காதல் 9:
கண்ட கனவின் நினைவுகள் மறையும் முன்னரே அடுத்த பிரச்சனை காத்திருந்தது மதிக்கு.
தன்னை அழைக்க வந்த அப்பாவின் முகத்தில் இருந்த கவலையும், வருத்தமும்,ஒரு வித சோர்வும் அவளை யோசனைக்கு உள்ளாக்கியது.
“என்னாச்சுப்பா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று மதி கேட்க..
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..!” என்று அவர் சொன்னதில் இருந்தே..ஏதோ ஒன்று பெரிதாய் நடந்திருக்கிறது... என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மதி.
“ஒன்னுமில்லைன்னு உங்க வாய் தான் சொல்லுது..ஆனா முகம் வேற கதை சொல்லுது..!” என்று அவள் சொல்ல...
அவர்கள் சென்று கொண்டிருக்கும் போதே..தைரியமாக வந்து வண்டியை மறித்து நின்றான் முத்து.
அவன் எதற்காக வண்டியை மறைத்து நிற்கிறான் என்று புரியாமல்... அப்பாவும்,மகளும் முழிக்க...
“உங்க கூட கொஞ்சம் பேசணும் மாமா..!” என்றான்.
‘என்கிட்டே நீ என்னப்பா பேச போற..?”என்று அவர் கேட்க..
“உங்க மக கிட்ட தான் பேசணும்..! ஆனா நீங்க விட மாட்டிங்களே..! அதான் உங்ககிட்டயே பேசிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...! என்று முத்து பேச...
“பேசுறதுக்கு இப்ப நேரமில்ல...நாங்க உடனே போயாகனும்..!” என்று மனோகரன் சொல்ல..
“ஊர் தலைவர் வீட்டுக்கு தான போறீங்க..! அதுக்கு முன்னாடி நான் பேசுறதைக் கொஞ்சம் கேட்டுட்டு போங்க..!” என்று முத்து போட்டு உடைக்க..
“ஊர் தலைவர் வீட்டுக்கா..?” என்றாள் மதி சந்தேகமாய்.
அவள் கேள்வியில் முழித்தவனுக்கு அப்போது தான் தெரிந்தது அவளுக்கு விஷயமே தெரியாதென்று.
“உனக்கு விஷயமே தெரியாதா..?” என்றான்.
“என்ன விஷயம்..? நாங்க எதுக்கு அங்க போகணும்..? என்னப்பா பிரச்சனை..?” என்று மதி புரியாமல் கேள்வி கேட்க...
“முத்து இப்ப நீ கிளம்ப போறியா இல்லையா..? இது எங்க குடும்ப விஷயம்..!” என்று மனோகரன் எரிச்சலுடன் சொல்ல..
“எது மாமா உங்க குடும்ப விஷயம்..! இப்படி சொல்லி சொல்லி தான் என் வாழ்க்கையையே அழிச்சுட்டிங்களே..?இன்னமும் என்ன பாக்கி இருக்கு..!” என்று அவன் எகிற..
“வார்த்தையை அளந்து பேசு முத்து...உன் வாழ்க்கையை எங்கப்பா அழிச்சாரா..உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...?” என்று மதி கோபம் கொண்டு கத்த...
“இப்ப பேச நேரமில்லை...மதி வண்டியில ஏறுமா..!” என்றபடி அவர் மதியைக் கிளப்பிக் கொண்டு போக...முத்துவிற்கு தான் மூக்குடைந்து போனது.
“என்னப்பா பிரச்சனை..?” மதி.
“அது ஒன்னுமில்லைம்ம்மா...ஊர் தலைவர் வீட்ல...கூட்டம் போட்ருக்காங்க..! என் அண்ணனுங்க தான்...நாலு பேரைக் கூட்டி வச்சு...பஞ்சாயத்து பேசி முடிச்சு,சொத்தைப் பிரிச்சிக்கலாம்ன்னு இதை ஏற்பாடு பண்ணிருக்கானுக..! பகல்லையே பேசி முடிக்கணும்ன்னு சொன்னாங்க..! நான் தான் நீ வராம பேச கூடாதுன்னு சொல்லிட்டேன்..!” என்று அவர் சொல்ல..
“இப்ப இதுக்கு என்ன அவசரமும்,அவசியமும் வந்துச்சு..!” என்று அவள் கேட்க..
“பையனைப் பெத்தவங்க..! பையனுக்கு கல்யாணம் பண்ணனுமாம்...” என்று மனோகரன் முடித்துக் கொண்டார்.ஏனோ இன்னொரு விஷயத்தை அவரால் மகளிடம் சொல்ல முடியவில்லை.
வீட்டிற்கு சென்றவளிடம் பார்வதியும் முகத்தைக் காட்ட...மதிக்கு பைத்தியமே பிடித்து விடுவதைப் போல் இருந்தது.
“உனக்கு ஏதும் தெரியுமா சுமதி..?” என்று சுமதியைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்று நைசாகக் கேட்டுப் பார்த்தாள்.ஆனால் அவளுக்கும் தெரியவில்லை என்று சொல்ல...மதிக்கு எரிச்சலாய் வந்தது.
“இப்ப எதுக்கும்மா இப்படி உம்முன்னு இருக்கீங்க..? என்னதான் பிரச்சனை உங்களுக்கு..?” என்று கேட்க..
“இந்த டீயைக் குடிச்சுட்டு கிளம்பு..” என்று மட்டும் சொன்னார்.
“இவங்ககிட்ட கேட்குறதுக்கு..அங்கயே போய்..என்ன விஷயம்ன்னு பார்த்துடலாம்...” என்று எண்ணியவள்...பார்வதி குடுத்த டீயைக் குடித்து விட்டு...ஓரு குளியலைப் போட்டுவிட்டு வந்தாள்.
பஞ்சாயத்துக் கூட்டம் என்றாலே..அவளுக்கு இப்போதும் கை கால்கள் நடுங்கும்.அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சென்றாள் மதி.
அங்கே ஊர் தலைவர் வீட்டின் முன்...பல முக்கிய மனிதர்கள் கூடியிருக்க...சில பெண்களும் அங்கே இருந்தனர்.அவர்கள் அருகில் செல்ல செல்ல மதிக்கு உதறல் எடுத்தது எனவோ உண்மைதான்.அப்போது தான் நன்கு கவனித்தாள் அங்கு நின்றிருந்தவர்களை.
அவளின் முதல் பெரியப்பா....வடிவேல் மற்றும் அவரது மனைவி அரசி...அவரின் மகன்கள்..தனபாண்டி மற்றும் குணப்பாண்டி.
அவளின் இரண்டாவது பெரியப்பா கணபதி மற்றும் அவரின் மனைவி திலகா..அவரின் பிள்ளைகள் துரைப்பாண்டி,துர்கா.
அவளின் சித்தப்பா கோபி மற்றும் அவரின் மனைவி லட்சுமி...அவரின் பிள்ளைகள் அச்சுதன் மற்றும் ராணி.
இப்படி குடும்பம் குடும்பமாக அனைவரும் நிற்க...மதிக்கு எரிச்சல் தான் வந்தது.மறுபடியும் முதலில் இருந்தா..? என்று எண்ணாமல் அவளால் இருக்க முடியவில்லை.
இப்போது மனோகரன்-பார்வதி..அவரின் பிள்ளைகள் வண்ணமதி,சுமதி என்று அவர்களும் ஒரு குடும்பமாய் அங்கு சென்று நிற்க...
அவர்கள் குடும்பமாய் வருவதைப் பார்த்த திலகாவிற்கு எரிச்சல் பொங்கியது.
“வராளுங்க பாரு..ஆத்தாளும்,பிள்ளைங்களும்...எல்லார் பொழப்பையும் கெடுக்குறைதையே வேலையா வச்சுகிட்டு..!” என்று மனதிற்கு நொடிக்க...அவர் மனதில் பேசிய மொழிகள் எல்லாம் முகத்திலும் தெரிந்ததோ என்னவோ..மதி அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றாள்.
“என்னப்பா எல்லாரும் வந்துட்டிங்களா..?” என்று நடுவில் இருந்த பெரியவர் ஒருவர் கேட்க...அப்போது தான் கவனித்தாள் மதி.முகிலனின் அப்பா பெரியசாமியும் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.
“ஹோ..! இவரும் பஞ்சாயத்து பேசப் போறாராமா..? ம்ம் பெரிய மனுஷன்..!” என்று மனதிற்குள் நினைக்க...அப்போது ஒருவர் பேச ஆரம்பித்தார்.
“இப்ப பிரச்சனை என்னானா...?உங்க குடும்ப சொத்து பல வருஷ காலமா..பிரிக்காம அப்படியே தரிசு நிலமா கிடக்கு...இருக்குற பிரச்சனையைப் பேசி சரி பண்ணி...அதைப் பிரிக்கனும்ன்னு பெரியவன் வடிவேல் சொல்லியிருக்காப்ல..அதனால...என்ன பிரச்சனை இருந்தாலும்..இங்கனயே பேசி முடுச்சு...இருக்குற சொத்து பத்தை..ஆளுக்கு கொஞ்சமா பிரிச்சு வெள்ளாமை (விவசாயம்) வைக்குற வழியைப் பாருங்க..!” என்று அவர் சொல்ல..
“இதைத்தான பல வருஷமா நாங்களும் சொல்றோம்..!” என்று முதன் முறையாக வாயைத் திறந்தார் கோபி.
வடிவேல்,கணபதி அளவுக்கு இவர் கல் நெஞ்சம் கொண்டவர் இல்லை.இவர் மனைவியும் அப்படியே.ஆனால் இவர் மகள் ராணி ஊரையே வித்து விடுவாள்.அந்த அளவிற்கு வித்தாரம்.
“நீ சொல்றது நியாயம் தான் கோபி.ஆனா நம்ம ஊர்ல பொம்பளைப் பிள்ளைங்களுக்கு நிலத்துல பங்கு குடுக்குறது வழக்கம் இல்லை..இப்ப மனோகரனுக்கு இருக்குறது ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்க..! அதனால தான் இப்போ பஞ்சாயத்தே..!” என்று ஒருவர் சொல்ல...
“நீங்க எங்களுக்கு பிரிச்சு குடுக்க வேணாம்.எங்கப்பாவுக்கு வர வேண்டியதைக் குடுங்க..! பெரியப்பா,சித்தப்பா பேர்ல தான பிரிச்சு குடுப்பிங்க..! அப்படிப் பார்த்தா எங்கப்பாவும் அவங்களோட பிறந்தவர் தான்..! அதனால் அவருக்கும் பிரிச்சு குடுத்துடுங்க..! அதுக்கு அப்பறம் அந்த சொத்தை என்ன செய்றதுன்னு எங்க அப்பா முடிவு பண்ணுவார்..!” என்று மதி சொல்ல..
பெரியசாமி நிமிர்ந்து அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்.பொதுவாக அவள் அப்படி பேசும் ரகம் இல்லை.
“பொம்பளைப் பிள்ளைங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..!” என்று ஒருவர் சொல்ல..
“இதோ பாருங்க..! எங்கப்பாவுக்கு ஆம்பிளைப் பையன்,பொம்பளைப் பிள்ளை..எல்லாமே நான்தான்.எதைப் பேசுறதா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க...!” என்று மதி பட்டென்று சொல்ல..
“என்ன மனோகரா..உன் பொண்ணு இப்படி பேசுது..? வேடிக்கைப் பார்த்துட்டு நிக்குற..?” என்று ஒருவர் சத்தம் போட..
“என் பொண்ணு சரியா தான் பேசுது..! அதான் நாங்க அமைதியா இருக்கோம்..!” என்று அவர் சொல்ல...அவருடைய அண்ணன்களுக்கும்,அண்ணிகளுக்கும் அப்படி ஒரு கோபம்.
“வாரிசத்தவனுக்கு பேச்சைப் பாரு..!” என்று திலகா நொடிக்க..
“வாரிசு இல்லாதவனுக்கு..உங்க வீட்டு வாரீசு யாரும் வந்து கொள்ளி போட வேண்டாம்.எங்கப்பாவுக்கு என்ன செய்யனும்ன்னு எங்களுக்குத் தெரியும்..!” என்றாள் மதி பட்டென்று.
கண்ட கனவின் நினைவுகள் மறையும் முன்னரே அடுத்த பிரச்சனை காத்திருந்தது மதிக்கு.
தன்னை அழைக்க வந்த அப்பாவின் முகத்தில் இருந்த கவலையும், வருத்தமும்,ஒரு வித சோர்வும் அவளை யோசனைக்கு உள்ளாக்கியது.
“என்னாச்சுப்பா..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்று மதி கேட்க..
“அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா..!” என்று அவர் சொன்னதில் இருந்தே..ஏதோ ஒன்று பெரிதாய் நடந்திருக்கிறது... என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மதி.
“ஒன்னுமில்லைன்னு உங்க வாய் தான் சொல்லுது..ஆனா முகம் வேற கதை சொல்லுது..!” என்று அவள் சொல்ல...
அவர்கள் சென்று கொண்டிருக்கும் போதே..தைரியமாக வந்து வண்டியை மறித்து நின்றான் முத்து.
அவன் எதற்காக வண்டியை மறைத்து நிற்கிறான் என்று புரியாமல்... அப்பாவும்,மகளும் முழிக்க...
“உங்க கூட கொஞ்சம் பேசணும் மாமா..!” என்றான்.
‘என்கிட்டே நீ என்னப்பா பேச போற..?”என்று அவர் கேட்க..
“உங்க மக கிட்ட தான் பேசணும்..! ஆனா நீங்க விட மாட்டிங்களே..! அதான் உங்ககிட்டயே பேசிடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்...! என்று முத்து பேச...
“பேசுறதுக்கு இப்ப நேரமில்ல...நாங்க உடனே போயாகனும்..!” என்று மனோகரன் சொல்ல..
“ஊர் தலைவர் வீட்டுக்கு தான போறீங்க..! அதுக்கு முன்னாடி நான் பேசுறதைக் கொஞ்சம் கேட்டுட்டு போங்க..!” என்று முத்து போட்டு உடைக்க..
“ஊர் தலைவர் வீட்டுக்கா..?” என்றாள் மதி சந்தேகமாய்.
அவள் கேள்வியில் முழித்தவனுக்கு அப்போது தான் தெரிந்தது அவளுக்கு விஷயமே தெரியாதென்று.
“உனக்கு விஷயமே தெரியாதா..?” என்றான்.
“என்ன விஷயம்..? நாங்க எதுக்கு அங்க போகணும்..? என்னப்பா பிரச்சனை..?” என்று மதி புரியாமல் கேள்வி கேட்க...
“முத்து இப்ப நீ கிளம்ப போறியா இல்லையா..? இது எங்க குடும்ப விஷயம்..!” என்று மனோகரன் எரிச்சலுடன் சொல்ல..
“எது மாமா உங்க குடும்ப விஷயம்..! இப்படி சொல்லி சொல்லி தான் என் வாழ்க்கையையே அழிச்சுட்டிங்களே..?இன்னமும் என்ன பாக்கி இருக்கு..!” என்று அவன் எகிற..
“வார்த்தையை அளந்து பேசு முத்து...உன் வாழ்க்கையை எங்கப்பா அழிச்சாரா..உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...?” என்று மதி கோபம் கொண்டு கத்த...
“இப்ப பேச நேரமில்லை...மதி வண்டியில ஏறுமா..!” என்றபடி அவர் மதியைக் கிளப்பிக் கொண்டு போக...முத்துவிற்கு தான் மூக்குடைந்து போனது.
“என்னப்பா பிரச்சனை..?” மதி.
“அது ஒன்னுமில்லைம்ம்மா...ஊர் தலைவர் வீட்ல...கூட்டம் போட்ருக்காங்க..! என் அண்ணனுங்க தான்...நாலு பேரைக் கூட்டி வச்சு...பஞ்சாயத்து பேசி முடிச்சு,சொத்தைப் பிரிச்சிக்கலாம்ன்னு இதை ஏற்பாடு பண்ணிருக்கானுக..! பகல்லையே பேசி முடிக்கணும்ன்னு சொன்னாங்க..! நான் தான் நீ வராம பேச கூடாதுன்னு சொல்லிட்டேன்..!” என்று அவர் சொல்ல..
“இப்ப இதுக்கு என்ன அவசரமும்,அவசியமும் வந்துச்சு..!” என்று அவள் கேட்க..
“பையனைப் பெத்தவங்க..! பையனுக்கு கல்யாணம் பண்ணனுமாம்...” என்று மனோகரன் முடித்துக் கொண்டார்.ஏனோ இன்னொரு விஷயத்தை அவரால் மகளிடம் சொல்ல முடியவில்லை.
வீட்டிற்கு சென்றவளிடம் பார்வதியும் முகத்தைக் காட்ட...மதிக்கு பைத்தியமே பிடித்து விடுவதைப் போல் இருந்தது.
“உனக்கு ஏதும் தெரியுமா சுமதி..?” என்று சுமதியைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்று நைசாகக் கேட்டுப் பார்த்தாள்.ஆனால் அவளுக்கும் தெரியவில்லை என்று சொல்ல...மதிக்கு எரிச்சலாய் வந்தது.
“இப்ப எதுக்கும்மா இப்படி உம்முன்னு இருக்கீங்க..? என்னதான் பிரச்சனை உங்களுக்கு..?” என்று கேட்க..
“இந்த டீயைக் குடிச்சுட்டு கிளம்பு..” என்று மட்டும் சொன்னார்.
“இவங்ககிட்ட கேட்குறதுக்கு..அங்கயே போய்..என்ன விஷயம்ன்னு பார்த்துடலாம்...” என்று எண்ணியவள்...பார்வதி குடுத்த டீயைக் குடித்து விட்டு...ஓரு குளியலைப் போட்டுவிட்டு வந்தாள்.
பஞ்சாயத்துக் கூட்டம் என்றாலே..அவளுக்கு இப்போதும் கை கால்கள் நடுங்கும்.அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சென்றாள் மதி.
அங்கே ஊர் தலைவர் வீட்டின் முன்...பல முக்கிய மனிதர்கள் கூடியிருக்க...சில பெண்களும் அங்கே இருந்தனர்.அவர்கள் அருகில் செல்ல செல்ல மதிக்கு உதறல் எடுத்தது எனவோ உண்மைதான்.அப்போது தான் நன்கு கவனித்தாள் அங்கு நின்றிருந்தவர்களை.
அவளின் முதல் பெரியப்பா....வடிவேல் மற்றும் அவரது மனைவி அரசி...அவரின் மகன்கள்..தனபாண்டி மற்றும் குணப்பாண்டி.
அவளின் இரண்டாவது பெரியப்பா கணபதி மற்றும் அவரின் மனைவி திலகா..அவரின் பிள்ளைகள் துரைப்பாண்டி,துர்கா.
அவளின் சித்தப்பா கோபி மற்றும் அவரின் மனைவி லட்சுமி...அவரின் பிள்ளைகள் அச்சுதன் மற்றும் ராணி.
இப்படி குடும்பம் குடும்பமாக அனைவரும் நிற்க...மதிக்கு எரிச்சல் தான் வந்தது.மறுபடியும் முதலில் இருந்தா..? என்று எண்ணாமல் அவளால் இருக்க முடியவில்லை.
இப்போது மனோகரன்-பார்வதி..அவரின் பிள்ளைகள் வண்ணமதி,சுமதி என்று அவர்களும் ஒரு குடும்பமாய் அங்கு சென்று நிற்க...
அவர்கள் குடும்பமாய் வருவதைப் பார்த்த திலகாவிற்கு எரிச்சல் பொங்கியது.
“வராளுங்க பாரு..ஆத்தாளும்,பிள்ளைங்களும்...எல்லார் பொழப்பையும் கெடுக்குறைதையே வேலையா வச்சுகிட்டு..!” என்று மனதிற்கு நொடிக்க...அவர் மனதில் பேசிய மொழிகள் எல்லாம் முகத்திலும் தெரிந்ததோ என்னவோ..மதி அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றாள்.
“என்னப்பா எல்லாரும் வந்துட்டிங்களா..?” என்று நடுவில் இருந்த பெரியவர் ஒருவர் கேட்க...அப்போது தான் கவனித்தாள் மதி.முகிலனின் அப்பா பெரியசாமியும் அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.
“ஹோ..! இவரும் பஞ்சாயத்து பேசப் போறாராமா..? ம்ம் பெரிய மனுஷன்..!” என்று மனதிற்குள் நினைக்க...அப்போது ஒருவர் பேச ஆரம்பித்தார்.
“இப்ப பிரச்சனை என்னானா...?உங்க குடும்ப சொத்து பல வருஷ காலமா..பிரிக்காம அப்படியே தரிசு நிலமா கிடக்கு...இருக்குற பிரச்சனையைப் பேசி சரி பண்ணி...அதைப் பிரிக்கனும்ன்னு பெரியவன் வடிவேல் சொல்லியிருக்காப்ல..அதனால...என்ன பிரச்சனை இருந்தாலும்..இங்கனயே பேசி முடுச்சு...இருக்குற சொத்து பத்தை..ஆளுக்கு கொஞ்சமா பிரிச்சு வெள்ளாமை (விவசாயம்) வைக்குற வழியைப் பாருங்க..!” என்று அவர் சொல்ல..
“இதைத்தான பல வருஷமா நாங்களும் சொல்றோம்..!” என்று முதன் முறையாக வாயைத் திறந்தார் கோபி.
வடிவேல்,கணபதி அளவுக்கு இவர் கல் நெஞ்சம் கொண்டவர் இல்லை.இவர் மனைவியும் அப்படியே.ஆனால் இவர் மகள் ராணி ஊரையே வித்து விடுவாள்.அந்த அளவிற்கு வித்தாரம்.
“நீ சொல்றது நியாயம் தான் கோபி.ஆனா நம்ம ஊர்ல பொம்பளைப் பிள்ளைங்களுக்கு நிலத்துல பங்கு குடுக்குறது வழக்கம் இல்லை..இப்ப மனோகரனுக்கு இருக்குறது ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்க..! அதனால தான் இப்போ பஞ்சாயத்தே..!” என்று ஒருவர் சொல்ல...
“நீங்க எங்களுக்கு பிரிச்சு குடுக்க வேணாம்.எங்கப்பாவுக்கு வர வேண்டியதைக் குடுங்க..! பெரியப்பா,சித்தப்பா பேர்ல தான பிரிச்சு குடுப்பிங்க..! அப்படிப் பார்த்தா எங்கப்பாவும் அவங்களோட பிறந்தவர் தான்..! அதனால் அவருக்கும் பிரிச்சு குடுத்துடுங்க..! அதுக்கு அப்பறம் அந்த சொத்தை என்ன செய்றதுன்னு எங்க அப்பா முடிவு பண்ணுவார்..!” என்று மதி சொல்ல..
பெரியசாமி நிமிர்ந்து அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்.பொதுவாக அவள் அப்படி பேசும் ரகம் இல்லை.
“பொம்பளைப் பிள்ளைங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க..!” என்று ஒருவர் சொல்ல..
“இதோ பாருங்க..! எங்கப்பாவுக்கு ஆம்பிளைப் பையன்,பொம்பளைப் பிள்ளை..எல்லாமே நான்தான்.எதைப் பேசுறதா இருந்தாலும் என்கிட்டே பேசுங்க...!” என்று மதி பட்டென்று சொல்ல..
“என்ன மனோகரா..உன் பொண்ணு இப்படி பேசுது..? வேடிக்கைப் பார்த்துட்டு நிக்குற..?” என்று ஒருவர் சத்தம் போட..
“என் பொண்ணு சரியா தான் பேசுது..! அதான் நாங்க அமைதியா இருக்கோம்..!” என்று அவர் சொல்ல...அவருடைய அண்ணன்களுக்கும்,அண்ணிகளுக்கும் அப்படி ஒரு கோபம்.
“வாரிசத்தவனுக்கு பேச்சைப் பாரு..!” என்று திலகா நொடிக்க..
“வாரிசு இல்லாதவனுக்கு..உங்க வீட்டு வாரீசு யாரும் வந்து கொள்ளி போட வேண்டாம்.எங்கப்பாவுக்கு என்ன செய்யனும்ன்னு எங்களுக்குத் தெரியும்..!” என்றாள் மதி பட்டென்று.