வெளியே சிறிது நேரம் சிறுபிள்ளைகளென லவாவும் மொட்டுவும் ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்துக்கொண்டிருக்க அவர்களின் தோட்டத்தில் வேலைசெய்யும் சில பெண்மணிகளோ இவர்களை விந்தையாகப் பார்த்தனர். பின்னே திருமண வயதை நெருங்கிய இருவர் இவ்வாறு கவலைகளின்றி விளையாடுவதை அவர்கள் இதுவரை கண்டதில்லையே? பெரும்பாலன கிராமங்களில் இன்னமும் திருமண வயதை உடைய ஆணும் பெண்ணும் சகஜமாக உரையாடுவது என்பதை தவறாகவே தான் பாவிக்கிறார்கள். இவர்கள் ஓடும் சப்தத்தில் அங்கே மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் எல்லாம் மிரண்டு ஓட 'ஸ்கூபி டூ' மட்டும் மொட்டின் காலையே சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் இதற்கும் தனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லாமல் 'டாம் க்ரூஸும்' 'ப்ரூஸ் லீயும்' ஒய்யாரமாக அந்த திண்ணையில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவற்றை கவனித்தவனாக லவா நிற்க அவன் பார்வைப் போன திசையைக் கண்ட மொட்டு 'டாம் க்ரூஸ்' மற்றும் 'ப்ரூஸ் லீ' என்று நாமகரமிடப்பட்டிருந்த சாம்பல் மற்றும் சந்தன நிறப் பூனைகளை வாஞ்சையாக அழைக்க டாம் உடனே அவளிடம் வந்துவிட்டது. அவற்றின் பேரைக் கேட்ட லவா,
"அடிப்பாவி ஹாலிவுட் ஸ்டார்ஸ் பேரை போய் பூனைகளுக்கு வெச்சியிருக்கையே? இது எல்லாம் உன் வேலை தானே?" என்று காதைத் திருக சிரித்தவளின் காலை நக்கிய ஸ்கூபியையும் பெயர் சொல்லி அதட்டினாள்.
"உண்மையிலே எனக்கு என்ன பேர் வெக்கணும்னே தெரியில லவா... ஒன்னு ரெண்டு இருந்தா வெக்கலாம் வீட்ல முன்னாடி ஆறு பூனையும் நாலு நாயும் இருந்தது. உனக்கே தெரியும் நெல்லு மூட்டை பழப்பெட்டினு விளையிற எல்லாத்தையும் இங்க களத்துலயும் குடோன் ரூம்லயும் தான் வெக்கணும். இந்த எலி அணில் தொல்லைங்க ஜாஸ்தி... அதான் பூனைக்கு பூனை வளர்த்த மாதிரியும் ஆச்சு மூட்டைங்களுக்கு காவல் காத்த மாதிரியும் ஆச்சு... அதுபோக வெளியாளுங்க யாரையும் வீட்டுக்குள்ள விடாம பார்க்கறது தான் நம்ம ஸ்கூபியோட வேலை..." என்ற லவாவிற்கு,
"அப்படியா? அப்பறோம் ஏன் எங்களைப் பார்த்தும் குரைக்கல?"
"ஒருவேளை உங்களையெல்லாம் இந்த வீட்டு காரங்கனு நெனச்சிருக்கலாம் இல்ல இவனுங்க மொகரக்கட்டையைப் பார்த்து அதுக்கு சரிப்பட்டு வரமாட்டானுங்கனு நெனச்சிருக்கலாம்... இல்ல" என்று மொட்டு நிறுத்த,
"இல்லனா?"
"மனுஷங்க மாதிரி தன் இனத்தை தானே அழிக்க வேண்டாம்னு நெனச்சிருக்கலாம்..." என்றவள் விஷமமாய்ச் சிரிக்க முதலில் புரியாமல் விழித்தவன் பின் புரிந்து,
"அடியே அப்போ எங்களை நாயினு சொல்றியா டி? இரு உன்னை..." என்று மீண்டும் லவா துரத்த மொட்டு அமைதியாய் வீட்டிற்குள் வந்தவள் அங்கே இருந்த காட்சியைக் கண்டு தன்னை அறியாமல் சிரிக்க பின்னாலே வந்த லவாவும் அதைப் பார்த்து சிரித்தாலும் ஏனோ மனம் பொறுக்காமல்,"என்ன ஆச்சு குஷா?" என்று வினவ, அதுவரை ஹாலில் குப்புற படுத்திருந்தவன் குரல் வரும் திசையில் திரும்ப அவனுக்கு சாமரம் விசிறிக்கொண்டிருந்த வைத்தியும் திரும்பி மொட்டுவை முறைத்தார்.
அங்கே குஷாவின் தொடையில் ஊசியேற்றியவள் வெளியேறிவிட முதலில் வலி என்று மட்டும் அலறியவன் அங்கே சோபாவில் அமரவும் தான் அதிலிருந்து வழிந்த குருதியைக் கண்டு அலற அதற்குள் அங்கே வந்த வைத்தி அவனை ஷார்ட்ஸிற்கு மாற்றி சிறிதாகத் துளையிடப்பட்டிருந்த இடத்தில் மஞ்சள் வைக்கவும் எரிச்சலில் அவனோ அலற அவனுக்காக விசிறிக்கொண்டிருந்தார் வைத்தி. மணவாளனும் அருகே அமர்ந்திருந்தான்.
"ஏன்டி கழுதை, இப்படியா பண்ணுவ? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?" என்ற தன் அன்னையை முறைத்தாள் மொட்டு. பின்னே தன் பரம எதிரியின் முன்னால் 'கழுதை' என்று அழைத்துவிட்டாரே என்ற கோவம் அவளுக்கு.
"நீ எழு... வா டாக்டர்கிட்டப் போய் டிடி போடலாம்..." என்ற லவாவிற்கு,
"அதெல்லாம் ஒன்னும் வேணாயா... இதுவே போதும்..." என்றார் வைத்தி. பிறகு குஷாவைத் தாங்கு தாங்கு என்று சித்ராவும் கனகாவும் உபசரிக்க லவாவுக்கு இப்போது மொட்டின் செய்கையில் சிறு வருத்தம் எழுந்ததும் உண்மையே. அதை லவாவின் பார்வையிலே மொட்டு புரிந்துகொண்டாள். இப்போது லவா மற்றும் குஷா இருவரும் அவளிடமிருந்து ஒரு 'சாரி'யை எதிர்பார்க்க ஏனோ தனக்குமே அதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் 'போயும் போயும் இவனுக்கு நான் சாரி சொல்லனுமா?' என்ற ஈகோ அவளைத் தடுத்தது.
அந்நேரம் பார்த்து வீட்டின் முன் நின்ற பைக்கின் சப்தத்தில் அது நந்தகோபால் தான் என்று உள்ளிருப்பவர்களுக்கு நன்கு புரிந்தது. உள்ளே நுழைந்தவரின் கண்களுக்கு குஷா படுத்திருப்பது தான் முதலில் தெரிந்தது. என்ன ஆச்சோ என்ற படபடப்பில் அவர் உள்ளே வர லவா அவரிடம் மரியாதை நிமித்தமாய் எழுந்து நலம் விசாரிக்க அவருடைய பார்வை முழுவதும் குஷாவின் மீதே இருந்தது.
"என்ன ஆச்சு?" என்று பதறியவருக்கு நடந்ததை சித்ரா சொல்ல திரும்பி தன் மகளை உக்கிரமாகப் பார்த்தார் நந்தகோபால். சபை நாகரிகம் கருதி ஏதும் பேசாமல் குஷாவின் அருகில் சென்றவர்,"இப்போ எப்படியிருக்கு மாப்பிள்ளை?" என்று உரிமையாய் குஷாவிடம் பேசினார். சிறுவயதில் லவா- குஷா இருவரையும் பெயர்ச்சொல்லியே அழைத்துப் பழகியவர் என்று அவர்கள் இருவரும் கல்லூரி முடித்தார்களோ அன்றே அவர்களின் படிப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாய் 'மாப்பிள்ளை' என்றும் வாங்க போங்க என்றும் தான் அழைக்கிறார். ஆனால் இந்த மரியாதை தன்னுடைய அக்கா மகன்களான இவர்கள் இருவருக்கும் மட்டுமே கிடைக்கக்கூடியது. மாறாக தன்னுடைய தங்கை மகனான பாரிக்கு இது கிடைப்பதில்லை. இதை இந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம் இல்லை நமக்கு அதிக உரிமை இல்லாதவர்களுக்கு நாம் கொடுத்தாக வேண்டிய மரியாதை என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.
"சரி வாங்க ஹாஸ்பிடல் போலாம்..." என்று அவர் அழைக்க
"இல்ல... வேணாம்... பரவாயில்ல..." என்று பசையில்லாமல் மொழிந்தவன்,"அம்மாச்சி இந்த டிவி ரிமோட் எங்க?" என்று கேட்டதும் இதுவரை நெருப்பில் எரியும் கொள்ளியாய் இருந்தவளுக்கு(மொட்டு) இது மேலும் எண்ணெய் ஊத்தியதைப் போலிருந்தது. இப்போது என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவருக்கு,
"மாமா, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல... சின்ன காயம் தான்... எல்லாம் சரியாகிடும்" என்று லவா உரைக்கும் போதே பேச வாயெடுத்த குஷாவைக் கண்டவன் நிலை தடுமாறியவன் போல் வேண்டுமென்றே குஷாவின் அடிபட்ட இடத்தில் கையூன்ற இம்முறை குஷாவோ மேலும் அலறினான்.
"நீங்க போய் சாப்பிடுங்க... ஒண்ணுமில்ல" என்ற லவா தன் தாத்தாவிடம் கண்ணைக் காட்ட அவரும் நந்தாவை சாப்பிட அனுப்பினார். அதன் பின் குஷாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு அப்புறப்படுத்தினான் லவா. ஏனோ வந்ததும் வராததுமாகவே நடக்கும் இந்நிகழ்வுகள் வைத்தி மற்றும் கனகா இருவருக்கும் அதிக வருத்தத்தைக் கொடுத்தது.
அவர்களுடனே மொட்டுவும் மணவாளனைக் கூட்டிக்கொண்டு மேலே ஏறினாள். பின்னே இன்னும் சிறிது நேரம் இங்கே நின்றாளெனில் அவள் அப்பத்தா ஏதோ பேச்சை ஆரமித்து தனக்கு தன் தந்தையிடமிருந்து மேலும் சில 'அன்பு' வார்த்தைகளைப் பெற்றுத்தந்து விடுவார் என்பதை அவள் மட்டும் அறியாளா என்ன?
"ஏன் க்கா இப்படிப் பண்ண?" என்ற தன் தம்பிக்கு கோபப்பார்வை ஒன்றைச் செலுத்தியவள்,
"நான் என்ன கடப்பாரையிலா குத்தினேன்? அது ஆஃடேர் ஆல் ஒரு எம்ப்ராய்டரி ஊசி... அதும் ட்ரெஸ்ஸுக்கு மேல தான் குத்துச்சு... அவன் தான் சும்மா ஸீன் போடுறான்னா நீயும் ஏன்டா?" என்னும் போது அவள் கரம் பற்றி இழுத்துச் சென்றவன் மாடியில் அழுக்குத் துணியில் இருக்கும் அவன் பேண்டை காட்டினான். அதில் இருந்த ரத்தக்கறையைப் பார்த்தவள்,
"டேய் நான் வேணும்னே எல்லாம் செய்யல... ப்ராமிஸ்... அதுல எப்படி இவ்வளவு ரத்தம்?"
"அது குத்துனதும் அத்தானும் அதைப் பெருசா கவனிக்கல நானும் அவரும் பேசிட்டே தான் கீழ வந்தோம். அப்போ தான் அவர் பேண்ட்ல இருந்த பிளட்ட நான் கவனிச்சேன்..." என்று பிறகு நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகச் சொன்னான் மணவாளன்.
அங்கே குஷாவை மேலே அழைத்துச் சென்ற லவா கதவைத் தாழிட்டு,
"என்ன பழக்கம் இது குஷா? பெரியவங்க கிட்டப் இப்படியாப் பேசுவ? அவர் பாட்டுக்கு உன்கிட்டப் பேசுறாரு நீ என்னடானா டிவி ரிமோட் கேக்குற... இது சரியா?" என்று லவா வினவ,
"நான் பண்ணது தப்பு தான்... நான் ஒத்துக்கறேன்... அப்போ ஊசியில குத்திட்டு அதுக்கு கர்டெசிக்கு கூட ஒரு சாரி கேக்காம இருந்தாளே அது மட்டும் சரியா? அவளுக்கு அவ்வளவு திமிர் எங்க இருந்து வந்துச்சு? பின்ன அவர் பொண்ணு தானே அவ? விதை ஒன்னு போட்டா சொர ஒண்ணா முளைக்கும்... இதுல என்னமோ ஊர்லயே இல்லாத அழகினு அவளுக்கு நீ சப்போர்ட் வேற... இந்த கருமத்துக்கு தான் ஒழுங்கா நாளைக்கு ஈவினிங் வரலாம்னு சொன்னேன்... எல்லாம் இந்த அம்மாச்சியால வந்தது..." என்று தன்னுடைய பிடித்தமின்மையையும் வெறுப்பையும் காட்டிய குஷாவை அதிர்ச்சியாகப் பார்த்தான் லவா.
"அப்போ அன்னைக்கு என்னென்னமோ டைலாக் எல்லாம் பேசுனா... பிடிச்ச இடத்துல இருந்தா மனசு பலூன் மாதிரி பறக்கும் அப்படி இப்படினு? அப்போ அதெல்லாம் பொய்யா?"
"கல்லணை எனக்குப் பிடிக்கும், பெரிய கோவில் எனக்குப் பிடிக்கும், கொள்ளிடம் எனக்குப் பிடிக்கும், இந்த வீடு எனக்குப் பிடிக்கும். என் அம்மாச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இதுக்காகத் தான் நான் இங்க வந்தேன். ஆனா வந்த இடத்துல இந்த மாதிரி நியூசன்ஸ் எல்லாம் எனக்குப் பிடிக்கல..." என்றதும்,
"டேய் என்னடா பேசுற? என்ன தான் இது நம்ம அம்மாச்சி வீடா இருந்தாலும் இதுல நமக்கு உரிமை எதுவும் இல்ல. தாத்தாவுக்குப் பிறகு எல்லாம் மாமாங்களுக்குத் தான். நாம வெறும் கெஸ்ட். நல்லாக் கேட்டுக்கோ நாம வெறும் கெஸ்ட். வந்தோமா பார்த்தோமா போனோமான்னு இருக்கனும். அதுக்கு நாம எல்லோரையும் அனுசரிச்சு தான் போகணும். அண்ட் உன்கிட்டயும் நான் பலமுறை சொல்லிட்டேன், பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோடவே போகட்டும். நாம வீணா அதுல தலையிடக் கூடாது... அண்ட் அப்பாவே இது எதிலும் தலையிடாம அமைதியா இருக்கும் போது உனக்கென்ன வந்துச்சு? இன்னும் ரெண்டு நாள் ரெண்டே நாள் கொஞ்சம் அடக்கி வாசிடா ப்ளீஸ்... நாம வந்ததே தாத்தாவோட வெட்டிங் டே செலிபிரேசனுக்கு... வீணா அவங்களை வருத்தப்பட வெச்சிடாத..." என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
அங்கே மற்றொரு அறையில் மொட்டுவும் மணவாளனும் உரையாடினார்கள்.
மணவாளனிடம் தன்னுடைய கோபத்தையெல்லாம் கொட்டினாள் மொட்டு.
"அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் பாரு... நம்ம அப்பா எவ்வளவு மரியாதையா கேள்வி கேக்குறாரு அவன் அவரை மதிச்சானா? சரியான திமிர் பிடிச்சவன்... அப்படியே அவங்க அப்பாவோட ஏட்டிடியூட்..." என்னும் போது அவளைத் தடுத்தவன்,
"ஏன் க்கா இப்படிப் பேசுற? யாரு காதுலையாவது விழப்போகுது..." என்று பதற,
"விழுந்தா விழட்டும்... இது நம்ம வீடு. நாம ஏன் பயப்படணும்? நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அப்பாவையே மதிக்க மாட்டானாமாம்? எல்லாம் அப்பாவையும் சொல்லணும்... அவனுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசுறாரு..." என்றவர் எரிச்சல் அடங்காமல்,"வாயைத் திறந்து மாமான்னு கூப்பிட்டானா அவன்? திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு மட்டும் தான் இருக்கு..." என்று முணுமுணுத்தாள்.
"அக்கா இந்த வீட்ல நமக்கென்ன உரிமை இருக்கோ அது அவருக்கும் இருக்கு..." என்ற மணவாளனை முறைக்கவும் அமைதியடைந்தான்.
கீழே பெரியவர்கள் இருவரும் தங்கள் மகன் மற்றும் மருமகளிடம் வந்து,"ஏய்யா அவன் பேசுனதை எதையும் மனசுல வெச்சுகாதா... ரொம்ப வருஷம் கழிச்சு பிள்ளைங்க இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்குதுங்க... அவங்க சின்னஞ்சிறுசுங்க... அதுபோக அவங்க யாரு? நீ உன் தோள்ல தூக்கி வளர்ந்த பசங்க தானே? எல்லாத்துக்கும் மேல ஏற்கனவே உன் மாமா நம்ம யார்கூடவும் பேசுறதில்லை..." என்று முடிக்கும் முன்னே,
"புரியுதுப்பா... விடுங்க நான் எதையும் தப்பா எடுத்துக்கல..." என்று அவர் எழ மாடியில் இருந்து இதை மொட்டுவும் மணவாளனும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
"ஏம்மா சித்ரா இன்னைக்கு பிரதோஷம் தானே?" என்ற கனகாவுக்கு,
"ஆமாத்த... அதும் சனிப்பிரதோஷம் வேற..."
"நல்லதாப் போச்சு... எண்ணெய் வெளக்கெல்லாம் எடுத்துவைத்தா சாயுங்காலம் கோவிலுக்கு ஒரு எட்டுப் போய் பெருவுடையானை கும்பிட்டு வரலாம்..." என்று நகர்ந்தார். அப்போது வெளியேறிய லவாவின் காதிலும் இவை விழுந்தது.
திட்டமிட்டபடியே மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவர்கள் எல்லோரும் தஞ்சாவூர் செல்ல ஆயத்தமாக ஏனோ மதியம் இருந்த அந்த மனநிலை மாறி குஷாவின் முகத்தில் உற்சாகம் பிறந்தது. நந்த கோபால் தாங்கள் வழக்கமாய்ப் பார்க்கும் மருத்துவரிடம் பேசி குஷாவுக்கு ஊசி போட அப்பாய்ண்ட் மென்ட் வாங்கியவர் அதை தன் அன்னையிடம் சொல்லி அவனைச் சம்மதிக்க வைக்குமாறு சொல்ல,
"அவன் என்ன குழந்தையா? ரொம்ப தான்..." என்று எதையோ சொல்ல வந்த மொட்டு தன் தந்தையின் தீப்பார்வையில் அடங்கினாள். 'சும்மாவே அந்த ஆடு ஆடுவான் இனி அவனுக்கு கிரீடம் உச்சுச்சு ஏறிடும்...' என்று முணுமுணுத்தாள்.
அடுத்த அரை மணிநேரத்தில் கோவிலை அடைந்தவர்கள் அவ்வளாகத்திற்குள் நுழைய, ஒவ்வொரு முறை இங்கு நுழையும் பொழுது ஏற்படும் அந்த பிரமிப்பும் உற்சாகமும் இம்முறையும் குஷாவை ஆட்கொண்டது.
கோவிலின் பிரகாரத்தில் ஆங்காங்கே சிலர் புகைப்படமும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டிருக்க தன்னுடைய 'கேனா'னையும் எடுத்து அதில் புகைபடமெடுக்கத் தொடங்கினான் குஷா. லவாவோ பெரியவர்களுடன் பேசியவாறே வர முதலில் எல்லோருமாகச் சென்று இறைவனை தரிசித்தனர். வழக்கமாய் இக்கோவிலுக்கு வரும் போதெல்லாம் தான் வைக்கும் அதே வேண்டுதல்களை வைத்தியலிங்கம் இம்முறையும் வைக்க பெண்கள் நந்திக்கு விளக்கேற்றி அவரவர் தம் பிராத்தனையில் மூழ்கினர்.
அக்கோவிலில் அடியெடுத்து வைக்கும் பொழுதெல்லாம்,'இந்த இடங்களில் எல்லாம் கூட இந்த இந்தியாவையே ஆண்ட ஏன் கடல் மார்க்கமாய் இலங்கை மாலத்தீவு முதலியவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து ராஜாங்களுகெல்லாம் ராஜாவாகத் திகழ்ந்த ராஜராஜனின் பாதம் பதிந்திருக்கும் அல்லவா? இதோ இந்த பிரகாரத்தினுள் எத்தனை முறை வலம்வந்திருப்பான்? அவனுள் எத்தனை எண்ணங்கள் ஓடி கொண்டிருந்திருக்கும்? இவ்வாறு ஒரு கோவில் கட்ட வேண்டுமென்ற எண்ணம் அவன் சிந்தையில் எவ்வாறு வந்திருக்கும்? அதுபோக ஆயிரம் ஆண்டுகள் கண்டதும் இப்படி கம்பீரமாய் இது நிற்கும் என்று அப்போது அவன் எண்ணியிருப்பானா? இல்லை அவன் அவ்வாறு எண்ணியதன் விளைவாகவே தான் இன்று இக்கோவில் நிலைத்திருக்கிறதா? அதும் சுற்றி 60 கிலோமீட்டர் தொலைவிற்கு க்ரைன்ட் வளமே இல்லாத ஒரு வளமான இடத்தில் எப்படி இது சாத்தியமாயிற்று?' என்ற பிரமிப்புகள் ஒவ்வொரு முறை இங்கு அடியெடுத்து வைக்கும் பொழுதெல்லாம் அவன் மூளையில் உதிக்கும். தீர்க்கமுடியாத புதிர்கள் என்று அவனுக்குத் தோன்றும் புதிர்களில் இதுவும் ஒன்று.
இதுபோன்ற யோசனையில் அவன் ஒரு தனி உலகத்தில் வியாபித்துக்கொண்டிருக்க அவன் வைத்த ஒரு ப்ரேமிற்குள் நுழைந்தது அந்த உருவம். ஒரு கணம் அதிர்ந்தவன் நிமிர்ந்து வெளியே பார்க்க இக்கால செல்ஃபி புகைப்படங்களுக்கென்றே பிரத்தியேகமாக இருக்கும் அந்த விசித்திர முகபாவனையுடனும் விந்தையான உடல்மொழியுடனும் நின்றிருந்தாள் அனு என்கின்ற புல்வெளி.
"என்ன போட்டோ கிராபர் இன்னுமா போட்டோ எடுக்கல? எவ்வளவு நேரம் தான் நாங்களும் இப்படியே போஸ் கொடுக்குறது?" என்று அமர்த்தலாகக் கேட்டாள் அனு.
"உன்னை எப்போ வேணுனாலும் எடுக்கலாம்... அண்ட் இதென்ன போஸ்? குத்தாலம் போனா அங்க கிடைக்கும் பாரு விதவிதமான போஸ்... ஆனா இந்த வேலை நுணுக்கங்கள் எல்லாம் இங்க தான் கிடைக்கும்..." என்று போகும் போக்கில் அவளை குரங்கு என்று அவன் குறிப்பிட்டதை அறிந்தவள்,
"அப்படியா குரங்கு என்ன பண்ணும் தெரியுமா?" என்று அவனை சுற்றி சுற்றி வட்டமடித்து டார்ச்சர் செய்தவள் அவன் அசந்த நேரம் பார்த்து அவன் கேமராவைப் பிடுங்கிவிட,
"ஹே புதுசுடி தாயே... உடைச்சிடாத..." என்ற குஷாவிற்கு,
"அப்படியா? மனுஷனுக்கு தான் இது கேமரானு தெரியும்... நான் தான் குரங்காச்சே? எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" என்றவள் அந்த கேமராவின் லென்ஸை கழட்ட முற்பட அவளைத் தாவிப் பிடித்தவன்,
"நீ மனுஷி தான்... மனுஷியே தான்... தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ் கேமராவை கொடு. ஆமா எப்போ வந்த?" என்று கேட்டவாறே அவளை படமெடுத்தான்.
இப்போது மீண்டும் முன்பு போல் அனு முகத்தைச் சுளிக்க,"ஹே ச்சீ ஒழுங்கா போஸ் கொடு..." என்றதும் அவளும் அவனுக்கு போஸ் கொடுக்க பின்னாலே வந்த ரித்தீஷ்,
"இங்க தான் இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க மாம்ஸே? எங்களையும் போட்டோ எடுக்கறது... நாங்களும் மனுஷன் தான்... எங்களுக்கும் மூஞ்சி இருக்கு... நாங்களும் கண்ணைச் சுருக்கி உதட்டைச் சுளிச்சு விதவிதமா போஸ் கொடுப்போம்..." என்று சொல்லி போஸ் கொடுத்தான்.
பெரியவர்கள் நால்வரும் மட்டும் அங்கு ஓரமாக அமர்ந்திருக்க லவா மொட்டு அபி மூவரும் ஒரு புறத்தில் சிரித்துப் பேசியவாறே கோவிலைச் சுற்ற இங்கே குஷா அனு ரித்து மூவரும் போஸ் கொடுக்கிறேன் போட்டோ எடுக்கிறேன் என்று இருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் பேரன் பேத்திகள் இவ்வாறு குதூகலமாக இருப்பதை புன்சிரிப்புடன் ரசித்தார் வைத்தி.
"என்னப்பா அப்படிப் பார்க்கறீங்க?" என்ற நந்த கோபாலுக்கு,
"நீங்கலாம் சின்ன பசங்களா இருந்த அப்பயும் இப்படித்தான் அடிக்கடி இங்க வருவோம். நீங்களும் இது மாதிரியே ஓடியாடிட்டு இருப்பிங்க. இன்னைக்கு உங்க பிள்ளைகளும் அதையே செய்யுறாங்க... அண்ட் உங்க எல்லோரையும் விட ஜானுமாவுக்கு இந்தக் கோவில்னா கொள்ளை இஷ்டம்... இதெல்லாத்தையும் போட்டோ எடுக்கணும்பானு அடிக்கடி சொல்லுவா... அதே மாதிரி அவ பையனும் இந்த வந்தாலே போட்டோ தான் எடுக்கறாங்க... காலம் எவ்வளவு வேகமா போகுது பாரு? உனக்கு ஞாபகம் இருக்கா நந்தா? அப்போல்லாம் சனி ஞாயிறுல தஞ்சாவூர் வந்து சினிமா பார்த்துட்டு அப்படியே இங்க வந்து கோவில்ல இருந்துட்டு போகும் போது எதாவது நொறுக்கு தீனியோ ஐஸோ சாப்பிட்டுப் போவோம்..." என்று பழைய நினைவுகளில் அவர்கள் மூழ்க இருட்டத் தொடங்கியும் அவர்கள் யாரும் வராததால் அவர்களை நோக்கிச் சென்றனர்.
எல்லோரும் ஆளாளுக்கு தங்களுடைய கேமராவில் செல்ஃபி எடுத்து போட பாரி, மெல்லினி, இன்னிசை மட்டும் இதில் இல்லாததை எண்ணி வருந்தினர். அதற்குள் புகைப்படத்தைப் பார்த்த நிர்மலா(வைத்தியின் இரண்டாவது மகள்) அவரை அழைத்தார்.
ஏனோ அனு வந்துவிட்டாள் என்றதும் குஷா மேலும் குதூகலமாக மொட்டுவிற்கு தன்னையும் அறியாமல் மனம் உற்சாகம் இழந்தது. இந்த மாற்றங்களை லவாவும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். (நேரம் கைகூடும்...)
"அடிப்பாவி ஹாலிவுட் ஸ்டார்ஸ் பேரை போய் பூனைகளுக்கு வெச்சியிருக்கையே? இது எல்லாம் உன் வேலை தானே?" என்று காதைத் திருக சிரித்தவளின் காலை நக்கிய ஸ்கூபியையும் பெயர் சொல்லி அதட்டினாள்.
"உண்மையிலே எனக்கு என்ன பேர் வெக்கணும்னே தெரியில லவா... ஒன்னு ரெண்டு இருந்தா வெக்கலாம் வீட்ல முன்னாடி ஆறு பூனையும் நாலு நாயும் இருந்தது. உனக்கே தெரியும் நெல்லு மூட்டை பழப்பெட்டினு விளையிற எல்லாத்தையும் இங்க களத்துலயும் குடோன் ரூம்லயும் தான் வெக்கணும். இந்த எலி அணில் தொல்லைங்க ஜாஸ்தி... அதான் பூனைக்கு பூனை வளர்த்த மாதிரியும் ஆச்சு மூட்டைங்களுக்கு காவல் காத்த மாதிரியும் ஆச்சு... அதுபோக வெளியாளுங்க யாரையும் வீட்டுக்குள்ள விடாம பார்க்கறது தான் நம்ம ஸ்கூபியோட வேலை..." என்ற லவாவிற்கு,
"அப்படியா? அப்பறோம் ஏன் எங்களைப் பார்த்தும் குரைக்கல?"
"ஒருவேளை உங்களையெல்லாம் இந்த வீட்டு காரங்கனு நெனச்சிருக்கலாம் இல்ல இவனுங்க மொகரக்கட்டையைப் பார்த்து அதுக்கு சரிப்பட்டு வரமாட்டானுங்கனு நெனச்சிருக்கலாம்... இல்ல" என்று மொட்டு நிறுத்த,
"இல்லனா?"
"மனுஷங்க மாதிரி தன் இனத்தை தானே அழிக்க வேண்டாம்னு நெனச்சிருக்கலாம்..." என்றவள் விஷமமாய்ச் சிரிக்க முதலில் புரியாமல் விழித்தவன் பின் புரிந்து,
"அடியே அப்போ எங்களை நாயினு சொல்றியா டி? இரு உன்னை..." என்று மீண்டும் லவா துரத்த மொட்டு அமைதியாய் வீட்டிற்குள் வந்தவள் அங்கே இருந்த காட்சியைக் கண்டு தன்னை அறியாமல் சிரிக்க பின்னாலே வந்த லவாவும் அதைப் பார்த்து சிரித்தாலும் ஏனோ மனம் பொறுக்காமல்,"என்ன ஆச்சு குஷா?" என்று வினவ, அதுவரை ஹாலில் குப்புற படுத்திருந்தவன் குரல் வரும் திசையில் திரும்ப அவனுக்கு சாமரம் விசிறிக்கொண்டிருந்த வைத்தியும் திரும்பி மொட்டுவை முறைத்தார்.
அங்கே குஷாவின் தொடையில் ஊசியேற்றியவள் வெளியேறிவிட முதலில் வலி என்று மட்டும் அலறியவன் அங்கே சோபாவில் அமரவும் தான் அதிலிருந்து வழிந்த குருதியைக் கண்டு அலற அதற்குள் அங்கே வந்த வைத்தி அவனை ஷார்ட்ஸிற்கு மாற்றி சிறிதாகத் துளையிடப்பட்டிருந்த இடத்தில் மஞ்சள் வைக்கவும் எரிச்சலில் அவனோ அலற அவனுக்காக விசிறிக்கொண்டிருந்தார் வைத்தி. மணவாளனும் அருகே அமர்ந்திருந்தான்.
"ஏன்டி கழுதை, இப்படியா பண்ணுவ? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?" என்ற தன் அன்னையை முறைத்தாள் மொட்டு. பின்னே தன் பரம எதிரியின் முன்னால் 'கழுதை' என்று அழைத்துவிட்டாரே என்ற கோவம் அவளுக்கு.
"நீ எழு... வா டாக்டர்கிட்டப் போய் டிடி போடலாம்..." என்ற லவாவிற்கு,
"அதெல்லாம் ஒன்னும் வேணாயா... இதுவே போதும்..." என்றார் வைத்தி. பிறகு குஷாவைத் தாங்கு தாங்கு என்று சித்ராவும் கனகாவும் உபசரிக்க லவாவுக்கு இப்போது மொட்டின் செய்கையில் சிறு வருத்தம் எழுந்ததும் உண்மையே. அதை லவாவின் பார்வையிலே மொட்டு புரிந்துகொண்டாள். இப்போது லவா மற்றும் குஷா இருவரும் அவளிடமிருந்து ஒரு 'சாரி'யை எதிர்பார்க்க ஏனோ தனக்குமே அதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் 'போயும் போயும் இவனுக்கு நான் சாரி சொல்லனுமா?' என்ற ஈகோ அவளைத் தடுத்தது.
அந்நேரம் பார்த்து வீட்டின் முன் நின்ற பைக்கின் சப்தத்தில் அது நந்தகோபால் தான் என்று உள்ளிருப்பவர்களுக்கு நன்கு புரிந்தது. உள்ளே நுழைந்தவரின் கண்களுக்கு குஷா படுத்திருப்பது தான் முதலில் தெரிந்தது. என்ன ஆச்சோ என்ற படபடப்பில் அவர் உள்ளே வர லவா அவரிடம் மரியாதை நிமித்தமாய் எழுந்து நலம் விசாரிக்க அவருடைய பார்வை முழுவதும் குஷாவின் மீதே இருந்தது.
"என்ன ஆச்சு?" என்று பதறியவருக்கு நடந்ததை சித்ரா சொல்ல திரும்பி தன் மகளை உக்கிரமாகப் பார்த்தார் நந்தகோபால். சபை நாகரிகம் கருதி ஏதும் பேசாமல் குஷாவின் அருகில் சென்றவர்,"இப்போ எப்படியிருக்கு மாப்பிள்ளை?" என்று உரிமையாய் குஷாவிடம் பேசினார். சிறுவயதில் லவா- குஷா இருவரையும் பெயர்ச்சொல்லியே அழைத்துப் பழகியவர் என்று அவர்கள் இருவரும் கல்லூரி முடித்தார்களோ அன்றே அவர்களின் படிப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாய் 'மாப்பிள்ளை' என்றும் வாங்க போங்க என்றும் தான் அழைக்கிறார். ஆனால் இந்த மரியாதை தன்னுடைய அக்கா மகன்களான இவர்கள் இருவருக்கும் மட்டுமே கிடைக்கக்கூடியது. மாறாக தன்னுடைய தங்கை மகனான பாரிக்கு இது கிடைப்பதில்லை. இதை இந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம் இல்லை நமக்கு அதிக உரிமை இல்லாதவர்களுக்கு நாம் கொடுத்தாக வேண்டிய மரியாதை என்ற அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.
"சரி வாங்க ஹாஸ்பிடல் போலாம்..." என்று அவர் அழைக்க
"இல்ல... வேணாம்... பரவாயில்ல..." என்று பசையில்லாமல் மொழிந்தவன்,"அம்மாச்சி இந்த டிவி ரிமோட் எங்க?" என்று கேட்டதும் இதுவரை நெருப்பில் எரியும் கொள்ளியாய் இருந்தவளுக்கு(மொட்டு) இது மேலும் எண்ணெய் ஊத்தியதைப் போலிருந்தது. இப்போது என்ன செய்வதென்று புரியாமல் விழித்தவருக்கு,
"மாமா, அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல... சின்ன காயம் தான்... எல்லாம் சரியாகிடும்" என்று லவா உரைக்கும் போதே பேச வாயெடுத்த குஷாவைக் கண்டவன் நிலை தடுமாறியவன் போல் வேண்டுமென்றே குஷாவின் அடிபட்ட இடத்தில் கையூன்ற இம்முறை குஷாவோ மேலும் அலறினான்.
"நீங்க போய் சாப்பிடுங்க... ஒண்ணுமில்ல" என்ற லவா தன் தாத்தாவிடம் கண்ணைக் காட்ட அவரும் நந்தாவை சாப்பிட அனுப்பினார். அதன் பின் குஷாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு அப்புறப்படுத்தினான் லவா. ஏனோ வந்ததும் வராததுமாகவே நடக்கும் இந்நிகழ்வுகள் வைத்தி மற்றும் கனகா இருவருக்கும் அதிக வருத்தத்தைக் கொடுத்தது.
அவர்களுடனே மொட்டுவும் மணவாளனைக் கூட்டிக்கொண்டு மேலே ஏறினாள். பின்னே இன்னும் சிறிது நேரம் இங்கே நின்றாளெனில் அவள் அப்பத்தா ஏதோ பேச்சை ஆரமித்து தனக்கு தன் தந்தையிடமிருந்து மேலும் சில 'அன்பு' வார்த்தைகளைப் பெற்றுத்தந்து விடுவார் என்பதை அவள் மட்டும் அறியாளா என்ன?
"ஏன் க்கா இப்படிப் பண்ண?" என்ற தன் தம்பிக்கு கோபப்பார்வை ஒன்றைச் செலுத்தியவள்,
"நான் என்ன கடப்பாரையிலா குத்தினேன்? அது ஆஃடேர் ஆல் ஒரு எம்ப்ராய்டரி ஊசி... அதும் ட்ரெஸ்ஸுக்கு மேல தான் குத்துச்சு... அவன் தான் சும்மா ஸீன் போடுறான்னா நீயும் ஏன்டா?" என்னும் போது அவள் கரம் பற்றி இழுத்துச் சென்றவன் மாடியில் அழுக்குத் துணியில் இருக்கும் அவன் பேண்டை காட்டினான். அதில் இருந்த ரத்தக்கறையைப் பார்த்தவள்,
"டேய் நான் வேணும்னே எல்லாம் செய்யல... ப்ராமிஸ்... அதுல எப்படி இவ்வளவு ரத்தம்?"
"அது குத்துனதும் அத்தானும் அதைப் பெருசா கவனிக்கல நானும் அவரும் பேசிட்டே தான் கீழ வந்தோம். அப்போ தான் அவர் பேண்ட்ல இருந்த பிளட்ட நான் கவனிச்சேன்..." என்று பிறகு நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகச் சொன்னான் மணவாளன்.
அங்கே குஷாவை மேலே அழைத்துச் சென்ற லவா கதவைத் தாழிட்டு,
"என்ன பழக்கம் இது குஷா? பெரியவங்க கிட்டப் இப்படியாப் பேசுவ? அவர் பாட்டுக்கு உன்கிட்டப் பேசுறாரு நீ என்னடானா டிவி ரிமோட் கேக்குற... இது சரியா?" என்று லவா வினவ,
"நான் பண்ணது தப்பு தான்... நான் ஒத்துக்கறேன்... அப்போ ஊசியில குத்திட்டு அதுக்கு கர்டெசிக்கு கூட ஒரு சாரி கேக்காம இருந்தாளே அது மட்டும் சரியா? அவளுக்கு அவ்வளவு திமிர் எங்க இருந்து வந்துச்சு? பின்ன அவர் பொண்ணு தானே அவ? விதை ஒன்னு போட்டா சொர ஒண்ணா முளைக்கும்... இதுல என்னமோ ஊர்லயே இல்லாத அழகினு அவளுக்கு நீ சப்போர்ட் வேற... இந்த கருமத்துக்கு தான் ஒழுங்கா நாளைக்கு ஈவினிங் வரலாம்னு சொன்னேன்... எல்லாம் இந்த அம்மாச்சியால வந்தது..." என்று தன்னுடைய பிடித்தமின்மையையும் வெறுப்பையும் காட்டிய குஷாவை அதிர்ச்சியாகப் பார்த்தான் லவா.
"அப்போ அன்னைக்கு என்னென்னமோ டைலாக் எல்லாம் பேசுனா... பிடிச்ச இடத்துல இருந்தா மனசு பலூன் மாதிரி பறக்கும் அப்படி இப்படினு? அப்போ அதெல்லாம் பொய்யா?"
"கல்லணை எனக்குப் பிடிக்கும், பெரிய கோவில் எனக்குப் பிடிக்கும், கொள்ளிடம் எனக்குப் பிடிக்கும், இந்த வீடு எனக்குப் பிடிக்கும். என் அம்மாச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும்... இதுக்காகத் தான் நான் இங்க வந்தேன். ஆனா வந்த இடத்துல இந்த மாதிரி நியூசன்ஸ் எல்லாம் எனக்குப் பிடிக்கல..." என்றதும்,
"டேய் என்னடா பேசுற? என்ன தான் இது நம்ம அம்மாச்சி வீடா இருந்தாலும் இதுல நமக்கு உரிமை எதுவும் இல்ல. தாத்தாவுக்குப் பிறகு எல்லாம் மாமாங்களுக்குத் தான். நாம வெறும் கெஸ்ட். நல்லாக் கேட்டுக்கோ நாம வெறும் கெஸ்ட். வந்தோமா பார்த்தோமா போனோமான்னு இருக்கனும். அதுக்கு நாம எல்லோரையும் அனுசரிச்சு தான் போகணும். அண்ட் உன்கிட்டயும் நான் பலமுறை சொல்லிட்டேன், பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோடவே போகட்டும். நாம வீணா அதுல தலையிடக் கூடாது... அண்ட் அப்பாவே இது எதிலும் தலையிடாம அமைதியா இருக்கும் போது உனக்கென்ன வந்துச்சு? இன்னும் ரெண்டு நாள் ரெண்டே நாள் கொஞ்சம் அடக்கி வாசிடா ப்ளீஸ்... நாம வந்ததே தாத்தாவோட வெட்டிங் டே செலிபிரேசனுக்கு... வீணா அவங்களை வருத்தப்பட வெச்சிடாத..." என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.
அங்கே மற்றொரு அறையில் மொட்டுவும் மணவாளனும் உரையாடினார்கள்.
மணவாளனிடம் தன்னுடைய கோபத்தையெல்லாம் கொட்டினாள் மொட்டு.
"அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் பாரு... நம்ம அப்பா எவ்வளவு மரியாதையா கேள்வி கேக்குறாரு அவன் அவரை மதிச்சானா? சரியான திமிர் பிடிச்சவன்... அப்படியே அவங்க அப்பாவோட ஏட்டிடியூட்..." என்னும் போது அவளைத் தடுத்தவன்,
"ஏன் க்கா இப்படிப் பேசுற? யாரு காதுலையாவது விழப்போகுது..." என்று பதற,
"விழுந்தா விழட்டும்... இது நம்ம வீடு. நாம ஏன் பயப்படணும்? நம்ம வீட்டுக்கு வந்து நம்ம அப்பாவையே மதிக்க மாட்டானாமாம்? எல்லாம் அப்பாவையும் சொல்லணும்... அவனுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசுறாரு..." என்றவர் எரிச்சல் அடங்காமல்,"வாயைத் திறந்து மாமான்னு கூப்பிட்டானா அவன்? திமிரு திமிரு உடம்பு முழுக்க திமிரு மட்டும் தான் இருக்கு..." என்று முணுமுணுத்தாள்.
"அக்கா இந்த வீட்ல நமக்கென்ன உரிமை இருக்கோ அது அவருக்கும் இருக்கு..." என்ற மணவாளனை முறைக்கவும் அமைதியடைந்தான்.
கீழே பெரியவர்கள் இருவரும் தங்கள் மகன் மற்றும் மருமகளிடம் வந்து,"ஏய்யா அவன் பேசுனதை எதையும் மனசுல வெச்சுகாதா... ரொம்ப வருஷம் கழிச்சு பிள்ளைங்க இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்குதுங்க... அவங்க சின்னஞ்சிறுசுங்க... அதுபோக அவங்க யாரு? நீ உன் தோள்ல தூக்கி வளர்ந்த பசங்க தானே? எல்லாத்துக்கும் மேல ஏற்கனவே உன் மாமா நம்ம யார்கூடவும் பேசுறதில்லை..." என்று முடிக்கும் முன்னே,
"புரியுதுப்பா... விடுங்க நான் எதையும் தப்பா எடுத்துக்கல..." என்று அவர் எழ மாடியில் இருந்து இதை மொட்டுவும் மணவாளனும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
"ஏம்மா சித்ரா இன்னைக்கு பிரதோஷம் தானே?" என்ற கனகாவுக்கு,
"ஆமாத்த... அதும் சனிப்பிரதோஷம் வேற..."
"நல்லதாப் போச்சு... எண்ணெய் வெளக்கெல்லாம் எடுத்துவைத்தா சாயுங்காலம் கோவிலுக்கு ஒரு எட்டுப் போய் பெருவுடையானை கும்பிட்டு வரலாம்..." என்று நகர்ந்தார். அப்போது வெளியேறிய லவாவின் காதிலும் இவை விழுந்தது.
திட்டமிட்டபடியே மாலை ஐந்து மணிக்கெல்லாம் அவர்கள் எல்லோரும் தஞ்சாவூர் செல்ல ஆயத்தமாக ஏனோ மதியம் இருந்த அந்த மனநிலை மாறி குஷாவின் முகத்தில் உற்சாகம் பிறந்தது. நந்த கோபால் தாங்கள் வழக்கமாய்ப் பார்க்கும் மருத்துவரிடம் பேசி குஷாவுக்கு ஊசி போட அப்பாய்ண்ட் மென்ட் வாங்கியவர் அதை தன் அன்னையிடம் சொல்லி அவனைச் சம்மதிக்க வைக்குமாறு சொல்ல,
"அவன் என்ன குழந்தையா? ரொம்ப தான்..." என்று எதையோ சொல்ல வந்த மொட்டு தன் தந்தையின் தீப்பார்வையில் அடங்கினாள். 'சும்மாவே அந்த ஆடு ஆடுவான் இனி அவனுக்கு கிரீடம் உச்சுச்சு ஏறிடும்...' என்று முணுமுணுத்தாள்.
அடுத்த அரை மணிநேரத்தில் கோவிலை அடைந்தவர்கள் அவ்வளாகத்திற்குள் நுழைய, ஒவ்வொரு முறை இங்கு நுழையும் பொழுது ஏற்படும் அந்த பிரமிப்பும் உற்சாகமும் இம்முறையும் குஷாவை ஆட்கொண்டது.
கோவிலின் பிரகாரத்தில் ஆங்காங்கே சிலர் புகைப்படமும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டிருக்க தன்னுடைய 'கேனா'னையும் எடுத்து அதில் புகைபடமெடுக்கத் தொடங்கினான் குஷா. லவாவோ பெரியவர்களுடன் பேசியவாறே வர முதலில் எல்லோருமாகச் சென்று இறைவனை தரிசித்தனர். வழக்கமாய் இக்கோவிலுக்கு வரும் போதெல்லாம் தான் வைக்கும் அதே வேண்டுதல்களை வைத்தியலிங்கம் இம்முறையும் வைக்க பெண்கள் நந்திக்கு விளக்கேற்றி அவரவர் தம் பிராத்தனையில் மூழ்கினர்.
அக்கோவிலில் அடியெடுத்து வைக்கும் பொழுதெல்லாம்,'இந்த இடங்களில் எல்லாம் கூட இந்த இந்தியாவையே ஆண்ட ஏன் கடல் மார்க்கமாய் இலங்கை மாலத்தீவு முதலியவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து ராஜாங்களுகெல்லாம் ராஜாவாகத் திகழ்ந்த ராஜராஜனின் பாதம் பதிந்திருக்கும் அல்லவா? இதோ இந்த பிரகாரத்தினுள் எத்தனை முறை வலம்வந்திருப்பான்? அவனுள் எத்தனை எண்ணங்கள் ஓடி கொண்டிருந்திருக்கும்? இவ்வாறு ஒரு கோவில் கட்ட வேண்டுமென்ற எண்ணம் அவன் சிந்தையில் எவ்வாறு வந்திருக்கும்? அதுபோக ஆயிரம் ஆண்டுகள் கண்டதும் இப்படி கம்பீரமாய் இது நிற்கும் என்று அப்போது அவன் எண்ணியிருப்பானா? இல்லை அவன் அவ்வாறு எண்ணியதன் விளைவாகவே தான் இன்று இக்கோவில் நிலைத்திருக்கிறதா? அதும் சுற்றி 60 கிலோமீட்டர் தொலைவிற்கு க்ரைன்ட் வளமே இல்லாத ஒரு வளமான இடத்தில் எப்படி இது சாத்தியமாயிற்று?' என்ற பிரமிப்புகள் ஒவ்வொரு முறை இங்கு அடியெடுத்து வைக்கும் பொழுதெல்லாம் அவன் மூளையில் உதிக்கும். தீர்க்கமுடியாத புதிர்கள் என்று அவனுக்குத் தோன்றும் புதிர்களில் இதுவும் ஒன்று.
இதுபோன்ற யோசனையில் அவன் ஒரு தனி உலகத்தில் வியாபித்துக்கொண்டிருக்க அவன் வைத்த ஒரு ப்ரேமிற்குள் நுழைந்தது அந்த உருவம். ஒரு கணம் அதிர்ந்தவன் நிமிர்ந்து வெளியே பார்க்க இக்கால செல்ஃபி புகைப்படங்களுக்கென்றே பிரத்தியேகமாக இருக்கும் அந்த விசித்திர முகபாவனையுடனும் விந்தையான உடல்மொழியுடனும் நின்றிருந்தாள் அனு என்கின்ற புல்வெளி.
"என்ன போட்டோ கிராபர் இன்னுமா போட்டோ எடுக்கல? எவ்வளவு நேரம் தான் நாங்களும் இப்படியே போஸ் கொடுக்குறது?" என்று அமர்த்தலாகக் கேட்டாள் அனு.
"உன்னை எப்போ வேணுனாலும் எடுக்கலாம்... அண்ட் இதென்ன போஸ்? குத்தாலம் போனா அங்க கிடைக்கும் பாரு விதவிதமான போஸ்... ஆனா இந்த வேலை நுணுக்கங்கள் எல்லாம் இங்க தான் கிடைக்கும்..." என்று போகும் போக்கில் அவளை குரங்கு என்று அவன் குறிப்பிட்டதை அறிந்தவள்,
"அப்படியா குரங்கு என்ன பண்ணும் தெரியுமா?" என்று அவனை சுற்றி சுற்றி வட்டமடித்து டார்ச்சர் செய்தவள் அவன் அசந்த நேரம் பார்த்து அவன் கேமராவைப் பிடுங்கிவிட,
"ஹே புதுசுடி தாயே... உடைச்சிடாத..." என்ற குஷாவிற்கு,
"அப்படியா? மனுஷனுக்கு தான் இது கேமரானு தெரியும்... நான் தான் குரங்காச்சே? எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?" என்றவள் அந்த கேமராவின் லென்ஸை கழட்ட முற்பட அவளைத் தாவிப் பிடித்தவன்,
"நீ மனுஷி தான்... மனுஷியே தான்... தெரியாம சொல்லிட்டேன். ப்ளீஸ் கேமராவை கொடு. ஆமா எப்போ வந்த?" என்று கேட்டவாறே அவளை படமெடுத்தான்.
இப்போது மீண்டும் முன்பு போல் அனு முகத்தைச் சுளிக்க,"ஹே ச்சீ ஒழுங்கா போஸ் கொடு..." என்றதும் அவளும் அவனுக்கு போஸ் கொடுக்க பின்னாலே வந்த ரித்தீஷ்,
"இங்க தான் இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க மாம்ஸே? எங்களையும் போட்டோ எடுக்கறது... நாங்களும் மனுஷன் தான்... எங்களுக்கும் மூஞ்சி இருக்கு... நாங்களும் கண்ணைச் சுருக்கி உதட்டைச் சுளிச்சு விதவிதமா போஸ் கொடுப்போம்..." என்று சொல்லி போஸ் கொடுத்தான்.
பெரியவர்கள் நால்வரும் மட்டும் அங்கு ஓரமாக அமர்ந்திருக்க லவா மொட்டு அபி மூவரும் ஒரு புறத்தில் சிரித்துப் பேசியவாறே கோவிலைச் சுற்ற இங்கே குஷா அனு ரித்து மூவரும் போஸ் கொடுக்கிறேன் போட்டோ எடுக்கிறேன் என்று இருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் பேரன் பேத்திகள் இவ்வாறு குதூகலமாக இருப்பதை புன்சிரிப்புடன் ரசித்தார் வைத்தி.
"என்னப்பா அப்படிப் பார்க்கறீங்க?" என்ற நந்த கோபாலுக்கு,
"நீங்கலாம் சின்ன பசங்களா இருந்த அப்பயும் இப்படித்தான் அடிக்கடி இங்க வருவோம். நீங்களும் இது மாதிரியே ஓடியாடிட்டு இருப்பிங்க. இன்னைக்கு உங்க பிள்ளைகளும் அதையே செய்யுறாங்க... அண்ட் உங்க எல்லோரையும் விட ஜானுமாவுக்கு இந்தக் கோவில்னா கொள்ளை இஷ்டம்... இதெல்லாத்தையும் போட்டோ எடுக்கணும்பானு அடிக்கடி சொல்லுவா... அதே மாதிரி அவ பையனும் இந்த வந்தாலே போட்டோ தான் எடுக்கறாங்க... காலம் எவ்வளவு வேகமா போகுது பாரு? உனக்கு ஞாபகம் இருக்கா நந்தா? அப்போல்லாம் சனி ஞாயிறுல தஞ்சாவூர் வந்து சினிமா பார்த்துட்டு அப்படியே இங்க வந்து கோவில்ல இருந்துட்டு போகும் போது எதாவது நொறுக்கு தீனியோ ஐஸோ சாப்பிட்டுப் போவோம்..." என்று பழைய நினைவுகளில் அவர்கள் மூழ்க இருட்டத் தொடங்கியும் அவர்கள் யாரும் வராததால் அவர்களை நோக்கிச் சென்றனர்.
எல்லோரும் ஆளாளுக்கு தங்களுடைய கேமராவில் செல்ஃபி எடுத்து போட பாரி, மெல்லினி, இன்னிசை மட்டும் இதில் இல்லாததை எண்ணி வருந்தினர். அதற்குள் புகைப்படத்தைப் பார்த்த நிர்மலா(வைத்தியின் இரண்டாவது மகள்) அவரை அழைத்தார்.
ஏனோ அனு வந்துவிட்டாள் என்றதும் குஷா மேலும் குதூகலமாக மொட்டுவிற்கு தன்னையும் அறியாமல் மனம் உற்சாகம் இழந்தது. இந்த மாற்றங்களை லவாவும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான். (நேரம் கைகூடும்...)