Yes. I too feel the same.
என்ற எண்ணமும் அதேதான் சிஸ்.
ஆத்தர் ஜீ இந்த ஸ்டோரியோட முடிவுரையை எப்படி கொண்டு போறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.
மொதல்ல வந்த கதைகள் எல்லாம் ஒருவித தாக்கம்னா இந்த ஸ்டோரில நம்பிக்கை துரோகம் தான் அதிகமா தென்படுது.
ஆனால் ஒன்னு, நம்ம சமூதாயத்துல ஆம்பளைங்க இப்படி ஒழுக்கம் தவறினால் அதை நியாயப்படுத்த ஆயிரம் சாக்கு சொல்லுவாங்க அவங்களும் அவங்களை பெத்தவங்களும்.
சின்ன வயசுக்காரன் என்றால் ஆம்பளைப்பிள்ள வயசு காலத்துல அப்படி இப்படி தான் இருப்பான் ஒரு கல்யாணம் ஆனா திருந்திடுவான் என்று சொல்லுவாங்க.
அப்புறமும் அவன் திருந்தலைனா அந்த மனைவி ஏதோ 'seductress' வேலையை சரியா செய்யாத மாதிரி இவளுக்கு அவனை இழுத்துப் பிடிக்க தெரியலைம்பாங்க. அதுவே அவன் அவ பேச்சுக்கு கட்டுப்பட்டா, புருஷனை படுக்கையில் மயக்கிட்டான்னு நா கூசாமல் பேசுவாங்க.
இப்படி விசாலாட்சி மாதிரி நடுத்தர வயது பிரச்சனைகளால கணவன் மனைவியோட உடலுறவில் தொய்வு ஏற்பட்டா, வீட்டுல கிடைக்கலைனா வெளிய சாப்பிடத்தானே செய்வான்னு நியாயப்படுத்துவாங்க.
இதுக்கெல்லாம் விமோச்சனமே கிடையாதான்னு தான் நினைக்கத் தோணுது.