மக்களுக்காக அரசுடமையாக்கப்பட்டவை
அரசியலுக்காக தனியார்மயமாக்கப்படுமெனில்
ஆளும் அரசே
தன்னலம் பார்க்குமாயின்
அரசின் மக்களின் ஒழுக்கம் கேள்விக்குறியே???
குற்றம் குற்றமாகக் காணாது
சுய இன்பம் தேடும் சிலர்
அறிவதில்லை பலரின்
இழப்புக்கள்...
குற்றத்தை நேர் செய்ய
தனி நபர் முயலும் சூழலில்
எளிதாய் தாக்கப்படும் அபாயமும் உண்டு..
நேர்மையுள்ளவர் துணையின்றி
தண்டிக்க துடிக்கும் இள இரத்தங்கள்
துணைகொண்டு சீர்திருத்தம் கொண்டுவரமுடியுமா??
பிழைபொறுக்காது தண்டிக்கத்துணிபவர்
சிக்கலின்றி வாழ்ந்திட முடியுமா???..