கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை எங்களுக்கும் சுவாசக்காற்றாய் இருந்தது உங்கள் எழுத்து நடை கோம்ஸ்மா.
அவ்யுதகண்ணன் :
மனிதனாக பிறந்தால் மனிதத்துடன் வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் மாயக்கண்ணன் அவ்யுதகண்ணன். காதல் மிக அழகான பொக்கிஷம் அந்த பொக்கிஷமே கண்ணனின் மீது பொறாமை கொள்ளும் அளவிற்கு இருந்தது கண்ணனின் காதல், ஆம் இது காதல் அல்ல அதற்கும் மேல் என்று படிக்கும் ஒவ்வொருவரையும் பிரம்மிக்க வைக்கும் அவ்யுதகண்ணன் காதல். வாழ்க கண்ணா உன்னுடைய உயிர் காதல்.
அம்ரிதா:
உண்மையில் மிகவும் புண்ணியம் செய்தவள். கடந்த காலம் புயலில் சிக்கிய மலர் கொடியாய் துவண்டு போக செய்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து பெண்களுக்கு உதாரணமாக இருக்கின்றாய். இறைவன் அருளால் உன் மீது உயிர் காதல் சுமந்து வாழ்ந்து வந்த கண்ணனிடமே உனக்கே தெரியாமல் சேர்ந்து உன்னுடைய பிறவி பலனை அடைந்துவிட்டாய். கண்ணனின் ராதையாகி அவனின் சுவாசக் காற்றை மீட்டுக் கொடுத்து விட்டாய்.
கண்ணன் -ராதா
உண்மையான காதலின் முன் தெய்வமும் தோற்றுப் போகும் என்று தான் சொல்ல வேண்டும்! ஆம் இவர்கள் வாழ்வில் விதியும் தோற்றுவிட்டது எவ்வளவு வலிகள் இருவர் மனதிலும். இவர்கள் வாழ்வில் விதி ஆடிய பேயாட்டம் மனதை ரணமாக்கியது. விதியையும் மீறிய சக்திதான் இவர்களை வாழ்வில் ஒன்றிணைத்து காதல் கடலில் எல்லையில்லா உயிர் நேசத்துடன் வாழவைத்து கொண்டிருக்கிறது, அந்த சக்தி மாசற்ற கண்ணனின் காதல்தான்.
வாழ்க வளமுடன் இதே உயிர் காதலுடன்.
தேவகி:
உங்களைப் போன்ற தாய் அனைவருக்கும் கிடைத்தால் உலகத்தில் பாவ செயல் செய்ய எந்த ஒரு ஆண்மகனுக்கும் மனம் வராது, கண்ணனை எவ்வளவு மேன்மையாகவும், கனிவுடன் வளர்த்து அனைத்து விதத்திலும் கண்ணனுக்கு பக்க பலமாய் இருந்து எங்கள் மனதிலும் தெய்வத்தாயாய் உயர்ந்து நிற்கிறீர்கள்.
குருநாதன்:
ஒரு தந்தையாய் அம்ரிதாவின் சுக துக்கம் என அனைத்திலும் உடனிருந்து மகளை அரவணைத்து போற்றி வளர்த்த மாமனிதர். மகள் வாழ்வில் நடந்த அநீதியால் துடிதுடித்து மீள முடியாத துயரை அனுபவித்தாலும் மகளுக்கு பக்க பலமாக இருந்து அவளை பாதுகாக்க எவ்வளவு போராடி இருக்கிறார் என்பதை நினைக்கவே கலங்குகிறது. குருநாதன் ஐயாவின் வலிகளுக்கும், துயரங்களுக்கும் அருமருந்தாய் கண்ணன் மருமகனாய்
துயர் துடைத்து அவருக்கு மோட்சம் வழங்கினான்.
டாலி (ஆதினி ):
கண்ணனின் மகளாய் வளர்வது மட்டுமல்ல கண்ணனின் அனைத்து குணாதிசயங்களையும் பிரதிபலிக்கும் முகம் காட்டும் கண்ணாடியாய் நல்லா ஆரோக்கியமான எண்ணங்களையும், செயல்களையும் செய்து அந்த தாயுமானவனின் தாயாய் இருக்கும் தேவதை இவள்.
ஆது: கண்ணனின் காதலுக்கு கடவுள் அளித்த சிறப்பு பரிசு.
நினைவு பெட்டகம்:
கண்ணனின் நினைவை சுமந்த பெட்டகம்.
கண்ணனின் காதலை தாங்கி நின்ற பெட்டகம்.
கண்ணனின் உயிர் வலியை கனமாய் உள்வாங்கிய பெட்டகம்.
வாசகர் நெஞ்சங்களை நெகிழ வைத்து என்றும் மறக்க இயலாத ஒரு காவிய காதலை எங்கள் மனம் எனும் ரகசிய பெட்டகத்தில் மறையாமல் வாசம் செய்ய வைக்கும் பெட்டகம்.
நினைவே சுவாசக்காற்றாய் மிகவும் நெகிழ வைத்த கதை என்றும் சொல்லலாம்.
இந்த சமுதாயத்தில் பெண் பிள்ளைகள் எவ்வளவு ஜாக்கிரதையாகவும் அதே சமயம் பிரச்சனையில் சிக்கியிருந்தால் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் மீண்டு வர வேண்டும் போன்ற விழிப்புணர்வு கருத்துக்கள் கதையின் வாயிலாக அறிய முடிந்தது.
கதையை சுவாசிக்க(வாசிக்க) சுவாசிக்க(வாசிக்க) மனம் நிறைந்தது.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மிகவும் அழகான காதல் கதை.
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கோம்ஸ்மா .
Last edited: