Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மகிழ்ச்சி

Advertisement

SHANMUGALAKSHMI

Member
Member
"மண்ணில்
மனிதனாய் பிறந்ததே
மகிழ்ச்சி தானே"

"அன்பு கூட்டில்
அடைக்கலமாகி
அழகாய் சிரிப்பதும்
மகிழ்ச்சி தானே"

"குடும்ப சுற்றுலாவில்
குறும்பு செய்து
சிக்குவதும்
மகிழ்ச்சி தானே"

"சிறு பூவின்
பனித்துளியை
சில்லென்ற காலையில்
சிதறிடவிடுவதும்
மகிழ்ச்சி தானே"

"தோற்கையில்
தேற்றிடும் உறவுகள்
இருப்பதும்
மகிழ்ச்சிதானே"

"அழுகையில்
கிடைக்கும்
சலுகையும்
மகிழ்ச்சி தானே"

"மறந்துவிட்டு
சென்ற உறவுகள்
மாற்றம் பெற்று வருவதும்
மகிழ்ச்சி தானே"

"அடம் பிடித்த பொழுது
வாங்கிய அடிகள்
அழகாய் கண் முன் விரியும் போதும்
மகிழ்ச்சி தானே"

"சாலையில்
போகயிலே
முன்னே செல்பவரை
முந்தி செல்கையில்
முளைக்கிறதே
மகிழ்ச்சி தானே"

"வண்ணத்துப்பூச்சியின்
வண்ணமதை
விழிவழியே
இதயத்தில் பதிக்கையில்
மகிழ்ச்சி தானே"

"இளங்காலை வேளையிலே
சிட்டுக்குருவியின்
சிறு ஒலியில்
துயில் கலைவது
மகிழ்ச்சி தானே"

"தீண்டிடும் தென்றலில்
எனை மறந்து
சலசலக்கும் மரக்கிளையின்
ஒலியில்
மாடித்தூக்கம் கூட
மகிழ்ச்சி தானே"


"வளர்த்த
ரோஜா
அடைமழை
நாளிலே
அழகாய் பூக்க
கண்கள் அதை படம்பிடிக்க
மட்டற்ற
மகிழ்ச்சி தானே"

"யாருமில்லா
வீட்டில்
சத்தமான பாடல்
சந்தோஷ மனநிலையில்
மனதில் அந்நேரம்
மகிழ்ச்சி மழை தானே"

"கோடை மழையிலே
குளிரெடுக்கும் வரை
நனைவதும்
மகிழ்ச்சி தானே"

"மகிழ்ச்சியாய் நான் நினைக்கும்
மற்றவை
இல்லையெனினும்
பெற்றெடுத்தவள்
மடி போதும்
மகிழ்ந்திடுவேன்
மனம் நிறைந்திடுவேன்"
 
Top