Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 6

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 6
அத்தான் என்ன சொல்ற நீ! நான் உன் காதலியா நான் எப்போ உன்ன லவ் பண்றேனு சொன்ன என்று கத்தினாள். "ஏன் யமுனா நான் டெல்லி கிளம்புறதுக்கு முன்னாடியே உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன் ஆனால் நீ என் காதல ஏத்துக்கல அதுக்கு அப்புறம் என்கிட்ட நல்லா தான பேசுற அதனால உன் மனசுலயும் நான் இருக்கனு நினைச்சேன். நம்ம முறை பசங்க தான அப்போ என்ன கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டான். உன்கிட்ட பேசுறதே வேஸ்ட் என்று கிளம்பினாள்.

"யமுனா நீ தான் என் மனைவி அதுல மாற்றம் இல்லை" என்று அவள் செல்லும் போது கத்திக்கொண்டிருந்த திவாகரை தூரத்தில் இருந்து தன்னுடைய காரில் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யதேவ். யமுனாவைச் சென்னையில் பார்த்ததிலிருந்தை அவளை கண்காணித்துக் கொண்டிருந்தான் சத்யா அந்த கான்பரன்ஸிற்கே யமுனா வருவது தெரிந்து தான் வந்தான் அவளிடம் திவாகரைப் பற்றிப் பேச வேண்டும் என்று திவ்யாவை வைத்து அத்தகைய சூழலை உருவாக்கினான்.

இப்போது திவாகர் இப்படி சொன்னவுடன் இவனுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது அங்கு என் தங்கையோடு நிச்சயத்தை நிறுத்தி விட்டு இங்கு இவளுடன் காதலா?? என்று கர்ஜித்து காரை வேகமாக எடுத்து யமுனாவினைத் தொடர்ந்தான்.

யமுனா திவ்யாவைக் காண மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு திவ்யாவின் அறையில் பக்கத்தில் ஒரு ஆண் இருப்பதைக் கண்டாள்."யமூ வந்துட்டியா இதான் என் குணா" என்று குணதேவை அறிமுகப்படுத்தினாள். "ஓ நீங்க தான் அந்த குணாவா ஏன் சார் காதலிச்சு கற்பம் ஆக்கிட்டு எப்படி உங்களால இப்படிலாம் இருக்க முடியுது உங்க அண்ணன் என்னனா இவ கிட்ட செட்டில் பண்ண ரேட் பேசிர்காரு.எல்லாம் இவ தப்பு ஆம்பளைங்கல நம்புறது எவ்வளோ பெரிய தப்புனு இவளுக்கு தெரியல" என்று திட்டினாள் யமுனா.

" சிஸ்டர் ப்ளிஸ் நான் சொல்றத முதல்ல கேட்டுட்டு பேசுங்க. என் அண்ணா அப்படி பேசுனதுக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என்னால திவ்யா இல்லாம இருக்க முடியாது என் அண்ணா எங்க காதல் விஷயம் தெரிஞ்ச உடனே என்ன லாக் பண்ணிட்டாரு என்ன சிங்கப்பூர் அனுப்பினாரு வேலை விஷயத்திற்காக திவ்யாகிட்ட பேசகூடாதுனு சொல்லிட்டாரு நான் அண்ணாவை மதிச்சு பேசாம இருந்த நேத்து தான் இந்தியா வந்தேன் அப்பறம் இவ கிட்ட பேசலாம்னு நினைச்சு கால் பண்ணேன்.அவர் இப்படி பேசுவாருனு எனக்கு தெரியும் ஆனா இவ இப்படி முடிவு பண்ணுவானு நான் எதிர்பார்க்கலை. என் மேல இவளுக்கு இவ்வளவு தான் நம்பிக்கை" என்று சொல்லி முடிக்கும் போதே அவன் கண்களில் கண்ணீர் வந்தது.

" சேரி விடுங்க குணா அதான் இப்போ எல்லாம் செரியாயிடிச்சுல நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள்." இல்ல திவி வீட்ல இப்போ தங்கச்சிக்கு நிச்சயம் வச்சிருக்கோம் மாப்பிள்ளை வேற ஏதோ பிரச்சனை பண்றாரு அதனால இப்பொதைக்கு நம்ம கல்யாணம் பத்தி பேச முடியாது அண்ணன சம்மதிக்க வெக்குறது ரொம்ப கஷ்டம். அவர பொறுத்த வரைக்கும் பொண்ணுங்க மேல ஒரு நல்ல அபிப்ராயம் இல்ல" என்று கூறினான்."குணா சார் உங்க அண்ணனுக்கு அம்மா தங்கச்சி மனைவி லாம் இருக்கும் அவங்களும் பொண்ணு தான இவர் என்ன ஆகாயத்துல இருந்தா குதிச்சாரு" என்று கேட்டாள்." ஏய் யமு விடுடீ குணாவே பாவம் அவர் வீட்ல இருக்கிற சூழ்நிலை அப்படி ஆனா குணா நம்ம குழந்தை? " என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு அறை வாயிலில் சத்யதேவ் நின்றுக்கொண்டிருந்தான்." பேசாம நீங்க ரேண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க" என்றாள் யமுனா. இதைக்கேட்டு கோபமடைந்து உள்ளே வந்தான் சத்யதேவ்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அடப்பாவி திவாகர்
உங்கம்மாவை மீறி உனக்கு எப்படிடா யமுனாவின் மீது லவ்வு வந்தது?
அப்படியே மாமன் பையன் அத்தை பொண்ணை லவ்வு பண்ணினால் முதலிலேயே சொல்லாமல் இப்போ யமுனாவுக்கு பிரச்சனை வர வைச்சுட்டானே

ஆனாலும் திவ்யா குணாவை ஓடிப் போய் கல்யாணம் பண்ணச் சொல்லும் யமுனாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?
இப்போ இதைக் கேட்டுட்டு சத்யதேவ் என்ன பண்ணப் போறானோ?
 
Top