அடேய் பூஜா புருஷா, குரு உன்னோட குழந்தை அவளோட பெரியம்மா மாதிரியே இருக்கறதா தானே சொன்னான். தன்னை மாதிரி இருக்கற மாதிரி ஒன்னும் சொல்லலியே, அப்புறம் எதுக்கு உனக்கு இவ்வளவு கோவம்? அதென்னேமோ அத்தை மாதிரின்னா மகிழற மனுஷங்க, பெரியம்மா/சித்தி மாதிரின்னா மட்டும் (அம்மாவின் சகோதரி) முகத்தை தூக்குறாங்க. என்ன அநியாயம் இது
மதிக்கு தான் இப்ப மதி கெட்டுப் போகுது. அவனுக்கு தெரியாதா அவன் வீட்டு ஆளுங்களுக்கு உதவணுமா வேண்டாமான்னு.
ஏம்மா மதி, உன்னை உன் மாமியாரும் மத்தவங்களும் selfish-ன்னு நினைக்கட்டும் இல்லை seafish-ன்னு தான் நினைக்கட்டும். அதையெல்லாம் நீ ஏன் மதிக்கணும்? உனக்கு certificate கொடுக்க முதலில் அவங்க worth- தான ஆளுங்களா? இல்லையே. அப்புறம் என்ன?