Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

14. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
நண்பர்களே!

சாரி.. சாரி.. நேத்திக்கு ராட்சசி ஜோ என்னை டிவி முன்னாடி பிடிச்சி வெச்சுக்கிட்டாங்க.. :love::love: எழுந்துக்கவே விடல.. ராட்சசியும் கவணும் மாத்தி மாத்தி பார்த்துட்டு இருந்துட்டேன்.. அப்புறம்தான் அப்டேட் குடுக்கலன்னு ஞாபகமே வந்துச்சு.. ?? ஜாரி நண்பர்களே.. இதோ.. 14வது எபி.. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. :love:




14. இவன் வசம் வாராயோ!




"ஒரு ஊர்ல ஒரு டாக்டர் இருந்தாரு.. அவரு தன் கிட்ட வேலை பண்ணின நர்சை அடைய நெனச்சாரு..

அதுக்காக அந்த நர்ஸை கல்யாணம் செய்துக்க பொய்யா ஏற்பாடு செய்தாரு.. அந்த பொண்ணோட அப்பா அம்மா கிட்ட நயமா பேசி நம்ப வெச்சி கல்யாண பத்திரிகை வரைக்கும் அடிச்சிட்டாரு.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கற நிலையில நர்சோட சரசமாடி அவ கூட தப்பு பண்ணிட்டு கல்யாணத்தன்னிக்கு வராம ஏமாத்திட்டு ஓடிட்டாரு..

அந்த டாக்டரோட நயவஞ்சகத்த கொஞ்சம் லேட்டாதான் அந்த நர்ஸ் புரிஞ்சிகிட்டாங்க.. ஆனா அதுக்குள்ள அவளோட வயித்தில குழந்தை உருவாகிடுச்சு..

அந்த நர்ஸோட பெத்தவங்க என்ன செய்யறதுன்னு புரியாம முழி பிதுங்கி நின்னாங்க..

அதப் பாத்த அந்த நர்ஸோட அக்கா புருஷன், அந்த நர்ஸை கெட்ட பெயர்லேர்ந்து காப்பாத்த, அவளை ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு.. ஆனா இது பிடிக்காத அந்த அக்காகாரி, தங்கச்சிய ரொம்ப கொடுமை செய்ய ஆரம்பிச்சா..

நர்ஸ் எவ்வளவோ சொன்னா, அக்கா.. உன் வாழ்க்கைய கெடுக்க நா வரல.. என் வாழ்க்கைய காப்பாத்திக்கதான் இங்க இருக்கேன்.. இந்த குழந்தை பிறக்கற வரைதான் இங்க இருப்பேன்.. அப்றம் இங்கேந்து போய்டுவேன்.. அத்தானும் இத நெனச்சிதான் என் கழுத்தில தாலி கட்னாரு.. வேற எதுமில்லக்கான்னு..

ஆனா அந்த அக்கா இத ஒத்துக்கல.. தங்கச்சியையும் தன் புருஷனையும் எப்பவும் திட்டிட்டே இருக்க ஆரம்பிச்சா.. கூடவே அவ பெத்த புள்ளையையும் தன் புருஷன் கிட்டேந்து ஒதுக்கி வெக்க ஆரம்பிச்சா.. அந்த பிஞ்சு நெஞ்சில தன் அப்பா கெட்டவருன்னு விஷத்தையும் விதைச்சிட்டா.. அந்த பையனும் தன் அப்பாவ வெறுக்க ஆரம்பிச்சான்.

ஏற்கனவே தன் நிலைய நெனச்சு நொந்து போயிருக்கற அந்த நர்ஸுக்கு தன் அக்காவோட இந்த நடவடிக்கைகளால ரொம்ப மனவுளைச்சல் ஏற்பட்டுச்சு.. எப்டியோ பல்லக் கடிச்சிகிட்டு அந்த கர்ப்ப காலத்த கழிச்சி, பிரசவத்தில ஒரு பெண் குழந்தைய பெத்து போட்டுட்டு போய் சேர்ந்துட்டா..

அந்த பெண் குழந்தைய எப்டியாவது அநாதை ஆஸ்ரமத்தில சேர்த்திடணும்னு அந்த அக்கா முயற்சி செய்ய, அவ புருஷன், அத தன் குழந்தையா வளர்க்க ஆரம்பிச்சாரு..

இந்த குழந்தை அநாதையா வளர்ந்துடக் கூடாதுன்னுதான் உன் தங்கச்சி கழுத்தில நா தாலி கட்டினேன்.. இப்ப அது சட்டப்படி என் குழந்தை.. இதுக்கு அப்பா நாந்தான்.. அப்டீன்னு சொல்லி அவரு அந்த குழந்தை மேல பாசத்த கொட்டி வளர்த்தாரு..

இது அந்த அக்காவுக்கு பிடிக்கல.. அத விட அவரு பெத்த பிள்ளைக்கு சுத்தமா பிடிக்கல..

ஊர் உலகத்துக்கு அந்த குழந்தை ஒழுக்கமா பிறந்த குழந்தைன்னு ஒரு பிம்பம் உருவாகிடுச்சு.. ஆனா அந்த அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து அந்த குழந்தைய கொடுமை செய்ய ஆரம்பிச்சாங்க..

ஆனா அவங்க பண்ற எல்லா கொடுமைலேர்ந்தும் அந்த குழந்தைய அந்த அப்பா பாதுகாத்தாரு.. அவங்களுக்கும் சேர்த்து வெச்சி இவரு பாசத்தை கொட்டினாரு..

அந்த குழந்தையும் அம்மா, அண்ணன் ரெண்டு பேரும் தன் மேல வெறுப்பா இருக்காங்க அப்டீங்கறதே புரியாம அப்பாவோட அன்பில நல்லபடியா வளர்ந்து வந்தா.. ஆனா அவ சந்தோஷம் அதிக நாள் நீடிக்கல..

அவ பத்தாவது படிக்கறப்பதான் அவ பெண்மை பூத்தது.. புத்தம் புதுசா தாவணி போட்டு நின்ன தன் மகளை அந்த அப்பா அன்போடவும் ஆசையோடவும் உச்சி முகர்ந்தத பார்த்த அந்த அம்மாவும் பிள்ளையும் அந்த அப்பாவையும் மகளையும் சேர்த்து வெச்சி தப்பா பேச, அதுல அதிர்ச்சியான அந்த அப்பா அப்டியே நெஞ்ச பிடிச்சிட்டு விழுந்தாரு.. அப்பவே அவரு உயிர் போயிடுச்சு..

அதனால இன்னும் அதிக கோபத்துக்கு ஆளான அந்த அம்மாவும் பிள்ளையும் அந்த பொண்ண இன்னும் அதிகமா கொடுமை செய்ய ஆரம்பிச்சாங்க..

அப்பதான் அந்தப் பொண்ணுக்கு தன்னைப் பத்தியும் தன்னைப் பெத்த அம்மா பத்தியும் உண்மை தெரிய வந்துச்சு..

இதான் தன் தலைவிதின்னு தன்னை நொந்துகிட்டு அவ அந்த வீட்ல நடைபிணமா வாழ ஆரம்பிச்சா..

அவளுக்கு ஒரு நல்ல தோழி ஒருத்தி கிடைச்சா.. அந்த தோழி மட்டும்தான் அப்போதைக்கு அவளோட ஒரே ஆறுதல்..

அவ கல்யாண வயசு வந்ததும், ஒருத்தன் அவள பெண் கேட்டு வந்தான்.. எந்த ஜென்மத்தில பண்ணின புண்ணியமோ.. இந்த நரகத்திலிருந்து விமோசனம்னு அவ தோழியும் அவள சுத்தியிருக்கறவங்களும் அவ கிட்ட சொன்னாங்க.. அவளும் அத நம்பி அந்தாள கட்டிகிட்டு போனா..

ஆனா அங்க போனப்றம்தான் தெரிஞ்சது.. வாணலி கிட்ட தப்பிச்சு அடுப்பிலயே விழுந்திருக்கான்னு..

அந்தாளு அவ போட்டுகிட்டு வந்த நகைய ஒண்ணொண்ணா அவ கிட்டேந்து பிடிங்கிட்டு போக ஆரம்பிச்சான்.. முதல்ல அத பெரிசா எடுத்துக்காத அந்த பொண்ணு ஒரு நாள் அவன் கிட்ட ஏன்னு கேட்கப் போக, அவன் அவளை முதல் முறையா அடிச்சான்.. சரி.. புருஷன் ஏதோ பெரிய பணப்பிரச்சனையில இருக்கான் போலிருக்கு.. நாமதானே அவனுக்கு சப்போர்ட் செய்யணும்னு இவளும் மனச தேத்திகிட்டா..

ஆனா அவ அம்மாவும் அண்ணனும் என்னிக்கு அவளுக்கு நல்லது செய்தாங்க.. இன்னிக்கு செய்ய? அவளுக்கு கல்யாணத்துக்கு அவங்க போட்ட நகை பூராவும் கவரிங் நகை.. இத கண்டுபிடிச்ச அந்த புருஷன்காரன் அவளை அடிச்சி கொடுமை பண்ணினான்..

அக்கம் பக்கத்தில இருந்தவங்கல்லாம் அவளுக்காக பேசி அவங்கள சமாதானம் செஞ்சி வெச்சாங்க..

சரி.. இனிமே எல்லாம் நல்லபடியா இருக்கும் நம்பி அந்தப் பொண்ணு கொஞ்சம் சமாதானப்படுத்திகிட்டா.. ஆனா இனிமேற்பட்டு இவளால எந்த யூசும் இல்லன்னு நெனச்ச அவ புருஷன் இவள அம்போன்னு விட்டுட்டு ஓடினான்..

இப்ப அந்த பொண்ணு திரும்பவும் அவ அம்மா அண்ணனோட போய் சேர வேண்டி வந்துச்சு..

இதுக்கு நடுல இவளோட தோழி இவ அண்ணனைக் கல்யாணம் செய்துகிட்டு இவளுக்கு அண்ணியா வந்திடறா..

தன் தலவிதிய நொந்துகிட்டு அங்க போனா.. அவ வயித்தில கரு.. அவங்கம்மா மாதிரியே அவளும் இப்ப ஒரு குழந்தைய சுமக்கறா.. இத எப்டியாவது கலைச்சிடணும்னு அவளோட அம்மாவும் அண்ணனும் முயற்சி செய்யறாங்க..

அப்பதான் அவ முடிவு செய்தா.. தாந்தான் அம்மா பாசமில்லாம வளர்ந்து கஷ்டப்பட்டோம்.. தன் குழந்தை அந்த மாதிரி கஷ்டப்படக்கூடாதுன்னு.. தன்னை மகளா ஏத்துகிட்ட அந்த தந்தைக்கு தான் செய்யற நன்றி இதுதான்னு அவ நினைச்சா.. அந்த வீட்லேர்ந்து வெளியேற முயற்சி செய்தா.. ஆனா அவளால முடியல.. அப்ப அவளை அங்கேந்து காப்பாத்தி வெளிய விடறா அவளோட தோழி கம் அண்ணி..

இப்ப பல பிரச்சனைகளுக்கு பிறகு அவளும் அவ குழந்தையும் வாழ்க்கையில தலை நிமிர்ந்து வாழ ஒரு நல்ல குடும்பம் அவளுக்கு உறுதுணையா நிக்கறாங்க..

அந்த பொண்ணு நாந்தான்.. அன்னிக்கு ஒரு கல்யாணப் பத்திரிகை பார்த்தீங்கல்ல.. அந்த மாப்பிள்ளை ராம்மோகன்தான்.. அந்த கேடுகெட்ட டாக்டர்.. அந்த கல்யாணப் பொண்ணு குணசுந்தரி.. அந்த டாக்டரால வஞ்சிக்கப்பட்ட அந்த பாவப்பட்ட நர்ஸ்.. என்னோட அம்மா..

இப்ப வந்து இங்க சண்டை போட்டுட்டு போன ராஜாத்தி.. எங்கம்மாவோட கூடப்பிறந்த அக்கா ராஜசுந்தரி.. அவங்களோட பையன், தங்கைன்னு கூட பாக்காம என்கிட்ட தவறா நடந்துக்க நெனச்ச என் அண்ணன், நரேன்.

என்னை தன் மகளா ஏத்துகிட்டு என் மேல பாசத்தை கொட்டி வளர்த்து தன்னோட முதலெழுத்தை எனக்கு இனிஷியலா தந்த என் பெரியப்பா கம் அப்பா மனோகர்.. இப்ப வரைக்கும் நான் எம். நிரஞ்சனான்னு தலை நிமிர்ந்து சொல்ல முடியுதுன்னா, அது அவரோட அன்புனால மட்டும்தான்..

இதான் என்னோட வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.." என்று கண்ணீருடனும் வேதனையுடனும் சொல்லி முடித்தாள் நிரஞ்சனா.

"என்னைப் பத்தி எதுவும் சொல்லாம மறைச்சிட்டேன்னு நாளப் பின்ன யாரும் சொல்லிடக் கூடாதுன்னுதான் இத உங்க எல்லார் கிட்டயும் சொன்னேன். என்னோட ஒரே ஆசை, என் குழந்தைய எந்த காலத்திலயும் யாருக்காகவும் விட்டுத் தர மாட்டேன். என் குழந்தைய நாந்தான் வளர்ப்பேன்.. இதுக்கு எந்த காலத்திலயும் நீங்க மறுப்பு தெரிவிக்க மாட்டேன்னு எனக்கு உத்தரவாதம் குடுத்தா இவர கல்யாணம் பண்ணிக்க நா ஒத்துக்கறேன்!" என்று சொல்லிவிட்டு நிரஞ்சனா எல்லாரையும் ஒரு முறை பார்த்தாள்.

தமிழ் ஏதோ யோசனையுடன் நின்றிருக்க, கயலும் முகிலும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ளத் தொடங்க, பெரியவர்கள் நால்வரும் தங்களுக்குள் கூடிப் பேசத் தொடங்கினர்.

நிரஞ்சனா எல்லாருடைய முகத்திலும் தோன்றிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பார்த்துவிட்டு, விரக்தியுடன் புன்னகைத்துக் கொண்டாள்.

"என்ன மாதிரி ஒரு பொண்ண யாருக்குமே கல்யாணம் செய்துக்க பிடிக்காது. இவ்ளோ தூரம் என்ன ஆதரிச்ச உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.

இனிமேல் நான் இங்க இருக்கறத நீங்க விரும்ப மாட்டீங்கன்னு தெரியும். கொஞ்ச நாள் பொறுத்துக்கங்க.. நானே இங்கேர்ந்து போயிடறேன்.. இவ்ளோ நாள் உங்களுக்கெல்லாம் தொந்திரவா இருந்ததுக்காக என்ன மன்னிச்சிடுங்க.." என்று தன் கை குவித்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகரத் திரும்பியவளை ஈஸ்வர பாண்டியின் குரல் நிறுத்தியது.

"கொஞ்சம் நில்லுமா!"





அவர் என்ன சொல்லப் போகிறார்.. அடுத்த அத்தியாயத்தில்..



- தொடரும்....
 
Last edited:
நேத்து எப்பியையும் போடாம அதுக்கும்வேற ரீசன் சொல்றீங்க பாருங்க...உங்களை??????

இவ்ளோ சின்ன எப்பியா இருக்கு???????
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
Top