Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 23

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
வழியில் ஒரு பெரிய ஆலமரமும் அதன் அருகில் ஒரு பால்வாடியும் உண்டு. பகலில் ஆள் நடமாட்டமும் குழந்தைகள் சத்தமுமாக ரம்மியமாக இருக்கும் அந்த இடம் இரவில் வெறிச்சோடி இருக்கும் ..

அந்த இடத்தை கடக்கும் போது கண்மணிக்குள் பயம் துளிர்த்தது . இது நாள் வரை இந்த நேரத்தில் தனியாக இங்கு வந்ததில்லை. இருட்டுக்குள் ஏதோ உருவம் நிற்பது போல் தோன்றியது..பிரமையாக இருக்குமோ என்று மதி மயங்கும் போதே 'சே ..இது என்ன ..இப்படி பயப்படுகிறோம் ..முன்தினம் இருந்த தைரியமெல்லாம் இப்போது எங்கே போனது .. ..யாராவது வந்தாலும் கையில இருக்கும் தேங்காயை எடுத்து அடித்து விடுவோம் ' என்று தன்னை தானே தேற்றியபடி நடந்தவள் ..சட்டென்று அந்த உருவம் தன் முன்னே வர வேகமாக தேங்காய் முடியை எடுத்து எரிய போனாள்..

"ஐயோ கண்மணி .. நாந்தான் "
கதிரின் குரலில் ஆசுவாசம் கொண்டவள் .."முன்னாலேயே சத்தம் குடுக்க மாட்டீங்களா? அடிச்சிருந்தேன்னா மண்டை உடைஞ்சிருக்கும் .." என்றாள் நய்யாண்டியாய் .

"தெரியும் தாயே ..நீதான் ஷார்ட்புட் சாம்பியனாச்சே ..ஸ்போர்ட்ஸ் கிளப் இன்ச்சார்ஜ் எனக்கு தெரியாம இருக்குமா ? அதை நீ ஒன்னும் நிரூபிக்க வேண்டாம்.." என்றவன் அவளை அந்த பெரிய மரத்தின் பின் அழைத்து சென்று நிறுத்த ..பெண்ணவளின் கால்களோ இரும்பு குண்டுகளாய் கனத்து நகர முடியாமல் தடுமாறின .

"நம்மாளு தனியா வராளே.. கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்னு பாத்தா ..நீ வயலென்சால்ல இருக்க ! அதுசரி கோயில்ல சாமிய பாக்காம என்ன தானே பாத்துக்கிட்டு இருந்தே ?"

"இல்லையே " என்ற அவளது அவசரமான பதிலே ஆம் என்று சொல்லாமல் சொல்ல ..
"பொண்ணுங்க இல்லைனு சொன்னா ஆமான்னு சொல்றதா தானே அர்த்தம் ..இப்போ நீ சொன்னதுக்கு என்னை தான் பார்த்தேன்னு அர்த்தம் "

"அப்போ சரி ..நான் ஆமான்னு சொல்லிடறேன் "

"அதுக்கும் பாத்தேன்னு தான் அர்த்தம் "

"ஹ்ம்ம் .." என்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் .." இப்படித்தான் நீங்க ஆராய்ச்சி பண்றீங்களா ? உங்க ரிசர்ச் ரிசல்ட் எல்லாம் இப்படித்தானா ? "
"பொண்ணுங்கள பத்தி இப்போ தானே ரிசர்ச் பண்ண ஆரம்பிச்சிருக்கேன் "
"என்னது பொண்ணுங்களா ?"
"சரி சரி ..தப்பா சொல்லிட்டேன்.. ஒரே ஒரு பொண்ண பத்தி ரிசர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன் "

சட்டென்று அவளைஅந்த பெரிய மரத்தின் மறைவுக்கு இழுத்தவன் பின்னோடு சாய்த்து இரு புறம் கரம் கொண்டு சிறை செய்ய .. இதயம் எம்பி குதித்தது கண்மணிக்கு.

"அப்படியென்ன ஆராய்ச்சி? இப்படிதனியா போற பொண்ண கடத்திட்டு வந்து தான் பண்ணுவீங்களா ?ரொம்ப தப்பான ஆராய்ச்சியா இருக்கும்போல இருக்கே..அதுதான் தப்பு தப்பா பண்றீங்க போல "


"அதுவும் நல்லது தானே ..தப்பா பண்ணுனா தானே திரும்ப சரியா பண்ணலாம் " என்றவன்


குரலை தழைத்து கொண்டவன் " ஃபார் எக்ஸ்சாம்பில் .." என்று ஆரம்பிக்க .."இதுக்குதான் இந்த வாத்திங்க கூடவே சகவாசம் வைக்க கூடாது .. எதையாவது கேட்ட நேரா சொல்ல மாடீங்களே உதாரணம் சொல்ல ஆரம்பிச்சிருவீங்களே "


"அப்போ என் கூட சகவாசம் வச்சிருக்க ..அப்படித்தானே "


"அய்யயோ ஆத்தாடி ..நீங்க ரொம்ப டிவிஸ்ட் பண்ணி பேசுறீங்க. நான் எங்க வச்சிருக்கேன் ? "


ஒரு மோகன புன்னகை புரிந்தவன் "வச்சிக்கோன்னு தான் சொல்றேன் "


"நீங்க ரொம்ப டபிள் மீனிங்கா பேசுறீங்க”


"சரி சிங்கிள் மீனிங்கா சொல்றேன். தப்பா கிஸ் பண்ணிட்டேன்னு வச்சுக்கோ ..திரும்ப ட்ரை பண்ணி சரியா கிஸ் பண்ணலாம்ல " என்று கூற 'அடியாத்தி.. என்னடா இது கிஸ் பண்ணறதை பத்தி பேசுறான் ? ' என்று நினைத்தவள்.. யாராவது பார்த்தால் என்ன ஆவது என்று உடல் பதற ..தூரத்தில் தாமரையின் குரல் கேட்க "ஐயோ அம்மாவும் அத்தையும் வராங்க .என்ன விடுங்க " என்று ஓட்டமாய் ஓடி வீட்டை அடைந்தாள் .



வீட்டிற்குள் வடிவும் கண்மணியும் நுழையவுமே.. கண்மணி நேராக தன் ஆத்தாவிடம் சென்று அன்றைய பூசை விபூதியும் குங்குமமும் அவருக்கு இட்டு விட "எனக்கொண்ணும் ஆகாது கண்ணு ..உன் கலியாணத்தை பாக்காம போகாது இந்த உசுரு" என்று இவளை தேற்றினார்.


பின்னர் உணவு முடிந்து அனைவரும் உறங்க செல்ல கண்மணிக்கோ விழிகளை மூடியதும் அன்று வெகு அருகாமையில் கண்ட கதிரின் முகமே வந்து போனது.


இருபுறமும் படுத்திருந்த தன்யஸ்ரீயும் ஸ்வாதியும் "என்னடி இன்னிக்கும் உன் ஆள பாத்தியா ? முகம் இப்படி ஜொலிக்குது." என்றனர் கிசுகிசுப்பான குரலில்.
 
Last edited:
Top