Hi writer ji,
கதை நல்லா கொண்டு போறீங்க. பிரச்சனைகளை காட்டாம அதை சரி செய்வதை நோக்கி நகர்வது நன்றாக இருக்கிறது. இது போல ஒரு கதைக் கருவை எடுத்த உங்கள் தைரியத்திற்கும் அதை சரியான முறையில் எழுதும் உங்கள் புரிந்துணர்வுக்கும் பெரிய சபாஷ்.
இதுவரைக்கும் கூர்மையான கத்தி மேல பேலன்ஸ் பண்ணி ரொம்ப அழகா கடந்துட்டீங்க, இனியும் எப்படி இருக்கும்னு படிக்க ஆவலா காத்திருக்கிறேன்.
ஷ்யாம் பார்த்து பாவமாவும் பரிதாபமாவும் இருந்தது, இதை அவன் கையாளும் விதம் அவன் மேல பெரிய மரியாதை கொடுக்குது. நல்ல முடிவுதான் அப்படினு முன்னாடியே நீங்க கொடுத்த உத்திரவாதத்தை நம்பி படிக்கிறேன்.
கதாபாத்திரங்கள் அதிகமா ஆங்கிலத்துலேயே பேசிக்கிறது போல இருக்கு, கொஞ்சம் அதை குறைக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
நீங்க யாருன்னு எந்த அனுமானமும் இல்லை, ஆனா புது எழுத்தாளர் இல்லைனு மட்டும் தெரியுது, எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துகள் ஆசிரியரே...
அன்புடன்
ரேணுகா முத்துக்குமார்.