Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-15(பண்ணை வீடு)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
கஅன்று.... அந்திக் கறுக்கும் நேரத்தில் தான்.... கெஸ்ட் ஹவுசுக்கு திரும்பினாள் கனி ஸ்ரீ.

ஹாஸ்பிடல் இருந்து அவளை நேராக பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் அகத்தியன்.

காரை விட்டு இறங்கும்போது.... அடிவயிறு அவளுக்கு பசியில் கத்தியது....

பயங்கரமாய் பசிக்கிறதே? அகத்தியரிடம் இதை செல்வதற்கு சங்கோஜமாக இருக்கிறதே ?

எண்ணியபடி அவனை என்னை பின் தொடர்ந்தாள்.

பேருக்குதான் அது பண்ணை வீடு...!

ஆனால்... பெரிய பங்களாவை போல் பிரமாண்டமாய் தான் இருந்தது.

நேராக.... டைனிங் ஹாலுக்கு அழைத்து போனான்.

மல்லிப்பூ இட்லி, கொத்தமல்லிச் சட்னி, ஆப்பம் ,வடகறி, காலிஃப்ளவர் குருமா, குழாய் புட்டு, இடியாப்பம், தேங்காய் பால்.... என்று விதவிதமாய் டிபன் அயிட்டங்கள் அங்கு காத்திருந்தது.

"இவங்க பின்னால தோப்பு வீட்ல இருக்கவங்க... பிரமாதமா சமைப்பாங்க.... நாலு வருஷமா இந்த நம்ம ஃபார்ம் ஹவுஸ்லே தான் இருக்காங்க... இன்று நடுத்தர வயதைத் தாண்டிய தம்பதியரை சுட்டிக் காட்டினான் அகத்தியன்.

அப்பப்பா என்ன ருசி? என்ன மணம்? ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கே? எனக்கு பயங்கர பசி... உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு சங்கோஜமாக இருந்துச்சு..... என்றால் கனி ஸ்ரீ.

என் கிட்ட சொல்றதுக்கு என்ன சங்கோஜம் உனக்கு ? செக்கப் முடிந்து வெளியே வந்த போ.... ரொம்ப டயர்டா இருந்தா... அப்பவே நான் புரிஞ்சுகிட்டேன். நம்ம ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாலே .... எங்கே போன் பண்ணி டிபன் ரெடியா வைக்க சொல்லி விட்டேன்.

"ஓ.... பக்காவா பிளான் பண்ணி இருக்கீங்க.... தேங்க்ஸ்..."

அவள் வயிறார சாப்பிட்டாள்.

நிஜமாகவே எல்லாம் அயிட்டம்ஸும் ரொம்ப டேஸ்ட்டா இருக்குங்க.... வயிறு ஃபுல்லா சாப்பிட்டுட்டேன். எப்பவுமே இப்படி சாப்பிட்டதில்லை..." என்று அந்த தம்பதியினர் மனதார பாராட்டினாள்.

அகத்தியின் கைகளைக் கழுவிக் கொண்டு... போனில் யாரிடமோ பேசியபடி வெளியே சென்றான்.

"எங்களை பெத்த புள்ளைங்க கை விட்டுட்டாங்க தாயீ....! மனசு நொந்து போயி... போக்கிடம் இல்லாமல் பொழைப்பைத் தேடி பூம்பொழில் வந்தோம்.

அப்போ .... சின்ன எஜமான் வெளிநாட்டுலேர்ந்து லீவுக்கு வந்து இருந்தாங்க.

பூம்பொழில் தூரத்து உறவுக்காரங்க வீட்டுக்கு போயிட்டு... வேலை ஏதாச்சும் கிடைக்குமா? ன்னு விசாரிசாசோம். அவங்களும் பிடி குடுக்கலை...‌

விதியை நொந்து விட்டு சாலையோரமா வேதனையோட நடந்து வந்துட்டிருந்தேன். சின்ன எஜமான் ஜீப்ல வந்துட்டு இருந்தார்.

எங்களைப் பார்த்ததும் வண்டிய நிப்பாட்டி விசாரிச்சார்... அவரு அன்பான அனுசரணையான பேசினதும்.... எங்களுக்குத் தாங்கலை . உடைஞ்சு அழுதுட்டோம்.

உடனடியாக எங்களை ஜீப்புல ஏத்திக் கூட்டிக்கிட்டு இந்தப் பண்ணை வீட்டுக்கு வந்தாரு...

ஒரு குறையும் இல்லாம எங்களை தாய் தகப்பனா மதிச்சு நடத்தறாரு தாயீ....

சின்ன எஜமானருக்கு தங்கமான மனசு தாயீ... அவரைக் கட்டிக்கிடறதுக்கு...‌ எந்த மகாராசிக்கு கொடுத்து வச்சிருக்கோ நாங்க அடிக்கடி பேசிப்போம்..‌.

அந்தக் குடுப்பினை உங்களுக்கு வாய்ச்சிருக்கு தாயீ....! செஞ்சு வச்ச ஜோடி பொம்மை மாதிரி.‌.. ரெண்டு பேரும் அம்புட்டு பொருத்தமா இருக்கீங்க... நீங்க ஒரு குறையும் இல்லாம நூறு வருஷம் வாழணும் தாயீ....!

புள்ளை குட்டிங்களோட அமோகமாக வாழணும்....

கணவன் மனைவியுமாய் மாறி மாறி... அகத்தியின் கருணை உள்ளத்தை எடுத்து சொல்லி ‌... சிலாகித்துப் போய் உள்மனதில் வாழ்த்தினார்கள்.

இதைக் கேட்டதும்... அவள் பிரமித்து தான் போனாள்.

அவனுக்கும் மிகவும் இளகிய மனம் என்று கேள்விப் பட்டிருக்கிறாள்.

இதைக் கேட்டதும்.. அவள் பிரமித்து தான் போனாள்.

அவர்கள் மனதாரப் பாராட்டியதையும் கேட்டுவிட்டாள்.

எத்தனை சுதந்திரமாய் சந்தோஷமாய் அவர்கள் சுறுசுறுப்பாய் வலம் வருகிறார்கள்?

பார்த்த மாத்திரத்தில்.... புகழ் தருவதற்கு எந்த பணக்காரருக்கு மனம் வரும்?

பணக்கார்கள் கல் மனத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு ஈவு இரக்கமே இருக்காது.

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள். அவர்களது வயிற்றில் அடிப்பவர்கள் என்று தானே கேள்விப்பட்டிருக்கிறேன்?

ஆனால்... அகத்தியின் நேர் எதிராய் நடந்து கொள்கிறாரே?

பரம்பரை பணக்கார்க் குடும்பத்தில் பிறந்தவர் தான்....!

ஏழை எளியவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்கிறார். அவர்களது கண்ணீரைத் துடைத்து ஆவன செய்து ...‌ அதில் திருப்தி அடைகிறாரே ?

எப்பேர்ப்பட்ட உயர்ந்த உள்ளம்....! இவர் என கிடைப்பதற்கு.... நான் பூர்வ ஜென்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும்.

தவமிருந்து கிடைத்த வரம் என்று சொல்ல வேண்டும்.

அவனை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் போனில் பேசி முடித்துவிட்டு அருகில் வந்து நின்று அவரை முகத்தின் எதிரே கைகளை அசைத்தான்.

அட..... கனி ஸ்ரீ! எந்த லோகத்துல சஞ்சாரம் பண்ணிட்டு இருக்க? என்றபடி அவளின் தோளை தொட்டு இருந்தான் தன்னிலை மீண்டாள்.

"எந்த லோகம்? சொர்க்கலோகம்.....!" என்றாள்.

என்னை விட்டுட்டு.... நீ மட்டும் தனியா எப்படி அங்கே சஞ்சரிக்கலாம்?

பொய் கோபத்துடன் முறைத்தான்.

"சொர்க்கம் எனக்கு மேல் இல்ல... இங்கு தான் இருக்கு.... உங்க கூட இருக்கிறது தான் என் சொர்க்கம்... !

வாரே வா.... நல்ல குஷி மூடில் இருக்க போல இருக்கு.

முன்னப்பின்ன தெரியாத இந்த தம்பதியருக்கு துணிந்து இருக்கும் இடம் குடுத்து இருக்கீங்க..? அதான் ஆச்சரியமா இருக்கு..."

அவங்களோட சோகமான முகங்களை பார்த்தேன் பார்த்த மரத்திரத்திலேயே அவங்க எப்படிப்பட்டவர்கள் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்.

என் கணிப்பு எப்போதும் தப்பியதில்லை...

"எப்பேர்பட்ட பரந்த மனசு... பெருந்தன்மை?"

அவனுக்கு புகழ்ச்சி பிடிக்கல போல பேச்சு என்று சட்டென்று திசை திருப்பினான்.

மனோ ரஞ்சிதா....! நீ மனோ ரஞ்சிதத்தை பாத்திருக்கியா?

அவள் புரியாமல் விழித்தாள்.

நாம் மனோ ரஞ்சிதப் பூவை பற்றி கேட்டேன்...

ஊகம்.... அந்தப் பூவை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை..

மனோரஞ்சிதம் மலருக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு அது என்னன்னு தெரியுமா?

தெரியாது ?

மனோரஞ்சித பூவை நீ கையில் எடுத்து வைத்துவிட்டால் மல்லிகைப்பூ மனசுல நினைச்சுகிட்டு அதை முகர்ந்து பார்த்தால் இந்தப் பூவிலிருந்து மல்லிகைப்பூ வாசம் வரும்.

அதே மாதிரி நாம் முல்லை பூ மலர நெனச்சபடி அதை முகர்ந்து அதில் உள்ள மலர் வாசம் வரும்..

அதுதான் அந்த பூவுக்கு மனோரஞ்சிதம் என்ற பெயர் வந்துச்சு அதாவது அவங்க மனதில் எடுத்தபடி வாசம் தர வித்தியாசமான பூ... மனோரஞ்சிதம் பூ...!

இவளது கைகள் கோர்த்தபடி தோட்டத்திற்கு அழைத்து வந்துவிட்டான்.

வாவ்... கிரேட்! யூ ஆர் கிரேட்...! எத்தனை விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? இதுவரைக்கும் இந்தப் பேர்ல உள்ள பூவுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கும்னு.... எனக்குத் தெரியவே தெரியாது அகத்தியன்.

இதோ இதுதான் மனோ ரஞ்சித மரம் ...! மனோரஞ்சிதம் பூ வாசனை ரோஜாவாக இருக்கும் பாரு... கிளிப் பச்சையில சின்னதா ஏராளமான பூக்கள் இருக்கே....

இந்த நிறம் மாறி எலுமிச்சை மஞ்சள் கலர் மாறும் போது.... பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்.

இரு வரேன்...! என்று கூறிவிட்டு... வேகமாய் நடந்து சென்றான்.

எங்கிருந்தோ ஒரு தூரட்டியை எடுத்துக்கொண்டு வந்து பூக்களை பறித்து கொடுத்தான்.

கனி ஸ்ரீ விக்கு பன்னீர் ரோஜா என்றால் மிகவும் பிடிக்கும்.

பன்னீர் ரோஜாவின் மனதில் நினைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்தால் என்ன ஆச்சரியம்?

நீ ரோஜாவின் நறுமணம் அதிலிருந்து கமழ்ந்து வந்தது.

எனக்கு ரொம்ப பிடிச்சது எது தெரியுமா மனோரஞ்சிதம் பூ தான்.... அதைப்போல் எனக்கு நீ கிடைச்சது.... ஆச்சரியமான விஷயம் தானே? பேசியபடி துரட்டியால் மேலும் சில பூக்களை பறித்துக் கொண்டிருநாதவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

எ... என்ன கனி ஸ்ரீ? துரட்டியை எரிந்து விட்டு திரும்பிப் பார்த்தான்.

ஐ லவ் யூ அகத்தியன்...!

கண்ணீர் ததும்பிய விழிகளில் அவனை நேசமுடன் பார்த்த படி..‌‌

அவனது கையை எடுத்து கன்னத்தில் பதித்துக் கொண்டாள்.

நீ ரொம்ப எமோஷனல் டைப் இல்ல? கலைஞர்கள் இப்படித்தான் இருப்பாங்க போல இருக்கு... வா... பண்ணைத் தோட்டத்தில் வீட்டை சுட்டிக்காட்டுகிறேன்.

வெகுநேரம் சுற்றிப் பார்த்துவிட்டு.... மதியத்தில் பண்ணை வீட்டில் உணவருந்தினர்.

சாப்பிட்டு முடித்ததும்... அவனுக்கு போன் வந்துவிட்டது.

கனி ஸ்ரீ ! நீ மாடில ரெஸ்ட் எடு...! டயர்டா இருக்கே.... குட்டித் தூக்கம் போடு... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... அத முடிச்சுட்டு வந்து... உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்.

இல்ல... சங்கடமா இருந்தா சொல்லிடு... உன்னை கெஸ்ட் ஹவுஸ்ல டிராப் பண்ணிட்டு போறேன் என்றான்.

"நான் எங்கே இருக்கேன் . உங்க வேலைய நிதானமும் முடிச்சிட்டு வாங்க..."

இதுக்கு தான் கனி ஸ்ரீ.... மனதை புரிஞ்சுகிட்டு நடந்துக்கிற பார்த்தியா? ஐ லைக் இட் டார்லிங்...! பை...! என்று அவளது கன்னத்தை செல்லமாய் தட்டிவிட்டு கிளம்பிச் சென்றவன்... அந்தி சாயும் நேரத்தில் தான் வந்தான்.

"உங்க வேலை முடிஞ்சிடுச்சா?"

உம்... அத்தை போன் பண்ணாங்க... நம்ம ரெண்டு பேத்துக்கு டெஸ்ட் ரிசல்ட் நார்மல் தான்...

இன்னைக்கு நைட்டு ஏழரை மணிக்கு காந்த மணி அத்தைய உன்னைப் பார்த்துப் பேசணும் சொன்னாங்க.

எனக்கு வெளியில ஒரு வேலை இருக்கு... இண்டன் கெஸ்ட் ஹவுஸில டிராப் பண்ணிட்டு நான் கிளம்பி விடுவேன்‌

"நான் அரண்மனைக்கு பயத்தை பார்க்கட்டுமா?"

"உன் நம்பர் தந்திருக்கேன். அத்தை போன் பண்ணுவாங்க... அவங்க சொன்னபடி நடந்துக்கோ..."

கெஸ்ட் ஹவுஸ் வந்து சேரும்வரை... வேறு எதைப்பற்றியும் பேச வில்லை.

அவளை இறக்கிவிட்டு... கை அசைத்து விட்டு சென்று விட்டான்.

கெஸ்ட் ஹவுஸில் குட்டி போட்ட பூனையாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள் கனி ஸ்ரீ.

மணி ஏழரை தாண்டியது.

அவளது டென்ஷன் அதிகரித்தது.

? மனோரஞ்சித பூவை பற்றி ??



மனோரஞ்சிதம் (Artabotrys hexapetalus) இந்தியாவில்காணப்படும் இத்தாவரம் ஒரு புதர் போன்று வளரும் தன்மை கொண்டது. இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.இதன் பூவின் வாசனையால் புகழ்பெற்று விளங்குகிறது. இத்தாவரத்தின் தோன்றும் மலர் மஞ்சள் நிறம் கொண்டு வாசனை நிறைந்து உள்ளது.இதன் மலர்கள் முதலில் பச்சை நிறத்தில் தான் தோன்றும் பின்னர் நாள்பட மஞ்சள் நிறமாக மாறும். இத்தாவரம் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.



( விக்கிபீடியா குருவுக்கு நன்றி)

? அரண்மனையிலிருந்து அழைப்பு வருமா? ?

? காந்த மணி எதற்காக அழைத்தார் ??

? உங்களுக்கு மனோரஞ்சித பூவை பற்றி தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க? ?





 
மிகவும் அருமையான பதிவு,
தஸீன் பாத்திமா டியர்
 
Last edited:
Top