இந்த வசுந்தரா ஏதாவது கோளாறு செஞ்சு வைச்சிருப்பாள்ன்னு நான் நினைத்தேன்
அடி வீணாப் போனவளே
அதெப்படி கல்யாணமாகாமல் எந்த நம்பிக்கையில் வாசுவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்தாய்?
இப்போப் பாரு அவன் மட்டும் தப்பிக்கறதுக்கு புலம்புறான்
இவளோட திருகுதாளங்கள் பற்றி மணிக்கு ஒண்ணும் தெரியாதுன்னு வசு நினைச்சுக்கிட்டு இருப்பாள்
ஆனால் எல்லாத்தையும் மணியிடம் வட்டிக்காரன் சொல்லிட்டானே
வாம்மா வசும்மா
வந்து மணிமேகலையிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டு போம்மா
வீட்டினரிடம் பொய் சொல்லி உன்னை பகடைக்காயாய் சிக்க வைக்கப் பார்த்த வசுவை சும்மா விடாதே மணி
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேளு
மணிமேகலையின் இவ்வளவு மனசு கஷ்டத்துக்கும் காரணம் மலர்விழியும் விக்டர் வில்சனும்தான்
இதிலே அவ்வளவு தூரம் அங்கே போன பெண்ணிடம் எந்த உண்மையையும் இன்னும் சொல்லவில்லை
இது என்ன ஏழரையில் கொண்டு போய் விடப் போகுதோ?
வாயில்லாத கணவரிடம் பேச முடியாட்டியும் கயல்விழி @ வரலட்சுமி மகளிடமாவது மனம் விட்டு பேசியிருக்கலாம்
வெறுமனே கடவுள் முன்னாடி பாட்டு பாடினால் சரியாப் போச்சா, வரலட்சுமியம்மா?