தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை சித்ரா.வெ. இன் இதய வாசியே எனது பார்வையில். கணவனை திருமணம் செய்து சில வருடங்களில் கொரானாவில் இழந்த சிவமித்ரா சொந்த ஊரில் அரசு ஆசிரியர் பணி கிடைத்து தன் அம்மாவுடன் வருகிறாள். அவர்கள் வரும் நேரத்தில் அவள் திருமணத்திற்கு மறுத்து நிராகரித்த சக்திவாசன் திருமணம் நடக்க இருக்கிறது. இருவரின் குடும்பத்திற்கிடையில் நல்ல நட்பு இருந்தாலும் சிவமித்ராவின் திருமணத்திற்கு பிறகு விலகல் இருப்பதால் இருவரின் நிலையும் தெரியாமல் இருக்கிறது. முதலில் நிச்சயித்த திருமணம் மித்ரா வால் மறுக்கப்பட தடைபடுவது போல இரண்டாவதாக நிச்சயிக்கப்பட்ட திருமணமும் மணப்பெண்ணின் தற்கொலை முயற்சியால் தடைபடுகிறது. ஆனால் சக்தியின் அப்பாவால் அவனது திருமணம் குறித்த நேரத்தில் நடக்கிறது. திடீரென நடைபெற்ற திருமணம் வெற்றி பெற்றதா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். சக்தியின் காதல் மிகவும் விரும்பும் வகையில் இருக்கிறது. சக்தியின் குடும்பம் நேர்மறையாக இருப்பதும் நன்றாக இருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வும் கதையில் கொண்டு வந்திருப்பதற்கு பாராட்டுகள். வாழ்த்துகள் மா.