Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே- ஒரு சின்ன முன்னோட்டம்

Advertisement

உங்களுடைய சாரலாய் தீண்டின்னாஐய் அன்பே ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நித்யா மாரியப்பன் டியர்

மிக்க நன்றி சிஸ்?
 
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்:giggle:

நான் நித்யா மாரியப்பன்..எழுத்துலகத்துல இப்போ தான் கால் பதிச்சிருக்கேன்...இந்த போட்டியில நானும் கலந்துக்கிறதுல ரொம்ப ஹேப்பி☺☺

சாரலாய் தீண்டினாய் அன்பே - சூரியா, சந்தியா இவங்களுக்குள்ள நடக்கிற ஒரு அழகான கியூட்டான காதல் கதை


சூரியா

View attachment 311

சந்தியா

View attachment 312


“ஹே பிரவுனி! ஓவரா பேசாத ஓகே! பண்ணுறது ஃபுல்லா பித்தலாட்டம். இதுல உனக்கு பெருமை வேற” என்றான் சூரியா அலட்சியமாக.

“ஹலோ யாருடா பிரவுனி? நானா? நீ இப்பிடி மார்ஸ்மாலோ மாதிரி வெள்ளை வெளேர்னு இருந்தா உன் பக்கத்துல தமன்னா வந்து நின்னா கூட பிரவுனா தான் தெரியும். அப்பிடியே இவங்க வீட்டுல புதைச்சு வச்சிருந்த புதையலை நான் திருடிட்டேன் பாரு, சார் என் மேல கோவப்படுறதுக்கு. நாலணா நெல்லிக்காய்க்கு இவ்ளோ பில்டப்பா?” என்று சந்தியாவும் சளைக்காமல் அவனுக்கு பதிலளித்தாள்.

அவளது “நாலணா’ என்ற வார்த்தையில் குழம்பியவன் “ஏய் ஒன் செகண்ட்! வாட் இஸ் நாலணா?” என்று புரியாமல் விழிக்க அவனை இடுப்பில் இரு கைகளையும் ஊன்றியபடி முறைத்தாள் சந்தியா.

பின்னர் நக்கலாக உச்சுக் கொட்டியவள் “சாருக்கு நாலணானா என்னனு தெரியாது போல! என்ன பண்ணுறது சார்! உங்க டீலிங் எல்லாம் டாலர்ல இருக்கும். உங்களுக்குப் போய் நாலணா, எட்டணாலாம் தெரியுமா? நீ வா சுமிக்கா, இந்த மார்ஸ்மாலோ கிட்ட பேசி நம்ம டைமை வேஸ்ட் பண்ணக் கூடாது” என்றுச் சொன்னபடி அவள் அருகில் நின்ற சுமித்ராவை அழைத்துக் கொண்டு வேகமாக படிக்கட்டிகளில் ஓடி மறைந்தாள்.

அவள் போகும் போதே “ஹேய் பிரவுனி! பிளீஸ் நாலணான்னா என்னனு சொல்லிட்டுப் போ! எனக்கு கியூரிசியாட்டி தாங்காது” என்று சூரியா கத்த அவளோ காதில் போட்டுக் கொள்ளாமல் கீழே சென்றுவிட்டாள்.....

சீக்கிரமா யூடியோட வர்றேன் ஃப்ரெண்ட்ஸ்:giggle::giggle::giggle:...

குட் நைட்??
Welcome nithi. All the best da???
 
Top