எங்கேயோ பார்த்த மயக்கம் -04
காலை ஒன்பது மணிக்கு, ஜெய்சிம்மன் எஸ்டேட்ஸ் , அந்த குன்னூர் பகுதியில் மிகப்பெரிய எஸ்டேட்ஸ், அங்கிருந்த தேயிலையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்...
நரசிம்மன் அதன் உரிமையாளர்... பரம்பரை பரம்பரையாக எஸ்டேட்ஸை நடத்தி வருகிறார்கள். அவருடைய பங்களாவின் முன் பக்கத்தில் தான் ஆபிஸ் வைத்திருக்கிறார்... அந்த ஆபிஸ் மற்றும் பங்களாவை மேற்பார்வையாளராக மென்மலர்...
பங்களாவின் முகப்பறையிலே சந்தன வாசனை வீச , அதை தன் நாசியில் நிரப்பிக்கொண்டே உள்ளே சென்றாள் மென்மலர்...
வணக்கம் அம்மா.. என்று வீட்டை துடைக்கும் பெண்மணி கூற, தலையை அசைத்து விட்டு ஆபிஸூக்குள் நுழைந்தாள் மலர்...
குட் மார்னிங் மலர்... என்ன நேற்று லீவ் போல ஆளையே காணோம்.. கேஷியராக இருக்கும் ரஞ்சனி கேட்க.
ஆமாம்... கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருந்துச்சு ரஞ்சி.. அந்த ஹாலில் பத்துபேருக்கு மேல் வேலை செய்தனர்...
ப்யூன் வந்து.. மலர் மேடம் ஐயா கூப்பிடுறாங்க என்றான்...
அவரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பைலை தூங்கிக்கொண்டு... அவர் வீட்டிற்குள் போனாள்...
ராமண்ணா சாப்பிட்டாச்சா மலர் கேட்க..
எதிரே வந்த ராமு, அவரின் காரியதரிசி, மற்றும் நரசிம்மனை முழுவதும் கவனித்துக்கொள் பவரும் கூட...
சாப்பிட்டேன் மலர், ஐயா உனக்காகதான் வையிடிங்...
சிரித்துக்கொண்டே நரசிம்மன் அறைக்குள் நுழைந்தாள்... குட் மார்னிங் ஸார்...
குட் மார்னிங் அம்மு... எழுபதை நெருங்கும் நரசிம்மன் சேரில் உட்காருமாறு கையை காட்ட.
பின்னாடியே ராமு, மலருக்கு காபியை கொண்டுவந்தார்...
இந்தாடா காபி என்று மலர் கையில் கொடுத்தார்... என்னாச்சு ஸார் கிளம்பி வருவீங்க நினைச்சேன்..
கொஞ்சம் பீபி அதிகமாயிடுச்சுமா மலர்.. அதான் இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கிறார் ராமு சொல்ல..
அச்சோ, ஸார் உடம்பை பார்த்துக்கோங்க... எதுக்கு எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகிறீங்க.
அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணு, இப்போ சரியாயிடுச்சு... ஆமாம் யாருக்கோ ஆக்ஸிடன்ட் போன் பண்ணி சொன்னே..
என் கூட படிச்சவர் ஸார்.. வீட்டில பிரச்சனைபோல அதான் எங்கவீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்..
காலேஜ்ஜா...
ம்ம்.. ஒருநாள் உங்க கிட்ட சொன்னனே.. எனக்கு ஸ்பான்ஸர் செஞ்சான்...
எஸ்... ரொம்ப கோவக்காரன்.. ஒரு பையனை அடிச்சேன் சொன்னீயே..
அவனேதான் ஸார்...
இன்டரஸ்டிங் சொல்லு அன்னைக்கு நீ ஆடிடோரியம் போன வரைக்கும் சொன்ன... அப்பறம் வேலையின்னு போயிட்ட.. மீதி கதையை சொல்லுடா ஒரே போரா இருக்கு.. இங்கதான் யாருமில்ல என்னை தாத்தான்னு கூப்பிடு மலர்..
முதல்ல சாப்பிடுங்க, அப்பறம் மாத்திரை போடுங்க.. பிறகுதான் சொல்லுவேன்...
அவர் கையில் மாத்திரையை தந்தாள்.. வாரத்திற்கு ஒருநாள் உங்கிட்ட கதை பேசறதுக்கே சம்பளம் தறீங்க..
ஹா..ஹா..ன்னு சிரித்தார் நரசிம்மன்.
அவன் கிட்ட போனேன்னா... ஸாரின்னு அவள் முடிக்கும் முன்னே ப்ளாரென்று கண்ணத்தில் அறைந்தான்..
கண்கள் கலங்கி விட்டது மென்மலருக்கு...
ஸாரின்னு நீ சொன்னா, ஈ..ஈன்னு பல்லை இளிச்சிட்டே போயிடுவேன் நினைச்சியா... யாருடி நீ... என் ஸ்டேடஸ் என்ன உன் தகுதி என்ன யோசிச்சியா.. உன் ட்ரஸ் அது பட்டிக்காட்டுல போடுற மாதிரி இருக்கு...
உன்னை போய் ஆசையா தொடுவேன் நினைச்சியா.. என்னை பார்த்து ஏங்க எத்தனையோ பொண்ணு இருக்காங்க... த்தூ ஆளும் மூஞ்சுயும் பாரு.. அவன் கீழே இறங்க போக..
ஜீஜே என்று அழைத்தாள்... ஸாரி நீங்க என்னை அடிச்சவுடன் எனக்கு அசிங்கமா இருந்தது.. அதுப்போலதான் நீங்களும் இருந்திருப்பீங்க... மன்னிச்சிடுங்க பா..
அவள் இப்படி பேசுவா என்று எதிர்பார்க்கவில்லை அவன்.. கலங்கியிருந்த கண்ணைதான் பார்த்தான்.. அடித்த அவன் கையை பிசைத்துக்கொண்டான்..
ஏன் உனக்கென்ன, நீ தேவதைமாதிரி இருக்கடா..
போங்க தாத்தா, எனக்கே தெரியும் நான் எப்படியிருக்கேன்னு, அவன் பெரிய பணக்கார வீட்டு பையன் தாத்தா, ஒரு அடியில விட்டானே அதுபோதும் ஓடிவந்துட்டேன்..
நேற்றுதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் தாத்தா.. அவனுக்கு என் வீடு வசதி படல.. ஏஸி பிக்ஸ் பண்ணிட்டான்.. இதோ இன்னைக்கு அவன் ரூமுக்கு புது எல்.இ.டி டிவி வந்திருக்கும்...
அவன் பணம்தானே மலர்…
கரண்ட் பில், யாரு தாத்தா கட்டுவா..
ஹா..ஹான்னு அவர் சிரிக்க..
பையன் சரியில்ல சொல்லுற, எதுக்கு உன் வீட்டில சேர்த்த..
அதுவா , அவன் பேஸிக்கா நல்லவன் தாத்தா, ஹோட்டல் தங்குறேன் சொல்லுறான்... அதுவுமில்லாம அவனை யார் கவனிச்சிப்பா..
அவ தலையை தடவியபடி சொன்னார், உனக்கு நல்ல மனசுடா...
தாத்தா நேற்று நடந்த கதையை கேளுங்க.. இந்த அபி, அவர் எங்க அத்தை பையன் சொல்லிட்டா... பக்கத்தில் இருக்கும் எல்லாரும் வந்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க... அவனுக்கு பிடிக்கல தாத்தா, முறைச்சிட்டே இருந்தான்..
தனியா வேற விட்டு வந்திருக்கேன், என்ன செய்ய போறாங்களோ... சரிங்க தாத்தா நான் கிளம்புறேன்.. டைமாயிடுச்சு.. அவரிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு ஆபிஸூக்கு வந்தாள்..
.....
மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்குள் வர, ஜீஜே ரூமில் நடேசனும், அவனும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்... இருவருக்கும் கிரிக்கெட் பிடிக்கும்போல...
மலர் வந்துட்டியா, இவர் சாப்பிடவே இல்லை நீ வந்தவுடன் சாப்பிடுறேன் சொல்லிட்டாரு...சரி நான் கிளம்புறேன் ஜீஜே பாய்... நடேசன் சென்றவுடன்..
சாப்பாடு எடுத்துக்கொண்டு அவன் ரூமிற்கு வந்தாள்..
என்ன ஆப் டே வா மலர், பாதியிலே வந்துட்டே...
எனக்கு டைமிங்கே இதுதான் ஜீஜே, தாத்தா சீக்கிரம் வீட்டுக்கு போயிடு சொல்லுவாரு..
யாரு தாத்தா..
எங்க முதலாளிதான்... நான் சின்ன வயசிலே இப்படிதான் கூப்பிடுவேன்.. எனக்கு டியர் பிரண்டு...
வயசானதெல்லாம் உனக்கு பிரண்டு, நீயேன் டிரன்டா இல்லன்னு இப்பதான் தெரியுது..
ஜீஜேவை பார்த்து முறைத்தாள்..
என்ன உண்மைதான் பேசுறேன்... கிழவன் ரொம்ப ஜொள்ளு போல..
வயசானவங்களை அப்படி பேசாதேடா...
எதுக்குடி டா போட்டுற..
ஸாரி... தெரியாம வந்துடுச்சு... முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள்.. சாப்பிட வாங்க ஜீஜே..
அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்தாள்... அவன் கையில் ஸ்பூனை கொடுத்தாள்..
அதை வாங்கிக்கொண்டு சாம்பார் சாதத்தை கிளறினான்.. மலர் நீ சாப்பிட்டியா... அவன் கேட்டவுடனே...
அவள் கண்களிலிருந்து கண்ணீர்.. கண்ணை மூடி திறந்தாள்..
பதறிவிட்டான் , என்னாச்சு..
கண்ணீரை துடைத்துக்கொண்டு ரொம்ப நாளாச்சு இந்த வார்த்தையை கேட்டு... நீ சாப்பிட்டியா என்று யாரும் கேட்கமாட்டாங்க ஜீஜே..
ப்ச்.. இதுக்குதான் அழுதியா, நான் உயிரோட இருக்கானா இல்ல செத்து..
உடனே தனது கைகளால் அவன் வாயை அடைத்தாள்... அதிர்ந்து அவளை பார்த்தான்..
இப்படி பேசாதே ஜீஜே..
கேட்க ஆளில்ல சொல்ல வந்ததேன்.. என்கூடவே சேர்ந்து சாப்பிடு... பேசியபடியே இருவரும் சாப்பிட்டனர்..
பிறகு, அவன் டிவியை ஆன் செய்து நீயூஸை பார்க்க ... வீட்டை சுத்தம் செய்து மாலைநேர சிற்றுண்டியை சமைக்க ஆரம்பித்தாள்.. மலரையே பார்த்துக்கொண்டிருந்தான்... சிறுது நேரத்தில் தூங்கியும் விட்டான்
அபியும், ஹரியும் வர அவர்களுக்கு ஸ்நாக்ஸ மற்றும் டீயை கொடுத்தாள்...
ஜீஜே எழுந்திருக்க அவனுக்கு டீ மற்றும் அவன் கேட்ட பிரட் ஆம்லேட் கொடுத்தாள்..
டியூஷனுக்கு பிள்ளைகள் வர... பாடம் நடந்த ஆரம்பித்தாள்... இவ எவ்வளவு வேலைதான் செய்வா... ஜீஜே யோசித்துக் கொண்டிருந்தான்..
மலர் இங்க வா என்று அழைக்க, அவனருகில் சென்றாள்... இந்த டீ -ஷர்ட் எல்லாம் எங்க வாங்கின மலர்..
இங்கதான் குன்னூர்ல பெரிய கடை ஜீஜே.. நல்லாயிருக்கா..
இதுவா, துணிக்கடையில வேலை செய்யறவங்க போல கலர் கலரா யாராவது டீ ஷர்ட் எடுப்பாங்களா மலர்..
கீரின், ப்ளூ, ரோஸ் நல்லாயிருக்கே... ஒரு ஷர்ட் 700 ரூபாய் ஜீஜே..
நான் பிரண்டா தான் போடுவேன் மலர், கிட்ட வா என்று அழைத்தான்..நான் போடுற இன்னர்வேரே த்ரீ தௌசண்ட் மேல...
அப்ப இந்த ஷர்ட் போட மாட்டீயா ஜீஜே...
மாட்டேன்.. நான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி டெலிவரியே ஆயிடுச்சு.. அந்த பேக்கை பிரிச்சு ஒரு ஷர்ட் எடு மலர்.. நான் டிரஸ் சேன்ஜ் செய்யனும்..
ஒரு வாரம் சென்றது... அந்த காலனியில் இருப்பவர்களுடன் நன்றாக பேச ஆரம்பித்தான்... அபி மட்டும்தான் பயப்படுவாள் இவனை பார்த்து... ஹரியும் காலையில் குட்மார்னிங் சொல்லுவதோடு சரி.. கண்டுக்கொள்ள மாட்டான்..
அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்..
இப்ப ஹரி என்ன குரூப் எடுத்திருக்கான் மலர்..
கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருக்கான்.. வேற ஸ்கூல் மாத்திருக்கேன் ஜீஜே.. அங்க கோச்சிங் நல்லாயிருக்காம்...
ஆமாம் நீ ரெஸ்டே இல்லாம வொர்க் பண்ணிட்டிருக்க..
ஜீஜே... அபியும் பெரிய கிளாஸ் படிக்க ஆரம்பிச்சிட்டா அவளோடைய ப்யூச்சரும் பார்க்கனும் தானே... அதான் கொஞ்சம் கொஞ்சமா சேவீங்ஸ் பன்றேன்..
சரி அஜய் உன்னை லவ் செஞ்சானே என்னாச்சு..பிரேக் கப்பா..
----மயக்கம்
காலை ஒன்பது மணிக்கு, ஜெய்சிம்மன் எஸ்டேட்ஸ் , அந்த குன்னூர் பகுதியில் மிகப்பெரிய எஸ்டேட்ஸ், அங்கிருந்த தேயிலையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்...
நரசிம்மன் அதன் உரிமையாளர்... பரம்பரை பரம்பரையாக எஸ்டேட்ஸை நடத்தி வருகிறார்கள். அவருடைய பங்களாவின் முன் பக்கத்தில் தான் ஆபிஸ் வைத்திருக்கிறார்... அந்த ஆபிஸ் மற்றும் பங்களாவை மேற்பார்வையாளராக மென்மலர்...
பங்களாவின் முகப்பறையிலே சந்தன வாசனை வீச , அதை தன் நாசியில் நிரப்பிக்கொண்டே உள்ளே சென்றாள் மென்மலர்...
வணக்கம் அம்மா.. என்று வீட்டை துடைக்கும் பெண்மணி கூற, தலையை அசைத்து விட்டு ஆபிஸூக்குள் நுழைந்தாள் மலர்...
குட் மார்னிங் மலர்... என்ன நேற்று லீவ் போல ஆளையே காணோம்.. கேஷியராக இருக்கும் ரஞ்சனி கேட்க.
ஆமாம்... கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருந்துச்சு ரஞ்சி.. அந்த ஹாலில் பத்துபேருக்கு மேல் வேலை செய்தனர்...
ப்யூன் வந்து.. மலர் மேடம் ஐயா கூப்பிடுறாங்க என்றான்...
அவரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பைலை தூங்கிக்கொண்டு... அவர் வீட்டிற்குள் போனாள்...
ராமண்ணா சாப்பிட்டாச்சா மலர் கேட்க..
எதிரே வந்த ராமு, அவரின் காரியதரிசி, மற்றும் நரசிம்மனை முழுவதும் கவனித்துக்கொள் பவரும் கூட...
சாப்பிட்டேன் மலர், ஐயா உனக்காகதான் வையிடிங்...
சிரித்துக்கொண்டே நரசிம்மன் அறைக்குள் நுழைந்தாள்... குட் மார்னிங் ஸார்...
குட் மார்னிங் அம்மு... எழுபதை நெருங்கும் நரசிம்மன் சேரில் உட்காருமாறு கையை காட்ட.
பின்னாடியே ராமு, மலருக்கு காபியை கொண்டுவந்தார்...
இந்தாடா காபி என்று மலர் கையில் கொடுத்தார்... என்னாச்சு ஸார் கிளம்பி வருவீங்க நினைச்சேன்..
கொஞ்சம் பீபி அதிகமாயிடுச்சுமா மலர்.. அதான் இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கிறார் ராமு சொல்ல..
அச்சோ, ஸார் உடம்பை பார்த்துக்கோங்க... எதுக்கு எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகிறீங்க.
அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணு, இப்போ சரியாயிடுச்சு... ஆமாம் யாருக்கோ ஆக்ஸிடன்ட் போன் பண்ணி சொன்னே..
என் கூட படிச்சவர் ஸார்.. வீட்டில பிரச்சனைபோல அதான் எங்கவீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்..
காலேஜ்ஜா...
ம்ம்.. ஒருநாள் உங்க கிட்ட சொன்னனே.. எனக்கு ஸ்பான்ஸர் செஞ்சான்...
எஸ்... ரொம்ப கோவக்காரன்.. ஒரு பையனை அடிச்சேன் சொன்னீயே..
அவனேதான் ஸார்...
இன்டரஸ்டிங் சொல்லு அன்னைக்கு நீ ஆடிடோரியம் போன வரைக்கும் சொன்ன... அப்பறம் வேலையின்னு போயிட்ட.. மீதி கதையை சொல்லுடா ஒரே போரா இருக்கு.. இங்கதான் யாருமில்ல என்னை தாத்தான்னு கூப்பிடு மலர்..
முதல்ல சாப்பிடுங்க, அப்பறம் மாத்திரை போடுங்க.. பிறகுதான் சொல்லுவேன்...
அவர் கையில் மாத்திரையை தந்தாள்.. வாரத்திற்கு ஒருநாள் உங்கிட்ட கதை பேசறதுக்கே சம்பளம் தறீங்க..
ஹா..ஹா..ன்னு சிரித்தார் நரசிம்மன்.
அவன் கிட்ட போனேன்னா... ஸாரின்னு அவள் முடிக்கும் முன்னே ப்ளாரென்று கண்ணத்தில் அறைந்தான்..
கண்கள் கலங்கி விட்டது மென்மலருக்கு...
ஸாரின்னு நீ சொன்னா, ஈ..ஈன்னு பல்லை இளிச்சிட்டே போயிடுவேன் நினைச்சியா... யாருடி நீ... என் ஸ்டேடஸ் என்ன உன் தகுதி என்ன யோசிச்சியா.. உன் ட்ரஸ் அது பட்டிக்காட்டுல போடுற மாதிரி இருக்கு...
உன்னை போய் ஆசையா தொடுவேன் நினைச்சியா.. என்னை பார்த்து ஏங்க எத்தனையோ பொண்ணு இருக்காங்க... த்தூ ஆளும் மூஞ்சுயும் பாரு.. அவன் கீழே இறங்க போக..
ஜீஜே என்று அழைத்தாள்... ஸாரி நீங்க என்னை அடிச்சவுடன் எனக்கு அசிங்கமா இருந்தது.. அதுப்போலதான் நீங்களும் இருந்திருப்பீங்க... மன்னிச்சிடுங்க பா..
அவள் இப்படி பேசுவா என்று எதிர்பார்க்கவில்லை அவன்.. கலங்கியிருந்த கண்ணைதான் பார்த்தான்.. அடித்த அவன் கையை பிசைத்துக்கொண்டான்..
ஏன் உனக்கென்ன, நீ தேவதைமாதிரி இருக்கடா..
போங்க தாத்தா, எனக்கே தெரியும் நான் எப்படியிருக்கேன்னு, அவன் பெரிய பணக்கார வீட்டு பையன் தாத்தா, ஒரு அடியில விட்டானே அதுபோதும் ஓடிவந்துட்டேன்..
நேற்றுதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் தாத்தா.. அவனுக்கு என் வீடு வசதி படல.. ஏஸி பிக்ஸ் பண்ணிட்டான்.. இதோ இன்னைக்கு அவன் ரூமுக்கு புது எல்.இ.டி டிவி வந்திருக்கும்...
அவன் பணம்தானே மலர்…
கரண்ட் பில், யாரு தாத்தா கட்டுவா..
ஹா..ஹான்னு அவர் சிரிக்க..
பையன் சரியில்ல சொல்லுற, எதுக்கு உன் வீட்டில சேர்த்த..
அதுவா , அவன் பேஸிக்கா நல்லவன் தாத்தா, ஹோட்டல் தங்குறேன் சொல்லுறான்... அதுவுமில்லாம அவனை யார் கவனிச்சிப்பா..
அவ தலையை தடவியபடி சொன்னார், உனக்கு நல்ல மனசுடா...
தாத்தா நேற்று நடந்த கதையை கேளுங்க.. இந்த அபி, அவர் எங்க அத்தை பையன் சொல்லிட்டா... பக்கத்தில் இருக்கும் எல்லாரும் வந்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க... அவனுக்கு பிடிக்கல தாத்தா, முறைச்சிட்டே இருந்தான்..
தனியா வேற விட்டு வந்திருக்கேன், என்ன செய்ய போறாங்களோ... சரிங்க தாத்தா நான் கிளம்புறேன்.. டைமாயிடுச்சு.. அவரிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு ஆபிஸூக்கு வந்தாள்..
.....
மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்குள் வர, ஜீஜே ரூமில் நடேசனும், அவனும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்... இருவருக்கும் கிரிக்கெட் பிடிக்கும்போல...
மலர் வந்துட்டியா, இவர் சாப்பிடவே இல்லை நீ வந்தவுடன் சாப்பிடுறேன் சொல்லிட்டாரு...சரி நான் கிளம்புறேன் ஜீஜே பாய்... நடேசன் சென்றவுடன்..
சாப்பாடு எடுத்துக்கொண்டு அவன் ரூமிற்கு வந்தாள்..
என்ன ஆப் டே வா மலர், பாதியிலே வந்துட்டே...
எனக்கு டைமிங்கே இதுதான் ஜீஜே, தாத்தா சீக்கிரம் வீட்டுக்கு போயிடு சொல்லுவாரு..
யாரு தாத்தா..
எங்க முதலாளிதான்... நான் சின்ன வயசிலே இப்படிதான் கூப்பிடுவேன்.. எனக்கு டியர் பிரண்டு...
வயசானதெல்லாம் உனக்கு பிரண்டு, நீயேன் டிரன்டா இல்லன்னு இப்பதான் தெரியுது..
ஜீஜேவை பார்த்து முறைத்தாள்..
என்ன உண்மைதான் பேசுறேன்... கிழவன் ரொம்ப ஜொள்ளு போல..
வயசானவங்களை அப்படி பேசாதேடா...
எதுக்குடி டா போட்டுற..
ஸாரி... தெரியாம வந்துடுச்சு... முகத்தை தூக்கிவைத்துக் கொண்டாள்.. சாப்பிட வாங்க ஜீஜே..
அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்தாள்... அவன் கையில் ஸ்பூனை கொடுத்தாள்..
அதை வாங்கிக்கொண்டு சாம்பார் சாதத்தை கிளறினான்.. மலர் நீ சாப்பிட்டியா... அவன் கேட்டவுடனே...
அவள் கண்களிலிருந்து கண்ணீர்.. கண்ணை மூடி திறந்தாள்..
பதறிவிட்டான் , என்னாச்சு..
கண்ணீரை துடைத்துக்கொண்டு ரொம்ப நாளாச்சு இந்த வார்த்தையை கேட்டு... நீ சாப்பிட்டியா என்று யாரும் கேட்கமாட்டாங்க ஜீஜே..
ப்ச்.. இதுக்குதான் அழுதியா, நான் உயிரோட இருக்கானா இல்ல செத்து..
உடனே தனது கைகளால் அவன் வாயை அடைத்தாள்... அதிர்ந்து அவளை பார்த்தான்..
இப்படி பேசாதே ஜீஜே..
கேட்க ஆளில்ல சொல்ல வந்ததேன்.. என்கூடவே சேர்ந்து சாப்பிடு... பேசியபடியே இருவரும் சாப்பிட்டனர்..
பிறகு, அவன் டிவியை ஆன் செய்து நீயூஸை பார்க்க ... வீட்டை சுத்தம் செய்து மாலைநேர சிற்றுண்டியை சமைக்க ஆரம்பித்தாள்.. மலரையே பார்த்துக்கொண்டிருந்தான்... சிறுது நேரத்தில் தூங்கியும் விட்டான்
அபியும், ஹரியும் வர அவர்களுக்கு ஸ்நாக்ஸ மற்றும் டீயை கொடுத்தாள்...
ஜீஜே எழுந்திருக்க அவனுக்கு டீ மற்றும் அவன் கேட்ட பிரட் ஆம்லேட் கொடுத்தாள்..
டியூஷனுக்கு பிள்ளைகள் வர... பாடம் நடந்த ஆரம்பித்தாள்... இவ எவ்வளவு வேலைதான் செய்வா... ஜீஜே யோசித்துக் கொண்டிருந்தான்..
மலர் இங்க வா என்று அழைக்க, அவனருகில் சென்றாள்... இந்த டீ -ஷர்ட் எல்லாம் எங்க வாங்கின மலர்..
இங்கதான் குன்னூர்ல பெரிய கடை ஜீஜே.. நல்லாயிருக்கா..
இதுவா, துணிக்கடையில வேலை செய்யறவங்க போல கலர் கலரா யாராவது டீ ஷர்ட் எடுப்பாங்களா மலர்..
கீரின், ப்ளூ, ரோஸ் நல்லாயிருக்கே... ஒரு ஷர்ட் 700 ரூபாய் ஜீஜே..
நான் பிரண்டா தான் போடுவேன் மலர், கிட்ட வா என்று அழைத்தான்..நான் போடுற இன்னர்வேரே த்ரீ தௌசண்ட் மேல...
அப்ப இந்த ஷர்ட் போட மாட்டீயா ஜீஜே...
மாட்டேன்.. நான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி டெலிவரியே ஆயிடுச்சு.. அந்த பேக்கை பிரிச்சு ஒரு ஷர்ட் எடு மலர்.. நான் டிரஸ் சேன்ஜ் செய்யனும்..
ஒரு வாரம் சென்றது... அந்த காலனியில் இருப்பவர்களுடன் நன்றாக பேச ஆரம்பித்தான்... அபி மட்டும்தான் பயப்படுவாள் இவனை பார்த்து... ஹரியும் காலையில் குட்மார்னிங் சொல்லுவதோடு சரி.. கண்டுக்கொள்ள மாட்டான்..
அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்..
இப்ப ஹரி என்ன குரூப் எடுத்திருக்கான் மலர்..
கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருக்கான்.. வேற ஸ்கூல் மாத்திருக்கேன் ஜீஜே.. அங்க கோச்சிங் நல்லாயிருக்காம்...
ஆமாம் நீ ரெஸ்டே இல்லாம வொர்க் பண்ணிட்டிருக்க..
ஜீஜே... அபியும் பெரிய கிளாஸ் படிக்க ஆரம்பிச்சிட்டா அவளோடைய ப்யூச்சரும் பார்க்கனும் தானே... அதான் கொஞ்சம் கொஞ்சமா சேவீங்ஸ் பன்றேன்..
சரி அஜய் உன்னை லவ் செஞ்சானே என்னாச்சு..பிரேக் கப்பா..
----மயக்கம்