பவி செய்வது இப்போதும் தவறுதான். விஜய் நிலமை தெரிந்தும் ஒரு வார்த்தை கூட மன்னிப்பு கேட்காமல் ரோஷம் வேற இந்த பெண்ணுக்கு. எருமையையும் வசந்தியையும் ஒரு காய்ச்சு காய்ச்சியிருந்தால் கூட மனசு ஆறியிருக்கும். கணவனாக பார்க்காவிட்டால் கூட ஒரு மனிதாபிமானமாக அவர்களை ஏன் இப்படி ஒரு குடும்பத்தையே சிதற விட்டிருக்கிறீர்களே என்று கேள்வி கேட்க துப்பில்லை இந்த பொண்ணுக்கு.
விஜய் நீங்கள் அந்த எருமையை சும்மா விடாதீர்கள். மேலே மேலே என்ன துன்பம் கொடுக்கமுடியுமோ அத்தனையும் கொடுத்து கதற விடுங்கள். பவியை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
அவ்வளவு சிரமம்லாம் கிடையாதுங்க. எதிரிக் கூட்டத்தில் நமக்கு உதவுகிற சிறு துரும்பையும் கொண்டாடுகிற மனம்தான் மனித மனம்.
பவித்ரா, பெரிசால்லாம் எதுவும் செய்ய வேண்டாம். தன் அத்தையின் பிறந்தநாள் போல விவரங்களை தன் பெரியம்மாவிடம் கேட்டு தெரிந்து, அதிரடியாய் விஜய் வீட்டில் வந்து அந்த நாளை கொண்டாடினால், தன் அத்தையை தான் மதிக்கிறேன்னு புரிய வைத்தாலே போதும். விஜயின் மனம், பவியிடம் ஓடி விடும்.