மடல் வழி கவியோடு ஒரு காதல் கதை எழுதி முடிக்க, இங்கே கண்ணுக்கு அதே மடல் என்ற பெயரோடு ஒரு கதை. மடல் தூதோடு காதல் கசக்குமா?
படிக்காமல் எப்படி? முடிக்கமட்டும் என்று இருந்து, இதோ படித்தும் முடிதாயிற்று.
என் இமைக்குள், சரண்யா ஹேமாவின், "மடல் பூத்த முல்லை"
மடல் வழி கொள்ளும் காதல்
செல் வழி இன்று வந்த காதல்களை மிகைத்த காதல் சொல்லும் தானே..!
அலைபேசி வழியே தினம் நலம் கேட்டல் தித்திக்கும் எனில்
மடல் வரும் நலம் கேட்டல் தேனாய் இருக்கும் தானே..!
கதையின் கருவே கொஞ்சம் இப்படியும் ஆகுமா எனும் விதமாய்.
நடக்காத நிகழ்வல்ல இருந்தும், நடந்ததில் உண்டாகும் மாற்றங்கள் ஏற்படுத்தும் வடுக்கள் இங்கே வித்தியாசமாய்...
முல்லை அவள் மலர்தான்...
வாசன் அவள் வாசம் தேடும் வண்டுதான்
எப்படி ஆகிப்போகிறான்...
எப்படி ஆகிப்போகிறாள்...
அழகாய் நகரும் கதை
கதாபாத்திரங்கள் அனைத்தும் அத்தையாய், அன்னையாய், அண்ணியாய், அண்ணனாய் அழகாய்...
வாழ்த்துக்கள் எழுத்தாளரே
அன்புடன்,
இமையி.