AshrafHameedaT
Administrator
அலை – 3
ராணியம்மாவின் கூர்மையான பார்வையில் நேத்ராவின் அருகில் நின்றுகொண்டிருந்த ரோஷிணிக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்துக்கொட்டியது.
நேத்ராவை அனைவரின் முன்பும் முறைக்க முடியாமல் அவஸ்தையில் நின்ற ரோஷிணியின் பொறுமையை சோதிக்கும் விதமாக இருந்தது நேத்ரா தன் முகத்தில் காட்டிய பாவனை.
பிரின்ஸிபால் ராணியம்மாவிற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று நேத்ராவை விரோத பார்வை பார்த்தபடி இருந்தனர் லெக்சரர்ஸ் ரஞ்சனியும், வித்யாவும். அவர்களை பார்வையிலேயே அமைதிப்படுத்தி,
“நேத்ரா இன்னைக்கு காலையில நீயும் உன் ப்ரெண்டும் மேடம் பாத்ரூம்ல குளிச்சீங்களா?...” என்ற ராணியம்மாளின் நேரடி கேள்விக்கு தலைகுனிந்து நின்ற நேத்ரா,
“என்ன குளிச்சீங்களா?...” முணுமுணுக்க அவளருகில் நின்ற ரோஷிணிக்கு பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.
“அடடா இந்தா ஆரம்பிச்சுட்டாள. எங்க போய் முடியுமோ?...” ரோஷிணி பரிதாபமாக நடப்பவற்றை பார்க்க,
“இந்த பொண்ணு ரொம்ப பயப்படுது போல. பார்க்க பாவமா தான் இருக்கு. ஆனா அடிக்கடி இதையே செய்யுதுன்னு சொல்றாங்களே? கொஞ்சம் கண்டிச்சு தான் வைக்கனும்...” என எண்ணியபடி,
“ஸ்டூடன்ஸ் எல்லோருக்கும் தான் தனி பாத்ரூம் இருக்கே. அதை விட்டு நீ எதுக்கு இவங்க பாத்ரூம் யூஸ் பண்ணின?...”
தலை குனிந்து நின்ற நேத்ராவை கண்டு பாவமாக இருக்க கொஞ்சம் இரக்கம் சுரந்த மனநிலையில் கேட்டார் ராணியம்மாள்.
“என்ன யூஸ் பண்ணினயா?...” அதற்கும் நேத்ரா குனிந்தவாக்கிலேயே கவுண்டர் குடுக்க,
“நீ இதே தப்பை அடிக்கடி செய்யிறையேமா? எத்தனை தடவை உன்னை வார்ன் பன்றது?. நீ பன்றது ரொம்பவே தப்பும்மா...”
“என்ன தப்பும்மா?...” அந்த நிலையிலும் ரோஷிணிக்கு க்ளுக் என சிரிப்பு வந்தது. அதையும் மீறிய பயம்,
“அடியே ஆட்டோபாம் கொஞ்சம் அடங்கேண்டி...” என இறைஞ்சும் பார்வை பார்த்தாள் ரோஷிணி,
“இன்னொரு தடவை இதையே செய்வியா?...”
“என்ன இதையே செய்வியா?...” சட்டென நேத்ராவை விட்டு இரண்டடி நகர்ந்துவிட்டாள் ரோஷிணி.
“ஆத்தாடி இவ எனக்கு ஆப்படிச்சு திருச்சியில அடக்கம் பண்ணாம விடமாட்டா போலையே?...” என்ற பீதியுடன் தோழியை கெஞ்சல் பார்வை பார்த்துவைக்க நேத்ரா அதற்கும் மசிந்தாள் இல்லை.
“கேட்கிறதுக்கு பதில் சொல்லனும் நேத்ரா. இப்படி வாயை திறக்காம அமைதியா நின்னா என்ன அர்த்தம்?...”
“என்ன இவ அமைதியா? இந்த பிரின்ஸிபால் ஏன் இவளை கண்டிக்காம கொஞ்சிட்டு இருக்குது?...” என உள்ளம் புகைய அந்த அறையில் வெதும்பி நின்றனர் ரஞ்சனியும், வித்யாவும்.
“இல்லை மேம், பெரியவங்க நீங்க பேசிட்டு இருந்தீங்களே, அதான் கடைசியில பதில் சொல்லலாம்னு...” என கொஞ்சம் திணறிய குரலோடு வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போல நேத்ரா கூற,
“அடங்கொக்கமக்கா இது உலகமகா நடிப்புடா சாமி...” என எப்போதும் போல் ரோஷிணி அவளை வியந்து பார்க்க,
“கவுத்துட்டாளே, இனி நாம இங்க இருந்து ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை வித்யா மேம்...” என ரஞ்சனி புலம்ப,
“இருங்க மேம். இன்னைக்கு என்ன கதைன்னு கேட்டுட்டுத்தான் போவோமே?...” கொஞ்சம் சுவாரஸியம் மிகுந்த குரலில் வித்யா நேத்ராவை ஆர்வத்தோடு பார்க்க ரஞ்சனி நொந்தே போனாள்.
“இப்படி ஒரு ஆளை கூட்டிட்டா நான் இந்த ராட்சஸி மேல கம்ப்ளைண்ட் குடுக்க வருவேன்? கடவுளே கஷ்டகாலம்...” குமைந்தபடி வேண்டா வெறுப்பாக நின்றாள்.
“பயப்படாம நடந்ததை நீ சொல்லும்மா நேத்ரா...” என்ற ராணியம்மாவை இப்போது பாவமாக பார்ப்பது ரோஷிணியின் முறையானது.
“இவளாச்சும் பயப்படறதாவது?...” என அசால்ட்டாக ரோஷிணி பார்க்க அவளை கண்டுகொள்ளாத நேத்ரா,
“இவ என் ப்ரெண்ட் ரோஷிணி மேம்...” எனவும் ரோஷிணிக்கு கிலி கவ்வியது.
“ஆத்தீ என்னை வெள்ளாவில வேக வைக்கிறாளே? என்னத்துக்கு இவ என் பேரை இழுத்துவிடறா? எங்க வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சது என் படிப்புக்கு ஒரு முழுக்கை போட்டு மொத்தமா கவுத்தி மூடிடுவாங்களே?...” என பதற,
“காலையில குளிக்க போற இடத்துல கீழே கொட்டியிருந்த ஷாம்புல கால் வச்ச என் ப்ரெண்ட் வழுக்கி விழுந்துட்டா. அந்த நேரத்துல என்ன செய்ய? அவளுக்கு பர்ஸ்ட்எய்ட் பண்ணி அவளை கிளப்பி நாங்க திரும்பி வரதுக்குள்ள பாத்ரூம் ரஷ் ஆகிடுச்சு மேம்...”
புரிந்தது என்பது போல ராணியம்மாள் தலையசைக்க,
“இன்னைக்கு மார்னிங் கந்தன் ஸார் க்ளாஸ் இருந்தது மேம். அவருக்கு லேட்டா வந்தா சுத்தமா பிடிக்காது மேம். பயங்கரமா கோவம் வரும் மேம். எதாச்சும் பனிஷ் பண்ணிடுவாரு மேம். அதான் லேட் ஆகிடுமேன்னு ஆபத்துக்கு பாவமில்லைன்னு தான் மேம்...”
வார்த்தைக்கு வார்த்தை மேம் போட்டு பவ்யமாக பேசும் நேத்ராவின் புறம் சாய்த்து ராணியம்மாவின் மனம்.
“அடுத்த ஆப்பா? சுத்தம்...” என தலையில் கை வைக்காத குறையாக விழித்தாள் ரோஷிணி.
“சரி நீ கிளம்பும்மா. இனிமே இதுமாதிரி இன்னொரு முறை நடக்கக்கூடாது. இல்லைனா நான் உங்க மேல ரொம்ப கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிடும்...” என எச்சரித்து அனுப்பிவிட்டார்.
அதை கண்ட ரஞ்சனியும் வித்யாவும் ஒன்றும் செய்யமுடியாமல் நிற்க,
“இங்க பாருங்க ரஞ்சனி, அவங்க சின்னபசங்க. கொஞ்சம் விளையாட்டுத்தனமும், துடுக்கும் இருக்கத்தான் செய்யும். காலேஜ் லைப்ல இதெல்லாம் இருக்கிறது தானே. நாம தான் கண்டும் காணாம இருக்கனும்...” என ராணியம்மாள் சொல்ல,
“இல்லை மேம், இந்த நேத்ரா எப்பவுமே இப்படித்தான் மேம். அவளுக்கு எங்களை வம்பிளுக்கிறதே வாடிக்கையா போச்சு. இது ஒன்னும் முதல் தடவை இல்லை மேம். நீங்க புதுசா வந்திருக்கிறதால...” கொஞ்சம் வேகமாகவே பேசிவிட்டாள் ரஞ்சனி.
ஆம். பிரின்ஸிபாலாக ராணியம்மாள் அந்த கல்லூரிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது.
“ஸ்டாப் இட். நான் புதுசுன்னு நீங்க சொல்லாதீங்க. என்ன நடந்துச்சுன்னு எல்லாம் தெரியும். நானும் நீங்களும் அந்த வயசை தாண்டிதான் வந்திருக்கோம். ஹாஸ்டல்ல இருக்கிற பொண்ணுங்க கொஞ்சம் விளையாட்டுத்தனமா தான் இருப்பாங்க...”
“இது ஒரு ப்ராப்ளம்னு எடுத்ததுக்கெல்லாம் கம்ப்ளைன்ட் சொல்லிட்டு வந்திடறீங்க. க்ளாஸ்க்கு போங்க...”
ராணியம்மாள் அழுத்தமான குரலில் கண்டிப்போடு கூறவும் மறுக்கமுடியாமல் எரிச்சல் மண்டிய மனதோடு அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்.
வெளியில் வந்த நேத்ராவும் ரோஷிணியும் தங்கள் வகுப்பறைக்கு செல்ல அங்கே அவர்களின் தோழிகள் ராகினியும் வனமலரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.
“என்னடி ஆச்சு? பிரின்ஸ் ரொம்ப காய்ச்சி எடுத்துடுச்சா?...” என நேத்ராவையும் ரோஷிணியையும் பார்த்து ராகினி கேட்க,
“ஹைய்யோ கூழ் வண்டி. கொஞ்சம் இரு...” என்ற நேத்ரா வனமலரை பார்த்து,
“அமேசான் ரவிக்கிட்ட கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்லிருந்தேன். வந்துட்டானான்னு பாரேன்...” என கூறிவிட்டு ஆசுவாசமாக கையை காலை நீட்டி அமர ரோஷிணி முறைத்தாள்.
“ப்ச் இவளுக்கு வேற வேலையில்லை. எப்போ பாரு என்னை சைட்டடிக்கிறது...”
சத்தமாகவே சொல்லிவிட்டு விழிகளை மூட வனமலர் அவளின் தலையில் ஒரு போடு போட்டு எழுப்பி அமரவைத்தாள்.
“இப்போ என்ன அதான் இவளும் கூட வந்தால கேட்டு தெரிஞ்சுக்கோ. சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு...” என எழுந்துகொள்ள முயல அவளை இழுத்து பிடித்துக்கொண்ட ராகினி,
“நீ சொல்லு ரோஷிம்மா, இவ அசால்ட்டை பார்த்தா என்னத்தயோ இழுத்துவிட்டு தான் வந்திருப்பா போல...” என சரியாக கணித்து கடுப்பாக கூற,
“தப்பாம அதையே தான் செஞ்சிருக்கா ராகி...” என்ற ரோஷிணி நடந்ததை கூற மற்ற இருவரும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டனர்.
ராணியம்மாவின் கூர்மையான பார்வையில் நேத்ராவின் அருகில் நின்றுகொண்டிருந்த ரோஷிணிக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்துக்கொட்டியது.
நேத்ராவை அனைவரின் முன்பும் முறைக்க முடியாமல் அவஸ்தையில் நின்ற ரோஷிணியின் பொறுமையை சோதிக்கும் விதமாக இருந்தது நேத்ரா தன் முகத்தில் காட்டிய பாவனை.
பிரின்ஸிபால் ராணியம்மாவிற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று நேத்ராவை விரோத பார்வை பார்த்தபடி இருந்தனர் லெக்சரர்ஸ் ரஞ்சனியும், வித்யாவும். அவர்களை பார்வையிலேயே அமைதிப்படுத்தி,
“நேத்ரா இன்னைக்கு காலையில நீயும் உன் ப்ரெண்டும் மேடம் பாத்ரூம்ல குளிச்சீங்களா?...” என்ற ராணியம்மாளின் நேரடி கேள்விக்கு தலைகுனிந்து நின்ற நேத்ரா,
“என்ன குளிச்சீங்களா?...” முணுமுணுக்க அவளருகில் நின்ற ரோஷிணிக்கு பயத்தில் உடல் வெடவெடக்க ஆரம்பித்தது.
“அடடா இந்தா ஆரம்பிச்சுட்டாள. எங்க போய் முடியுமோ?...” ரோஷிணி பரிதாபமாக நடப்பவற்றை பார்க்க,
“இந்த பொண்ணு ரொம்ப பயப்படுது போல. பார்க்க பாவமா தான் இருக்கு. ஆனா அடிக்கடி இதையே செய்யுதுன்னு சொல்றாங்களே? கொஞ்சம் கண்டிச்சு தான் வைக்கனும்...” என எண்ணியபடி,
“ஸ்டூடன்ஸ் எல்லோருக்கும் தான் தனி பாத்ரூம் இருக்கே. அதை விட்டு நீ எதுக்கு இவங்க பாத்ரூம் யூஸ் பண்ணின?...”
தலை குனிந்து நின்ற நேத்ராவை கண்டு பாவமாக இருக்க கொஞ்சம் இரக்கம் சுரந்த மனநிலையில் கேட்டார் ராணியம்மாள்.
“என்ன யூஸ் பண்ணினயா?...” அதற்கும் நேத்ரா குனிந்தவாக்கிலேயே கவுண்டர் குடுக்க,
“நீ இதே தப்பை அடிக்கடி செய்யிறையேமா? எத்தனை தடவை உன்னை வார்ன் பன்றது?. நீ பன்றது ரொம்பவே தப்பும்மா...”
“என்ன தப்பும்மா?...” அந்த நிலையிலும் ரோஷிணிக்கு க்ளுக் என சிரிப்பு வந்தது. அதையும் மீறிய பயம்,
“அடியே ஆட்டோபாம் கொஞ்சம் அடங்கேண்டி...” என இறைஞ்சும் பார்வை பார்த்தாள் ரோஷிணி,
“இன்னொரு தடவை இதையே செய்வியா?...”
“என்ன இதையே செய்வியா?...” சட்டென நேத்ராவை விட்டு இரண்டடி நகர்ந்துவிட்டாள் ரோஷிணி.
“ஆத்தாடி இவ எனக்கு ஆப்படிச்சு திருச்சியில அடக்கம் பண்ணாம விடமாட்டா போலையே?...” என்ற பீதியுடன் தோழியை கெஞ்சல் பார்வை பார்த்துவைக்க நேத்ரா அதற்கும் மசிந்தாள் இல்லை.
“கேட்கிறதுக்கு பதில் சொல்லனும் நேத்ரா. இப்படி வாயை திறக்காம அமைதியா நின்னா என்ன அர்த்தம்?...”
“என்ன இவ அமைதியா? இந்த பிரின்ஸிபால் ஏன் இவளை கண்டிக்காம கொஞ்சிட்டு இருக்குது?...” என உள்ளம் புகைய அந்த அறையில் வெதும்பி நின்றனர் ரஞ்சனியும், வித்யாவும்.
“இல்லை மேம், பெரியவங்க நீங்க பேசிட்டு இருந்தீங்களே, அதான் கடைசியில பதில் சொல்லலாம்னு...” என கொஞ்சம் திணறிய குரலோடு வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போல நேத்ரா கூற,
“அடங்கொக்கமக்கா இது உலகமகா நடிப்புடா சாமி...” என எப்போதும் போல் ரோஷிணி அவளை வியந்து பார்க்க,
“கவுத்துட்டாளே, இனி நாம இங்க இருந்து ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை வித்யா மேம்...” என ரஞ்சனி புலம்ப,
“இருங்க மேம். இன்னைக்கு என்ன கதைன்னு கேட்டுட்டுத்தான் போவோமே?...” கொஞ்சம் சுவாரஸியம் மிகுந்த குரலில் வித்யா நேத்ராவை ஆர்வத்தோடு பார்க்க ரஞ்சனி நொந்தே போனாள்.
“இப்படி ஒரு ஆளை கூட்டிட்டா நான் இந்த ராட்சஸி மேல கம்ப்ளைண்ட் குடுக்க வருவேன்? கடவுளே கஷ்டகாலம்...” குமைந்தபடி வேண்டா வெறுப்பாக நின்றாள்.
“பயப்படாம நடந்ததை நீ சொல்லும்மா நேத்ரா...” என்ற ராணியம்மாவை இப்போது பாவமாக பார்ப்பது ரோஷிணியின் முறையானது.
“இவளாச்சும் பயப்படறதாவது?...” என அசால்ட்டாக ரோஷிணி பார்க்க அவளை கண்டுகொள்ளாத நேத்ரா,
“இவ என் ப்ரெண்ட் ரோஷிணி மேம்...” எனவும் ரோஷிணிக்கு கிலி கவ்வியது.
“ஆத்தீ என்னை வெள்ளாவில வேக வைக்கிறாளே? என்னத்துக்கு இவ என் பேரை இழுத்துவிடறா? எங்க வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சது என் படிப்புக்கு ஒரு முழுக்கை போட்டு மொத்தமா கவுத்தி மூடிடுவாங்களே?...” என பதற,
“காலையில குளிக்க போற இடத்துல கீழே கொட்டியிருந்த ஷாம்புல கால் வச்ச என் ப்ரெண்ட் வழுக்கி விழுந்துட்டா. அந்த நேரத்துல என்ன செய்ய? அவளுக்கு பர்ஸ்ட்எய்ட் பண்ணி அவளை கிளப்பி நாங்க திரும்பி வரதுக்குள்ள பாத்ரூம் ரஷ் ஆகிடுச்சு மேம்...”
புரிந்தது என்பது போல ராணியம்மாள் தலையசைக்க,
“இன்னைக்கு மார்னிங் கந்தன் ஸார் க்ளாஸ் இருந்தது மேம். அவருக்கு லேட்டா வந்தா சுத்தமா பிடிக்காது மேம். பயங்கரமா கோவம் வரும் மேம். எதாச்சும் பனிஷ் பண்ணிடுவாரு மேம். அதான் லேட் ஆகிடுமேன்னு ஆபத்துக்கு பாவமில்லைன்னு தான் மேம்...”
வார்த்தைக்கு வார்த்தை மேம் போட்டு பவ்யமாக பேசும் நேத்ராவின் புறம் சாய்த்து ராணியம்மாவின் மனம்.
“அடுத்த ஆப்பா? சுத்தம்...” என தலையில் கை வைக்காத குறையாக விழித்தாள் ரோஷிணி.
“சரி நீ கிளம்பும்மா. இனிமே இதுமாதிரி இன்னொரு முறை நடக்கக்கூடாது. இல்லைனா நான் உங்க மேல ரொம்ப கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியதாகிடும்...” என எச்சரித்து அனுப்பிவிட்டார்.
அதை கண்ட ரஞ்சனியும் வித்யாவும் ஒன்றும் செய்யமுடியாமல் நிற்க,
“இங்க பாருங்க ரஞ்சனி, அவங்க சின்னபசங்க. கொஞ்சம் விளையாட்டுத்தனமும், துடுக்கும் இருக்கத்தான் செய்யும். காலேஜ் லைப்ல இதெல்லாம் இருக்கிறது தானே. நாம தான் கண்டும் காணாம இருக்கனும்...” என ராணியம்மாள் சொல்ல,
“இல்லை மேம், இந்த நேத்ரா எப்பவுமே இப்படித்தான் மேம். அவளுக்கு எங்களை வம்பிளுக்கிறதே வாடிக்கையா போச்சு. இது ஒன்னும் முதல் தடவை இல்லை மேம். நீங்க புதுசா வந்திருக்கிறதால...” கொஞ்சம் வேகமாகவே பேசிவிட்டாள் ரஞ்சனி.
ஆம். பிரின்ஸிபாலாக ராணியம்மாள் அந்த கல்லூரிக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது.
“ஸ்டாப் இட். நான் புதுசுன்னு நீங்க சொல்லாதீங்க. என்ன நடந்துச்சுன்னு எல்லாம் தெரியும். நானும் நீங்களும் அந்த வயசை தாண்டிதான் வந்திருக்கோம். ஹாஸ்டல்ல இருக்கிற பொண்ணுங்க கொஞ்சம் விளையாட்டுத்தனமா தான் இருப்பாங்க...”
“இது ஒரு ப்ராப்ளம்னு எடுத்ததுக்கெல்லாம் கம்ப்ளைன்ட் சொல்லிட்டு வந்திடறீங்க. க்ளாஸ்க்கு போங்க...”
ராணியம்மாள் அழுத்தமான குரலில் கண்டிப்போடு கூறவும் மறுக்கமுடியாமல் எரிச்சல் மண்டிய மனதோடு அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்.
வெளியில் வந்த நேத்ராவும் ரோஷிணியும் தங்கள் வகுப்பறைக்கு செல்ல அங்கே அவர்களின் தோழிகள் ராகினியும் வனமலரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.
“என்னடி ஆச்சு? பிரின்ஸ் ரொம்ப காய்ச்சி எடுத்துடுச்சா?...” என நேத்ராவையும் ரோஷிணியையும் பார்த்து ராகினி கேட்க,
“ஹைய்யோ கூழ் வண்டி. கொஞ்சம் இரு...” என்ற நேத்ரா வனமலரை பார்த்து,
“அமேசான் ரவிக்கிட்ட கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்லிருந்தேன். வந்துட்டானான்னு பாரேன்...” என கூறிவிட்டு ஆசுவாசமாக கையை காலை நீட்டி அமர ரோஷிணி முறைத்தாள்.
“ப்ச் இவளுக்கு வேற வேலையில்லை. எப்போ பாரு என்னை சைட்டடிக்கிறது...”
சத்தமாகவே சொல்லிவிட்டு விழிகளை மூட வனமலர் அவளின் தலையில் ஒரு போடு போட்டு எழுப்பி அமரவைத்தாள்.
“இப்போ என்ன அதான் இவளும் கூட வந்தால கேட்டு தெரிஞ்சுக்கோ. சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு...” என எழுந்துகொள்ள முயல அவளை இழுத்து பிடித்துக்கொண்ட ராகினி,
“நீ சொல்லு ரோஷிம்மா, இவ அசால்ட்டை பார்த்தா என்னத்தயோ இழுத்துவிட்டு தான் வந்திருப்பா போல...” என சரியாக கணித்து கடுப்பாக கூற,
“தப்பாம அதையே தான் செஞ்சிருக்கா ராகி...” என்ற ரோஷிணி நடந்ததை கூற மற்ற இருவரும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டனர்.