தோகை 5:
“வணக்கம்..” என்றனர் அந்த இயக்குனரும்,உதவி இயக்குனரும் மகா லிங்கத்தைப் பார்த்து.
“வணக்கம்..!” உட்காருங்க..!” என்றவர்....
“குப்பாயி..வந்திருக்கவங்களுக்கு குடிக்க கொண்டு வாமா...!” என்று சொல்லிவிட்டு அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கும்...சக்தி தன்னுடைய அறையில் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
அரக்கு பச்சை நிற தாவணியில் வந்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் அந்த உதவி இயக்குனர்.
“வாவ்...வாட் அ பிகர்...இந்த வில்லேஜ்ல இப்படி ஒரு அழகான பொண்ணா..?” என்று அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க...
அவனின் பார்வையைப் பார்த்த டைரக்டர்...அவனை கையால் இடித்தபடி...”யோவ்..நாம வந்த வேலையென்ன..நீ பார்க்குற வேலையென்ன..?” என்று கடிய...
“சாரி சார்..” என்றபடி தலையைக் கவிழ்ந்தான் அவன்.அவன் தான் மகேஷ்.
“என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்க..?” என்றார் மகாலிங்கம்.
“நாங்க இங்க ஷூட்டிங்க்காக வந்திருக்கோம்..!” என்று டைரக்டர் சொல்ல...
“தெரியும்ப்பா...கேள்விபட்டேன்..எங்க ஊரை நல்லா அழகா காட்டுங்க..!” என்றார் அவரும் அவர் பங்குக்கு.
“கண்டிப்பாங்க...! இப்ப பிரச்சனை என்னன்னா...இங்க சாமிக்கண்ணு வயல்ல ஷூட்டிங் எடுக்குறதா இருந்தது....ஆனா இப்போ அங்க எடுக்க முடியாத சூழ்நிலை....அதான் உங்க வயல்ல எடுக்க அனுமதி கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும்...” என்று டைரக்டர் சொல்ல வந்ததை சொல்ல...
அவர் சொல்லியதை உள்வாங்கியவர்....”நீங்க கேட்குறது புரியுது...ஆனா இதில் நான் ஒன்னும் செய்ய முடியாது....ஏன்னா அதையெல்லாம் பாத்துக்கறது என் மகள் தான்..அதனால் அவள் தான் சொல்லணும்..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க...
அவளோ...காலையில் தன்னை வம்பிளுத்தவன்..இவனாக இருக்குமோ என்ற ஆராய்ச்சியில் இறங்கிருந்தாள்..அதனால் அவர்கள் பேசிக் கொண்டது அவள் காதில் விழவில்லை.
“என்னமா சக்தி...நீயென்ன சொல்ற...?” என்று அவர் கேட்க.. ”ஆங்..என்னப்பா...சரிப்பா..” என்று சொல்லிவிட்டு...மீண்டும் தன யோசனையைத் தொடர்ந்தாள்.
“என் மகளே சரின்னு சொல்லிட்டா தம்பி...நீங்க தாராளமா எடுத்துக்கங்க..!” என்று சொல்ல...
வந்தவேலை சுலபமாக முடிந்த திருப்தியுடன் டைரக்டர் கிளம்ப எத்தனிக்க....
“இங்க எல்லாமே உங்களுக்கு சவுகரியமா இருக்கா தம்பி..” என்றார் அவர்.
“கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யுது அய்யா...சிரமத்தைப் பார்த்தா ஆகுமா..? ஒரு வாரம் தானே..நல்ல படியா முடுஞ்சுடும்..” என்று அவர் சொல்ல..
“சந்தோசம் தம்பி....நீங்க பெரிய ஆளுங்க..யாரோ வேற ஆளை விட்டு அனுமதி கேட்காம..நீங்களே நேரா எங்க வீட்டுக்கு வந்து கேட்டதில் ரொம்ப சந்தோசம்..” என்று அவர் சொல்ல..
“இதில் என்னங்கய்யா இருக்கு...அடிப்படையில் நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்....இன்னொருத்தரை நம்பி வேலையை ஒப்படைச்சுட்டு...காத்திட்டு இருக்குறதை விட..நம்ம வேலையை நாமே பார்க்குறது சரிதானங்க..! என்றார்.
‘சரியா சொன்னிங்க தம்பி...!” என்றவர்..மகேஷைப் பார்த்து...”இந்த தம்பி வந்ததில் இருந்து ஒண்ணுமே பேசாம இருக்கார்..!” என்று கேட்க..
“அவன் கொஞ்சம் அமைதியான டைப்...சட்டுன்னு யார்கிட்டயும் பேச மாட்டான்..” என்று டைரக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...குப்பாயி அவர்களுக்கு காபி கொண்டு வர...
“இருக்கட்டுங்க..நாங்க இப்பதான் குடுச்சுட்டு வந்தோம்..” என்றனர்.
“பரவாயில்லை தம்பி...வீட்டுக்கு வந்தவங்களை எப்படி சும்மா அனுப்புறது..? குடிங்க...இப்ப கறந்த பாலில் போட்டது..ரொம்ப அருமையா இருக்கும்..” என்றார்.
அவர்களும் குடிக்க...அவர் சொன்னதைப் போல் அருமையாகத்தான் இருந்தது.அந்த சுத்தமான பசும்பாலின் மனம்....மன அழுத்தத்தையே போக்கும் அளவுக்கு வாசனையுடன் இருக்க...நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு காபியை குடித்த உணர்வு அவர்கள் இருவருக்கும்.
“அப்ப நாங்க கிளம்புறோம்..” என்றபடி இருவரும் எழுந்து நிற்க...
சக்தியோ..வேகமாய் மகேஷின் உயரத்தை எடை போட்டாள்.”இவனைப் பார்த்தால் அப்படித் தெரியலையே..?” என்று எண்ணியவள்...எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆராய்ச்சிப் பார்வையைப் பார்த்து வைத்தாள்.
அவர்கள் சென்றவுடன்...
“என்னம்மா சக்தி முகம் ஒரு மாதிரி இருக்கு...? உடம்பு ஏதும் சரியில்லையா..?” என்று கேட்க..
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா....கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு..சூடா சுக்கு காபி குடுச்சா சரியாப் போய்டும்...” என்றவள்... குப்பாயிடம் ஒரு சுக்கு காபியை சொல்லிவிட்டு..தன்னுடைய அறைக்கு சென்றாள்.
ஜன்னல் அருகில் நின்றவளுக்கு....காலையில் நடந்த சம்பவம் கண் முன் வர...அவளையும் மீறி ஒரு சிலிர்ப்பு உண்டாகியது.
“என்னதான் பச்சை மிளகாய் கொண்டு தேய்த்தாலும்...அந்த வெங்காரத்தையும் மீறிய ஒரு குளிர்ச்சி..அது எதனால் வந்தது..யாரால் வந்தது.
யாரென்று தெரியாத ஒருவன் தனக்கு முத்தம் கொடுக்கும் வரை நான் ஏன் சும்மா இருந்தேன்..?இதை ஏன் அப்பாவிடம் சொல்லவில்லை. அவரிடம் எதையும் மறைக்கும் பழக்கம் எனக்கு கிடையாதே...?ஒரு பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..?” என்று அவளாகவே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க....
ஒரு பெண்ணாய் அவளையும் மீறி அவள் கண்கள் கலங்கியது.நடந்து நல்லதிற்கா..இல்லை கெட்டதுக்கா என்று தெரியாமல் இது என்ன புது அவஸ்தை...என்று அவள் பாடாய் பட.
“அவனை கண்டு[பிடிப்பேன்..அதுகக்காகவாது நாளைக்கு அந்த இடத்துக்கு போகணும்...!” என்று எண்ணிக் கொண்டவள்....நடந்த நிகழ்வையே எண்ணிக் கொண்டிருக்க...
இவளின் இதழை சிறை எடுத்து சென்றவனோ....கேரவனுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
வெளியே துப்னா டைரக்டர் உடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
“இங்க பாருங்க..! என்னால இங்கயே தங்கவெல்லாம் முடியாது..எனக்கு பெரிய ஹோட்டல்ல ரூம் வேணும்...” என்று சொல்லிக் கொண்டிருக்க...அந்த டைரக்டர் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.
“அஜய் சார்...இந்த பொண்ணை ஏன் வேண்டாம்ன்னு சொன்னார்ன்னு இப்பதான் தெரியுது..” என்று முனுமுனுக்க...
“என்ன சொன்னிங்க..?” என்றாள் ஆங்காரமாய்.
“வணக்கம்..” என்றனர் அந்த இயக்குனரும்,உதவி இயக்குனரும் மகா லிங்கத்தைப் பார்த்து.
“வணக்கம்..!” உட்காருங்க..!” என்றவர்....
“குப்பாயி..வந்திருக்கவங்களுக்கு குடிக்க கொண்டு வாமா...!” என்று சொல்லிவிட்டு அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கும்...சக்தி தன்னுடைய அறையில் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
அரக்கு பச்சை நிற தாவணியில் வந்தவளை விழி எடுக்காமல் பார்த்தான் அந்த உதவி இயக்குனர்.
“வாவ்...வாட் அ பிகர்...இந்த வில்லேஜ்ல இப்படி ஒரு அழகான பொண்ணா..?” என்று அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க...
அவனின் பார்வையைப் பார்த்த டைரக்டர்...அவனை கையால் இடித்தபடி...”யோவ்..நாம வந்த வேலையென்ன..நீ பார்க்குற வேலையென்ன..?” என்று கடிய...
“சாரி சார்..” என்றபடி தலையைக் கவிழ்ந்தான் அவன்.அவன் தான் மகேஷ்.
“என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கிங்க..?” என்றார் மகாலிங்கம்.
“நாங்க இங்க ஷூட்டிங்க்காக வந்திருக்கோம்..!” என்று டைரக்டர் சொல்ல...
“தெரியும்ப்பா...கேள்விபட்டேன்..எங்க ஊரை நல்லா அழகா காட்டுங்க..!” என்றார் அவரும் அவர் பங்குக்கு.
“கண்டிப்பாங்க...! இப்ப பிரச்சனை என்னன்னா...இங்க சாமிக்கண்ணு வயல்ல ஷூட்டிங் எடுக்குறதா இருந்தது....ஆனா இப்போ அங்க எடுக்க முடியாத சூழ்நிலை....அதான் உங்க வயல்ல எடுக்க அனுமதி கொடுத்திங்கன்னா நல்லா இருக்கும்...” என்று டைரக்டர் சொல்ல வந்ததை சொல்ல...
அவர் சொல்லியதை உள்வாங்கியவர்....”நீங்க கேட்குறது புரியுது...ஆனா இதில் நான் ஒன்னும் செய்ய முடியாது....ஏன்னா அதையெல்லாம் பாத்துக்கறது என் மகள் தான்..அதனால் அவள் தான் சொல்லணும்..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க...
அவளோ...காலையில் தன்னை வம்பிளுத்தவன்..இவனாக இருக்குமோ என்ற ஆராய்ச்சியில் இறங்கிருந்தாள்..அதனால் அவர்கள் பேசிக் கொண்டது அவள் காதில் விழவில்லை.
“என்னமா சக்தி...நீயென்ன சொல்ற...?” என்று அவர் கேட்க.. ”ஆங்..என்னப்பா...சரிப்பா..” என்று சொல்லிவிட்டு...மீண்டும் தன யோசனையைத் தொடர்ந்தாள்.
“என் மகளே சரின்னு சொல்லிட்டா தம்பி...நீங்க தாராளமா எடுத்துக்கங்க..!” என்று சொல்ல...
வந்தவேலை சுலபமாக முடிந்த திருப்தியுடன் டைரக்டர் கிளம்ப எத்தனிக்க....
“இங்க எல்லாமே உங்களுக்கு சவுகரியமா இருக்கா தம்பி..” என்றார் அவர்.
“கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யுது அய்யா...சிரமத்தைப் பார்த்தா ஆகுமா..? ஒரு வாரம் தானே..நல்ல படியா முடுஞ்சுடும்..” என்று அவர் சொல்ல..
“சந்தோசம் தம்பி....நீங்க பெரிய ஆளுங்க..யாரோ வேற ஆளை விட்டு அனுமதி கேட்காம..நீங்களே நேரா எங்க வீட்டுக்கு வந்து கேட்டதில் ரொம்ப சந்தோசம்..” என்று அவர் சொல்ல..
“இதில் என்னங்கய்யா இருக்கு...அடிப்படையில் நானும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் தான்....இன்னொருத்தரை நம்பி வேலையை ஒப்படைச்சுட்டு...காத்திட்டு இருக்குறதை விட..நம்ம வேலையை நாமே பார்க்குறது சரிதானங்க..! என்றார்.
‘சரியா சொன்னிங்க தம்பி...!” என்றவர்..மகேஷைப் பார்த்து...”இந்த தம்பி வந்ததில் இருந்து ஒண்ணுமே பேசாம இருக்கார்..!” என்று கேட்க..
“அவன் கொஞ்சம் அமைதியான டைப்...சட்டுன்னு யார்கிட்டயும் பேச மாட்டான்..” என்று டைரக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே...குப்பாயி அவர்களுக்கு காபி கொண்டு வர...
“இருக்கட்டுங்க..நாங்க இப்பதான் குடுச்சுட்டு வந்தோம்..” என்றனர்.
“பரவாயில்லை தம்பி...வீட்டுக்கு வந்தவங்களை எப்படி சும்மா அனுப்புறது..? குடிங்க...இப்ப கறந்த பாலில் போட்டது..ரொம்ப அருமையா இருக்கும்..” என்றார்.
அவர்களும் குடிக்க...அவர் சொன்னதைப் போல் அருமையாகத்தான் இருந்தது.அந்த சுத்தமான பசும்பாலின் மனம்....மன அழுத்தத்தையே போக்கும் அளவுக்கு வாசனையுடன் இருக்க...நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லதொரு காபியை குடித்த உணர்வு அவர்கள் இருவருக்கும்.
“அப்ப நாங்க கிளம்புறோம்..” என்றபடி இருவரும் எழுந்து நிற்க...
சக்தியோ..வேகமாய் மகேஷின் உயரத்தை எடை போட்டாள்.”இவனைப் பார்த்தால் அப்படித் தெரியலையே..?” என்று எண்ணியவள்...எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆராய்ச்சிப் பார்வையைப் பார்த்து வைத்தாள்.
அவர்கள் சென்றவுடன்...
“என்னம்மா சக்தி முகம் ஒரு மாதிரி இருக்கு...? உடம்பு ஏதும் சரியில்லையா..?” என்று கேட்க..
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா....கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு..சூடா சுக்கு காபி குடுச்சா சரியாப் போய்டும்...” என்றவள்... குப்பாயிடம் ஒரு சுக்கு காபியை சொல்லிவிட்டு..தன்னுடைய அறைக்கு சென்றாள்.
ஜன்னல் அருகில் நின்றவளுக்கு....காலையில் நடந்த சம்பவம் கண் முன் வர...அவளையும் மீறி ஒரு சிலிர்ப்பு உண்டாகியது.
“என்னதான் பச்சை மிளகாய் கொண்டு தேய்த்தாலும்...அந்த வெங்காரத்தையும் மீறிய ஒரு குளிர்ச்சி..அது எதனால் வந்தது..யாரால் வந்தது.
யாரென்று தெரியாத ஒருவன் தனக்கு முத்தம் கொடுக்கும் வரை நான் ஏன் சும்மா இருந்தேன்..?இதை ஏன் அப்பாவிடம் சொல்லவில்லை. அவரிடம் எதையும் மறைக்கும் பழக்கம் எனக்கு கிடையாதே...?ஒரு பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க..அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..?” என்று அவளாகவே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க....
ஒரு பெண்ணாய் அவளையும் மீறி அவள் கண்கள் கலங்கியது.நடந்து நல்லதிற்கா..இல்லை கெட்டதுக்கா என்று தெரியாமல் இது என்ன புது அவஸ்தை...என்று அவள் பாடாய் பட.
“அவனை கண்டு[பிடிப்பேன்..அதுகக்காகவாது நாளைக்கு அந்த இடத்துக்கு போகணும்...!” என்று எண்ணிக் கொண்டவள்....நடந்த நிகழ்வையே எண்ணிக் கொண்டிருக்க...
இவளின் இதழை சிறை எடுத்து சென்றவனோ....கேரவனுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
வெளியே துப்னா டைரக்டர் உடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
“இங்க பாருங்க..! என்னால இங்கயே தங்கவெல்லாம் முடியாது..எனக்கு பெரிய ஹோட்டல்ல ரூம் வேணும்...” என்று சொல்லிக் கொண்டிருக்க...அந்த டைரக்டர் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.
“அஜய் சார்...இந்த பொண்ணை ஏன் வேண்டாம்ன்னு சொன்னார்ன்னு இப்பதான் தெரியுது..” என்று முனுமுனுக்க...
“என்ன சொன்னிங்க..?” என்றாள் ஆங்காரமாய்.