AshrafHameedaT
Administrator
அலை – 5
அடுத்தடுத்த நாட்கள் மிக சாதாரணமாக என்று சொல்ல நினைத்தாலும் நேத்ராவின் திருவிளையாடல்கள் அனைத்தும் அப்படி சொல்ல முடியவில்லை.
தினமும் இல்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் ரிஷியின் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருந்தால் நேத்ரா. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக.
அவனின் கோவத்திற்கு தீனிபோடும் விதமாகவே இருந்தது அவளின் நடவடிக்கைகள். அவள் இருக்குமிடம் கல்லூரியானதால் அவனால் தன்னைத்தான் கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததே.
அன்று ஞாயிறு ஆதலால் மிக நிதானமாக எழும்பலாம் என அயர்ந்து உறங்கியவனை எழுப்பினார் சுமங்கலி.
எரிச்சலோடு புரண்டு படுத்தவன், “சண்டே கூட தூங்க விடமாட்டீங்களா? இன்னைக்கும் என்ன மாம்?...” சோம்பலான குரலில் கூறினாலும் எழுந்தமர்ந்தான்.
விஷயமில்லாமல் தன்னை தாய் தொந்திரவு செய்யமாட்டாரே.
“இன்னைக்கு நாம தாத்தா வீட்டுக்கு போறோம் ரிஷி. எழுந்து குளிச்சிட்டு கீழே வா. நானும் அப்பாவும் ரெடி ஆகிட்டோம்...” அவனிடம் கூறிக்கொண்டே அவனின் அறையை ஒழுங்கு படுத்தினாலும் பார்வை அவனிடமே.
“வாரத்துல ஆறு நாளும் அங்கதானே இருக்கீங்க. இன்னைக்கும் என்ன?...” மனதின் புகைச்சலை வார்த்தைகளில் பூசியபடி கேட்க,
“எல்லாம் நல்ல விஷயம் தான். நம்ம காவேரியை பேசி முடிக்க இன்னைக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னைக்கு வராங்க...”
அவனை பார்த்தபடியே இதை கூறியவர் மகனின் முகத்திலிருந்து எதையோ தேடினார். எத்தனை எதிர்பார்த்தும் ரிஷியின் முகத்தில் தெரிந்த விடுதலை உணர்வில் ஏமாற்றமே மிஞ்சியது அவருக்கு.
“இது ஒரு பெரிய விஷயமா? இதுக்கு கூட நாமதான் போய் நிக்கனுமா?...” என்றபடி தன்னுடைய உடைகளை எடுத்தான்.
“இது பெரிய விஷயமில்லாம என்ன ரிஷி? காவேரி நம்ம வீட்டு பொண்ணு. அவளுக்கு ஒரு நல்லது நடக்குது. தாய்மாமாவா உன் அப்பா சபையில இருக்கனும்...”
“ஹைய்யோ ப்ளீஸ் மாம். போதும் உங்க ஊர் சம்பிரதாயம். கேட்டு கேட்டு காதே வலிக்குது...” என சலித்தான்.
அதில் பெரிதும் கவலை கொண்டார் அவனின் தாய். இவன் இப்படியே பற்றில்லாமலே கடைசிவரை இருந்துவிடுவானோ என கலக்கம் கொண்டார்.
சுமங்கலியின் முகத்தில் தெரிந்த கவலையில் நிதானித்தவன், “இப்போ என்ன நான் அங்க வரனும். அவ்வளோ தானே? வரேன். இப்போவாச்சும் கொஞ்சம் முகத்தை சிரிச்சதா வச்சுக்கோங்க மாம்...”
அவரின் கன்னம் கிள்ளி சொல்லியவன் புன்னகைக்க ரிஷியின் முகத்தில் தெரிந்த சோர்வில்,
“என்ன ரிஷி, என்னுடைய சுமையை உன் தோள்ல இறக்கி வச்சுட்டேனோ?. ரொம்ப கஷ்டமா இருக்கா?...” கன்னம் வருடி பாசத்தால் பரிதவித்து கேட்ட தாயை கனிவோடு பார்த்தவன்,
“இது என்னுடைய கடமை தானே மாம். இதை போய் சுமைன்னு சொல்றீங்க? நீங்க அப்டியா நினைச்சீங்க?...” கிடுக்கிப்பிடி போட,
“ச்சே ச்சே நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. காலேஜ் பொறுப்பை உன்கிட்ட வலுக்கட்டாயமா ஒப்படைச்சுட்டோம்ன்ற கில்டி கான்ஷியஸ் என்னை விட்டு இன்னும் போகலை ரிஷி...” என்றவர்,
“ஆனா ஒன்னு. இந்த சேஞ்ச் உனக்கு ரொம்பவே பிடிக்கும். போக போக நீயே இன்ட்ரெஸ்ட் ஆகிடுவ பாரேன். எல்லாம் உன் நல்லதுக்குதான் ரிஷி...”
மகனிற்கு புரியவைத்துவிடும் வேகத்தில் சுமங்கலி பேசிக்கொண்டே இருந்தார். அவரின் நெஞ்சம் புரிந்தவனும்,
“திணிக்கப்பட்ட எதுவுமே எப்பவும் இனிக்காது மாம். இது உங்களுக்காக ஏத்துக்கிட்டது. அதுவும் இப்போதைக்கு...” தனக்குள் கூறிக்கொண்டவன் தாயை பார்த்து,
“ஓகே மாம், நான் குளிச்சுட்டு ரெடியாகி வரேன்...” சின்ன சிரிப்போடு சொல்லி குளியறைக்குள் நுழைந்தான்.
தயாராகி வெளிவரும் போது கையில் காபியோடு அவனுக்காக அறையிலேயே காத்திருந்தார் சுமங்கலி.
“தேங்க்ஸ் மாம்...” காபியை பெற்றுக்கொண்டவன் அவரருகில் அமர்ந்து குடிக்க ஆரம்பிக்க அவனையே பார்த்த சுமங்கலி தாளமுடியாமல் கேட்டேவிட்டார்.
“ஏன் ரிஷி உனக்கு காவேரியை பிடிக்கலை?...” மிதமிஞ்சிய வருத்தம் அவரின் குரலிலேயே வெளிப்பட்டது. அதிர்ந்து பார்த்தவன்,
“காவேரியை நான் பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன்?...” கேட்டதும் சட்டென ஒளிர்ந்த தாயின் முகத்தை பரிதாபமாக பார்த்தான்.
“பிடிக்கிறது வேற, விருப்பம் வேற மாம். கல்யாணத்துக்கு பொண்ணை பிடிச்சா மட்டும் போதாது. நீங்களும் ஏன் மாம் என்னை புரிஞ்சுக்கலை?...”
அவனின் பதிலில் நொடியில் அனிச்சம் மலராய் வாடித்தான் போனார் சுமங்கலி. இப்படி தன் தாயை பார்த்திராதவன் செய்வதறியாமல் அமைதியாக இருந்தான்.
ஒரு கல்லூரி நிர்வாகத்தையே கம்பீரமாக கட்டி ஆண்ட சுமங்கலி இன்று பெற்ற மகனுக்காக சராசரி தாயாக மாறியதை என்னவென சொல்வான்?
சுமங்கலிக்கு காவேரி என்றால் கொள்ளை பிரியம்.நேரம் வரும் போது தானே இந்த பேச்சை எடுக்கலாம் என நினைத்திருக்க அதற்குள் காவேரியாக ரிஷியிடம் பேச போய் விஷயம் வீட்டு பெரியவர்களிடம் சேர்ந்து வேறு திசையில் திரும்பிவிட்டது.
கை மீறி சென்றுவிட்ட ஒன்றை எத்தனை முயன்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. காவேரி தன்னிடம் இதை கோடி காட்டியிருந்தால் கூட அதை எப்பாடுபட்டாவது நினைவேற்றி இருக்கமாட்டேனா?
ஆற்றாமையில் மனம் வெதும்பி நின்றார் சுமங்கலி. அந்த நேரம் முகம் அறியாத நேத்ராவின் மீது உள்ளுக்குள் புஸுபுஸுவென கோவம் பொங்கியது. அப்பெண் மட்டும் தேவையில்லாமல் பேசியிறாவிட்டால் விஷயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை தானே.
ரிஷியும் நிச்சயம் காவேரியை பற்றி யாரிடமும் கூறியிருக்கவும் மாட்டான் என்பது நிச்சயம் அவருக்கு. இனி கவலை பட்டு ஆவதற்கு எதுவும் இல்லை என்றாலும் அப்படி ஒரு ஏமாற்றம் மனதில் வெற்றிடமாக பதிந்துவிட்டது சுமங்கலிக்கு.
“மாம், எத்தனை தடவை உங்களை கூப்பிட? என்ன கனவா?...” என சிரித்தபடி கேட்ட மகனிடம் ஒன்றுமில்லை என தலையசைத்தவர்,
“உனக்கொன்னும் வருத்தமில்லையே ரிஷி...” மீண்டும் மீண்டும் கேட்க,
“ஒரே ஒரு வருத்தம் தான் மாம். என்னை காரணமா வச்சு காவேரி மனசை மாத்தன்னு அவளுக்கு இவ்வளோ அவசரமா மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் செய்யனுமான்றது மட்டும் தான். வேற எந்த வருத்தமும் இல்லை...”
புஸ் என காற்று போன பலூன் போல ஆனது சுமங்கலியின் முகம். ரிஷிக்கு அவரது இந்த எண்ணம் சரியாக படவில்லை.
“உங்களுக்கு இன்னொரு விஷயமும் சொல்றேன். காவேரிக்கும் என் மேல இருக்கிறது வெறும் அட்ராக்ஷன் மட்டும் தானே தவிர வேற எதுவும் இல்லை...” என்றவனை நம்பாத பார்வை சுமங்கலி பார்க்க,
“தெளிவா தெரிஞ்சிக்கோங்க மாம். விருப்பமில்லாமல் உங்க ஆசைக்காக நான் காவேரியை கல்யாணம் செஞ்சிட்டா நிச்சயம் நான் சந்தோஷமா வாழமுடியாது. என்னோட நிம்மதி, உங்க நிம்மதின்னு எல்லாமே போய்டும்...”
“உங்களுக்காகன்னு நான் மேரேஜ் பண்ணி ஒவ்வொரு விஷயத்திலையும் ஒப்பாம ஒரு வாழ்க்கையை வாழ்ந்தா வாழ்க்கை முழுவதும் என்னோட சேர்ந்து அவளும் தான் கஷ்டபடனும்...”
“லைப் லாங் சகிப்புத்தன்மையோட வாழ நிச்சயம் என்னால முடியாது. நீங்க நினைக்கலாம் கல்யாணத்துக்கு பின்னால என் மனசு மாறும்னு. ஆனா காவேரியை மனைவி ஸ்தானத்துல ப்ச், சும்மா பேச்சுக்கு கூட சொல்ல என்னால முடியலை மாம்....”
பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டவன், “அப்புறம் எப்டி மாம்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க...” என்றவன் வேறுபுறம் பார்வையை திருப்ப சுமங்கலி மகனின் கூற்றுக்கு தலை சாய்த்தார்.
அவனின் விருப்பத்தை தாண்டி எதுவும் அவருக்கு பெரிதில்லை. இப்போது நடக்கும் கல்லூரி விஷயத்தில் கூட மகனின் விருப்பத்திற்கு மாறாக செய்துவிட்டோமே என அவர் வருந்தாத நாளில்லை.
சுமங்கலியின் மனம் ஓரளவு ரிஷியின் பேச்சில் தெளிய தான் வந்த விஷயத்தை மறந்து வேறெதுவோ பேசி மகனை வருத்தம் கொள்ள செய்துவிட்டோமே என தன்னையே கடிந்து,
“ஓகே லீவ் இட் ரிஷி. நான் வந்தது ஒரு முக்கியமான விஷயத்துக்காக. அப்பா சொல்ல சொன்னாரு. நீ தாத்தா வீட்டுக்கு வந்ததும் அவர்க்கிட்ட...” என்றவரை இடைமறித்து,
“எத்தனை தடவை கேட்கிறது மாம்? தேஞ்ச ரெக்கார்ட் போல சொல்றதையே சொல்லிட்டு இருக்கீங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்...” என கண்ணை மூடி கேலி குரலில் கூற,
“திருடன் டா நீ. ராஸ்கல்...” அவனின் காதை திருகி சிரித்தவர்,
“கொஞ்சம் என்னோட பேச்சை கேளு. ப்ளீஸ் அம்மாவுக்காக...” கேன்சல் குரலில் கூறியவரை பாவமாக பார்த்தவன்,
“ஓகே உங்களுக்காக. அதுக்குன்னு அய்யான்னுலாம் கூப்பிடமாட்டேன்...” கொஞ்சம் மிதப்பாக.
“நீ க்ரான்பான்னு கூப்பிடாம இருந்தாவே போதும் கண்ணா...” அவனை போலவே பாவனையாக கூறி சிரித்தார்.
ஒருவழியாக மூவரும் கிளம்பி துரைச்சாமியின் வீட்டிற்கு வந்திருக்க அதற்கு முன்பே சொந்தபந்தங்கள் நிறைந்திருந்தனர்.
அவர்கள் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் அது துரைச்சாமியின் வீட்டில் தான் நடக்கும் என்பது அவர்கள் குடும்பத்தில் எழுதப்படாத விதி.
மற்ற நாட்களில் ஆள் அரவமின்றி இருக்கும் அந்த பெரிய மாளிகை இப்படி விசேஷ நாட்களில் விழாக்கோலம் கொண்டுவிடும்.
சிவராமன் தன் தந்தையை பார்த்துவிட்டு சகோதரர்களுடன் கலந்துவிட திலகாவை பார்த்ததும் சுமங்கலி அவரோடு நகர்ந்துவிட ரிஷி தான் தனித்து நின்றான்.
தன்னிடம் பேச வருபவர்களிடம் புன்னகை முகத்தோடே பட்டுகத்திரித்தது போல ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் அளவளாவி நழுவி சென்றான். இதை அனைத்தையும் துரைச்சாமியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
வந்ததில் இருந்து தன்னிடம் வந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னை மிதப்பாக பார்க்கும் பேரனின் மேல் கொஞ்சமும் கோபம் எழாமல் பாசமே சுரந்தது.
“எம்ட்டு(என்னுடைய) பேரன்னா சும்மாவா?...” மனதிற்குள் மீசையை நீவிவிட்டுக்கொண்டார். ஆனாலும் வெளியில் விரைப்போடு முறைப்பாக கம்மீரமாக நின்றார்.
அடுத்தடுத்த நாட்கள் மிக சாதாரணமாக என்று சொல்ல நினைத்தாலும் நேத்ராவின் திருவிளையாடல்கள் அனைத்தும் அப்படி சொல்ல முடியவில்லை.
தினமும் இல்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் ரிஷியின் கண்களில் பட்டுக்கொண்டே தான் இருந்தால் நேத்ரா. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக.
அவனின் கோவத்திற்கு தீனிபோடும் விதமாகவே இருந்தது அவளின் நடவடிக்கைகள். அவள் இருக்குமிடம் கல்லூரியானதால் அவனால் தன்னைத்தான் கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததே.
அன்று ஞாயிறு ஆதலால் மிக நிதானமாக எழும்பலாம் என அயர்ந்து உறங்கியவனை எழுப்பினார் சுமங்கலி.
எரிச்சலோடு புரண்டு படுத்தவன், “சண்டே கூட தூங்க விடமாட்டீங்களா? இன்னைக்கும் என்ன மாம்?...” சோம்பலான குரலில் கூறினாலும் எழுந்தமர்ந்தான்.
விஷயமில்லாமல் தன்னை தாய் தொந்திரவு செய்யமாட்டாரே.
“இன்னைக்கு நாம தாத்தா வீட்டுக்கு போறோம் ரிஷி. எழுந்து குளிச்சிட்டு கீழே வா. நானும் அப்பாவும் ரெடி ஆகிட்டோம்...” அவனிடம் கூறிக்கொண்டே அவனின் அறையை ஒழுங்கு படுத்தினாலும் பார்வை அவனிடமே.
“வாரத்துல ஆறு நாளும் அங்கதானே இருக்கீங்க. இன்னைக்கும் என்ன?...” மனதின் புகைச்சலை வார்த்தைகளில் பூசியபடி கேட்க,
“எல்லாம் நல்ல விஷயம் தான். நம்ம காவேரியை பேசி முடிக்க இன்னைக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னைக்கு வராங்க...”
அவனை பார்த்தபடியே இதை கூறியவர் மகனின் முகத்திலிருந்து எதையோ தேடினார். எத்தனை எதிர்பார்த்தும் ரிஷியின் முகத்தில் தெரிந்த விடுதலை உணர்வில் ஏமாற்றமே மிஞ்சியது அவருக்கு.
“இது ஒரு பெரிய விஷயமா? இதுக்கு கூட நாமதான் போய் நிக்கனுமா?...” என்றபடி தன்னுடைய உடைகளை எடுத்தான்.
“இது பெரிய விஷயமில்லாம என்ன ரிஷி? காவேரி நம்ம வீட்டு பொண்ணு. அவளுக்கு ஒரு நல்லது நடக்குது. தாய்மாமாவா உன் அப்பா சபையில இருக்கனும்...”
“ஹைய்யோ ப்ளீஸ் மாம். போதும் உங்க ஊர் சம்பிரதாயம். கேட்டு கேட்டு காதே வலிக்குது...” என சலித்தான்.
அதில் பெரிதும் கவலை கொண்டார் அவனின் தாய். இவன் இப்படியே பற்றில்லாமலே கடைசிவரை இருந்துவிடுவானோ என கலக்கம் கொண்டார்.
சுமங்கலியின் முகத்தில் தெரிந்த கவலையில் நிதானித்தவன், “இப்போ என்ன நான் அங்க வரனும். அவ்வளோ தானே? வரேன். இப்போவாச்சும் கொஞ்சம் முகத்தை சிரிச்சதா வச்சுக்கோங்க மாம்...”
அவரின் கன்னம் கிள்ளி சொல்லியவன் புன்னகைக்க ரிஷியின் முகத்தில் தெரிந்த சோர்வில்,
“என்ன ரிஷி, என்னுடைய சுமையை உன் தோள்ல இறக்கி வச்சுட்டேனோ?. ரொம்ப கஷ்டமா இருக்கா?...” கன்னம் வருடி பாசத்தால் பரிதவித்து கேட்ட தாயை கனிவோடு பார்த்தவன்,
“இது என்னுடைய கடமை தானே மாம். இதை போய் சுமைன்னு சொல்றீங்க? நீங்க அப்டியா நினைச்சீங்க?...” கிடுக்கிப்பிடி போட,
“ச்சே ச்சே நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. காலேஜ் பொறுப்பை உன்கிட்ட வலுக்கட்டாயமா ஒப்படைச்சுட்டோம்ன்ற கில்டி கான்ஷியஸ் என்னை விட்டு இன்னும் போகலை ரிஷி...” என்றவர்,
“ஆனா ஒன்னு. இந்த சேஞ்ச் உனக்கு ரொம்பவே பிடிக்கும். போக போக நீயே இன்ட்ரெஸ்ட் ஆகிடுவ பாரேன். எல்லாம் உன் நல்லதுக்குதான் ரிஷி...”
மகனிற்கு புரியவைத்துவிடும் வேகத்தில் சுமங்கலி பேசிக்கொண்டே இருந்தார். அவரின் நெஞ்சம் புரிந்தவனும்,
“திணிக்கப்பட்ட எதுவுமே எப்பவும் இனிக்காது மாம். இது உங்களுக்காக ஏத்துக்கிட்டது. அதுவும் இப்போதைக்கு...” தனக்குள் கூறிக்கொண்டவன் தாயை பார்த்து,
“ஓகே மாம், நான் குளிச்சுட்டு ரெடியாகி வரேன்...” சின்ன சிரிப்போடு சொல்லி குளியறைக்குள் நுழைந்தான்.
தயாராகி வெளிவரும் போது கையில் காபியோடு அவனுக்காக அறையிலேயே காத்திருந்தார் சுமங்கலி.
“தேங்க்ஸ் மாம்...” காபியை பெற்றுக்கொண்டவன் அவரருகில் அமர்ந்து குடிக்க ஆரம்பிக்க அவனையே பார்த்த சுமங்கலி தாளமுடியாமல் கேட்டேவிட்டார்.
“ஏன் ரிஷி உனக்கு காவேரியை பிடிக்கலை?...” மிதமிஞ்சிய வருத்தம் அவரின் குரலிலேயே வெளிப்பட்டது. அதிர்ந்து பார்த்தவன்,
“காவேரியை நான் பிடிக்கலைன்னு எப்போ சொன்னேன்?...” கேட்டதும் சட்டென ஒளிர்ந்த தாயின் முகத்தை பரிதாபமாக பார்த்தான்.
“பிடிக்கிறது வேற, விருப்பம் வேற மாம். கல்யாணத்துக்கு பொண்ணை பிடிச்சா மட்டும் போதாது. நீங்களும் ஏன் மாம் என்னை புரிஞ்சுக்கலை?...”
அவனின் பதிலில் நொடியில் அனிச்சம் மலராய் வாடித்தான் போனார் சுமங்கலி. இப்படி தன் தாயை பார்த்திராதவன் செய்வதறியாமல் அமைதியாக இருந்தான்.
ஒரு கல்லூரி நிர்வாகத்தையே கம்பீரமாக கட்டி ஆண்ட சுமங்கலி இன்று பெற்ற மகனுக்காக சராசரி தாயாக மாறியதை என்னவென சொல்வான்?
சுமங்கலிக்கு காவேரி என்றால் கொள்ளை பிரியம்.நேரம் வரும் போது தானே இந்த பேச்சை எடுக்கலாம் என நினைத்திருக்க அதற்குள் காவேரியாக ரிஷியிடம் பேச போய் விஷயம் வீட்டு பெரியவர்களிடம் சேர்ந்து வேறு திசையில் திரும்பிவிட்டது.
கை மீறி சென்றுவிட்ட ஒன்றை எத்தனை முயன்றும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. காவேரி தன்னிடம் இதை கோடி காட்டியிருந்தால் கூட அதை எப்பாடுபட்டாவது நினைவேற்றி இருக்கமாட்டேனா?
ஆற்றாமையில் மனம் வெதும்பி நின்றார் சுமங்கலி. அந்த நேரம் முகம் அறியாத நேத்ராவின் மீது உள்ளுக்குள் புஸுபுஸுவென கோவம் பொங்கியது. அப்பெண் மட்டும் தேவையில்லாமல் பேசியிறாவிட்டால் விஷயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை தானே.
ரிஷியும் நிச்சயம் காவேரியை பற்றி யாரிடமும் கூறியிருக்கவும் மாட்டான் என்பது நிச்சயம் அவருக்கு. இனி கவலை பட்டு ஆவதற்கு எதுவும் இல்லை என்றாலும் அப்படி ஒரு ஏமாற்றம் மனதில் வெற்றிடமாக பதிந்துவிட்டது சுமங்கலிக்கு.
“மாம், எத்தனை தடவை உங்களை கூப்பிட? என்ன கனவா?...” என சிரித்தபடி கேட்ட மகனிடம் ஒன்றுமில்லை என தலையசைத்தவர்,
“உனக்கொன்னும் வருத்தமில்லையே ரிஷி...” மீண்டும் மீண்டும் கேட்க,
“ஒரே ஒரு வருத்தம் தான் மாம். என்னை காரணமா வச்சு காவேரி மனசை மாத்தன்னு அவளுக்கு இவ்வளோ அவசரமா மாப்பிள்ளை பார்த்து மேரேஜ் செய்யனுமான்றது மட்டும் தான். வேற எந்த வருத்தமும் இல்லை...”
புஸ் என காற்று போன பலூன் போல ஆனது சுமங்கலியின் முகம். ரிஷிக்கு அவரது இந்த எண்ணம் சரியாக படவில்லை.
“உங்களுக்கு இன்னொரு விஷயமும் சொல்றேன். காவேரிக்கும் என் மேல இருக்கிறது வெறும் அட்ராக்ஷன் மட்டும் தானே தவிர வேற எதுவும் இல்லை...” என்றவனை நம்பாத பார்வை சுமங்கலி பார்க்க,
“தெளிவா தெரிஞ்சிக்கோங்க மாம். விருப்பமில்லாமல் உங்க ஆசைக்காக நான் காவேரியை கல்யாணம் செஞ்சிட்டா நிச்சயம் நான் சந்தோஷமா வாழமுடியாது. என்னோட நிம்மதி, உங்க நிம்மதின்னு எல்லாமே போய்டும்...”
“உங்களுக்காகன்னு நான் மேரேஜ் பண்ணி ஒவ்வொரு விஷயத்திலையும் ஒப்பாம ஒரு வாழ்க்கையை வாழ்ந்தா வாழ்க்கை முழுவதும் என்னோட சேர்ந்து அவளும் தான் கஷ்டபடனும்...”
“லைப் லாங் சகிப்புத்தன்மையோட வாழ நிச்சயம் என்னால முடியாது. நீங்க நினைக்கலாம் கல்யாணத்துக்கு பின்னால என் மனசு மாறும்னு. ஆனா காவேரியை மனைவி ஸ்தானத்துல ப்ச், சும்மா பேச்சுக்கு கூட சொல்ல என்னால முடியலை மாம்....”
பின்னந்தலையை அழுந்த கோதிக்கொண்டவன், “அப்புறம் எப்டி மாம்? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க...” என்றவன் வேறுபுறம் பார்வையை திருப்ப சுமங்கலி மகனின் கூற்றுக்கு தலை சாய்த்தார்.
அவனின் விருப்பத்தை தாண்டி எதுவும் அவருக்கு பெரிதில்லை. இப்போது நடக்கும் கல்லூரி விஷயத்தில் கூட மகனின் விருப்பத்திற்கு மாறாக செய்துவிட்டோமே என அவர் வருந்தாத நாளில்லை.
சுமங்கலியின் மனம் ஓரளவு ரிஷியின் பேச்சில் தெளிய தான் வந்த விஷயத்தை மறந்து வேறெதுவோ பேசி மகனை வருத்தம் கொள்ள செய்துவிட்டோமே என தன்னையே கடிந்து,
“ஓகே லீவ் இட் ரிஷி. நான் வந்தது ஒரு முக்கியமான விஷயத்துக்காக. அப்பா சொல்ல சொன்னாரு. நீ தாத்தா வீட்டுக்கு வந்ததும் அவர்க்கிட்ட...” என்றவரை இடைமறித்து,
“எத்தனை தடவை கேட்கிறது மாம்? தேஞ்ச ரெக்கார்ட் போல சொல்றதையே சொல்லிட்டு இருக்கீங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்...” என கண்ணை மூடி கேலி குரலில் கூற,
“திருடன் டா நீ. ராஸ்கல்...” அவனின் காதை திருகி சிரித்தவர்,
“கொஞ்சம் என்னோட பேச்சை கேளு. ப்ளீஸ் அம்மாவுக்காக...” கேன்சல் குரலில் கூறியவரை பாவமாக பார்த்தவன்,
“ஓகே உங்களுக்காக. அதுக்குன்னு அய்யான்னுலாம் கூப்பிடமாட்டேன்...” கொஞ்சம் மிதப்பாக.
“நீ க்ரான்பான்னு கூப்பிடாம இருந்தாவே போதும் கண்ணா...” அவனை போலவே பாவனையாக கூறி சிரித்தார்.
ஒருவழியாக மூவரும் கிளம்பி துரைச்சாமியின் வீட்டிற்கு வந்திருக்க அதற்கு முன்பே சொந்தபந்தங்கள் நிறைந்திருந்தனர்.
அவர்கள் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் அது துரைச்சாமியின் வீட்டில் தான் நடக்கும் என்பது அவர்கள் குடும்பத்தில் எழுதப்படாத விதி.
மற்ற நாட்களில் ஆள் அரவமின்றி இருக்கும் அந்த பெரிய மாளிகை இப்படி விசேஷ நாட்களில் விழாக்கோலம் கொண்டுவிடும்.
சிவராமன் தன் தந்தையை பார்த்துவிட்டு சகோதரர்களுடன் கலந்துவிட திலகாவை பார்த்ததும் சுமங்கலி அவரோடு நகர்ந்துவிட ரிஷி தான் தனித்து நின்றான்.
தன்னிடம் பேச வருபவர்களிடம் புன்னகை முகத்தோடே பட்டுகத்திரித்தது போல ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் அளவளாவி நழுவி சென்றான். இதை அனைத்தையும் துரைச்சாமியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்.
வந்ததில் இருந்து தன்னிடம் வந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னை மிதப்பாக பார்க்கும் பேரனின் மேல் கொஞ்சமும் கோபம் எழாமல் பாசமே சுரந்தது.
“எம்ட்டு(என்னுடைய) பேரன்னா சும்மாவா?...” மனதிற்குள் மீசையை நீவிவிட்டுக்கொண்டார். ஆனாலும் வெளியில் விரைப்போடு முறைப்பாக கம்மீரமாக நின்றார்.