ப்ரீத்தி உனக்கு சரண் மேல் காதல் இருந்தால் சென்னையில் தான இருந்தான் நேரில் சந்தித்து உன் காதலை சொல்லி இருக்கணும் அதை விட்டுட்டு உருவ ஒற்றுமைய பயன் படுத்தி சரணுக்கு துரோகம் பண்ணிருக்க நீ பிரகாசம் காதல் என்கிற பெயரில் உங்க அம்மாவுக்கு செய்ததும் நீ சரணுக்கு செய்றதும் ஒன்னு தான்
எழிலு உன் பொண்டாட்டிக்கு ஓவர் பில்டப் கொடுக்காத ப்ரீத்திக்கு இருக்க வெறிக்கு உன் பொண்டாட்டி அடி வாங்காமல் இருந்தால் சரி தான்
என்ன ப்ரீத்தி செல்லம் வெல்லம் என்று கடுப்பேத்தி கிட்டு இருக்க
எழிலு இப்படி ஏதாவது பேசி அவளை நல்லா குழப்பி அவளுக்கு சரண் மேல் இருக்குறது காதலை இல்லை என்று நம்ப வச்சிருடா
ப்ரீத்தி பிரகாசத்துக்கு தண்டனை கொடுக்கிறது நல்லா இருந்தாலும் அவளோட எதிர் காலத்தை பத்தி யோசிச்ச மாதிரி தெரியல
இப்போ வயித்துல குழந்தை வேற இவளும் இவ பட்ட துன்பத்தை தான அந்த குழந்தைக்கு கொடுக்கிறா
இவ பிரகாசத்தை பழி வாங்கி முடிச்சதும் அந்த குழந்தைக்கு அப்பா என்று யாரை காட்டுவா அப்போ இவ செய்றது மட்டும் நியாயமா
கீர்த்தி வசுமதி மாதிரி அப்பாவி..... ஆனா ப்ரீத்தி அப்படியே ப்ரகாசத்தோட வாரிசு.... எவ்வளவு திட்டம் போட்டு செயல் பட்டுருக்கா பதினாலு வயசுலயே.... பழிவெறியில ரொம்ப மோசமா குரூரமா மாறிட்டா.... சரணை ஏமாத்தி அசிங்கப்படுத்தி சொந்த தங்கச்சி வாழ்க்கையையே பறிச்சுன்னு என்னவெல்லாம் பண்ணிட்டா...
காதல்ன்ற பேர்ல சரணை அடைய இந்த வழியை தேர்ந்தெடுத்து இருக்கா... இவ நோக்கம் பிரகாசம் மட்டும் இல்லை சரணும் தான்... ஆரம்பத்துல இவளோட தைரியம் நிமிர்வு பிடிச்சது இப்போ இவளை பிடிக்கவே இல்லை... இதுல குழந்தை வேற...