அப்போதான் நம்ம சந்தோஷமா ஜாலியா இருக்கலாம். இதையெல்லாம் கேட்ட ஜானகி அம்மாவிற்கு தலைசுற்றல் வந்துவிட்டது. என்னடா இவ்வளவு மோசமா பேசுறாங்க நீ அமைதியா நிக்கிற. அம்மா இவங்களைப் பத்தி எனக்கு முன்னமே தெரியும் நீங்க யாரும் நான் சொன்னத நம்பல. தர்ஷினி பேசுறது தான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன் மற்றபடி நல்ல பொண்ணா இருப்பா நினைச்சேன்.சரிடா இப்போ என்ன பண்றது. கவலைப்படாதீங்க அண்ணனுக்கு இவங்க பிளான் எல்லாம் சொல்லிவிட்டேன். அண்ணா கண்டிப்பா அண்ணிய சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்துடுவாங்க. டேய் உண்மையாலுமே அவன் கல்யாணம் பண்ணிட்டானா.அவன் சொன்னது உண்மைதானா. எனக்கு அப்படிதான் தோணுது அண்ணா வந்தால் தான் தெரியும். எப்படியோ அவன் நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணி இருந்தா சரிதான். எனக்கு எப்பவுமே பசங்க சந்தோசமா இருந்தா போதும். நீ யாரையாவது காதலித்தால் அம்மாகிட்ட முன்னாடியே சொல்லிருடா. ஐயோ அம்மா கண்டிப்பா எதுவுமில்லை இருந்தா உங்க கிட்ட தான் முதல்ல சொல்லுவேன். சரி வாங்க போலாம் ரொம்ப நேரமா நம்மள காணோம் தேடுவாங்க. நீங்க இத யாருகிட்டயும் சொல்லாதீங்க.போடா சொன்னா மட்டும் நம்பிட போறாங்களா. பாசம் அவங்க கண்ணை மறைக்குது. உன் சித்தப்பா கூட ஒருவிதத்தில் நம்பலாம் ஆனால் உங்க அப்பா இவங்க விசயத்துல நமபல நம்ப மாட்டாங்க. பின் அனைவருக்கும் காபி வாங்கி கொண்டு சென்றனர்.அனைவரும் வீட்டிற்கு கிளம்பும்போது தர்ஷினி மாமா நானும் அம்மாவும் பாட்டியை இங்கிருந்து கவனித்துக் கொள்கிறோம். பாட்டிய இப்படி விட்டுட்டு வீட்டுல எங்களால நிம்மதியா இருக்க முடியாது என்றாள் அழுதுகொண்டே. ஆமாண்ணா அவ சொல்றது கரெக்டு தான் நானும் இங்கேயே இருக்கேன். சரிம்மா அப்ப நான் மட்டும் இங்க இருக்கேன். சரி மச்சான் நானும் உங்க கூட இங்கே இருக்கேன் சேகர் மச்சான் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போகட்டும் என்றார் தர்ஷினியின் அப்பா.சரி என்று அனைவரும் கிளம்பினர். அப்போது ஜானகி என்ன சாய் இப்படி பண்றாங்க பேசிய பாட்டிய சம்மதிக்க வச்சுடுவாங்க என்றார் வருத்தமாக. என்ன ஆச்சு அக்கா என்றாள் மல்லிகா. அம்மா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. சித்தி நீங்க வீட்டுக்கு வாங்க நான் எல்லாம் சொல்றேன் என்று அழைத்துச் சென்றான். அப்போது விஷ்வா அவனுக்கு கால் செய்தான். பாட்டியை பற்றி தெரிந்துகொண்டு நாளை வருவதாக கூறி போனை வைத்து விட்டான்.