வெற்றி, குழப்பத்துல, மன முதிர்ச்சி இல்லாம, தெரியாம ஒரு தப்பு செஞ்சுட்டான் தான்...ஆனா அவன் செஞ்ச தப்பை உணர்ந்து திரும்பி வரும் போது, பழசையே பிடிச்சுகிட்டு தொங்காம, சரண்யாவும் நிதர்சனத்தை புரிஞ்சுகிட்டு குழந்தைங்களுக்காக அவன் தப்பை மன்னிச்சு மனசார அவனை ஏத்துக்குறா... விட்டுக் கொடுத்து போறதுனால யாரும் கெட்டு போறதில்லை.. வெற்றி, மனைவிக்கு நல்ல கணவனா, தன்னோட கொஞ்சும் கிளிகளுக்கு நல்ல தகப்பனா மாறி, இழந்த தன்னோட சொர்க்கத்தை மீட்டு எடுத்துட்டான்...
வெற்றி கிளிகளுக்கு மட்டும் இல்லை நிஜமாவே ஹீரோ தான்.... அதிரடியா இல்லாம வெற்றியோட மாற்றம் இயல்பா இருந்தது.... தன்னோட தவறுகளை உணர்ந்து திருந்தி இப்போ ரொம்ப நிதானமா தெளிவா செயல்படுறான்.....
தனத்துக்கு செமயா பதில் குடுத்தான்..... ஆண்பிள்ளை மட்டும் தான் குழந்தையா என்ன....
சரண்யா சூப்பர் விட்டுக் குடுத்து வாழ்க்கையை வளமாக்கிகிட்டா.....
சூப்பர் எண்டிங்....
கடைசி வரை ஹீரோக்கு ரொமான்ஸ்க்கு வழி இல்லாம போச்சு....
கடைசில ஹனிமூன்க்கு குழந்தைங்களோட கிளம்பிட்டான்....