சூப்பர் சிஸ்எல்லோரும் அப்படி இருக்கமாட்டாங்க டியர்.. நீங்களும் பயந்து குழந்தையையும் பயம் காட்டாதிங்க...
இங்க ஒரு விஷயத்தை சொல்லணும்னு நினைக்கிறேன் நம்மள சுத்தி எப்பவும் எது வேணாலும் நடக்கலாம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறதோடு மட்டுமல்லாமல் எதையும் துணிஞ்சி போராடி நம்மள நிரூபிக்கணும்...
நான் படிச்சது எல்லாம் மகளிர் பள்ளி மற்றும் மகளிர் கல்லூரியில் தான்..
நான் 12th படிக்கும்போது ஃபர்ஸ்ட் பென்சில் தான் உட்கார்ந்து இருப்பேன் அப்போ கிளாஸ் எடுத்த physics sir என் முன்னாடி book வச்சிட்டு நின்னுட்டு சிண்டிகிட்டே இருந்தார் தெரியாமல் கை பட்டுடிச்சுமா தெரியாம கால் பட்டுடிச்சுன்னு சொல்லுவாரு, நானும் பர்ஸ்ட் அத பெருசா நினைக்கல ஆனா போக போக தான் தெரிஞ்சது வேணுமுன்டே தான் இந்த நாய் செய்துன்னு... ஒரு நாள் ஹெட் மாஸ்டர் ரவுண்ட்ஸ் வரும்போது இவர் இதே வேலையா கைமேல கை வைக்க வரவும் நான் பேனாவினால் அந்த நாயோட கைல குத்திட்டேன்.. ஹெட் மாஸ்டர் கிட்டயும் தைரியமா நடந்ததை சொன்னேன்... நான் எவ்வளவு அமைதியான பொண்னோ அதே அளவுக்கு எனக்குன்னு ஒரு ஆபத்து வரும்போது யாரையும் நம்பாம எனக்கு நானே தைரியப்படுத்திக்கிட்டு அந்த விஷயத்தை கையாளுவேன்.... என்னோட ஸ்டூடண்டுக்கும் இதை நான் சொல்லி இருக்கேன்.. எல்லாருமே எல்லா இடத்திலும் கூட துணைக்கு வர முடியாது, யார் மூலம் வேண்டுமானாலும் பிரச்சனை வரும், இதை நம்ம பசங்களுக்கு சொல்லி புரிய வச்சாலே போதும் பிரச்சனை குறையும்.