தன் வீடு, கணவன் குழந்தைகள்ங்கிற சிறிய வட்டத்துக்குள்ள சிக்கிக்காம, இந்த பரந்த உலகத்துல பெண்கள் தனக்கான தனி முத்திரையோட சிறகை விரித்து பறக்கணுங்கிற கருத்தை சாலா, தேவி கதாபாத்திரங்கள் மூலமா அழகா அருமையா சொல்லிட்டீங்க ஆராதனா..
ஆமாம் பா நைட் படித்து விட்டு தூங்க முடியவில்லை. மனசு பாரமாக இருக்கு. அழுத்தமான கதையாக இருந்தால் பகல் ல எபி போடு பாநல்ல கதை. சிலர் வாழ்வில் நடந்த நடக்கின்ற கரு தான். எல்லோருக்கும் அவரவர் நியாயம் சரியே. ஆனால் சித்ராவை பாவம் போல காட்டியது தான் எனக்கு ஏற்ற கொள்ள முடியவில்லை. அக்கா கணவர்னு தெரிந்து தானே கட்டினாள். அதென்ன பிள்ளைகளைக்கு வேலை பார்க்க மட்டும் தேவி ஆனால் அவர்களை கண்டிக்கவோ கொஞ்சவோ கூடாதா. பிரகாஷ்க்கு இந்த தண்டனை தேவை தான். யாரும் இல்லாமல் தனிமை ஒரு கொடுமை என்றால் எல்லோரும் இருந்து தனிமை உயிர்க்கொல்லி தான். மணிமாறன் அமைதியா இருந்து நெஞ்சில் இடம் பிடித்தார். இனி இவ்வளவு அழுத்தமான கதை கருவா இருந்தால் இரவு எபி வேண்டாம். கொஞ்சம் இலகுவான கதைகளை தரலாமே இது என் விருப்பம் மட்டுமே அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்
நாம சிலர் பேர் ரிலாக்ஸாக தான் கதை படிப்போம் ஆனால் இந்த அழுத்தங்களை நமக்கு தாங்க முடியல. எனக்கு ஜாலி டைப் கூட்டு குடும்பமாக உறவுகளை வைத்து இது மாதிரி ஈசியான கதை தான் பா செட் ஆகும்ஆமாம் பா நைட் படித்து விட்டு தூங்க முடியவில்லை. மனசு பாரமாக இருக்கு. அழுத்தமான கதையாக இருந்தால் பகல் ல எபி போடு பா
வணக்கம் மக்களே! கதை முடிச்சாச்சு. இந்த கதையின் முடிவு சிலருக்கு வருத்தமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா, எனக்கு எதார்த்தத்தை மீறி கதை எழுத வராது. செயற்கையான ஒரு முடிவை கொடுக்க வராது. தொடர்ந்து என் கதை படிப்பவர்களுக்கு நான் எழுதும் வகை புரியும் என்று நினைக்கிறேன். எல்லா விமர்சனமும் பார்த்தேன். உண்மையில் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மன்னிக்கவும்அடுத்து ஒரு காதல் கதை தான். அழுத்தம் இருக்காது நம்பி வாங்க.