Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 5

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 5

“ஹலோ நளின்” என்ற சத்தமான அழைப்பில் அதிர்ந்து நின்றிருந்த நளினா, அருகில் நின்று கொண்டிருந்த பரத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் என்ன சொல்ல வரேன்னா...”என்று பரத் சொல்லிக்கொண்டிருக்கும் போதே , நளினாவின் “ஸ்டாப் இட்” என்ற குரல் ஒலித்தது.

அந்த குரல் கேட்டு நிறுத்தினான் பரத்.

“யோவ் என்னய்யா நினைச்சிக்கிட்டு இருக்க மனசுல?, இப்படியா பப்ளிக் பிளேஸ்ல நடந்துப்ப?, படிச்சவன் தான நீ, ரோட் சைட் ரோமியோ மாதிரி பிகேவ் பண்ற...”

“சாரி நளின், நான் பண்ணினது தப்பு தான் பட் நான் சொன்னது உண்மை.” என்றான் பரத்.

“யோவ் இன்னும் உன் பேர் கூட எனக்கு தெரியாது .” எனும்போதே “நளின் என் பேர்” என்று பரத் ஆரம்பித்தான்.

“நிறுத்துய்யா , எனக்கு ஒண்ணும் உன் பேரும் வேண்டாம் ஊரும் வேண்டாம். ரெண்டு பேருக்குமே ஒருத்தரை பற்றி ஒருத்தர்க்கு தெரியாது , நான் அதை தெரிஞ்சிக்கவும் விரும்பலை இனிமே லவ் கிவ்ன்னு பின்னால அலையாத..” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

“நளின் ஸ்டாப், ப்ளீஸ் வெயிட் நான் என்ன சொல்றேன்னா?” என்றான்.

“யோவ் இந்த மாதிரி பீகேவ் பண்ணிட்டே இருந்தேன்னா நான் சத்தம் போட்டு ஊரை கூட்டுவேன் அப்பறம் உன்னை ஈவ் டீசிங் கேஸ்ல உள்ள தள்ளிருவாங்க.. இனிமே என் பின்னால வராதே.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

இப்பொழுது அதிர்ந்து நிற்பது பரத்தின் முறையாயிற்று.

சிறிது நேரம் கழித்து அவனை தேடி அவ்யுக்த் அங்கே வந்தான். தன் நண்பனின் அதிர்ந்த தோற்றம் பார்த்து அவன் தோளை பிடித்து உலுக்கினான். பரத் சுய உணர்வு பெற்றதும்,

‘பரத் , என்னாச்சு என் இப்படி நிக்கற? அவங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணினியா இல்லையா? என்றான்.

“அதெல்லாம் பண்ணிட்டேன் டா பட் நான் செஞ்சது தான் சொதப்பலா போச்சு.”

“ஏன்டா என்ன பண்ணின?”

பரத் அவளிடம் பேசினதைப்பற்றி அவ்யுக்திடம் பகிர்ந்துக்கொண்டான்.நடுவே தான் நடந்துக்கொண்ட முறையையும் சொன்னான். அதற்கு நளினாவின் பதிலடி பேச்சையும் கூறினான்.

மிகுந்த கோபப்பட்ட அவ்யுக்த், “ஏண்டா இப்படியா டா பீகேவ் பண்ணுவ?” என்றான்.

“டேய் உனக்கு தெரியாதுடா அவ என் கிட்ட ரொம்ப திமிரா பேசிட்டே இருந்தது என்னை தெரியாத மாதிரியே நடந்துகொண்டது எல்லாமே பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு, அப்போ நான் என்ன பண்றேன்னே தெரியாம உணர்ச்சிவசப்பட்டு செஞ்சிட்டேன் டா, தப்புன்னு தெரிஞ்சு சாரி சொன்னா அதை காதிலேயே வாங்காம போய்ட்டா.” என்றான் பரத்.

“நீ என்ன சொன்னாலும் அது தப்பு தான் டா. சரி அவங்களபத்தி டிடைல்ஸ் கலெக்ட் பண்ணியா இல்லையா?”

பரத் அசடு வழிந்துக்கொண்டே, “இதுக்கு தான் அவ்யுக்த் உன்னை கூப்பிட்டேன் நீ இருந்திருந்தா எல்லாம் கரெக்ட்டா வாங்கி இருப்ப, இப்போ என்னை பத்தி அவளுக்கும் ,அவளை பத்தி எனக்கும் ஒண்ணும் தெரியாது டா.” என்றான் பரத்.
“ஆமாம் பண்றது எல்லாம் பண்ணிட்டு பேச்சை பாரு, சரி விடு நெக்ஸ்ட் டைம் அவங்களை மீட் பண்ணினா கண்டிப்பா உன் அருமை பெருமை எல்லாம் சொல்றேன், இப்போ கிளம்பலாமா?” என்றான்.

“டேய் உனக்கு தான் பார்த்துக்க மாட்டேங்கிற , என்னோடதையாவது சேர்த்து வைடா.” என்று சொல்லியபடியே அவ்யுக்த்துடன் கிளம்பினான்.

நளினா மிகுந்த கோபத்துடன் வீட்டின் மொட்டைமாடியில் நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுது அவளுடைய போன் ஒலித்தது.

சஹி தான் அவளை அழைத்திருந்தாள். போனை எடுத்து ‘சொல்லுடி’ என்றாள் சுரத்தேயில்லாமல்.

“ஹே நளின் என்னடி என்னாச்சு? இவ்ளோ டல்லா பேசற?”

“விஷயம் இருக்குடி அதான் இப்படி இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அவளிடம் எல்லாவற்றையும் சொன்னாள்.

“அவனுக்கு பெரிய மாதவன்னு நினைப்பு அலைபாயுதே டயலாக்க அப்படியே சொல்றான், சரியான லூசு” என்று கிட்டத்தட்ட ஒருமணி நேரம் புலம்பினாள்.

“நளின் என்னடி அந்த ஆள் உன்னை ரொம்ப பாதிச்சிருக்கானா?, இவ்வளவு நேரமா அவனைப் பத்தி மட்டுமே புலம்பிட்டு இருக்க?”

“சஹி வேண்டாம் நானே ரொம்பக்கடுப்புல இருக்கேன் நீ வேற வெறுப்பேத்தாதடி.”

“சரி விடுடி நான் அங்க வந்தவுடனே அவனை பத்தின டிடைல்ஸ் கலெக்ட் பண்ணி தரேன்டி.” என்றாள் சிரித்துக்கொண்டே.

நளினாவும் சிரித்துக்கொண்டே “சஹி உன்னைய்ய்ய்ய் வாடி இங்க கவனிச்சிக்கறேன்.” என்றாள்.
 
அன்பு வாசக தோழமைகளே!!!
கதையை தொடர்ந்து படித்து கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு தனி தனியே பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன். சில சொந்த வேலையின் காரணமாக என்னால் பதில் தர முடியவில்லை. கூடிய விரைவில் அனைவருக்கும் பதில் தருகிறேன். அதுவரை கதையை தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
சத்யாஶ்ரீராம்
 
Top