நந்தா & மகிழ்
செம ரெண்டு பேரும்.......
அதுவும் அந்த பாட்டு செம apt அந்த இடத்துக்கு....... இந்த பாட்டு பல முறை கேட்டாலும் அந்த இடத்தில கேட்கிறப்போ ரொம்ப பொருத்தமா சிரிப்பா இருந்துச்சு
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா......
அதோட முத்தமிழ்.... மகிழோட வரும் இடங்கள் அழகு..... முகிலனுக்காக காத்திருப்பது
முகிலன் கடைசி வரை கெமிஸ்ட்ரியே வராத சாமியார்னு சொல்லிக்கிட்டு 3 வயசு பொண்ணு வேற......
பிட் அடிச்சி பாஸானா கேஸ் போல......
பாட்டிஸ் ரெண்டு பேரும் சான்ஸே இல்லை...... அவங்களோட தாத்தாக்களும்......
அது மாதிரியே அம்மாக்கள் & அப்பாக்கள்.....
கடைசியில் குட்டீஸ்...... அதுவும் ஆளு ஆளு னு சொல்றதெல்லாம் நம்ம வீட்டு குட்டிங்க நியாபகம் தான்....... அவங்க friendship வேற தான்......
ரகு ரேவதி...... கடைசிவரை தனிமை கொடுமை....... கல்யாணம் ஆனதும் தான் நந்தாக்கு உறைக்குது ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கணும்னு.......
போலீஸ் முத்துக்குமரன் ஒரு கிரிமினல்..... அநியாயமா ஒரு உயிரை பலியாக்கிட்டான்.......
நந்தா முகில் ஸ்பாட் செம கலாய் தான் எப்போ சேர்ந்தாலும்.......
ரசிச்சு படிக்கிற மாதிரி இருந்துச்சு......
வாழ்த்துக்கள் கோகிலா ???
**************
கதையில் எழுத்து பிழை நிறைய அது போல சில வார்த்தைகள் சில இடங்களில் மிஸ்ஸிங்/missplaced..... கெஸ் பண்ணி படிக்க வேண்டியிருக்கு.....
பெயர்கள் சில இடங்களில் மாற்றி மாற்றி இருக்கு...... எபி 20 னு நினைக்கிறேன் மகிழ் மகிழ் ஒரே வாக்கியத்தில் 2 முறை வருது ஒன்னு முத்து னு வரணும்..... அது மாதிரி நந்தா முகில் பேர்கள் கூட.....
அது பார்த்துக்கோங்க.......
இன்னொரு suggestion...... அங்கங்கே இது (கீழே சும்மா எக்ஸாம்பிள் க்கு போட்டேன் இதை) மாதிரி செய்யுள் நடையில் போடுறப்போ கதியில் அது தனியா தெரியுது..... ஸ்கிப் பண்ண தோணும் இல்லைனா ஸ்டாப் பண்ணிடுவாங்க...... அதுவும் first few epis ல நிறைய இடத்தில் வருது.......
"கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை உணீஇயர்"
இன்னொன்னு அந்த திருவிழா பற்றி கொஞ்சம் நிறைய வர்றதும் flow slow பண்ணுற மாதிரி இருந்துச்சு......
முதலில் ஒரு 4 5 எபி தான் pickup பண்ண வைக்கும்....... அங்கேயே இது எல்லாம் போட்டு கொஞ்சம் ஸ்லொவ் பண்ணின மாதிரி என்னோட பீல்.....
அப்பறம் செம ஸ்பீட் தான்..... மற்றதெல்லாம் கண்ணுக்கு தெரியலை......
கொஞ்சம் எடிட்டிங் ல பார்த்துக்கோங்க......
உங்க முதல் கதை???
மொத்தமா ஒரு நல்ல கதை தான்....... எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது....... வாழ்த்துக்கள் கோகிலா.......