Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-18

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-18

அடுத்த நாள் மதியம், கேரியரில் சாப்பாடு கட்டிக்கொண்டே ஆனந்தவல்லி, பூவரசுக்கு காலையிலிருந்து தலைவலியாம், கொஞ்சம் ஜூரம் சொல்லுறான். சாப்பிட வேற வரல என்ன என்று கேட்க மாட்டியா சுந்தரி.

கேட்கிறேன் ம்மா, சொல்லி போனை போட்டாள், ஹலோ மாமா என்று பேச, அண்ணி நான் லோகு பேசறேன், அண்ணா படுத்துட்டு இருக்காரு பயங்கற தலைவலியாம்.

ஏன் ஹாஸ்பிட்டல் போக வேண்டியதுதானே,

கேட்டேன் அண்ணி, அதுக்கு அண்ணனே சொல்லிச்சு, அவரு பொண்டாட்டியே டாக்டராம், வந்து கவனிச்சிப்பாங்களாம்.

நீயா சொல்லுறீயா இல்ல உங்க அண்ணா சொன்னாறா.

சத்தியமா அண்ணி, எனக்கு வேலை இருக்கு நீங்க வந்திங்கன்னா விட்டுட்டு போவேன்.

சரி கிளம்பி வரேன். அம்மா சாப்பாடு கொடு நான் பாத்துட்டு வரேன் என்று ரெடியாகி கிளம்பினாள்.

கூட மலர கூட்டிட்டு போ, புரியுதா நான் சொல்லுறது.

எல்லா தெரியுது, உன் தம்பியே ஒரு சாமியாரு, இதுவேரையா. மலர் கிளம்பி வந்தாள், இருவரும் வண்டியில் பண்னைவீட்டுக்கு சென்றார்கள்.

ஆனந்தவல்லியை பவளத்தாய் கூப்பிட ,
என்னம்மா.

எனக்கு என்னவோ உன் பொண்ணு ஆக்ட் பண்ணறாலோ தோணுது.
இவங்களுக்குள்ள ஏதாவது நடந்திருக்குமா.

அய்யோ அம்மா, நம்ம சுந்தரி பச்ச மண்ணுமா. என் தம்பி இன்னும் மொறைச்சிட்டு தான் இருக்கான். நானே சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன் இதுங்க இரண்டும் ஒண்ணு சேரனும்.

என்னமோ போ என்று தன் வேலையை பார்த்தாள் பவளத்தாயி.

அங்கே பண்ணைவீட்டில், லோகு நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன். சரி அண்ணி சொல்லி பூவரசனை எழுப்பிவிட்டு கிளம்பிச் சென்றான். பூவரசன் எழுந்து ஹாலில் வந்து உட்கார்ந்தான்.

“என்ன மாமா உடம்புக்கு“,

“தலைவலி ஓவரா இருக்கு நைட்டு புல்லா தூங்கல“,

“ஏன் தூங்க வேண்டியதானே. “

“தலையில் கையை வைத்து கொண்டே, கணக்கு பார்த்திட்டு இருந்தேன்“.

சரி வாங்க சாப்பிடலாம் அப்பறம் டேபிலேட் தரேன். சுந்தரி சாப்பாடு பரிமாற பூவரசன் சாப்பிட்டு முடித்தான். பாத்திரத்தை எடுத்திட்டு போய் கிச்சனில் வைத்து , அப்படியே கிச்சனை சுத்தப்படுத்தினாள்.

டிவி பார்த்துக்கொண்டிருந்த மலரிடம் , “ஏய் கொடுக்கு, நீ வீட்டுக்கு போ, உன் பிரண்டை அப்பறம் அனுப்பிவிடுறேன்“-பூவரசன்.

சரிங்க அண்ணா, சொல்லி கிளம்பிவிட்டாள் மலர், தன் அக்காவுக்கு போன் செய்து, பேசி வைத்தான் பூவரசன்.

கிச்சனிலிருந்து வெளியே வந்தாள்,மாமா இந்தாங்க டேபிளேட் லைட்டா தான் இருக்கு,நான் கிளம்புறேன், “மலர் எங்கே மாமா“ , கையை கட்டிக்கொண்டு பூவரசன், “அவள் கிளம்பிட்டா பொம்மி“.

“போயிட்டாளா எங்கிட்ட சொல்லாத எப்படி போனா, சரி நான் வரேன்ம்மா“, இவள் கிளம்ப வழியை மறைத்தான், மாமா வழிய விடு, அப்படியே அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.

“என்னைய சீக்கிரம் வரச்சொல்லிருக்காங்க, இல்ல உங்க அக்கா என்னைய ஆஞ்சிபுடுவா“.

அவனைத் தள்ளிவிட்டு கதவை திறக்க போனாள், கதவு பூட்டியிருந்தது
.
“ஏய் சொப்பன சுந்தரி இங்க பாருடி“,

தன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு , “மாமா அப்படி கூப்பிடாத எனக்கு கோவம் வரும்“.

“வரட்டும், நீ சொப்பன சுந்தரிதான, உன்னால தான்டி நான் நைட்டே தூங்கல சும்மா இருந்த என்னைய நீதான்டி ஏத்திவிட்டு போயிட்ட. சொப்பன சுந்தரி. “

தன் கையிலிருந்த பேக்கை அவன்மேல் வீசினாள். “ ஹாஹா குட் கேட்ச் பேபி, ஓஓ நீ பேபியில்ல தானே “. அவள் அருகே வந்தான், மாமா கிட்ட வராதே ஆடி மாசம் வேற எங்க அம்மா சொல்லி அனுப்பிருக்காங்க.

“நீ டாக்டர் தான, ஆடி மாசத்த எப்படி அட்ஜஸ்ட் பண்ணனும் தெரியாது. “

“தெரியும், ஆனா பட்டபகல்ல போ மாமா, நான் வரல. “

அவளை அலக்கா தோளில் தூக்கி பெட்ரூமுக்கு சென்றான். மாமா விடு என்ன, அவளை கீழே இறக்கினான். பெட்டில் முழுவதும் மல்லி, ரோஜாவால் அலங்கரிக்க பட்டது.

“என்ன அப்படி பார்க்கிறவ, அன்னிக்கு நீதான ஃபீல் பண்ண பூவலெல்லாம் வேஸ்டா சொல்லி , சோ இது ஃபாஸ்ட் பகல். நான் எடுத்துக் கொடுத்த புளு சாரி கட்டிட்டு வா, இந்தா பூ வச்சிக்கோ என்று கையில் மல்லிப்பூவை கொடுத்துட்டு ,நான் குளிச்சிட்டு வரேன் பொம்மி,மாமா செம மூட். “

அவன் வருவதற்குள் சேலையை கட்டி தலையை வாரி பூ வைத்தாள்.

வெளியே வந்த பூவரசன் வாவ் சூப்பர்டி ஜில்லு என்றான். பட்டுவேட்டி சட்டை அணிந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

மாமா,ம்ம் , எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, எனக்கும் தான், ஓவர் ஃபீலிங்ஸா இருக்கு. இங்க பாரு சொல்லி அவள் முகத்தை இரு கையால் தாங்கினான்.

அன்னிக்கு அந்த பசங்க சொப்பண சுந்தரி மட்டுமா சொன்னாங்க.

ம்ம் என்று தலையை ஆட்டினாள். பொய் சொல்லுற,நான் சொல்லட்டும்மா. இந்த சொப்பனசுந்தரியை யாரு வச்சிருக்காங்க, ஒருத்தன் கேட்டதற்கு பூவரசன் வச்சிருக்கானு பேசினாங்க கரெக்டா.

ம்ம் எப்படி தெரியும், அடிக்க சொல்லவே சொல்லிட்டாங்க

மெல்ல கையிலிருந்து முத்தமிட்டான். மாமா கூச்சமா இருக்கு, என்று அவள் சினுங்க கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமித்தான், ஏய் இடும்புல மச்சம் இருந்துச்சே அது எங்கடி காணோம் , நீ சின்ன பொண்ணா இருக்க சொல்ல பார்த்தது,ஹாங் கண்டுபிடிச்சிட்டேன். பூக்கள் கசங்க, பூவின் மென்மையில் அவள் பெண்மையை உணர்ந்தான்.

எல்லாம் முடிந்து பூவரசன் தூங்க, அவன் மார்பில் படுத்துக்கொண்டு அவனை ரசித்துக்கொண்டிருந்தாள் சுந்தரனின் சுந்தரி. சிறிது நேரம் கழிந்து, குளித்து முடித்து சுடிதாரை அணிந்து கிச்சனுக்கு சென்று காபி போட்டாள், மணி நாலு ஆயிடுச்சு மாமாவ எழுப்பனும் நினைக்க அவளை பின்னிருந்து அனைத்தான்.

என்னடி சீக்கீரம் எழுந்திட்ட அவள் காதோரம் பேச, அவள் முகம் வெட்கத்தில் சிவப்பானது. காபியை அவன் கையில் கொடுத்தாள்.

மாமா, அம்மா என்ன நினைப்பாங்க.

ஏய் நான் என் பொண்டாட்டி கூடதான் இருந்தேன் , அதுக்கேன் பயப்படுற,

ஆனாலும் உங்க அம்மாவுக்கு நம்ம மேல டவுட்டுதான்.

அக்காகிட்ட சொல்லிட்டேன், கம்பயூட்டரல வேலயிருக்கு உன்னை ரைஸ் மில்லுக்கு அழைச்சிட்டு போறேன்.

அப்பறம் ரெடியா இரு சேலத்தில நம்ம டிராவல்ஸ் ஆளுங்க பார்ட்டி கொடுக்கிறாங்க நமக்கு. அப்படியே நம்மக்கிட்ட பிஸினஸ் பண்ணறவங்களும் வருவாங்க. சரி மாமா.

பெரியவீட்டில் இருவரும் நுழைந்தார்கள், சுந்தரி கொஞ்சமா நகையை போட்டுக்கோ, இப்படி போகாத சிம்பிளா சொல்லி ஆனந்தவல்லி பொண்ணுக்கு நகைகள் அனுவிக்க. என் செல்லம் புடவையில என் கண்ணே பட்டுவிடும் போல என்று தன் பேத்தியை கொஞ்சினாள் பவளத்தாயி.

எப்படிடா போறிங்க, அக்கா பைக்கில போனா ஊர் என்ன சொல்லும். அதான் காரை எடுத்திட்டு போறேன்.சரிடா.

இருவரும் கிளம்பி வெளியே வர, பூவரசன் காரை எடுக்க சென்றான். சண்முக வேலு போன் பண்ணார் சுந்தரிக்கு ,ஹெட் போனில் போட்டு மெதுவாக பேசினாள் சுந்தரி பூவரசனுக்கு பயந்து, எப்படிடா இருக்க ,என்ன சொல்லுறான் மாப்பிள, முறைச்சிட்டு இருந்தானே . அப்பா நான் நல்லாயிருக்கேன், உன் மாப்பிள சும்மா நடிப்பான் யாருக்கும் தெரியாது எனக்கு மட்டும் தான் தெரியும். கார் வர கதவை திறந்து அதில் ஏறினாள்.

வண்டி ஓட்டிக்கொண்டே செமயா இருக்குடி இந்த டிரஸ். இந்நேரம் எங்கயிருக்க வேண்டியது,

எங்கே

ஹனிமூன்ல, உங்க அப்பன் நன்றி கெட்டவன்டி, ஐய்யோ அப்பா லைனில் இருக்கிறதே மறந்துட்டோம் நினைக்க , சுந்தரி கட் பண்ணாத சண்முகவேலு சொல்ல.

எங்க அப்பா அப்பவே தன் பொண்ண ஹனிமுனுக்கு சிம்லாவுக்கு அனுப்பினாரு உங்க அப்பன் என்ன பண்ணிருக்குனும். அன்னிக்கு தன் பொண்ண அனுப்பினாரே இன்னிக்கு நம்ம பொண்ண அனுப்புனும் எண்ணமிருக்கா. கொடுத்தாரு பாரு சீரு , நீயும் இளிச்சிக்கிட்டே வாங்கிட்ட எவ்வளவு பிரச்சனை வரும் தெரியுமாடி.

அவனுக்கு ஏன் அவ்வளவு கோவம் தெரியுமா பொம்மி ,நானும் வரேன் அடம்பிடிச்சான்ம்மா கேளேன்.

உனக்கு ஏன் அவ்வளவு கோவம் பூவா, அதுவா என்னைய விட்டுட்டே போயிட்டான்.
அய்ய அவங்க கூட போலாமா,

ஏய் அந்த ஆளு இரண்டாவது டைம் போனாருடி , அப்பதான் என்னைய கூட்டிட்டு போக சொன்னேன். ஆனா இப்பதான் தெரியுது நீ பொறக்க பெஸ்மெண்டே அங்கதான் போட்டாரு போல, நீ எவ்வளவு ஸாப்ட் தெரியுமா பேச சொல்லே போனை கட் பண்ணினாள்.

மாமா, மூனு நாள் லீவ் எனக்கு

இதையேன்டி இவ்வளவு லேட்டா சொல்லுற, அய்யோ இன்னிக்கு பண்ணோமே அதையே கண்டினியூ செய்யலாமா ஜில்லு.
ச்சீ போ பூவா, எங்காவது வெளியே போலாம்.
பார்ட்டி முடிந்து, கார் எடுக்க பார்கிங்கு வந்தார்கள் பூசவரசனும் , பொம்மியும்.
ஹலோ, பூவரசன் என்ன இந்த பக்கம் என்று துரைப்பாண்டி, கேட்க , ஹோ சுந்தரியும் வந்திருக்கா, என்ன சுந்தரி எப்படியிருக்க.
டேய் உனக்கு என்ன வேனும் இப்ப –பூவரசன்
பூவரசன் பக்கத்தில் திவாகர் வந்து நின்றான்.
ஹாய் ஐம் திவாகர், உங்க பக்கத்து ஊரு,
தெரியும் திவாகர் ஃபரம் லன்டன், இவனோட என்ன வேலை திவாகர்.
பூவரசு ,திவா என்ன ஃபிரன்டு, நீ இப்படி பேசறத பார்த்தா ஊர் தலைவர்கள் சொல்லியிருப்பாங்க போல.
“எவ்வளவு விலை சொல்லு நான் கொடுக்கிறேன் என்ன சொல்லுற“ திவாகர் சிகரேட் பற்ற வைத்துக்கொண்டே கேட்டான்.
“போடா“ சொல்லிட்டு சுந்தரியை கூட்டிக்கொண்டு காரில் ஏறினான்.
மரியாதை தெரியுதா பாரு இவனுக்கு,
திவா , அவன் கை தான் பேசும் அதிசியமா வாய் பேசுது. அதுக்குதான் என் மாமா சொத்த இவன் பெயரில் எழுதிருக்காரு.







 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top