அத்தியாயம்: 16
“மீ.ரா..!! மீர்ரா..!! ப்ளீஸ் அ..அ.வளை விட்டுடு விக்.கி!!” என்று ஏதேதோ முனகிய சமர்த்தை தோளை தொட்டு எழுப்பினான் கோவிந்த்.
“என்ன ஆச்சு கோவிந்த்? மீரா எங்க? மாமி, மாமா வந்தாச்சா?” என்று கேட்ட சமர்த்தை கவலையுடன் பார்த்தான் கோவிந்த்.
செவிலியர் அறைகதவை தட்டிய ஒலியில் விழித்திருந்த சமர்த்திடம் அலைபேசியில் வந்திருந்த தகவல்களை காண்பித்திருந்தான் கோவிந்த்.. அதைப் படித்தவுடன் சில நிமிடங்களில் மறுபடியும் உறக்கத்தை தழுவினான் சமர்த்.
சமர்த் தூங்கியதை கோவிந்த் கவனித்திருக்கவில்லை..
ஐந்து பத்து நிமிடங்களுக்குள், அளிக்கப்பட்ட மருந்துகளின் விளைவால் ஒருவித மயக்கம் கலந்த தூக்கத்திற்கு சென்றிருந்தான் சமர்த்.. அதற்குள்ளாகவே மீராவை குறித்து ஏதோ கெட்ட கனவு கண்டு புலம்பியது, கோவிந்திற்கு கவலையாகவே இருந்தது..
“சமீர் எதுக்குடா மீரா மீரா ன்னு கத்தின, இதுல அவளை விட்டுடுன்னு வேற? என்ன கனா எதாச்சும் கண்டியா? இல்ல, உடம்புக்கு ஏதானும் பண்றதாடா?” என்று சமர்த்திடம் கவலையுடன் வினவினான் கோவிந்த்.
“தங் காட்..!! அது கனவு..!! அந்த விக்கி சமீரா கழுத்துல கத்தி வச்சிருக்கிற மாதிரி கனவு வந்துடுத்து கோவிந்த்.. நாம எல்லாம் ‘மீரா, மீரா’ ன்னு கத்தற மாதிரி வேற இருந்தது அந்த கனவுல.. அதான் நான் நிஜமாவே கத்திட்டேன் போல இருக்கு.. சரிடா அவா எல்லாம் எங்க? நேக்கு அவா எல்லாம் வந்த மாதிரி இருந்ததே..!! அதுவும் கனவா..!!”
“இன்னும் அவா வரலடா.. வர்ற நாழி ஆயிடுத்து..!! இரு மீராக்கு மெசேஜ் பண்றேன்.. எல்லாத்தையும் மனசுல போட்டுண்டு உழப்பிண்டே இருந்தியோன்னோ..! அதான் கனா வந்துடுத்து.. வொர்ரி பண்ணாத சமர்த்..!” என்று கூறிய கோவிந்திற்கு ஒரு சிறு தலையசைப்பை பதிலாக தந்தான் சமர்த்.
தன் சுமி மாமி மீராவை உற்றுப் பார்த்தது எல்லாம் நிஜம் போலவே இருந்தது என்று சமர்த்திற்கு தோன்றியது..
“சமர்த்தா..!! அவா எல்லாம் கீழ வந்துட்டா.. இப்போ தான் மீரா மெசேஜ் அனுப்பினா..” என்றான் கோவிந்த்.
“நீ கீழ போறியா கோவிந்த்?”
“உன்ன தனியா விட்டுட்டு வெளிய போகக்கூடாதுன்னு மேடம் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டு இருக்காங்க..!”
“மீராவா அப்படி சொன்னா?”
“மை மம்மி, உன் ‘சுமி மாமி’ மேடம் தான் டா அப்படி சொன்னா..! மீரா என் கிட்ட பேசறதே அதிசயம்.. எப்போப் பார்த்தாலும் ‘மிஸ்டர்..மிஸ்டர்’ ன்னு தான் என்னை கூப்பிடறா..நேக்கு பிடிக்கவே இல்ல..”
“ஹா..ஹ.” என்று சிரிக்க முயன்ற சமர்த்திற்கு வலியின் மிகுதியால் சிரிப்பே வரவில்லை..
கதவு தட்டும் ஒலியும், ‘ஓபன் தி டோர்’ என்ற மெசேஜும் ஒரு சேர வந்ததால் கோவிந்த் கதவை திறந்தான்.
மாமி சுமி மற்றும் மாமா கிருஷ்ணனுடன் உள்ளே வந்த மீராவையேப் பார்த்தான் சமர்த்..
“சமீர், இப்போ எப்படிடா இருக்கு?” என்று சுமித்ரா கேட்டார்.
“வலி இருக்கு மாமி.. பட் கொஞ்சம் பரவாயில்லை..”
“நல்லவேளை சமீர், இந்த மீராப் பொண்ணு ஒன்னோட(உன்னோட) இருந்தது.. பெருமாள் தான் காப்பாத்தினார்..” என்று கிருஷ்ணன் புலம்பினார்..
“நீங்க சொல்றது வாஸ்தவம் தான் மாமா, மீரா தான் நேக்கு ஹெல்ப் பண்ணினா..” என்ற சமர்த், தன்னைப் பெற்றவர்களின் சுகங்களையும், மாமா கண்ணனையும் விசாரித்து கேட்டு தெரிந்துக்கொண்டான்..
“சரி சரி கொஞ்ச நாழி தூங்கு சமீர்..” என்ற கோவிந்த் மீராவிடம் திரும்பி, “மீரா விக்கி ஆட்கள் எல்லாரும் போயாச்சா?” என்று கேட்டான்.
“சாரி மிஸ்டர்..! அந்த விக்கி நம்ம கலெக்டர் சாரை தேடி வரல.. ஏன் வந்தான்னு தெரில.. யாரைப் பார்க்க வந்தான் ன்னு ஒண்ணுமே புரியல..! பட் தேர்ட் ப்ளோர்க்கு போயிட்டு கிளம்பிட்டான்.. அந்த விக்கியைப் பார்த்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.. உங்க கிட்டயும் தப்பான தகவல கொடுத்துட்டேன் சாரி மிஸ்டர்..!!”
“ஹே மீரா பொண்ணு..!! இவன எதுக்கு நீ இவ்வளோ மரியாதையா கூப்பிடற? அவ்வளவெல்லாம் இவன் வொர்த் கிடையாது..! இவன நீ கோவிந்தான்னே அழைச்சுடு.. என்ன கோவிந்தா நான் சொல்றது சரி தானே..!!” என்று சுமி கோவிந்திடம் வம்பு செய்தார்..
“ம்மா..!!” என்று பல்லைக்கடித்தான் கோவிந்த்.
அவர்களைப் பார்த்து மெளனமாக சிரித்தாள் சமீரா.. மலர்ந்திருந்த அவளின் முகத்தைப் பரவசத்துடன் பார்த்திருந்தான் சமர்த்..
“ம்மா..! நாம அப்பறமா பேசலாமே..! சமர்த் இப்போ தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்.. காயம் பெரிசா இல்லைன்னாலும், ஊசி போட்டுனுட்டு மீராவும் டயர்டா இருப்பா.!. அவளும் தூங்கட்டுமே..! நீயும் சித்த நாழி ரெஸ்ட் எடுத்துக்கோ.. வெளிச்சம் வந்ததும் ஆத்துக்கு போலாம்.” என்று முடிக்கும்போது, அந்த அறைக்குள் செவிலியர் வந்தார்.
“ஏன்மா, கதவ எவ்வளவு நேரம் தான் தட்டுறது? உங்க வீடு இல்லை இது.. டைம்க்கு பேஷன்ட்டை செக் செய்யறது தான் எங்க டியுட்டியே.. இனிமே கதவுக்கு தாள் போடாதீங்க..” என்று சொன்னவர் சமர்த்தை பரிசோதித்து விட்டு சென்றார்.
கிருஷ்ணன் மற்றும் சுமி கோவிந்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தனர்.. அங்கிருந்த நாற்காலியில் சமீரா அமர்ந்திருந்தாள்..
எல்லோரும் இருக்கும்போது படுப்பதற்கு அன்ஈசியாக பீல் செய்தாள் சமீரா.. அதனால் கோவிந்திடம் திரும்பி, “நான் கிளம்பறேன்..!” என்றாள்.
“இந்த டைம்ல ஏன் மீரா போகணும்?” என்றான் கோவிந்த்..
“கோவிந்தா..! என்னையும், மீராவையும் நம்ம ஆத்துல விட்டுட்டு வாடா.. நான் போய் ஸ்நானம் பண்ணி, தளிகையை ஆரம்பிச்சுடறேன்..” என்ற சுமித்ரா, “மீரா..! நேக்கு இந்த ஊருல ஒண்ணுமே தெரியாது.. சமீர் ஆத்துக்கு திரும்பி வரவரைக்கும் நேக்கு ஒத்தாசையா இருப்பியா?” என்று கேட்டார்.
“சாரி மேடம்..! உங்களுக்கு ஹெல்ப் செய்ய என்னால முடியல.. ரொம்ப சாரி மேடம்.. நான் ஈவ்னிங் வந்து கலெக்டர் சாரைப் பார்க்கிறேன்..” என்ற சமீராவின் குரலில் நிறைய வருத்தம் இருந்தது..