Saras massssss ... thitta koodadhu sis
இந்த சரசு ஓவரா சவுண்டு விட்டுக்கிட்டு இருக்கு... அது வாயில பால்டாயிலை ஊத்துற வேண்டியது தான்...
View attachment 5491
எங்க இருந்தீங்க இவ்ளோ நாளா இதை முன்னாடியே செய்திருந்தா என் ஹீரோவோட சேர்ந்து நானும் தப்பிச்சு இருப்பேனே ... இந்த trio (பிரகாசம், நாதன்,சரசு) மோசமானவங்கலயே முக்கியமானவங்க...
இந்த சரசு ஓவரா சவுண்டு விட்டுக்கிட்டு இருக்கு... அது வாயில பால்டாயிலை ஊத்துற வேண்டியது தான்...
View attachment 5491
நன்றிகள்
எழில் காதல் அம்மாவை மீறி ஜெயிக்குமா ரைட்டர் waiting
ஆத்தாடி தெய்வமே ஏன் இந்த கொலைவெறி...Saras massssss ... thitta koodadhu sis
அகமகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் ... எழில் வேலை என்னங்கிறது சஸ்பென்ஸ் அடுத்த பாகத்தில் தெரிய வரும் சிஸ்..எழில் பெயரை வச்சுட்டு அவன் வாழ்க்கையில் எழிலே இல்லாமல் ஆக்கிட்டால் அவன் அம்மா
சரசு மாதிரி பொம்பளைங்களுக்கு எதுக்கு தான் கடவுள் குழந்தை வரம் கொடுக்கிறாரோ தெரியல .
அவளுக்கு பிறந்ததாலே ஒரு நியாயமான ஆசையை கூட நிறைவேத்த எத்தனை பேர் கிட்ட கெஞ்ச வேண்டிய இருக்கு. பெத்தவங்க செஞ்சு கொடுக்க வேண்டியதை எல்லாம் அடுத்தவங்க கிட்ட உதவி கேட்டு அவங்களுக்கு பதில் சொல்லி எவ்வளவு மோசமான நிலைமை
நீலா கிட்ட எழில் பேசுறதை படிக்கும் போது கஷ்டமா இருக்கு .
அம்மா தான் மனித பிறவி இல்லை அப்பா நீங்களாவது அவனுக்கு ஆதரவாக இருக்கலாம் அல்லவா. அலர் படிப்பு முடிஞ்சு வரட்டும் நானே உனக்காக அவ அப்பா கிட்ட பொண்ணு கேட்கிறேன் என்று சொன்னா என்னவாம் . இப்பவும் பொண்டாட்டியை அடக்காமல் மகனை வீட்டை விட்டு போக சொல்லுறாரு. இனியாவது மகனுக்கு நல்ல தகப்பனா மாறுங்க.
சரசு இவளை எல்லாம் எந்த பிறவியில் சேர்க்கிறது என்றே தெரியல பேய் பிசாசு கூட சேர்த்தால் அதுங்களுக்கு தான் அசிங்கம்
சரசு குணம் தெரியுற யாருக்கும் தன் பொண்ணை வாழ அனுப்ப மனசு வராது.
அலர் எவ்வளவு தைரியமான பொண்ணா இருந்தாலும் வாழ்நாள் முழுக்க இந்த சரசு போராடிகிட்டே வாழ முடியுமா
அடேய் எழில் நாதனை விட வளர்மதி தான் முதலில் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் உங்க குடும்பத்துக்கு வாழ வந்துட்டு ஒருநாள் கூட அவங்க நிம்மதியாக வாழல அவங்க பொண்ணு கல்யாணமாவது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடக்கட்டும் . மாமனை பத்தி மட்டும் யோசிக்காமல் மாமி பத்தியும் யோசி
எங்க எழிலு எவ்வளவு ஃபீல் பண்ணி பேசிகிட்டு இருக்கான் இந்த வெற்றி என்னடான்னா தாமரைக்கு வாயிலே தண்ணீர் பாய்ச்சிட்டு இருக்கான்.
எழில் சார் நீங்கள் தாமரைக்கு சொன்னது எல்லாம் அலருக்கும் பொறுந்தும் அதை முதலில் உன் மனசில பதிய வை.
எழில் அரசாங்கத்தில் என்ன வேலை பார்க்கிறான்
ஆனாலும் இன்னைக்கு எபில எழிலை பார்க்க ரொம்ப பாவமா இருக்கு சீக்கிரம் ஏதாவது நல்லது செஞ்சு விடுங்க
சரசு.... இவங்கயெல்லாம் திருந்தவே மாட்டாங்க..... அவங்க நினைச்சதை சாதிக்க எந்த எல்லைக்கும் போவாங்க போல.... இப்போ பையனையும் வீட்டை விட்டு துரத்தியாச்சு.... கம்முனு இருக்குற வரைக்கும் தான் புருஷனுக்கும் அங்க இடம்..... பணப் பேய் பிடிச்சு ஆட்டுது...
நீலாம்மா நாதன்ட்ட பேசுறதுக்கு நல்ல சாய்ஸ் தான்.... ஆனாலும் இந்த கல்யாண விஷயத்துல நாதனை விட வளர் கிட்ட இருந்து தான் மறுப்பு பெரிசா இருக்கும்... எழில் எப்படி தான் எல்லாரையும் சரிக்கட்ட போறானோ... அந்த வீட்டுலயே இவனோட அம்மாச்சி இருக்காங்களே அவங்களை பிடிக்கலாமே...