I agree with you completely.எனக்கு சுபாஷ் குடும்பத்தை பத்தி பேச விருப்பம் இல்லை தாட்சாயணி உட்பட அதான் அவங்களை பத்தி எதுவும் கமெண்ட்ல சொல்லலை ஆனால் நீங்கள் நல்லா பெரிய கமெண்ட்ஸை போட்டு நீங்கள் திட்டிட்டிங்க
சுபாஷ், கமலேஷ் வயசுல சின்னவங்க அவங்களுக்கு எந்த அனுபவம் கிடையாது ஆனால் தாட்சாயணி கணவன் இல்லாமல் தனியா இருந்து இரண்டு பிள்ளைகளை வளர்த்து இருக்காங்க எவ்வளவு மனுஷங்களை பார்த்து அனுபவ பட்டு இருப்பாங்க ஜோதியோட நடவடிக்கைய கொஞ்சம் கவனிச்சு பார்த்திருந்தால் ஹர்ஷா பத்தி யோசிச்சு இருப்பாங்க ஆனால் அவங்க ஆரம்பத்திலே கமலேஷ்க்கு ஜோதிய கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துட்டாங்க அதனால் ஜோதிய சரியா கவனிக்கல
சுபாஷ் கிட்ட ஆயிரம் குறை இருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே ஹர்ஷா விஷயத்தில் ஜோதியோட நடவடிக்கைய கவனிச்சது அவன் மட்டும் தான் இங்கு வந்த பிறகு தான் கிறுக்கன் ஆகிட்டான்
சுபாஷ் கண்ணில் பட்டது தாட்சாயணி அனுபவத்துக்கு ஏன் அவங்க கண்ணில் படவே இல்லை ஹர்ஷா ஜோதி சுபாஷ் ஜீவிதா கமலேஷ் எல்லாம் வயசுல சின்னவங்க எந்த விஷயத்தையும் சரியா அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க தெரியாது ஆனால் தாட்சாயணி ஜோதிக்கு குழந்தை பிறந்த பிறகாவதுக ஜோதி கிட்ட பேசி இருக்கலாம் ஆனால் எல்லோரும் ஜோதியோட வயசை காரணம் காட்டி அதை பத்தி யாரும் பேசாமலே விட்டுட்டாங்க
இன்னைக்கு தாட்சாயணி பேசும் போது கொஞ்சம் கடுப்பா தான் இருந்தது இப்போ பசங்க செஞ்ச தப்பை கேள்வி கேட்கிறவங்க இந்த ஆறு வருஷத்தில் என்ன செஞ்சாங்க ஜோதிக்கு நாம் தான் வாழ்க்கை கொடுக்க போறோம் என்று அவங்களா நினைச்சிட்டு அவளோட உணர்வுகளை கவனிக்காமலே விட்டுட்டாங்க
இந்த ஜோதி ஆரம்பத்திலே ஜீவிதா பேர் சொல்லி தான் கல்யாணம் நடந்தது என்று சுபாஷ் கிட்ட சொல்லாம விட்டுட்டாளே என்று கேவ பட்டேன் ஆனால் இப்போ அதை மட்டும் சொல்லி இருந்தால் ஹர்ஷாவையும் ஜோதியையும் சந்திக்க விடாமலே செஞ்சிருப்பான்