Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Kadathitu poi register pannitana marriage a mukilan ku durga,raninu ekapatta peru urimai kondatranga ..
.
ithil muthu enge vanthaan niceepi sis
 
“ஏண்டி இப்படி என்னைக் கொள்ளாம கொல்லுற..? அப்படி நான் என்ன பண்ணேன்..? எனக்கு எதுக்கு இந்த தண்டனை...என்கிட்டயே வந்துடு மதி...” என்று மனதிற்குள் அவன் அரற்றிக் கொண்டிருக்க..

“அவளை நிரந்தரமா அத்துவிடுறத்துக்கு வழி இருக்கா பெரிசாமி அண்ணே..!” என்று திலகா கேட்க..

“என்ன நினச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல..? நான் என்ன ஆடா மாடா...உங்க வீட்ல இழுத்துட்டு போய் கட்ட..எங்கம்மாவோட உறவுங்கறதால தான் இவ்வளவு பொறுமையா பேசுறேன்..இல்லை..எனக்கு வர ஆத்திரத்துக்கு...” என்று கையை முருக்க...

“முகிலா..” என்று அதட்டினார் பெரியசாமி.

“இங்க இருக்குற எல்லாத்துக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்...இவ்வளவு நேரம் நான் அமைதியா இருந்ததுக்குக் காரணம்...எனக்கு பேசத் தெரியாமையோ...இல்லை உங்களைக் கண்டு பயந்துகிட்டோ இல்லை...இது உங்க குடும்ப பிரச்சனை..நீங்க பேசி முடிவு பண்ணனும்ன்னு தான்.

எப்ப..மதி என்கூட வந்ததை வச்சு அவளைத் தப்பா பேசுனிங்களோ... அப்பவே எல்லார் கழுத்தையும் திருகியிருப்பேன்.ஆனா மதி பேசட்டும்..அவ வாய்ல இருந்தே எல்லாம் வரட்டும்ன்னு தான் அமைதியா இருந்தேன். அதை உங்களுக்கு சாதகமா எடுத்துகிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

அப்பறம் இன்னொன்னும் சொல்லணும்...மாப்பிள்ளை,மருமகன்னு யாராவது என் வீட்டுப்பக்கம் வந்திங்க...? என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...எனக்கு பொண்டாட்டின்னா அது வண்ண மதி மட்டும் தான்.அப்பாவும் அவ தான் என் பொண்டாட்டி...இப்பவும் எப்பவும் அவ தான்....என் வாழ்க்கையிலும்,மனசுலயும் அவ ஒருத்திக்கு மட்டும் தான் இடம்..
அதனால் தேவையில்லாம..எல்லா விஷயத்துலயும் தலையிடுறதை விட்டுட்டு..போய் அவங்க அவங்க வேலையைப் பாருங்க..!” என்றவன்..

“ங்கான்...திலகா அத்தை....இனி என் பொண்டாட்டி எப்பவும் என்கூட பைக்ல வருவா..உங்ககிட்ட முன்னாடியே சொல்லிடனும் பாருங்க..!” என்றான் நக்கலாய்.

ஆனால் அதற்கு எல்லாம் திலகா அசரவேயில்லை.அவரது திட்டம் நிறைவேறும் வரை அவர் எந்த எல்லைக்கும் போவார்.அதாவது தாழ்ந்து.

“உன் முன்னாடியே தானா...இன்னொருத்தனை விரும்புறேன்னு சொல்லிட்டு போனா..? அவளுக்காக இவ்வளவு பேச்சு பேசுற..?” என்றான் துரை.

முகிலன் இது நாள் வரைக்கும் எந்த கேள்விக்கு பயந்து வாயைத் திறக்காமல் இருந்தானோ..அதே கேள்வி.இப்போது சபையில்.மனதிற்குள் துடித்தாலும்..வெளியே அவன் மனத் திடத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

“அது எங்க பிரச்சனை..அதை நாங்க பார்த்துக்கறோம்..எது எப்படி இருந்தாலும்..அவளுக்கு நான் தாலி கட்டியிருக்கேன்...அதனால புருஷன் நான் தான்..என் பொண்டாட்டியை எப்படி வழிக்கு கொண்டு வரதுன்னு எனக்குத் தெரியும்..போய் உனக்கு விட்ட வேலையை நீ பாரு..!” என்று திமிருடன் கூறியவன்..

இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல் அங்கிருந்து வேகமாய் கிளம்பினான்.ஆனால் மனதிற்குள் ஆறாமல் இருந்த பல காயங்கள் இன்று மீண்டும்...புது காயங்களாய்.

ஆசைப் பட்ட மனதிற்கு அருமருந்தே அவள் அருகாமை தான்.ஆனால் இதை அறியாத அவளோ..அவள் வீட்டில்.

அவள் இதை மட்டுமா அறியவில்லை.அவன் மனதினையும் அறியவில்லையே..? அப்படி தெரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தால்.. இன்று இவ்வளவு பிரச்சனைகள் இருந்திருக்காதோ...எத்தனை வருட தவம்..? எத்தனை வருட ஏக்கம்..?
“மதி மதி” என்று அவன் உள் மனம் அரற்ற....”அவளின் மாமா..மாமா..” என்ற விளிப்பிற்கு மனம் ஏங்கியது.

“நினைவுகளில் கூட அவனுக்கு இனிமையில்லை.அந்த அளவிற்கு அவனுக்கு நடந்த விஷயங்கள் கூட கசப்பானவை தான்.அதன் நினைவுகள் இன்றும் யோசிக்கும் போது..அதிகமாய் கசக்கத்தான் செய்கிறது அவனுக்கு.சில உண்மைகள் கசக்கும் என்பது அவன் வாழ்வில் மட்டுமே மெய்யாகிப் போன ஒன்று.

காதலுக்கும்,காதலிக்கும்,கல்யாணத்திற்கும் இடையே அல்லல் பட்டுக் கொண்டு தவிக்கிறான்.அவனின் தவிப்பை மதி புரிந்து கொள்ளும் காலம் எப்போது..?

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவன் சொன்ன சில விஷயங்கள்,சில பொய்கள்..இன்று அவனுக்கே திரும்பி..திருப்பி திருப்பி அடிப்பதை மட்டும் அவனால் தாங்க முடியவில்லை.

“இதை இப்படியே விட்டால் சரி வராது..” என்று எண்ணியவன்..அதே கோபத்துடன் சென்றான்.

அங்கே மதியின் வீட்டிலோ..ஆழ்ந்த அமைதி.அனைரும் ஒவ்வொரு பக்கம் திரும்பி அமர்ந்திருக்க....மதி மட்டும் விதியே என்று அமர்ந்திருந்தாள்.

“என்ன நினச்சுட்டு இருக்க மதி..?” என்றார் பார்வதி.

மதி அமைதியையே பதிலாய் தர...

“எங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா மதி..?” என்றார் மனோகரன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..!” என்றாள் மதி.

“நீ அங்க பேசுன வேகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையே..?நடந்த பிரச்சனையையும் தாண்டி என்னவோ நடந்திருக்கு..இல்லைன்னா நீ இவ்வளவு உறுதியா பேசுற ஆள் கிடையாது...சொல்லு..!” என்று பார்வதி கோபத்துடன் கேட்க...

“அது வந்து...” என்று அவள் இழுக்க...

“என்ன வந்து போயி...என்ன நடந்ததுன்னு சொல்லு..!” என்றர அதட்டி.

“அவளை ஏன் கேட்குறிங்க..? என்னைக் கேளுங்க..!” என்றான் மணி முகிலன்.

அவனின் குரலில் வெகுண்டு திரும்பியவள்....”நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை....” என்றாள் வெடுக்கென்று.

“பாருங்கப்பா...!இவ அங்க என் புருஷன்,என் புருஷன்னு மூச்சுக்கு மூச்சு சொல்லுவாளாம்...நாங்க கேட்போமாம்..இப்ப நான் பேசத் தேவையில்லையா..?” என்றான்.

“ஏன் இவ்வளவு பேசறவர் அங்க பேசியிருக்க வேண்டியது தானே..!” என்றாள் வெடுக்கென்று.

“பேசலைன்னு நீ பார்த்தியா..?” என்றான் அவனும் வெடுக்கென்று.

“இப்ப என்ன விஷயமா இங்க வந்திங்க..?” என்றார் பார்வதி பட்டும் படாமல்.

“என்ன அத்தை பட்டும் படாமல் பேசுற மாதிரி இருக்கு..?” என்றான்.

“இனிமேல் பேச என்ன இருக்கு..? அதான் எல்லாம் முடுஞ்சு போய்டுச்சே..!” என்றார் விரக்தியாய்.

“இப்ப நீங்க இவ்வளவு விரக்தியா பேசுற அளவுக்கு என்ன நடந்தது..?” என்றார்.

“இன்னமும் என்ன நடக்கணும்..? என் பொண்ணு வாங்குன பேரை அங்க பார்த்திங்க தான...? காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் கேட்டாச்சு...எங்களுக்கு இது புதுசு இல்லைன்னாலும்...எல்லா நேரமும் கேட்டுகிட்டே இருக்க முடியாதுல...அதான்...” என்றார்.

“உங்க பொண்ணு கேட்டுகிட்டு சும்மா இருந்த மாதிரி தெரியலையே...?” என்றான்.

“சும்மா வேற வரணுமா..? அதெல்லாம் பழைய மதி.இப்ப யாருக்காகவும், யாருகிட்டயும் பேச்சு வாங்கணும்ன்ற அவசியம் எனக்கு கிடையாது..!” என்றாள் மதி எரிச்சலுடன்.

“நீங்க தயவு செஞ்சு கிளம்புங்க...! அப்பறம் இதுக்கும் வேற விதமா பேசுவாங்க..!” என்றார் பார்வதி.

அவரின் வார்த்தைகளில்..அவ்வளவு கோபம் வந்தது முகிலனுக்கு.

“இங்க பாருங்க அத்தை..நான் ஒன்னும் கள்ளக் காதலி வீட்டுக்கு வரலை..என் பொண்டாட்டி வீட்டுக்கு அவளைப் பார்க்கத்தான் வந்தேன்..இதுல தப்பா பேச என்ன இருக்கு..?” என்றான்.

“அது தான் இல்லைன்னு அப்பவே அத்து விட்டாச்சே..! நான் மதிக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்கலாம்ன்னு இருக்கேன்..!” என்றார் உறுதியான குரலில்.

ஏனோ அதைக் கேட்டவுடன் மதிக்கு அருவெருப்பாய் இருந்தது. வார்த்தையால் கூட அப்படி ஒரு விஷயத்தைக் கேட்க பிடிக்கவில்லை.

“அட பாருங்கப்பா....! என்ன மதி மேடம்...நீங்களும் களி திங்க ரெடியா இருக்கீங்க போல..?” என்றான்.

அவள் முறைத்து பார்க்க... பார்வதியோ புரியாமல் பார்க்க...”என்ன அத்தை புரியலையா...? நீங்களும்,ஊரும் சேர்ந்தது அத்து விட்டாலும்...இப்போ சட்டப்படி அவ என் மனைவி.ரிஜிஸ்தர் ஆபீஸ்ல பதிஞ்சு..பக்காவா வச்சிருக்கேன் எல்லாமே..!” என்றான் கூலாய்.

பார்வதி இதை எதிர்பார்த்தார்..இருந்தாலும் கொஞ்சம் அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது.

“இன்னைக்கு இல்லை நேத்து இல்லை...நாலு வருஷம் ஆகிடுச்சு...உங்க மகளுக்கு எப்ப இருபத்தியோரு வயசு முடுஞ்சதோ அப்பவே அவளைக் கூட்டிட்டு போய்...சாரி அவ பாசைல சொல்லனும்ன்னா கடத்திட்டு போய்..கையெழுத்து போட வச்சேன்..!” என்றான் ஸ்டைலாக சாய்ந்து நின்று கொண்டு.

பார்வதி மகளை முறைக்க...மதியோ தலையைக் குனிந்தாள்.அவளும் வேண்டும் என்றா போனாள்.காலேஜ் போவதற்காக வந்தவளை...தூக்கிக் கொண்டு போய் காரியத்தை செய்து முடித்திருந்தான் அவன்.

இந்த நிமிடம் வரை அதை சொல்லவும் முடியாமல்,சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பவள் ஆயிற்றே..!
“எதுக்கு அப்படி வலுக்கட்டாயமா செய்யணும்...இன்னொரு முறை அத்து விடுறதுக்கா..?” என்றார் பார்வதி சூடாய்.

“பழசை எல்லாம் விடுங்க..! எனக்கு மனைவின்னா அது மதி மட்டும் தான்.யார் தடுத்தாலும்.அதனால் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்,கல்யாணம் பண்றேன்னு சொல்ற வேலையை விட்டுட்டு...அவளை என்கூட சேர்த்து வைக்கிற வழியைப் பாருங்க..!” என்றான்.

“அது இந்த ஜென்மத்தில் நடக்காது..” சொன்னது பார்வதி அல்ல மதி.

“நான் நடத்திக் காட்டுவேன்..!” என்றான் முறுக்கேறிய முகத்துடன்.

“அதையும் பார்க்கலாம்...” என்றாள் அவளும் நேர் கொண்ட பார்வையாய்.

“பார்க்கதான போற..?” என்றவன் அங்கிருந்து வெளியேற..தலையில் கையை வைத்து அமர்ந்து விட்டார் பார்வதி.

“இவ வாழ்க்கையில் மட்டும் தான் இவ்வளவு பிரச்சனையும் வரணுமா...?” என்று அவர் சோர்ந்து போக..

“என்ன மதி பண்ணிக்கிட்டு இருக்க...இது வாழ்க்கை விஷயம்..” என்று மனோகரன் சொல்ல...

“நான் பட்ட அவமானத்துக்கு நீங்களும் ஒரு காரணம்..அதானால் என்னை கட்டாயப்படுத்தாதிங்க..!” என்றபடி அவள் உள்ளே செல்ல...பெற்றவர்கள் தான் கதி கலங்கி நின்றனர்.

இவர்களின் வாழ்வில் இனி புயல் வீசுமா தென்றல் வீசுமா என்று தெரியாது.

ஆனால் சுழல் காற்றில் இருவரையும் சுழற்றி எடுக்க...அவர்களுக்கே தெரியாமல் சதி வலை பின்னப்பட்டுக் கொண்டிருந்தது.

காதல் வளரும்...
super sis
 
Top