தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 031ன் அன்பில் இணைந்த இதயங்கள் எனது பார்வையில். கயல்விழி தனது அக்காவின் கணவரின் தம்பியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கெஞ்சி கேட்டதால் இரண்டு வீட்டிலும் சொல்லியதால் அவளால் அக்காவின் வாழ்வில் பிரச்சினை என்று அவளை வெறுத்து ஒதுக்கி வைத்த குடும்பத்தின் தொடர்பு இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் தனித்து வாழ்கிறாள். அங்கு ஒரு பிரச்சினைக்காக சந்திக்கும் காவல்துறை அதிகாரி சத்யாவை சந்திக்க நேரிடுகிறது. சத்யாவை கல்லூரியில் படிக்கும் பொழுது தோழிகளிடம் போட்ட சவாலின்படி அவனை காதல் செய்ய வைக்கிறாள். அவள் தன்னை காதலிக்கவில்லை என்று நினைத்து மனம் உடைந்த சத்யா வேறு கல்லூரிக்கு சென்றுவிடுவதாலும் அவன் மாமா அவளை அவனை பார்க்க தடை விதிக்க அவனை விட்டு விலகிவிடுகிறாள். உண்மையான காதல் கொண்ட சத்யா அவளை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் எழுத்தாளர். பெண் தனது திருமணம் பற்றிய விருப்பத்தை நேரிடையாக சொல்வது தவறான செயலாக பார்க்கும் நம் சமுதாயத்தின் பார்வையில் அந்தப் பெண் தன்னை உணர்ந்த பின்னும் அவளை தரக்குறைவாக பார்க்கும் உறவுகள். இவற்றை எல்லாம் சத்யாவின் அன்பால் கடந்து வருவது நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.