Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

5. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
சித்தன் ஐயா மாலையை வீசிய நேரம் அவரை நோக்கி கொடூர பார்வையை வீசி ஒற்றை விரலை உயர்த்தி ஏதோ சொன்னபடியே மாயமாய் மறைந்துபோனது அவ்வுருவம். ஏற்கனவே அந்த உருவத்தின் செயல்களை அனுபவித்த சித்தன் அது கூறி சென்ற செய்தியை கண்டு அதிர்ந்தாலும், உடனே அந்த அறையிலிருந்து தனாவை இழுத்துக் கொண்டு மாடி வராண்டாவில் சுவரோரமாக சாய்ந்த படி நிற்க வைத்தார். அவனை இழுத்து வந்து விட்டாலும், இன்னும் அவன் காதுகளை மூடியபடி அகங்காரமாக கத்திக் கொண்டு தான் இருந்தான்.

மீண்டும் கையிலிருந்த மாலையை அவனின் கழுத்தில் போட, அதுவரை கத்திக் கொண்டிருந்தவன் அப்படியே மயங்கி சித்தன் ஐயாவின் மேலேயே சாய்ந்து விட்டான்.

அவனை சுவற்றிலேயே சாய்த்து வைத்துவிட்டு திறந்திருந்த அறையில் நுழைந்து தண்ணீரை எடுத்து வந்தவர், தனாவின் முகத்தில் தெளித்து தனாவின் கன்னம் தட்டி தம்பி.. தம்பி.. தனா.. தனா..... உனக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் கண்ணு முழிச்சு பாருப்பா. நீ தான் உன்னோட குடும்பத்தையே பாதுகாக்கனும்.. ம்ம்.. தளராத.. ம்ம்.. எழுந்திரிப்பா...

மெல்ல கண்களை திறந்தவன், காது பயங்கர வலி எடுக்கவும், தொட்டு பார்க்க காது இரண்டிலும் இரத்தம் கசிந்து அவன் கழுத்து வரை வந்திருந்தது. வலியில் முகத்தை சுருக்கி சித்தன் ஐயாவை பற்றியபடியே எழுந்து நின்று, அவரை அணைத்து அழுதே விட்டான்.

நீங்க மட்டும் இல்லயின்னா இந்நேரம் நானும் செத்து போயிருப்பேன் தாத்தா. என் குடும்பம் துணைக்கு ஒரு ஆம்பள கூட இல்லாம பச்சை குழந்தைகளோட அனாதையா நின்னுருக்கும். ரொம்ப நன்றி தாத்தா. நன்றி தாத்தா.

அட என்னப்பா இதெல்லாம். ஈசன் மட்டும் தான் வாழ்க்கை, ஈசன் மட்டும் தான் என்னோட எல்லாமும்னு இருந்த எனக்கு, அந்த எப்பெருமானே குடுத்த வரம் தான் உங்களுக்கு துணையா இருக்குறது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவ என்ன அனுப்பி வச்ச அந்த ஆண்டவனுக்கு தான் நீயும் நானும் நன்றி சொல்லணும்.

ம்ம். சரி வா தனா காதுக்கு என்னன்னு பார்க்கலாம்.காலைல சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டும் வந்துடலாம் வா.

அவனை அரவணைத்து கூட்டி வர, மாடிப்படி வராண்டாவில் இதுவரை நடந்த அனைத்தையும் பார்த்து உறைந்து போய் நின்றிருந்தாள் சுமதி.

சுமதியின் உறைநிலையே கூறியது அவள் அந்த உருவத்தை பார்த்துவிட்டாள் என. தன் வலியையும் பொருட்படுத்தாமல் சுமதியின் அருகே ஓடியவன், அக்கா அக்கா.. இங்க பாரு. அக்கா....

தாத்தா இங்க பாருங்க அக்கா அதை பார்த்திட்டா போல.. சுயஉணர்வே இல்லாம இருக்கா. ஐயோ ஏதாவது பண்ணுங்க தாத்தா.

தனா நீ கொஞ்சம் பொறுமையா இரு. பதறாத. அக்காவுக்கு ஒன்னும் இல்ல. கீழ சாமி அறைக்கு கூட்டிகிட்டு வா. நான் என்கிட்ட இருக்குற கங்கா தீர்த்தத்தை எடுத்துட்டு வரேன். ம்ம் கூட்டிக்கிட்டு வா.

சுமதியை கீழே கூட்டி வர, சித்தன் கங்கா தீர்த்தத்தை அவளை நோக்கி சிவ மந்திரத்தை உச்சரித்து முகத்தில் அடிக்க, ஒரு வித அதிர்ச்சியோடு நடைமுறைக்கு வந்தாள் சுமதி. சுய உணர்வு பெற்றதும், தான் கண்டது அனைத்தும் நினைவில் வர, அருகிலிருந்த தனாவை நடுக்கத்துடனே அணைத்துக் கொண்டாள்.

தனா உனக்கு ஒன்னும் இல்லையே. அது... அது.. அதை நான் பார்த்தேன் டா... ஏன்... ஏன்... அது இங்க... ஐயோ தனா... வேணாம்... வேணாம்... இங்க இருக்கவே வேணாம்... வாடா தனா உடனே இந்த வீட்டை விட்டு போய்டலாம். புள்ளைங்க எல்லாம் இருக்குடா... வாடா போய்டலாம். வாடா.... என அரற்றி கதறியே விட்டாள்.

சுமதியின் அழுகையை கண்டு தானும் அழுத தனா, அக்கா அழாத அக்கா. என்ன செய்ய எல்லாம் நம்ம தலைவிதி இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகனும். இந்த வீட்டை விட்டு நாம எங்கேயும் போக முடியாதுக்கா. அது.. அது நம்மல போக விடாதுக்கா.

இன்னிக்கி சித்தன் தாத்தா மட்டும் இல்லயினா நானும் செத்திருப்பேன். அது நம்மை சும்மா விடாதுக்கா.....

அவனும் அழுதபடியே சுமதியிடம் சொல்லிவிட்டான். அவனை அதிர்ச்சி பார்வை பார்த்த சுமதி, அப்போ நம்ம வீட்டில நடந்த எல்லாத்துக்கும் காரணம்....

சொல்லு தனா...

ம்ம்.. ஆமா.. எல்லாத்துக்கும் காரணம் அது தான். முதல்ல அப்பா... இப்போ கடைசியா திரு மாமா.

தனா... அவ்வளவு தான் அத்தோடு மயங்கி விழுந்து விட்டாள்.

ஏனெனில் இதுவரை யாரிடமும் கூறிடாத மற்றொரு ரகசியம் அவளிடம் உண்டு. இதுவரை அதை சாதாரணமாக நினைத்திருக்க, அதன் பின்னணி அறிந்ததும் மயங்கி விட்டாள் சுமதி.

மீண்டும் மயக்கம் தெளிய வைத்ததுடன் ஆளுக்கு ஒரு புறமாக சாமி அறையின் முன்னேயே உட்கார்ந்து விட்டனர் மூவரும்.

சுமதிக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.பல்வேறு குழப்பங்கள் அவளுக்கு. தனா பேசிவிட்டு மேலே போக அவன் கூறிச் சென்ற காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் எதேர்சையாக வாசல் புறம் திரும்ப, சித்தன் வேக வேகமாக மேலே ஓடினார். அவரின் பதட்டம் இவளையும் தொற்றிக் கொள்ள, அவரின் பின்னேயே சுமதியும் மேலே ஏறி வந்தாள். மேலே ஏறும் போதே தனாவின் அலறல் கேட்க வேகமாக படியேறி கடைசி படியை தாண்டி வராண்டாவில் ஒரு அடி தான் எடுத்து வைத்தாள், அவளுக்கு நேரே இருந்த அந்த கடைசி அறையில் நடப்பவை அப்படியே காட்சியளிக்க, அவ்வுருவத்தின் கொடூரத்தை பார்த்து அப்படியே அதிர்ந்து உறைந்தவள் தான். அதன் பின் தனாவிற்கு நடந்த எதுவும் அவள் கருத்தில் பதியவே இல்லை.

அப்பா அம்மா உடன்பிறப்புகள் கணவன் என எல்லோரும் இறந்தது மீண்டும் நினைவில் வர, குழப்பமான மனநிலையில் அழுதபடியே அமர்ந்திருந்தாள் சுமதி.

தனாவோ அவனுக்கு நடந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டிருக்க, சித்தன் ஐயா அந்த உருவம் கூறிச் சென்ற வார்த்தையை தான் நினைத்துக் கொண்டிருந்தார்.

விடக் கூடாது. அது சொன்னதை நடக்க விடவேக்கூடாது. என்ன செய்யலாம்.... என்ன செய்யலாம்....

சட்டென்று பொறி தட்ட... தனா உடனே இங்க வா... ம்ம்.. சீக்கிரம் தனா. வா.

சுமதி என்னவென்று பார்க்க... வந்து சொல்லுறோம்மா. நீ இங்கேயே இரு.
என்று தனாவை கூட்டிக் கொண்டு மாடியின் அந்த கடைசி அறைக்கு சென்றார். நாதன் குடுத்த மாலையை ஒரு கையிலும் தனாவை ஒரு கையிலும் பிடித்தபடி சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டே முன்னேறிய சித்தன் அறையின் நடுப்பகுதிக்கு வந்ததும் உச்சஸ்தானியில் மேலும் மேலும் மந்திரத்தை உச்சரிக்க, படாரென்று அந்த உருவம் இருவர் முன்னும் வந்து நின்றது.


அடுத்து நடந்தது என்ன?





விடை தேடி பயணம் தொடரும்.....
Prabhaas......
 
Top