோட வந்துருன்னு சொல்லுச்சா... “

அமைதியா இருக்க, “டேய் மச்சான் டைம் ஆகுதுடா“, அசோக் வாட்சை பார்த்து சொல்ல...

இவளை எப்படி இங்கே விட்டுபோறது... “ இங்க பாரு இரண்டு பக்கம் காலைபோட்டு உட்கார கூடாது. அப்பறம் மேல கையை வைக்க கூடாது ஓகேன்னா கூட்டிட்டு போறேன்..முக்கியமான விஷியம் , எனக்கு உன்ன புடிக்காது, இது ஒரு சின்ன உதவி போன வாரம் கூட பர்ஸ்ட் இயர் ஷாலுவை கூட்டிட்டு போனேன்.. “

“டேய் இது எப்போடா இனியனை பார்க்க“, கண்ணடித்தான் இனியன்“

“ஆமாம்.. “

அசோக் அவன் பைக்கில் பின் தொடர... “எங்க வீடு இருக்கு சொன்னே.. “

“அது மாமா... “, அவள் இடத்தை சொல்ல ஆரம்பிக்க

“மாமா சொல்ல கூடாது உங்கம்மாகிட்ட சொன்னனே... சும்மா மாமா..மாமா.. அப்படியே நீ கூப்பிட உடனே மயங்கி விழுதுடுவேன் நினைக்காதே... நீ செஞ்சது ஏழ ஜென்மத்துக்கும் மறக்காது... “

“சாரி... டி.நகர் பக்கத்தில... “

“சரி வீட்டுக்கிட்ட டிராப் செய்ய மாட்டேன்“... தூரத்திலே நிறுத்திடுவேன்.. சைட் மிரர்ல் தேனுவை பார்த்தான்..அவள் அவனின் பின்னந்தலை, முதுகை பார்த்துபடி இருந்தாள்... இனியனுக்கு கூசியது அவளின் பார்வை..

“மாமா வண்டியை நிறுத்துங்க“... இவள் இப்படி சொன்னவுடன் வண்டியை நிறுத்தினான்... பின்னாடியே வந்த அசோக்கும், “என்னடா நிறுத்திட்ட“...

“எனக்கு பஞ்சு மீட்டாய் வாங்கித்தாங்க மாமா“... அவளை எரிப்பதை போல முறைத்தான்...

“தேனு அவனுக்கு உன்னை பிடிக்காது அவன் வாங்கித்தரமாட்டான், இப்போதான் நீ குடிச்ச டீக்கு நான் பணம் கொடுத்தேன், அண்ணன் என்ற புல் ராய்ல்டி எனக்குதான் இருக்கு“... இருபது ரூபாய் எடுத்து பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்தான்..

“டேய் வேணாம்டா“, என்று இனியன் தடுக்க, “விடுடா தங்கச்சி இதுகூட செய்ய மாட்டேனா“...சரி கிளம்புவோம்...

சிறிது தூரம் சென்றவுடன்... “இங்கே விட்டுட்டு மாமா“ .. மெதுவாக அசோக் இனியனின் காதில், “ மச்சான் உன் தெரு முன்னாடியில்ல விட சொல்லுறா... “

ஆமாம், நீங்க எங்க இருக்கீங்க மாமா...

இதோ அந்த மாடியில்ல ஆரம்பிக்கும் போதே.. அவனை தடுத்து..ஹாங்.. “அது மடிப்பாக்கம் ரொம்ப தூரம்.. இப்போ போனாதான் ஐந்து மணிக்கு போய் சேருவோம்... “, கையிலிருந்த பஞ்சுமிட்டாயை பிரித்து கொஞ்சம் எடுத்து இனியன் முன்னாடியே சப்பை கொட்டி சாப்பிட்டாள்...பிறகு நாவில் பஞ்சை தடவினாள்.. இனியன் நோக்கி வர...

“ஏய் வேணா வராதடி“, இனியன் கத்த... அவன் முகத்தை கையால் பிடித்தால், அவள் எதற்கு வருகிறாள் என்று அறிந்த இனியன் தன் கையை எடுத்துபோய் அஷோக்கின் கண்ணை மூடினான்..அவன் திமிற இனியன் கண்ணத்தில் தன் இதழை அழுத்தி பதித்தாள்...

முத்தத்தின் ஒலியை கேட்டு அஷோக், இனியன் கையை எடுக்க தேனு இதழை அவனிடமிருந்து பிரித்து அவள் வீட்டை நோக்கி ஓடினாள் ... இனியன் அப்படியே வண்டியில் சிலைபோல் உட்கார்ந்திருக்க...

அந்த ஒரு நிமிடம் நிகழ்வு... “டேய் என்னடா நடக்குது..பிடிக்காது பிடிக்காது சொல்லிட்டு ரொமன்ஸ் சீனா நடக்குது... சின்னபையன்டா நான்... கெட்ட பசங்களா, எங்க பாட்டி அப்பவே சொல்லிச்சி... உன்கூட வச்சிக்காதன்னு.. “.

“மச்சான் எங்கடா அவ எவ்வளவு திமிறு இருந்தா...என்கிட்டவே வாலை ஆட்டுவா... “

“ஏன் அவளை கண்டுபிடிச்சி, இன்னொரு கண்ணத்தையும் காட்ட போறீயா... “

“மச்சான் எனக்கு தேனுவை பிடிக்காது“ ...இரண்டு கையால் காதை மூடிக்கொண்டான் அசோக்...

“தயவு செய்து அந்த வார்த்தை மட்டும் சொல்லாதடா...நீ அந்தியன் படத்தில வர விக்ரம விட பத்து ரெமோவா வரடா... அப்படியே சொக்கி நிற்கிற... உன்னனன.. “.

“நான் பஞ்சுமிட்டாய் வாங்கி தராதடா வார்ன் செஞ்சேன், நீயேன் வாங்கி தந்த... “

“அப்போ முன்னாடியே தெரியும்மா... “

ம்ம்... சட்டை நுனியை பிய்த்தப்படி , “அது சின்ன வயசில டாலியில்ல.. “

“டாலியா இன்னொரு பொண்ணா... “

“டேய் தேனுவை தான் சொன்னேன்.. நான் வச்ச பெயரு டாலி...அவளும் நானும் பஞ்சு மீட்டாய் சாப்பிட்டு இப்படிதான் லிப்ஸ் புல்லா ரோஸா ஆக்கிட்டு கிஸ் அடிச்சிப்போம்... “

“அடப்பாவி சின்ன வயசிலே காதல் மன்னன்“ ,

“அசோக் என் கண்ணத்தில அவ லிப்ஸ் பதிச்சிருக்கா பாருடா“... இனியன் கண்ணத்தை சாய்த்து காட்ட...

“த்தூ... வாயில நல்லா வருது... “

“சரி வாடா வீட்டுக்கு போய் சாப்பிட்டு போலாம் பவுனக்கா சூப்பரா சமைக்கிறாங்க... “

வீட்டை திறந்து உள்ளே சென்றார்கள்... டேய் , “என்னடா உன் துணியெல்லாம் துவைச்சி காயபோட்டிருங்காங்க.

“ஆமாம்டா ஜட்டி கூட துவைச்சிருக்காங்க... இனிமே அதையெல்லாம் செய்ய வேணாம் சொல்லனும்டா... நானே துவைச்சிக்கிறேன் பார்த்தா சொல்லு. “

சரி உட்காரு , கீழே உட்கார்ந்து சாப்பிடலாமா மச்சான்...

ம்ம் ... தட்டை தனக்கும் அசோக்கும் வைத்துவிட்டு , “சிக்கன் செஞ்சிருக்காங்கடா... எப்படியிருக்கு.. “

ஒரு வாய் சாப்பிட்டு செமையா இருக்குடா, “காரம் தூக்கலா..சூப்பர்டா. “ சாப்பிட்டு முடித்த பிறகு குரு நானா வீட்டிற்கு சென்றார்கள்... இனியன் உள்ளே நுழைந்தவுடன் அவனை பார்த்து முறைத்தபடி இருந்தான் தீபக் , குருமூர்த்தியோட மகன்...

அப்பா, “இந்த பண வசூல் செய்யற விஷியத்தை எங்கிட்ட கொடுங்க ஏன் மூனாவது ஆளு கையில் கொடுக்கிறீங்க.. “

“எனக்கு எல்லாம் தெரியும் தீபக் உன்னுடைய வேலை எதுவோ அதை பாரு... பாய் , இனியன் கொடுத்த பணத்தை வாங்கி உள்ளே வைங்க.. “.

இனியன் ஐம்பது லட்சம் பாயிடம் கொடுக்க..அதை பீரோவில் வைத்தார்..

“இனியா லாட்ஜ் போன மாசம் வசூல் வரல என்னவென்று பாரு... அப்பறம்

மனீஷ் சேட்டு இன்னும் வட்டி கொடுக்கல, நான்கு மாசமாயிடுச்சு... நோட்டிஸ் விடு... பிறகு வீட்டுக்கு போய் பார்க்கலாம்... “

சரிங்க நானா..தன் வேலையை முடித்துவிட்டு கிளம்பினான்... வெளியே வந்தபோது அங்கே இனியன் பிரண்டு குருவோட அடியாட்கள் சூழ்ந்து கொண்டனர்... மொத்தம் நான்கு சீனியர் ஆட்கள், கோட்டை மாரி, ரவி, கண்ணா, அகிலன் இவர்கள் சிறியவயதிலே நன்பர்களா இருந்தவர்கள்...

“டேய் இனியா, அசோக் சொன்னான்டா அத்தை பொண்ணாமே.. மச்சி எனக்கு காமிடா தங்கச்சியை பார்க்கனும்போல இருக்கு மாரி கேட்க... “ சீக்கீரம் மாப்பிள்ளை ஆக போற...அவனை தூக்கி சுத்தினர்..

“ச்சே அதெல்லாம் இல்ல மச்சான் , செட்டாகாது மாமாவுக்கும் எனக்கும் ஒத்துவராதுபா... அப்பறம் அவங்க ரொம்ப வசதியானவங்க... பெரிய ஆளாதான் மாப்பிள்ளையா பார்ப்பாங்க நன்பா.. “.

அதில் அகிலன், “இனியா உனக்கென்ன நீ அழகன்டா, அறிவானவன், எல்லோருக்கும் உதவும் குணம் இருக்கு.. உன்னை விட யாருடா பெரிய மாப்பிள்ளை... “

டேய் அண்ணாஸ், அசோக் எப்பவும் அப்படிதான் கூப்பிடுவான், “ இன்னிக்கே ஒரு சீன் ஒடிச்சி“... இனியன் அவன் வாயை பொத்த...ஏய் நான் சொல்லுவேன்... அண்ணா தேனு இவனுடைய கண்ணத்தில...அதற்குள் வாயை மூடிவிட்டான்...

இனியா என்னவோ நடந்திருக்கு ,ஏய்ய்ய் கத்த...

“ஐயோ உள்ளே குரு நானா இருக்காங்க நன்பா“, இனியன் அடக்கினான்..

“ஓகே இனியன் லவ்வுக்காக நாளைக்கு பார்ட்டி உண்டு...எல்லோரும் வந்திருங்கப்பா என் வீட்டுக்கு“ என்று ரவி சொன்னான்...

.......

ஒரு வாரம் சென்றது.... காலை 7.30 மணிக்கு, “இனியா எங்கயிருக்க பவுனு அக்கா வீட்டுக்கு வாடா“ என்று அசோக் போனை வைத்தான்...

அரைமணி நேரத்தில் வந்திருக்கினான் இனியன்.. “எதுக்குடா கூப்பிட்ட வேலையிருக்கில்ல... கிளாஸ் வேற போனோம்... “

ஒரு முக்கியமான விஷியம் பவுனக்காவ வந்து பாரு, உள்ளே அழைத்து சென்றான்... பவுன் காலில் கட்டுபோட்டு படுத்திருந்தார்...

“அக்கா என்னாச்சு“,

“பாத்ரூமில் விழுந்துட்டேன் தம்பி... நீங்க கேட்டுபோன அடுத்த நாளே விழுந்துட்டேன் தம்பி... எங்கவூட்டுக்காரர் சொல்ல மறந்துட்டாரு.. இன்னும் மூனு மாசம் ஆகும் தம்பி.. ஒருநாளாச்சு சமைச்சு போடனும் நினைச்சேன்... “

இனியன் அசோக் முகத்தை ஆச்சரியத்தோட பார்க்க.. “வா மாப்பிள்ள வெளியே, இங்க பேச வேண்டாம்.. “.

இருவரும் வெளியே வந்தனர்.. “அசோக் சீக்கீரம் வண்டியில் ஏறு... யாரோ வீட்டுக்கு வராங்க மச்சான்.. பைக்கை கிளம்பினான்.. “

“இனியா இந்த படத்தில வரமாதிரி பேய் வந்து எல்லா வேலையும் செய்யுதாடா... அதுவும் பார்க்க சும்மா தெலுங்கு ஹீரோ மாதிரி இருக்க... இதில் ஜட்டிவேற துவைச்சி போடுது... பாத்துடா இனியா உன்கூட மேட்டருக்கு அடிபோடுதா... “

“ச்சீ வாயை மூடு... நானில்லாத போது எவனோ என் வீட்டில் பார்ட் டைம்மா குடியிருக்கான்... முதல்ல வாட்ச்மேன் கிட்ட பேசனும்... “-இனியன்

------சிக்க வைக்கிறாள்
 
நல்லா இருக்கு
பஞ்சு மிட்டாய் முத்தம்
சின்ன வயதில் இருந்தே பழக்கம்

தேனு வந்து சமைக்கிறாளா
 
Top