நிறம் மாறிய நேசம் 28

Advertisement

Sarayu R

Member
Member
அடுத்த பதிவு.



தம்பதியாய் மீரா, ஷ்யாம் வர ஒரே சந்தோஷம், சிரிப்பு, கலாட்டா தான்.

மீராவின் சாமான்களை ஷ்யாம் ரூமில் வைக்கும்போது
என்ன என்கூட இங்க இருப்பியா? அல்லது வேற ரூம் வேணுமா?

ம்ம்.... யோசிச்சு சொல்லறேன். சரியா?

கொழுப்புடி உனக்கு.....
இப்பிடி கேட்டா இது மாதிரி தான் பதில் கிடைக்கும்..... உதட்டை சுழித்து அழகு காட்டினாள்.

என்கிட்ட தானே நீ வரணம் . பார்த்துக்கறேன்டி.......

அடுத்த நாளுக்கு வேண்டிய வேலை பார்க்க எல்லோரும் போக,
மீரா சுமித்ராவுக்கு ஹெல்ப் செய்ய நேரம் போனதே தெரியவில்லை.


மீரா காலம்பற வாசல்ல பெரிய கன்யா கோலம் போடணம். பூஜை இடத்தில் கோலம் போடணம். காலம்பற சீக்கிரம் எழுந்துக்கோ கெளரி சொல்ல,
சரிம்மா.....

சுமித்ரா, கிருஷ்ணா ஆசைப்படி ஷியாம் ரூம் திரும்ப அலங்கரிக்கப்பட
மீரா, ஷ்யாமுக்கு அடுத்த முதலிரவு சென்னையில்.........

தூங்காத இரவாக இருந்தாலும்,
திங்கள் கிழமை காலை முதல், பட்டாம்பூச்சி போல் எல்லாருக்கும் ஹெல்ப் செய்து கொண்டு இருந்த மீரா ஷ்யாம் இருக்கும் இடம் திரும்பவே இல்லை.
மீரா போய் ஷ்யாமை எழுப்பு என்ற சுமித்ராவிடம் இடம் வலமாக தலையை ஆட்டினாள் .
ஏண்டா?

அவள் கையை பிடித்து தனியே கூட்டி வந்த மீரா, நீங்க போய் எழுப்புங்கோ. நான் போனால் நடக்காது.

படுத்தரானா?
பேசாமல் நின்றாள் மீரா,

அவளை அணைத்த சுமித்ரா, கல்யாணம் ஆன புதிதில் இது சகஜம்.
ஆபீஸ் வேலை என்று வந்தா லைஃப் நார்மல் ஆகும்.

சரி நான் போய் எழுப்பரேன்.
கொஞ்சம் அப்செட் ஆவான், அப்பறமா சரி பண்ணு அவனை. அவளை கட்டி அணத்தபடி சமாதான படுத்தினாள்.

எழுந்து வந்த ஷ்யாம் மீரா பக்கம் பார்க்கவே இல்லை.
மீரா எல்லாருக்கும் காஃபி குடுக்க, அவளிடம் இருந்து அதை வாங்க கூட இல்லை.
கண்ணா, காஃபி, என்று அவள் குடுக்க அவன் கை வேகமாக பட, காஃபி கீழே சிந்தியது. சூடான காபி அவன் மேல் விழ, சாரி சாரிப்பா என்று மீரா பதற, அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் தன்னுடைய ரூமுக்கு ஷ்யாம் போக மீரா கண்ணில் கண்ணீர்.
அந்த இடத்தை சுத்தம் பண்ணவா, ஷ்யாம் பின்னால் போகவா?.
சுமித்ரா நிலமையை புரிந்து, நீ போடா, ஷ்யாமை பாரு, , நான் இங்க பாத்துக்கறேன்.....

அவர்கள் ரூமுக்கு போய், கண்ணா உனக்கு படலையே... என்று கேட்க,
டிரஸ் மாற்றி கொண்டு இருந்த ஷ்யாம், கதவை தட்டிண்டு வர மாட்டியா?...

சாரிப்பா.......

எல்லாத்துக்கும் சாரி, உடனே கண்ணுல தண்ணி வந்துடும். மீரா என்ற பேருக்கு பதிலா அழுகுண்ணி என்று வைத்து இருக்கலாம்.....

கண்ணா, பட்டு இருக்கா? நான் ஐஸ் கொண்டு வரவா? காமிப்பா....

அம்மா தாயே பக்கத்துல வராதே, நீங்க ஆச்சாரம், எங்கள தொடக்கூடாது.....
நான் பார்த்துக்கறேன்.....
நீங்க போங்கோ......

கண்ணா, பிளீஸ்ப்பா....... புரிஞ்சுக்கோ என்றபடி அவன் அருகில் போக...

வேண்டாம், நான் ஏதாவது சொல்லிடப்போரேன் .... நீ போய் நல்ல பொண்ணா, நல்ல மாட்டுபொண்ணா மட்டும் இரு.

ஒன்றுமே பேசாமல் கண்ணை மூடி மனதை அடக்கி சிறிது நேரத்தில் வெளியே வந்தாள்.

ஷ்யாமின் பெரியம்மா இரண்டு பேரும் சொன்னா வேலைகளை சுமித்ராவுடன் மீரா செய்ய, கெளரிக்கும், சுமித்ராவிற்கும் மீராவின் நிலை, ஷ்யாமின் கோவம் புரிந்தது......

அம்மா நம்ம ஆத்துல பண்ணறதுக்கும் இங்க பண்ணறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கே....
ஆமாண்டா, இந்த விசேஷம் ஆத்துக்கு ஆம், திருநெல்வேலி, பாலக்காடு, தஞ்சாவூர் அப்படி ஊருக்கு தக்கன, பழக்க வழக்கம் மாறும். நீ இனிமேல் இதைத்தான் ஃபாலோ பண்ணனும்.

இவா எல்லார் கூட நீ இத ஹோஸ்ட் பண்ணனும், அத்தை தான் இங்க முக்கியம். நம்ம ஆத்துல இனிமேல் நீ தான் முக்கியம். நீ இல்லாம பண்ண முடியாது.

எல்லாம் போக போக தெரியும். சுமி பார்த்துப்பா. கவலை படாதே.
என்ன பண்ணனும் என்று கேளு....

மீரா, நமஸ்காரம் பண்ண எல்லாரையும் கூப்பிடு.

ஷ்யாம் மட்டும் வரவில்லை. மீரா ஷ்யாமை கூப்பிட்டால், வேலையா இருக்கேன், சும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணாதேடி....
சரி..... அம்மா கூப்பிட்டா.... வரதுன்னா
வா..

தொல்லை தாங்கலை.... உன்னோட

ஷ்யாம் வரியா, எல்லாரும் காத்துண்டு இருக்கா.... சுமி சொல்ல,
இதோ வரேன்மா..

வரியா! .... மவனே இருக்குடா உனக்கு.....
மனதுக்குள் கருவினாள் மீரா...

ஷ்யாம் நீ இனிமேல் சின்ன பிள்ளை இல்லை. கல்யாணம் ஆயாச்சு, குடும்பஸ்தன் சும்மா குழந்தையாட்டம் பிஹேவ் பண்ணாதே....
உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்து இருக்கா. புரிஞ்சு நட.....

நமஸ்காரம் பண்ணிட்டு, மீரா கூட சேர்ந்து சாப்பிடு.
அவ சாப்பிட வர இன்னும் 1 மணி நேரம் ஆகும்.

கெளரி ஹெல்ப் பண்ண, சுமி, மீரா, பரிமாற, அன்று மீராவுக்கு நிறைய வேலை.
பொண்டுகள் சாப்பிட்ட பின், மற்ற முறைகள் முடித்து, புடவை, தாம்பூலம் , எல்லாம் குடுத்து விட்டு அப்பாடா..... என்று பெருமூச்சு விட்டார்கள்.
கெளரி, சங்கருக்கு தனி சமையல்.

மற்றவர்கள் சாப்பிட, ஷ்யாம் ,மீரா அடுத்து அடுத்து உட்காரும்போது அவளுக்கு மட்டும் கேட்கும் படி, என்ன பெஸ்ட் மாட்டுபொண்ணு அவார்ட் வாங்கி ஆச்சா?. எல்லாரையும் திருப்தி பண்ணு. என்னை கண்டுக்காதே.....

அதுக்குள்ள நான் அலுத்தாச்சு இல்லையா.....
பேசாம டேலஸ் போயிடலாமா?
இல்லை பெங்களூர், டெல்லி...?
அப்போ உனக்கு நான் மட்டும் தானே... என்ன ஓகே யா?

அங்க என்ன பேச்சு? சாப்பிட்டு விட்டு நாளைக்கு காலம்பர கிளம்ப பேக் பண்ணணம். 5 மணிக்கு கிளம்பலாமா?

டாட் ரெஸ்ட் இல்லாம ஏன்ப்பா?

ஷ்யாம் 2 டேஸ் , அப்பறம் 1 நாள் ரெஸ்ட் Friday ரிசப்ஷன் முடிந்தால் சரியாகி விடும். நெக்ஸ்ட் வீக் ஒரு 2 நாள் மீரா ஆத்துக்கு மறுமழிச்சிக்கு (மறுவீடு)
போய்ட்டு வாங்கோ.
உன்னோட ஹனி மூன் பிளான் என்னப்பா?
அது ஒன்னும் பிளான் பண்ணலை.
நிறைய லீவ் எடுத்தாச்சு. திரும்ப டிராவல் இருக்கும். டேலஸ் கூட போக வேண்டி இருக்கு. அதுதான்.

மீரா நீ எப்போ ஜாயின் பண்ணனும்?
ரிசப்ஷனுக்கு அப்பறம் ஷ்யாம், விஷ்வா கிட்ட பேசிட்டு தான் சொல்ல முடியும்.
கண்ணா, எப்போ நான் ஜாயின் பண்ணனும்? .

நீ தான் முடிவு பண்ணனும். நீ தான் எல்லா லீவையும் காலி பண்ணி ஆச்சே. இதுல ஹனி மூன், மத்தத்துக்கு எங்க போக?.
அப்பறம் இந்த புது புராஜக்ட் இம்பிளிமென்டேஷன் வேற இருக்கு....

ஓகேப்பா, இத அப்பறமா பேசலாமா?....

சரி எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு வரலாமே,.....
சுமித்ரா ஷ்யாமின் மூட் அவுட்டை சரி செய்ய முயன்றாள்.

தங்கள் அறைக்கு சென்ற மீராவை பார்த்து, பெஸ்ட் மாட்டு பொண்ணு என்ன வழி மாறி இங்க வந்தியா? உன்னோட மாமியார் பின்னாடி தானே போவ? என்ன இங்க?......
கதவை மூடி விட்டு வந்த மீரா, பிடிச்சு உலுக்கி விட்டாள் ஷ்யாமை.

கண்ணா ஸ்டாப் ....
நமக்குள்ள உள்ளது இந்த ரூம் தாண்டி போகக்கூடாது என்று சொன்னோமா இல்லியா.
இப்போ என்ன சீன் போடற?
நான் இந்த பூஜைக்கு சீக்கிரம் எழுந்துக்கணம் என்று சொன்னேன் இல்லையா.... அப்பறம் அங்க வந்து என்ன மொறப்பு?
இன்னும் 2 நாள் கோயில் போகும் போது பிரைவசி இருக்காது. அட்ஜஸ்ட் பண்ணனும். தெரியும் தானே!...

என்னது.....நான் தொல்லை. நான் கூப்பிட்டா வர முடியாது, சுமி கூப்பிட்டா உடனே வர முடியும்.
ஒரு வருஷம் லீவ் எடுக்காம இப்போ தான் எடுத்து இருக்கேன். அதுக்குள்ள லீவ் எல்லாம் காலி பண்ணி ஆச்சு என்று கம்பிளைன்ட்.

மவனே த்ராட்டுல விடவா?
நானும் என்னோட ஷ்யாம் ஆச்சே என்று போனா ரொம்ப தான் சீன் காட்டற. என்ன நினைத்து கொண்டு ஆடற?.....
பட பட என்று பொரிந்த மீராவை பார்த்து கொண்டு இருந்த ஷ்யாம் இங்க வா என்று கை காட்டி அழைத்து அவள் பேச முடியாமல் அவள் இதழ்களை சிறை எடுத்தான்.

போடா.... என்று அவள் விலக்க, அவளை முரட்டு தனமாக தன் அணைப்பில் கொண்டு வந்தான்.

என்னடி ரொம்ப பேசற? கல்யாணம் ஆகி 4நாள் தான் ஆறது. விட்டுட்டு விட்டுட்டு ஓடினா என்ன பண்ணுவேன்?.

நீ சொன்ன மாதிரி 1 மாசம் தவிக்க விட்டு இருக்கணம். அப்போ தெரியும் புஸ்ஸி யாருன்னு......

ஹனி மூன் போகணமா? நான் பிளான் பண்ணி ஆச்சு. நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். வந்தா வா இல்லாட்டி நான் மட்டும் போய்க்கறேன் .

ஒரு 2 நாள் ( சனி, ஞாயிறு ) கேரளாவில குமரகோம் போட் ரிசார்ட், போட் ஹவுஸ் போகலாம்.
US போனால் ஹவாய் போகலாம். எத்தனை இருக்கு? அதுக்குள்ள எதுக்கு துர்வாச மஹரிஷி வரார்.

காரணம் இல்லாம என் கிட்ட கோவப்பட்டா உம்மாச்சி காஃபி கொட்டி விட்டாரா?. பட்டுதா? வேணும் நன்னா....

எனக்கு புது பேரு அழுகுண்ணி. இன்னிக்கு என்னை படுத்தினதுக்கு இருக்குடா ஆப்பு......

கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணம். விடுடா...
நீ இந்த மாதிரி கோவமா பேசினா என்னோட அப்பா, அம்மா கவலை பட மாட்டாளா? இந்த முரடனை எப்படி சமாளிக்க போறா என்று....

விஷ்வா அண்ணா சொன்னது போல நீ முரடன், படுத்தறவன், என்னை அழ விடறவன் தான்.....
நான் கோவமா இருக்கேன். என் கிட்ட வராதே.....
புலம்பிய மீராவை அணைத்து சமாதான படுத்தினான்.
சாரி கண்ணம்மா, இனிமேல் இப்பிடி எல்லார் முன்னாடியும் நடக்க மாட்டேன். பிராமிஸ்டி செல்லம்.....

ரொம்ப பொசசிவா இருக்கேன். பைத்தியம் ஆயிட்டேன் உன்மேல.....
ஏண்டி படுத்தி எடுக்கற?.

அருகாமையும், சிறு அரவணைப்பும் அலைபாயும் இருவரின் மனதையும் அமைதி படுத்தியது.
அடுத்த நாள் காலை கிளம்ப, அவர்கள் பின்னால் ஒரு செக்யூரிட்டி கார் கூட வந்தது. கிருஷ்ணா அதில் வர,

சுமோ 7 சீட் வண்டி. முன்னால் சங்கர், நடுவில் மீரா, ஷ்யாம் , பின் இரு இருக்கையில் கௌரி , சுமித்ரா படுத்துக்கொள்ள கடலூர் பிரயாணம். அதிகாலை நேரம் ட்ராஃபிக் அவ்வளவு இல்லை . 8 மணிக்கு கடலூர். பெரியப்பா வீட்டில் இறங்க, திரும்ப ஆரத்தி, பாலும் பழமும் ....
ஷ்யாம் வெறுத்து விட்டான்.
மீரா ஆசையா சாப்பிடுவதை பார்த்து என்னடா இவ்வளவு ஆசையா சாப்பிடற.
கெளரி, சங்கர் சிரித்துக்கொண்டே, அவளுக்கு பருப்பு சாதம், பால் சாதம், பழம், எத்தனை கப் பால் குடுத்தாலும் சாப்பிடுவா. காரம் வேண்டவே வேண்டாம்.

உடனே ஷ்யாம் இப்போ தான் புரிஞ்சுது சீக்ரெட் ஆப் என்னோட பொண்டாட்டியின் பள பளப்பு.

சும்மா இருடா, கண் போடாதே.

கோயில் போய் வந்து மாலையில் திரும்ப அடுத்த கோயில் போகலாம் என்று பிளான். கோவில்களில் மீராவும் சங்கரும் அந்த கோவில்களின் ஸ்தல புராணம், திவ்ய தேசம், பாடல் பெற்ற ஸ்தலம் என்று ஒரே உரையாடல்.
ஷ்யாமுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அதைப்பார்த்த கெளரி, அப்பா, பொண்ணு கூட கோவில் போனால் நிறைய பொறுமை வேணும், நிறைய கதை சொல்லுவா, அங்க இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்டு புது விஷயம் தெரிந்து கொள்வார்கள்.
அப்பறம் ஆத்துக்கு போய் தனியா கட்டுரை எழுதுவா......

குட் லக் ஷ்யாம்.... வெல்கம்...எங்க வட்டத்துக்கு.......

மதியம் 1 மணியில் இருந்து மீரா ஷ்யாமை தனியாக பார்க்க துடித்தாள். என்ன என்று ஷியாமுக்கு புரியவே இல்லை. சாப்பிடும் முன் வந்தவனை ஹாப்பி 100 ஹவர்ஸ் ஆப் அவர் மேரிட் லைஃப் என்று அணைத்து முத்த மழை பொழிந்தாள்....
எதிர் பார்க்கவே இல்லை கண்ணம்மா.... கலக்கற போ....
நல்ல நாளிலே ஆடறவன் சலங்கை கட்டியது போல மீரா அணைக்க தலை கால் புரியாமல் இருந்தான்......

மாலையில் திருவஹீந்த்ரபுரம் கோயில். மீரா ஒரு நிலையில் இல்லை. அந்த கோயில், அதன் வரலாறு, தேவனாதப் பெருமாள், ஹேமாம்புஜ நாயகியின் அழகு, மலையில் அமைந்துள்ள ஹயக்ரீவர்......,
அங்கே தாயார் சன்னதியில் பாட,
அங்கிருந்த பட்டாச்சார்யர்கள் நிஜமாகவே அதிசயித்து, ஸ்பெஷல் கவனிப்பு.
ஷயாமின் மாமா, பெரியப்பா இந்தனை வருஷம் இருந்தும் இந்த மரியாதை இப்போ தான் கிடைத்து இருக்கு.
மீராக்கு ஒ போடு.....என்று ஒரே கலாட்டா.....

மறுநாள் சிதம்பரம் கோயில். சங்கர் , மீரா அணு அணுவாய் ரசித்தனர். ஷ்யாம் மீராவை ரசிக்க அவளுடன் இருந்தான். சங்கர் நிறைய கதைகள், விஷயங்கள் சொல்ல ஷ்யாமுக்கும் ஆசை வந்தது.
சிதம்பரம் நடராஜர் கால் கட்டைவிரல் தான் இந்த யுனிவர்ஸ்ஸின் மைய புள்ளியில் இருக்கு என்ற அறிவியல் உண்மை முதல், சிதம்பர ரகசியம் என்றால் என்ன என்ற தத்துவம் தொடங்கி
நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜன் சன்னதி, திருநெல்வேலி, திருச்செந்தூர், அதன் அருகில் உள்ள ஆத்தூர், உத்தரகோசமங்கை ( இங்கு மட்டும் இப்பொழுது அந்த சன்னதி திறக்கப்படுவதில்லை) இந்த சைவ கோயில்களிலும் சயன ( படுத்த) கோலத்தில் பெருமாள் சன்னதி இருக்க சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு என்பது வரை விளக்கினார்.
இதைப் பார்த்த ஷ்யாம் இவ்வளவு விஷயம் தெரியும் என்றால் திருமணத்துக்கு அடுத்த நாள் தான் பள்ளியறை பற்றி சொல்லும்போது மீரா புதிய விஷயம் போல் கேட்டதை நினைத்துப்பார்த்தான்.
தனக்கு தெரிந்து இருந்தாலும் அதை ஷ்யாம் முன் காண்பிக்காமல் அவன் சொன்னதை கேட்டு முதன் முதலாக அறிவது போல் நடந்ததை நினைத்துப் மீரா மற்றவர்கள் சொல்லுக்கு குடுக்கும் மதிப்பை, எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று காண்பிக்காத குணத்தை வியந்தான்.
ஷ்யாமின் மாமா, சித்தி, பெரியப்பா அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரிடமும் மீரா, சங்கர், கெளரி அவ்வளவு கலந்து பழகியது ..... எல்லோருக்கும் நல்ல நிறைவு....

சென்னை வந்து ரிசப்ஷன், எல்லா உறவும் வர, நல்ல கூட்டம், அன்பளிப்பு, மலர்கள் கிடையவே கிடையாது.
அங்கு வந்திருந்த ஆதரவற்றோர் இல்லம், வேத பாட சாலை, போன்ற 6 தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல விதமாக பண வரவு.
இங்கும் மேடையில் மணமக்கள், கூட்டமாக வந்தவர்கள் என்று இல்லாமல், ஷ்யாம், மீரா, கிருஷ்ணா, சுமி ஒவ்வொரு விருந்தினர் இருந்த டேபிளுக்கு சென்று பேசி ஃபோட்டோ விடியோ எடுத்தது அனைவருக்கும் வித்யாசமான அனுபவம்.....

கல்யாண களேபரம், அலைச்சல், தூக்கம் இன்மை, மாதாந்திர வலி எல்லாம் சேர்ந்து மீரா 4 நாள் எழுந்திருக்கவே இல்லை.
ஹனி மூன் பிளான் எல்லாம் உடனடியாக வேலையில் சேர வேண்டியதால் மாறியது.......

கிருஷ்ணாவுக்கு டெல்லி மத்திய செயலகத்தில் 2 மாசம் வேலை . சுமியும் கிருஷ்ணாவும் டெல்லி செல்ல.....

அடுத்த 5 வாரம் பெங்களூர், மும்பை, டெல்லி என அலைச்சல் 1 வார முடிவில் மீரா வீட்டிற்கு மறுவீடு அடுத்த வாரம் கேரளா போட் ஹவுஸ் தனிமை, நேரம் , நாட்கள் போனது தெரியவே இல்லை.

ஒரே ஒரு வாரம் மீராவும், ஷ்யாமும் சென்னையில் தனி குடித்தனம்.
ஷ்யாமின் படுத்தல்கள், ஆனாலும் மீராவுக்கு அவன் செய்த உதவிகள், தனிமை, கொஞ்சல், கெஞ்சல், சிணுங்கல், செல்ல கோபம் இதுதான் தங்கள் லைஃப் என்று இருவரும் உணர்ந்த நாட்கள்......

ஷ்யாம், மீரா டேலஸ் திரும்பும் நாளும் வந்தது..........
 

Advertisement

Advertisement

Back
Top