கவிதை தினமாமே
இவ்வளவு நாள் நீ கொடுத்த வலிகளைத் தாங்கிக் கொண்டேன்!
என்ன மிச்சமிருக்கிறது
இந்த வாழ்க்கையில்
வலியைத் தவிர?
அது காய்ந்து மலர்ந்து
உதிர்ந்து சருகாகும் வரை
நானும் கொஞ்சம் கொஞ்சமாக
உதிர்கிறேன் உனது சிரிப்பில்
09.12.2023
ஜானு முருகன்
அளவிட முடியாத நம்பிக்கை
அதீத நேசம்
அன்பின் பற்றுதல்
அலாதிப்பிரியம்
உன்னதமான பக்தனொருவன் கடவுளிடம்
கொண்டதைப் போலொரு
முக்திநிலை!
அதுவொரு உத்தமமான பரிபூரணம் - காதல்