Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

20. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
உன்னில் பிறந்த ஒருவன் மட்டுமே அதற்கான வழியை அடைய முடியும்.

சொல். அவன் இந்த மண்ணை தொடும் வழியை இதன் மூலம் நீயே அவனுக்குச் சொல்.

ஆனால் அது இப்போதே அவன் கைகளுக்கு கிடைக்காது. அது மட்டுமல்ல, உன் வீட்டிற்குள் இப்பொருள் ஒருபோதும் நுழையவே கூடாது. ஏனெனில் இந்த கையேட்டை பாதுகாக்கும் பாக்கியம் உனக்கும் இல்லை, உன் வீட்டிற்கும் இல்லை.

உனக்கு இப்போது பரிட்சியமாய் இருக்கும் சித்தண்ணனின் கைவசம் இதை ஒப்படைத்து, அந்த ஈசன் காலடியில் இதை பாதுகாக்கச் சொல். நீ இறந்து ஆறு திங்கள் கடந்த நிலையில், இதை உன் கடைசி மகனின் கையில் ஒப்படைக்கச் சொல்.

ஐயா...

ஆம்... பல இன்னல்கள் கடந்து அவன் இவ்விடம் வந்தால் மட்டுமே உன் குடும்பத்தின் மீதமுள்ள உயிர்கள் தப்பும். இல்லையேல் உன் குடும்பத்தின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது.

ம்ம்... வருவானா உன் புதல்வன். உன் குடும்பத்தின் உயிர்களைக் காக்க.

ஒரு கணம் கூட யோசிக்க வில்லை நாதன். மறுநிமிடமே கண்டிப்பா வருவான் ஐயா. கண்டிப்பா வருவான்.

ஆனால் அதிலும் ஓர் சிக்கல் இருக்கிறதே நாதா...

ஐயா...

அவனின் பலம் என்னவென்று அவன் அறிந்தால் மட்டுமே இவை அத்தனையும் சாத்தியப்படும். அப்படி இல்லையெனில் இந்த கையேடு கைகளில் கிடைத்தாலும் அதில் பயனில்லை. ம்ம் இப்போதே துவங்கு.. காலவிரயம் செய்து விடாதே. அந்த உருவத்தின் கவனம் உன் மீது திரும்பும் காலம் வெகு தொலைவிலில்லை.

இன்றிலிருந்து மூன்றாம் நாள் ஒரு பயணத்தின் போதே உன் உயிர் உன்னை விட்டு பிரியும். காத்திரு....

அவ்வளவு தான் உனக்கு என்பது போல குமரவேலிடம் திரும்பியவர், அன்னையவளின் வாக்கு கேட்டு இவ்விடம் வந்த உனக்கு இன்னொன்றும் காத்திருக்கிறது.

மீண்டும் அவளே உனக்கு ஆணையிடுவாள். காத்திருந்து அறிந்து கொள்.

சொன்ன மறுநிமிடமே அவ்விடம் விட்டு மறைந்து விட்டார் அவர்.

அத்தனையையும் குறிப்பாக அங்கேயே எழுதி முடித்து, குமரவேலனிற்கு பல நன்றிகளைத் தெரிவித்து, அங்கிருந்து கிளம்பி, காஞ்சிபுரம் சென்று சித்தனிடம் கையேட்டை கொடுத்து விட்டு வெளிவரும் வேலை தான் அந்த உருவத்தின் கவனம் இவரிடம் விழுந்தது.

அறிந்து கொண்டது. நாதன் சித்தனிடம் உண்மையை கூறிய விடயத்தை முழுதும் அறிந்து கொண்டது. ஆனால் அவரது நாகர் மலை பயணத்தை பற்றி அந்த உருவத்தால் அறிய முடியவில்லை.

அவர் வீடு வந்து சேர்ந்ததிலிருந்து அறைக்கு வரும் வரை காத்திருந்த உருவம், பின் அவர் வராமல் போக, உட்சபட்ச கோபத்தில் அங்கும் இங்கும் தாவித் திரிந்தது.

இதோ, இன்று தான் அந்த பெரியவர் சொன்ன மூன்றாவது நாள். என்னோட உயிர் பிரிய போகும் நாள். இனி என்ன நடந்தாலும் அது அந்த ஆண்டவன் பொறுப்பு என நாதன் வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருக்க,

என்னத்தங்க சுத்தி சுத்தி பாக்குறீங்க.

அது ஒன்னுமில்ல மகாம்மா சும்மா தான். நீ எங்க கிளம்பிட்ட.

நல்ல கதை போங்க. இன்னிக்கி விசேஷமான பிரதோஷம்னு நீங்க தானே கோவில்ல பூஜைக்கு சொல்லியிருந்தீங்க.

அட ஆமா மகா மறந்துட்டேன். வா போகலாம்.

உங்களுக்கு என்ன ஆச்சுன்னு ஒன்னும் புரியல போங்க.

ஹா.. ஹா.. அதெல்லாம் ஒன்னும் ஆகல. வா போகலாம்.

இருவரும் காரில் ஏறி அமர, கோபத்துடனே பின் புறம் அந்த உருவமும் தொத்திக் கொண்டது.

மகா.. எங்கமா தனா வீட்டுலயே இல்ல. எங்க போனான்.

அவனுக்கு ஏதோ வேலை இருக்குதாம். அதான் நம்ம கடைக்கு மூத்தவன் கூட்டிகிட்டு போயிருக்கான். சாயங்காலம் ஆகிப் போச்சு, பாவம் புள்ள சாப்பிட்டானா என்னன்னு கூட தெரியல.

அதெல்லாம் அவன் சாப்பிட்டிருப்பான். நீ உன் உடம்ப பாத்துக்கோ மகாம்மா. நீயும் ரொம்ப வருத்தத்துல இருக்குற மாதிரியே இருக்கு. என்னன்னு என்கிட்ட கூட சொல்லக்கூடாதா.

அது வந்து ... அது.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.

ஒன்னும் இல்ல தானே.

ஆமா ஆமா... இறங்குங்க கோயில் வந்துருச்சு.

தரிசனம், பூஜை என அனைத்தும் முடிந்து மீண்டும் பயணத்தை துவங்க,

பின்னே திரும்பி அந்த உருவத்தை பார்த்த நாதன், புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கோ மகா. நான் ஒரு..............

அவ்வளவு தான் கார் குட்டிகரணம் அடித்து சாலையின் அந்த புறம் போய் விழுந்தது. நாதனின் குரல்வலையை அழுத்திய அந்த உருவம்... மீறி விட்டாய் நாதா... உன் வார்த்தையை மீறி விட்டாய். இனியும் நீ உயிருடன் இருப்பது சரியல்ல... போ...

மாய்ந்து போ... உனக்கு துணையாய் வருவார்கள் அத்தனை பேரும்... ரிரரி... ரிர்ரீ....

என கோபமாக கத்திய உருவம், திரும்பி மகா அம்மாவின் உடலை தொட நினைக்க,

முடியவில்லை. அவரது அருகில் கூட செல்ல முடியவில்லை.

அதே நேரம் அருகிலுள்ளவர்கள் உதவி செய்ய, அதீத காயங்களுடன் மகா அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயங்களின் ரணம் காரணமாக மயக்கத்திலேயே இருந்த மகா அம்மா செய்த அந்த கடைசி செயல் தான் தனாவின் இப்போதைய பலத்திற்கு காரணம்.

அவ்வளவு தான் மகா அம்மாவின் உயிரும் பிரிந்தது.

பிள்ளைகள் வந்து சேரும் போது தந்தையும் தாயும் உயிரற்ற உடல்களாகத் தான் கிடந்தனர்.

அகிலன் முகிலன் தன்னைத்தானே தேற்றிக் கொண்டாலும் தனாவால் முடியவில்லை. சுமதியும் அவனும் அழுதது அங்கிருந்த அனைவரையுமே கலங்க வைத்தது.

............

கையேட்டில் இருந்த மொத்தத்தையும் படித்து விட்டு அங்கேயே பிரம்மை பிடித்தது போல் அமர்ந்து விட்டான் கீர்த்தனன்.

வேலன் தான் ஆச்சரியப் பட்டு போனார். ஏனென்றால் வேலன் நண்பன் கூறிய இடமும் அதே நாகர் மலை தான்.

அவர் ஏற்கனவே அங்கு சென்று வந்தவர் ஆதலால் அதை குறிப்பிட்டு ஏதேனும் வழி கிடைக்கும் என உறுதி கூறியிருந்தார். அது மட்டுமல்லாது அங்கு தனக்கு கிடைத்த ருத்ராட்சத்தினையும் அவனுக்கு காவலுக்கு கொடுத்திருந்தார்.

எங்கு தான் வழி கிடைக்கும் என தனா இந்த ஆறு மாதமும் போகாத இடமில்லை. செய்யாத செயலும் இல்லை. பணத்திற்கு ஆசைப்பட்டு பலர் இல்லாத பரிகாரங்களையும் செய்யச் சொல்ல, இறுதியில் கிடைத்தது தான் வேலன் நண்பனின் உதவி. அவர் மூலம் இவர்கள் நாகர்மலை பற்றி அறிந்திருக்க, நாதனும் அதையே குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்த பெரியவர் சொன்னது போல தனா தன் பலனை அறிந்து விட்டானா????


விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top