Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடிவான்-10

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடிவான்-10

இப்ப ஏன்டா சிவா காலேஜ் அனுப்புற, நேற்று தான் கல்யாணம் ஆயிடுச்சு-ரேனுகா..

மா நீங்க அவள ஏத்தி விடாதீங்க..பத்திரிக்கை அடிச்சு நாள் பார்த்து கல்யாணம் பண்ணிங்களா..இல்லதான...ஏற்கனவே அவளுக்கு படிப்புன்னா ரொம்ப தூரம்..காலேஜில மாடல் எக்ஸாம் நடக்குது.. அவ அட்டன் செய்யனும் தட்ஸ் ஆல் சொல்லிட்டு ரூமிற்குள் சென்றான்...

சக்தி ரேனுகாவை பாவமாக பார்க்க...சக்தி குட்டிம்மா...சிவா சொன்னா.. போயிதான் ஆகுனும்டா..நோ சேன்ஞ்..

சரி அத்தை , அவர்களின் ரூமிற்கு சென்றாள்...சீக்கரம் ரெடியாகு...மோகன்கிட்ட சொல்லி உன் புக்ஸை உங்கவீட்டிலிருந்து எடுத்துட்டு வர சொல்லுறேன்...

அதெல்லாம் வேணாம்....

ஏன்...

நான் ஒரு புத்தகம் கூட வாங்கல...சிவா அவளை பார்த்து முறைக்க..

என்ன முறைக்கிற..காலேஜே எங்களது லைப்பரில்ல இருந்து எடுத்திட்டு போய் படிப்பேன்...

யாரு நீ படிப்ப...போன செம்ஸ்டர் எப்படி பாஸான, என்கிட்ட ராமநாதன் ஸார் சொல்லிட்டாரு...

யாரு அந்த சொட்ட பாஸ்ஸா...அந்த ஆள்கிடக்கிறாரு...சிவா, இப்ப நீ பால் சப்ளை செய்யற..அப்போ வீட்டுக்கு பீரீயா தான பால்கொடுப்ப...ஹோட்டல் நடத்துறவன் வீட்டுக்கு பீரீயா சாப்பாடு தரான்.. அதுபோல காலேஜ் நடத்துற எங்க அப்பா பீரீயா பாஸ் பண்ணிவிடுறாரு...

எப்படி டி இவ்வளவு யோசித்து பேசற...இங்க பாரு சக்தி இதுக்குமேல நீ சிவா ஒய்ப்...சோ அது உன் காலேஜ் இல்ல...ஒழங்கா கிளாஸ் அட்டன் செய்யனும்... எல்லா ஸார்கிட்டயும்
சொல்லிருக்கேன்... உன்னைய வெளியே விட வேண்டாமேன... ...நீ காலேஜ்க்கு போற

திரும்ப அதையே சொல்லுறானே..சிவா ப்ளீஸ் ஒரு வாரம் கழிச்சு போறேனே...
முடியாது...

உனக்கு என் நிலைமை தெரியாது சிவா...

ஓஓ தீடிர் கல்யாணம் ஆயிடுச்சு எல்லாரையும் எப்படி பேஸ் பண்ணறதுன்னு யோசிக்கற...

அதெல்லாம் சமாளிச்சிடுவேன்..

என்னை புருஷன் சொல்லறது...

ம்ச்.. நீ காலேஜில சூப்பர் பிகரு எத்தனை பேரு பிராக்ட் போட்டாளுங்க. சோ உன்னையே மடக்கிட்டேன் பந்தா செஞ்சிப்பேன்.

ஐய்யோன்னு தலையில் கையை வைத்துக்கொண்டான்..பின்ன என்னடி உனக்கு பிரச்சனை...

ம்ம் கிட்டவா சொல்லுறேன்...

இல்ல நீ தூரத்திலிருந்து சொல்லு காது நல்லா கேட்கும் எனக்கு...

சரி விடு நான் வரேன்... அவன் அருகில் சென்றாள்...அது போன மாசம் எங்க கிளாஸ் பொண்ணு கவிதாவுக்கு கல்யாணம் நடந்திடுச்சு...

ம்ம் அதுக்கு...

அவ வந்தவுடன் எங்க பிரண்டு எல்லாம் சேர்ந்து..பர்ஸ்ட் நைட்ல என் நடந்துச்சு கேட்டோம்...

ஒரு நிமிஷம் இரு..வெளியே போயிட்டு வந்தான் சிவா..என்ன சொன்ன..

அதுபோல இன்னிக்கு காலேஜ் போனேன் வைய்..என்னை ரௌன்ட் கட்டிடுவாங்க பாஸ் பேட்ச் பேட்சா வருவாளுங்க...நம்ம பர்ஸ்ட் நைட் பத்தி கேட்பாங்க...

ச்சீ.. என்ன பொண்ணுங்க நீங்க...

அப்படி சொல்லாத சிவா...வாழ்க்கைக்கு இதுதான் ரொம்ப அவசியம்......அன்னிக்கு நைட் காமர்ஸ், அக்கௌன்ட்ஸ் தெரிஞ்சி என்ன யூஸ் கெமிஸ்ட்ரி தெரியுனும்...இப்ப புரியுதா நான் ஏன் போக மாட்டேன்...

நைட்டு என்ன செஞ்சிங்க கேட்டா என்ன சொல்லறது...

ம்ம் பானையும் சட்டியும் செஞ்சோம் சொல்லு...

சிவா இது டபுள் மீனிங்...

ம்ம் சொப்பு வச்சு விளையாடுனும் சொல்லு...

அய்யோ சிவா நீ பச்சபுள்ளையா இருக்கீயே இது டிரிபிள் மீனிங்...

அதெல்லாம் எனக்கு தெரியாது பத்து நிமிசத்தில ,நீ காலேஜிக்கு கிளம்பற...அப்பறம்

ஒழுங்கா டிரஸ் போடு....சுடிதார் வாங்கி வச்சிருக்கேன்....

சக்தி கப்போர்டை திறந்து டிராவல் பேக்கை எடுக்க...ஏய் உங்க வீட்டிலிருந்து எதுவும் எடுத்துட்டு வரக்கூடாது சொன்னேல்ல...இந்த பேக் எப்படி வந்தது..

ஊர வீட்டு போறேன்னு... பார்த்து பார்த்து டிரஸ் எடுத்தேன்..எல்லாம் புதுசு..எப்படி அங்க விட்டுவரது...போடா நீயும் உன் கொள்கையும்...இங்க பாரு எங்க அப்பா சம்பாரிச்ச சொத்து...எனக்கு உரிமை இருக்கு...உனக்கு யாரும் கொடுக்கல...உனக்கு தன்மானம் இடம் கொடுக்கலன்னா...இந்த டிரஸோட பில் இருக்கு எங்க அப்பாகிட்ட கொடுத்துடு...
நல்லா வாயை வளர்த்து வச்சிக்கோ படிக்க மட்டும் செய்யாத... ம்ம் கையில்லாத டிரஸ் போடாத...

இந்த பேக்கல இருக்குதெல்லாம் அந்த மாதிரி டிரஸ்தான் சிவா...

சரி நம்ம ரூமுல தூங்க சொல்ல போட்டுக்கோ...வெளியே நிறைய பேர் வருவாங்க சக்தி...

சிவா மச்சான் இப்ப புரியுது...அவனை பார்த்து கண்னை சிமிட்டி... பொண்டாட்டிய நீதான் ரசிக்கனும் நினைக்கிற...

அசிங்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு..சீக்கீரம் ரெடியாகி வாடி டைம் ஆகுது...
.....

காலேஜ் ப்ரேக் டைம்மில்...சிவா அண்ணா...என்ன குமாரு...அண்ணா உங்க மானம் கப்பலேறுது...சீக்கீரம் சக்தியை பாருங்க...

சித்தப்பூ இவ என்ன பண்ணி வச்சா தெரியிலையே சொல்லும்போதே பிரபு என்ற மாணவன் கேன்டின் வந்தான்...சிவாண்ணே செம அப்படியே உங்க ரொமன்ஸ் புல்லரிக்குது... இப்ப தான் என் ஆளு சொன்னா...என்ன ரொமன்ஸு...அந்த கிஸ் சீன் இருக்கே

என்ன சொல்லிருக்கா...சக்தியை தேடி அவ கிளாஸிற்கு சென்றான்..அங்கே அவ இல்லை..சற்று தொலைவில் மரத்திற்கு அடியில் பென்ச் போட்டிருக்க சக்தியை சுற்றி நிறைய பெண்கள் உட்கார்ந்து சக்தி பேசுவதை கேட்டார்கள்...

இதுதான் நடந்துச்சி அப்புறம் நான் தான் போது நான் படிக்கனும்...படிப்புதான் முக்கியம் காலேஜ் வந்துட்டேன். ம்ம் எனக்கு டையர்டா தான் இருக்கு என் இடுப்ப உடைச்சிட்டான்...போதும்மா கிளம்புங்க... எல்லாரும் கிளம்ப..வனிதா அவளை பார்த்துக்கொண்ட இருந்தாள்...

என்னடி நம்பலையா...இல்ல கடைசியில சொன்ன பாரு படிப்புதான் முக்கியமுனு

அப்பதான் டவுட் வந்தது.

கண்டுபிடிச்சிட்டியா...ஏய் தேர்டு இயர் கேர்ல்ஸ் வராங்க..சக்தி...
அதில் ஒருத்தி என்ன சக்தி காதலிக்க படாதோர் சங்கம் ஊத்திக்கிச்சா..கடைசில நீயே லவ்ல விழுந்துட்டே...சிவாவும் அவளை பார்த்து பின் பக்கமாக வந்தான்..

என்ன செய்றது... நீங்க அவனுக்கு பிரப்போஸ் செஞ்சிங்க..நான் அவன் ஹார்ட்ல கிஸ் அடிச்சேன்

ஓ..ஓஓஓ..

.பையன் ரொம்ப கெஞ்சினான்... என்ன லவ் பண்ணு நீ இல்லாம நான் உயிர் வாழ மாட்டேன்..கையை பிடிச்சிட்டான்..அப்பறம் கால்ல விழுதுட்டா...

அய்யையோ ஆண் பாவம் பொல்லாதது.. சரி ஓகே சொல்லிட்டேன்.அது எதோ பழமொழி சொல்லுவாங்களே...நாம்ம லவ் பண்ணுறதை விட நம்மளை லவ் பண்ணுறவங்களுக்கு வாழ்க்கை கொடுக்கனும்...தப்பா சொல்லிட்டோமா மனதில் நினைத்தால்...

இன்னொரு பெண் , இதை கேட்க வரல பேபி...நேற்று முதலிரவு... என்னாச்சு...

அதையேன் கேட்கற.. எனக்கு வெட்கம்மா இருக்கு...உள்ள பால் எடுத்துட்டு போனேன்னா...தீடிரென்று பார்த்தா என் கால் கீழேயில்ல..

எங்க இருந்துச்சு சக்தி...

என்னைய தூக்கிட்டான்... நான் நடந்தா அவனுக்கு வலிக்குதாம்...அப்பறம் மெல்ல கை விரலில் முத்தமிட்டான் ...பெட்டில படுக்க வச்சான்...செமையா இருந்தானா நான் கண்ணை மூடிட்டேன்...கிட்ட வந்தான் இப்படித்தான் மூக்கும் மூக்கும் உரசிச்சா...

சக்தி... சிவா கத்த...

அய்யோ சிவாடி என்று எல்லோரும் அந்த இடத்தை விட்டு ஓட...கோபத்தில் அவ கையை பிடிச்சி இழுத்து கொண்டே கேன்டினுக்கு வந்தான்...

டேய் மச்சான் கோபத்தில ஒண்ணு பண்ணாதடா..நேத்து தான்டா கல்யாணம் ஆயிடுச்சு வேலு அவனருகில் வர...வேலுவை முறைத்துவிட்டு அமைதியா போ என்றான்.

அவளை ரூமில் தள்ளி கதவை தாழிட்டான்...சக்தியின் கையை பின்னால் முறுக்கி...எரும என்ன சொல்லிட்டு இருக்க... இது நம்ம அந்தரங்கம்டி... உனக்கு புத்தி இருக்காடி..பப்ளிக்கா இப்படி பேசுவியா...வாயா இது...அடிக்க வர...

ஏன் நிறுத்திட்ட அடி... முழுசா நீ கேட்கல...அடுத்தது லைட் ஆப் பண்ணிட்டோம் சொல்லி அனுப்பிடுவேன்... இது மூனாவது ரௌன்ட் தெரியுமா...இப்ப சொல்லிட்டா பிறகு கேட்க மாட்டாங்க...

நீதான் எதுவும் செய்யலையே அப்பறம் என்ன அலுத்துகிற...நான் அப்பவே காலேஜிக்கு போக மாட்டேன் சொன்னேன்...நீதான்...

இவ பாவம்மா பேசறான்னு இரங்கி போக கூடாது ஒவர் அட்வான்டேஜ் எடுப்பா...
நான் உனக்கு பையனாடி..உன் கையை பிடிச்சி கெஞ்சினேன்னா...சுத்தி சுத்தி வந்து லவ்
பண்ணேன்னா...எப்படி இப்படி புளுகுற...

நம்ம இரண்டு பேருக்கும் ஒண்ணும் நடக்கல தெரிஞ்சிடுஞ்சி...கேப்புல சைக்கிள் ஒட்டிடுவாளுங்க...

இதெல்லாம் விவரம்தான்...அம்மா மதியம் லன்ச் கொடுத்தனுப்பிருகாங்க... டிபன் கேரியரை கொடுக்க...

வேணாம் நம்ம கேன்டில்ல சாப்பிட்டுக்குவேன்...

வீட்டு சாப்பாடுதான் சாப்பிடனும்...அம்மா உனக்கு பிடிக்கும் என்று ஆசையா சமைச்சி
கொடுத்தாங்க..இந்தா கேரியரை கையில் கொடுக்க...

உனக்கு என்று சிவாவை நிமிர்ந்து பார்க்க...
எனக்கு வெளியே வேலையிருக்கு..நான் கிளம்பறேன்...கிளாஸ ஒழுங்கா அட்டன் செய்.
புரியுதா...

ம்ம்...சிவா கிளம்ப...அட்டன்டர் சக்தியிடம் வந்து அப்பா உன்னை கூப்பிடுறாரும்மா என்றான்.
.......
நானே போய் பார்க்கலாம் நினைச்சேன்... அப்பா கோவமா இருப்பாரு...சமாதானம் படுத்தனம்...தன் கேரியரை கையில் எடுத்துக் கொண்டு சென்றாள்..

கதவை தட்டி உள்ளே செல்ல..பையிலை பார்த்த படி உட்காரு என்று கையை காண்பித்தார்...

அவளை நிமிர்ந்து பார்த்து என்ன சொல்லுறான் என் மாப்பிள்ளை....

அப்பா என்று சக்தி கண்கள் கலங்க...அவளருகில் வந்து தலையை தடவி விட்டாரு...எப்படிடா இருக்க சக்திம்மா...

அப்பா என்று கருணாவை அனைத்துக்கொண்டாள். கோவமில்லையா என்மீது...
இல்லடா..அம்மா உன் ஞாபகமா இருக்கு சொல்லுறா..வீட்டுக்கு வாடா...
ம்ம்ம் என்று தலையை ஆட்டினாள்..

அங்க உன்னை நல்லா பார்த்துக்கிறாங்களா ...
ம்ம் அத்தை ,மோகன் ஸ்வீட்ப்பா..நல்லா பேசுறாங்க...வாங்கப்பா சாப்பிடலாம் அத்தை கொடுத்து அனுப்பிருங்காங்க...இருவரும் சாப்பிட்டனர்..

என்ன சொல்லுறான் சிவா...இரண்டு முறை கேட்டேன்ம்மா என் பொண்ணு சக்தியை கல்யாணம் செஞ்சிக்கோ..அதுக்கு உன் புருஷன் உன்னை பிடிக்கல சொல்லிட்டான்ம்மா...
என்னப்பா சொல்லிறீங்க..என்னைய ரிஜக்ட் பண்ணிட்டான்னா...

ஆமாம்மா..வீட்டுக்கே போய் கேட்டேன்...இப்ப முடியாது சொன்னான்.

என்னது நான் ரிஜக்டட் பீஸா...அப்போ சிவா வேண்டாம் சொன்ன பெண்களில் நானும் ஒருத்தியா...
-------தெறிக்க விடுவான்.....
 
நல்லா இருக்கு பதிவு
சிவா சிவ சிவா
சக்தி மேடை போட்டு
கலக்கறா
???
என்னது ரெண்டு தடவை
வேண்டாம்னு சொல்லிட்டானா??
 
நல்லா இருக்கு பதிவு
சிவா சிவ சிவா
சக்தி மேடை போட்டு
கலக்கறா
???
என்னது ரெண்டு தடவை
வேண்டாம்னு சொல்லிட்டானா??
ரொம்ப நன்றி சரோ சிஸ் தொடர்ந்து நீங்க கொடுத்த கமென்ட்ஸ்..எனக்கு ஆர்வத்தை கொடுக்கிறது
 
Top