தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 028ன் மாசறு கண்ணே வருக எனது பார்வையில். சிவன்யா மற்றும் அவள் அக்கா பார்கவி இருவரின் அப்பா ஒரு வழக்கில் சிக்குவதுடன் அவர்களின் அம்மா குடும்பம் அதில் பாதிப்பை அடைந்து சொத்துக்களை இழந்து இருக்கும் நிலையிலும் மாமாக்கள் இருவரும் சகோதரியின் மகள்களை தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொள்கிறார்கள். சிவன்யா பெரிய மாமா வீட்டில் இருக்கும் அவள் மாமாவின் பெரிய மகன் சர்வாவின் மீது ஈர்ப்பும் சின்ன மகன் சதாவை அண்ணன் என்றும் அழைக்கப்படுகிறாள். இருவரின் அம்மா வேணியின் அண்ணன் மகள்களை திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள். சில பிரச்சினைகளுக்கு பிறகு சர்வா மற்றும் சிவன்யா திருமணம் நடக்கிறது. அக்கா பார்கவியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ருத்ரா அவர்கள் சூழ்நிலையை பயன்படுத்தி குறைவான தொகைக்கு அவர்களின் சொத்துக்களை வாங்கிய குடும்பத்தின் வாரிசு என்பதால் அவனுக்கு பெண் கொடுக்க விரும்பாத மாமன்கள். அத்தை வேணியின் அண்ணி கனகாவின் அலட்டல் என்று கதைக் களம் செல்கிறது. நல்ல குடும்பக் கதையில் காதல், சண்டை சச்சரவுகள் என்று விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். கதாபாத்திரங்கள் யதார்த்தமாக இருக்கிறது. வாழ்த்துகள்.