நல்ல பிள்ளைகளை பெத்து வச்சிருக்காரு அவரும் கூட இருந்து பாத்துக்கிட்ட பவிய விட பெத்த பிள்ளைங்களை பார்த்ததும் தான் இன்னும் தெளிவாகுறாரு பெத்த பாசத்துல பார்த்துக்கணும் இல்லை பெத்த கடமைக்காகவாது பார்த்துக்கணும் இதுங்க இரண்டுமே இல்லாமல் எப்படி இவரை தள்ளி விட்டுட்டு ஓட தயாரா இருக்குதுங்க
பவி உன்னை வளர்த்து ஆளாக்கி கல்யாணம் செஞ்சு வச்சிருக்காரு அதனால் அவரை பார்த்துக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கு ஆனால் உனக்கு மட்டும் தான் இருக்கு என்கிற மாதிரி அவங்க பேசும் போது அமைதியா போறது தப்பு
பவி இந்த மூதேவி பேச்சை கேட்டு உன் வாழ்க்கையை தொலைச்சிடாத உன் புருஷன் கிட்டயும் மாமியார் கிட்டயும் கலந்து பேசி முடிவெடு
அவர் பெத்ததுங்க எப்படி வேணா இருக்கட்டும் நீ அவரை நல்லா பாத்துக்கோ அதே நேரம் கல்யாண வாழ்க்கையும் சரியா கவனிச்சுக்கோ