போடா..... போ...... உங்கப்பா, அவங்கப்பா இடையில என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று தெரியாமலே நீயும் உன் பங்குக்கு தெளிவில்லாமல் பேசி அவளை குழப்பிட்டு வா. வனிதா நிதிஷ் காத்துக்கொண்டு இருக்காங்க. இவளும் கிட்டத்தட்ட ஓகே சொல்ற அளவில் இருக்கா. அண்ணன் கல்யாணம் முடிந்து விட்டது ; உன்னை கல்யாணம் பண்ண ஆசை. உனக்கு சம்மதமா என்று தேங்காய் உடைத்த மாதிரி கேளுடா . இப்ப விட்டா அவ்ளோதான். கனவு மட்டும்தான் உனக்கு . நிதிஷ் க்கு அவளை கல்யாணம் செய்துடுவாங்க.