Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக25-2

Advertisement

TNWContestWriter028

Well-known member
Member
சோர்ந்து போய் அவன் படுக்கையில் விழ,இவனின் பின்னோடு படுக்கையறை வந்த சிவா, ஓரிரு நொடி நிதானித்தாள்,அவனுக்கு தேவை இருந்தால்,இங்கேயே உறங்க சொல்லுவான் ,இன்று அவன் அமைதியாய் இருக்க,விளக்கை அணைத்து விட்டு மகன் அறைக்கு சென்று பிள்ளை பக்கத்தில் படுத்து கொண்டாள்.

இங்கு கண் முடி யோசித்து கொண்டிருந்த ,சர்வாவின் அலைபேசியில் தொடர்ச்சியாக,குறுஞ்செய்தி வந்ததிற்கான சத்தம் வரவும் அசிரத்தையாக அவன் எடுத்து பார்க்க ,

ஏதோ ஒரு அக்கவுண்டில் இருந்து ,பத்து, பத்து லட்சமாக மூன்று முறை ,இவனுக்கு கிரிடிட் ஆகியிருந்தது.சர்வா அலைபேசியை அதிர்சியாக பார்த்தவன்.அந்த அக்கவுண்டை சரிபார்க்க ,அது சேலத்தில் இருக்கும் ஒரு பைனான்ஸ் கம்பெனியின் எண்ணாக இருக்கவும் ,இவனுக்கு டென்ஷன் ஆனது.

இவன் பணம் கேட்டது இவளிடம் மட்டும் தானே!சேலத்தில் இவனின் சித்தப்பாவை தவிர அவனுக்கு யாரையுமே தெரியாது.அங்கிருந்து பணம் வந்திருக்கிறது என்றால், இவள் வேலையாக தானே இருக்க வேண்டும் .

விறு விறு வென எழுந்து மகனின் அறைக்கு சென்று மனைவியை கைபிடித்து இழுத்து வந்திருந்தான்.

சிவாவோ படுத்ததும் உறங்கி இருந்தவள்,உறக்க கலக்கத்தில்."போங்க நீங்க, தூங்கின பின்னாடி எழுப்பாதீங்கண்ணு ,எத்தனை தரம் சொல்லியிருக்கேன்" என்று சிணுங்கி கொண்டே அவனின் பின்னே வர.



"ஏய் ,அதுக்கு உன்னை எழுப்பலடி,எனக்கு யாரையாவது பணம் போட சொன்னியா" அவன் அழுத்தமாய் கேட்க,

"ஹோ !வந்துருச்சா... ஓகேங்க, குட் நைட்." அவள் திரும்பவும் உறங்க செல்ல,

"ம்ம்ச் சிவண்யா,நான் உன்கிட்ட இருக்கறதை தான் கொடுக்க சொன்னேன். பைனான்ஸ் பண்றவன் கிட்ட கடன் வாங்க சொன்னேனா,"காட்டமாய் சர்வா கேட்கவும்.

"நான்.... ஏங்க கடன் வாங்குறேன்,அது என்னோட பணம் தான்,திரும்ப கொடுக்கணும்னு அவசியம் இல்லை. நிம்மதியா போய் தூங்குங்க,"என்று சொல்லியவள் நகர முற்ப்பட ,இவனுக்கு எரிச்சல் ஆனது.





"மொத்தம் முப்பது லட்சம் போட்ருக்க,உன்னோடது பத்து,நான் உனக்கு போட்டது அஞ்சு ,உன்னோட அக்கா அவள் பணத்துல நகை வாங்கிட்டாள்.மீதி பணம் ஏது,"குற்றவாளியை விசாரிப்பது போல அவன் விசாரிக்க,

"ம்ம்ச்" என்று சலித்தவள்,அவன் படுக்கையிலேயே!சம்மணம் இட்டு அமர்ந்து கொண்டு ,

"அது நீங்க நகை வாங்க பத்து கொடுத்தீங்களா,நான் அஞ்சு தான் செலவு பண்ணேன்.முன்னாடி வீட்ல கொடுத்தது ஒரு பத்து ,இது ஒரு பத்து,இன்னொரு பத்து வட்டி காசு"என்று அவனையே ஆழ்ந்து பார்த்தவாறு சொல்ல,

சர்வா வாயின் மேல் கைவைத்து கொண்டான்,"அடியேய் நாட்டுல எவ்ளோ பேரு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தற்கொலை பண்ணிக்குறாங்க,உனக்கு எதுக்குடி இந்த தேவை இல்லாத வேலை."என்று கடிந்து கொள்ளவும்.

சிவன்யா இப்போது கணவனை முறைத்து பார்த்தவள்,"நான் யாரோ அப்பாவிங்களுக்கு எல்லாம் கொடுக்கலை.நம்ம ஊரு தீர்த்தகிரி தாத்தா தெரியுமா,பஞ்சாயத்து தண்ணீர் விடுவாரே!" என்று கேட்கவும்.

லேசாய் நினைவு வந்தது அவனுக்கு,"ம்ம்" என்று தலை அசைக்கவும்.

"முன்னாடி அவங்க வட்டி பிஸினஸ் பண்ணாங்க,இப்போ அவங்க பையன்,தொழில் பண்ற பெரிய ஆளுங்களுக்கு எல்லாம் பைனான்ஸ் பன்றாங்க,"

"அப்படியே சீட்டு நடத்துறாங்க,சின்ன மாமா அவங்க கிட்ட சீட்டு போட்ருக்காரு,பெரிய மாமா கூட முன்னெல்லாம் பாட்டியிருக்கும் போது போடுவாங்க,"

"அவங்க கிட்ட தான் கொடுத்திருக்கேன்,எனக்கு ரெண்டு ரூபாய் வட்டி கொடுத்துட்டு அந்த பக்கம் ,நாலு ரூபாய்க்கு விட்றாரு தெரியுமா........,என்ன பண்ண நாமளே நேரடியா கொடுத்தால்.சின்ன பிள்ளைன்னு ஏமாத்தி நாமம் போட்டுடுவாங்களோன்னு! பயந்து தான் அங்க கொடுத்திருக்கேன்."இவள் சோகமாய் சொல்ல,

'யாரு நீ ,செலவு பண்ணுடீன்னு அனுப்புற பணத்தை எடுத்து,தெளிவா வட்டிக்கு விட்டுட்டு, இவள் சின்ன பிள்ளையாம்,'சர்வாவின் இதழ்களில் கேலி புன்னகை.

"ஏன்? இவங்க உன்னை ஏமாத்திட மாட்டாங்களா,"இவன் கேட்கவும்,"அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க,வருசா வருஷம் வட்டி கொடுத்துடனும்,நான் கேட்கும் பொழுது அசலையும் கொடுத்துடனும்னு,அக்ரீமெண்ட் போட்ருக்கேன்."இவள் சொல்லவும்.

"அந்த வட்டி பணத்தை என்ன பண்ணுவ,"ஆர்வத்தில் சர்வா கேட்க,"அதையும் அவங்க கிட்டயே வட்டிக்கு விட்ருவேன்."இவள் கூலாய் சொல்லவும்,

'என்னை விட இவள் கிட்ட அதிகமா பணம் பொலங்குது போலவே' என நினைத்தவன்."உங்க அக்கா பணம்" என்க,

"அவ பணத்தையும் சேர்த்து தான் கொடுத்திருக்கேன்,அவளோட வட்டிக்காசுல நகை வாங்கிக்கிட்டாள்.அவள் சம்பள பணத்தையும்,நீங்க மாசாமாசம் அனுப்புற பணத்தையும் எங்க பேருலையே!தனி தனியா அஞ்சு லட்சரூபாய் சீட்டு ஒன்னு கட்டுறேன்.அது முடிஞ்சதும் அப்படியே பைனான்சுக்கு கொடுத்துடுவேன்."என்ற தகவலையும் சேர்த்து சொல்ல

'யம்மா கேடிடி, நீ........'என்று தான் பார்த்திருந்தான்,'சம்பாதிக்காமலே இத்தனை செய்கிறாளே!சம்பாதித்தால் இன்னும் என்னவெல்லாம் செய்வாளோ!' என்று தோன்றவும்.

"உன்கிட்ட மொத்தமா எவ்ளோ பணமிருக்கு,"அவன் சாதாரணமாய் கேட்பது போல கேட்க ,சிவா அதற்குள் சுதாரித்து விட்டிருந்தாள்."எவ்ளோ இருந்தால் என்ன,நீங்க கேட்டதால கொடுத்தேன் வச்சி கோங்க,"என்றவள் .

ஒரு கணம் விழி சுருக்கி யோசித்து ,"கொடுக்க முடிஞ்சால், கொடுத்துடுங்க...." என்று விட்டு அப்படியே படுக்கையில் சாய்ந்து விழி மூடிக்கொள்ள,

"எம்மா வட்டிகாரம்மா ,என்கிட்டயும் ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கோங்க,வருசா வருஷம் வட்டி சரியா கொடுத்துட்றேன்,நீங்க கேட்கும் நேரம் அசலையும் கொடுத்துட்றேன்."என்றவன்.தனது பாரம் மொத்தத்தையும் அவளிலேயே போட்டு அவள் மேல் படுத்திருந்தான்.

அத்தனை பாரத்தையும் தங்கி கொண்டு,"நிஜம்மா சொல்றிங்களா ,சரியா கொடுத்துடுவீங்களா,"என்று அவள் மூச்சு வாங்க கேட்டிருக்க,

"ம்ம்ம் கொடுத்துட்றேன்," என்றவனும். அதற்கு மேல் அவளை பேச விடவில்லை.அடுத்து வந்த நேரமெல்லாம் கணவன் மனைவிக்கானதாய் ரகசியமாய் கடந்திருக்க.....

அவன் சொன்னது போலவே காலையில் அக்ரீமெண்ட் பேப்பரை கொண்டு வந்து நீட்டியவள்,"நான் கேட்கலை,நீங்க தான் கொடுக்குறதா சொல்லிருக்கீங்க,கரெக்ட்டா கொடுத்துடனும்." என்று மிரட்டலாய் சொல்ல,

'என்கிட்டயே பணம் வாங்கி,எனக்கே வட்டிக்கு விடுற' என நினைத்தவாறு அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன்."கொடுத்துட்றேன், முதல்ல நைட் நான் கொடுத்ததை திருப்பி கொடுடி," என்று சரசமாக பேசினாலும்,

"இவ்ளோ கறாரா சம்பாதிச்சு, என்னடி பண்ண போற...." என்று கேட்டிருக்க,

"அது நான் ஒரு பிளான் வச்சிருக்கேங்க,"அவள் கண் சிமிட்டி,உதடு சுளித்து சொல்ல,அது எங்கே அவன் மண்டையில் ஏறியது,சிமிட்டிய கண்ணையும்,சுளித்த உதடையும் மேலும் இம்சிக்க தான் தோன்றியது.





இங்கு சங்கர்!பார்கவிக்கு மாப்பிள்ளை தேடி களைத்து போயிருந்தார்.அவருக்கு காரணம் தெரியவில்லை.





ருத்ரன் தேர்தல் பரபரப்பு அடங்கி மெல்ல ஆசுவாசமான நேரம்,உடல் நல குறைவாக இருந்த அவனின் தாத்தா தவறிவிட்டார்.சங்கர் ,சரவணன் இருவருமே குடும்பத்தோடு இங்கு தான் இருந்தனர்.

இங்கேயே இருந்து கொண்டு செல்லாமல் இருக்க முடியாதே!இத்தனைக்கும் பங்காளிகள் வேறு,அதனால் மனைவிகளோடு சென்றனர்.ருத்ரனின் தந்தைக்கு கைகுலுக்கி அமர்ந்த சரவணன்.

ருத்ரனை பார்க்க அவனும் இவரையே தான் அழுத்தமாய் பார்த்திருந்தான்.'இவன் பெண்ணை விடவே மாட்டான்,' என்று புரிந்து போக,'முன்பு தானே எங்களிடம் அனைத்தையும் பிடுங்கி கொண்டு விட்டிர்கள் ,இந்த முறை அது முடியவே முடியாது பெண்ணை உனக்கு கொடுக்கவே மாட்டேண்டா,' என்று சபதம் எடுத்து கொண்டு அமர்ந்திருந்தார்.

அதையும் பார்க்கிறேன் என்ற எண்ணத்தில் அவனும் அவருக்கு சளைக்காமல் முறைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

சவம் எடுக்கும் வரை அங்கே தான் இருந்தனர்,பங்காளி முறைகள் செய்தனர்.ஏன் சதா ,சஞ்சய் கூட பாடையை ஒரு பக்கம் பிடித்திருந்தனர்.சர்வா கார்மென்ஸ் வேலையாக ஜெய்ப்பூர் சென்று இருந்தான்,அதனால் வரவில்லை.

அனைத்தும் முடிந்து வீடு வந்த நேரம் சரவணன்,அண்ணனிடம் அனைத்தையும் சொல்லி விட்டார்,வீட்டு ஆண் பிள்ளைகள். அங்கே தான் இருந்தனர்,அவர்களுக்கும் அப்படி ஒரு கோவம் ,

"நம்ம பெண்ணுக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்திருக்காங்க, என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலை,"என்று கடிந்து கொண்ட சங்கர்.

பார்கவியை அந்த மாதத்தோடு வேலையை விட்டு விட சொல்லி விட்டார்.பாரு மிரண்டு தங்கையை பார்த்தால்,தான் இருப்பதாக அக்காவிற்கு தங்கை தைரியம் சொல்ல ,பார்கவி ஒரு வித தளம்பலான மனநிலையில் இருந்தாள்.

திருப்பூர் சென்ற பிறகும் சங்கர் அதே யோசனையாக இருந்தவர்,பெரிய மகனுக்கு அழைத்து அவன் எப்போது வருகிறான் என்று விசாரித்தார்,அவன் இந்த மாத முடிவில் வருவதாக சொல்லவும்,

நேரில் பேசி கொள்வோம் என்ற எண்ணத்தில் இருந்தவர்.மேலும் சில முடிவுகளை எடுத்திருந்தார்.

பார்கவி வேலையை விட்டதும் இங்கு தங்களின் வீட்டிற்கு அழைத்து கொண்டார்.சர்வாவும் ஜெய்ப்பூரில் இருந்து வந்து சேர்ந்திருந்தான்,வந்ததும் வராததுமாக வீட்டில் இருந்த சித்தப்பன் குடும்பத்தை கண்டு யோசனையானவன்.

தனது வணியை பார்க்க அவளின் முகம் படு சீரியஸாக இருந்தது.இவன் புறம் பார்வையை திருப்பவே இல்லை.பெரிய மாமனையே பார்த்திருந்தாள்.

'இரண்டு நாட்கள் ஊரில் இல்லை என்றாலே!வந்ததும் உத்து உத்து பார்ப்பவள்,இன்று ஒரு மாதம் கழித்து வந்த பிறகும் பார்வையை திருப்பவில்லை, என்றால்.விடயம் அவளின் அக்காவை பற்றி' என்று சரியாக யூகித்தவன்.





சற்று கடுப்போடு ப்ரெசப்பாகி வந்து சஞ்சய் அருகே! அமர,சதாவும் அங்கே தான், பெண்கள் உட்பட இரண்டு குடும்பமும் அங்கே தான் இருந்தது.

சங்கர் தான் தொண்டையை செறுமியபடி ஆரம்பித்தவர்,பெரிய மகனிடம்,ருத்ரன் குடும்பத்தினர் செய்ததையும் ,இன்று வரை வரன் அமையவிடாமல் தடுப்பதையும் கூறியவர் .

"அவனை மீறி வெளியில் மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து வைத்தாலும்.திருமணத்திற்கு பிறகு ,அவன் ஏதேனும் சொல்லி, வருபவன் நம்பி பெண்ணின் வாழ்கை வீணாய் போனால் என்ன செய்வது." என்று விட்டு சிறு இடைவெளி விட்டவர்.



"அதனால் நான் பார்கவிக்கும், சதாக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவெடுத்துருக்கேன்."என்க

சதா அதிர்ந்து போனான்,"அப்பா நான் எப்படி பா ,இதோ இவளை எப்படி பார்த்தேனோ! அப்படி தான் அவளையும் பாக்குறேன்." என்று சிவன்யாவை காட்டி சொல்ல,அக்கா,தங்கை இருவருக்கும் நெஞ்சில் பால் வார்த்த உணர்வு,

சிவண்யா "ஊப்" என்று பெருமூச்சு விட்டு கொள்ள,"முறை பெண்ணை, நீ தங்கையா பார்க்குறன்னு,அந்த ரவுடி பையனுக்கு ,இவளை கட்டி வச்சிடலாமா" என்று நக்கலாய் கேட்டது வேறு யாருமில்லை. சாட்சாத் நம் வேணி தான்.

ஆம், இந்த குடும்பத்தினர் அனைவருமே ருத்ரன் குடும்பத்தை அறவே வெறுத்தனர்.'அங்கே கொடுப்பதற்கு என் வீட்டிலேயே தங்கையோடு சேர்த்து அக்காவும்,இருந்து விட்டு போகட்டும்.' என்ற முடிவிற்கு வந்திருந்தார்.அவர்

"இங்க பாரு அப்பா சொல்றதை கேட்டு பழகு,அப்பா பேச்சை கேட்டு தானே! உங்க அண்ணன் கல்யாணம் பண்ணான்.நல்லா தானே இருக்கான்.நீயும் பண்ணிக்கோ!"என்று அவர் இலகுவாய் சொல்ல

அத்தை பேசுவதை எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பது போல ,சிவா வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள். அவர் பேச, பேச பார்கவி உடல் நடுங்க தங்கையின் கரத்தை இறுக பற்றி கொண்டாள்.

சிவாவும் தனது மற்றொரு கரத்தினால்,அக்காவின் கரத்தினை பற்றி தட்டி கொடுத்தாள் ,சிவாவை பார்த்து கொண்டிருந்த சர்வா, இந்த காட்சியை புருவம் இடுங்க பார்த்திருந்தான்.

வருவாள் ...........

லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் .
 
????
வேணிக்கு வேற வேலை இல்லை.. அடிக்கடி கலர் மாறிட்டே இருப்பாங்க.. எப்பயோ நடந்தத பிடிச்சுக்கிட்டு இன்னும் பொண்ணை கட்டி குடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறது சரியா... ருத்ரன் ரௌடியா ? உங்க பொண்ணுக்காக எத்தனை வருஷம் காத்திருக்கான்.. அவனை விட நல்ல மாப்பிள்ளையை கண்டுபிடிச்சுடுவீங்களா.. ????
 
வாங்க வாங்க வேணி உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன், எப்படி எப்படி உங்க கனகா அண்ணி சொன்னாங்கனு பார்கவியை பார்த்து பயந்து சதாவை அடைக்காத்தவங்க தானே நீங்க சுத்த பச்சோந்தி ????.ருத்ரன் ஒன்னும் காட்டு மிரண்டியோ ரவுடியோ இல்லை காதலுக்காக இன்று வரை பொறுமையாக காத்து நின்று அவளை கரம் பிடிக்க காத்திருக்கிறான்.உங்களை மாதிரி எடுப்பார் கைப்புள்ள இல்லை ??????.

இப்போ இந்த சர்வாவுக்கு வேற சந்தேகம் வந்துடுச்சி இவன் வேற எல்லாம் தெரிந்தால் கதகளி ஆடுவானே ?????????.
 
எஜமான் எனக்கு ஒரு சந்தேகம்.. சதா விட கவி பெரிய பொண்ணு தானே அப்புறம் எப்படி இப்படி.. முன்னாடி அப்படி தானே இருந்த நியாபகம்.. ஆளுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு போகாணும்னு பேசும் போது.. நான் தான் தப்பா சொல்லுறேனா
 
எஜமான் எனக்கு ஒரு சந்தேகம்.. சதா விட கவி பெரிய பொண்ணு தானே அப்புறம் எப்படி இப்படி.. முன்னாடி அப்படி தானே இருந்த நியாபகம்.. ஆளுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு போகாணும்னு பேசும் போது.. நான் தான் தப்பா சொல்லுறேனா
Illainga,sadhavai Vida kavi one year chinna ponnu I think,sivaa sadhaa veetuku varumpothu ,satha first year,kavi 12th
 
Top