தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை சரோ வின் கரை தாண்டி வா காதலே எனது பார்வையில். மிருதுளா தன் அத்தை மகன் வினய் யை திருமணம் செய்து கொண்டு லண்டன் வருகிறாள். ஆனால் அவன் அங்கு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாழ்க்கையில் குழந்தை வர மிருதுளா மற்றும் வினய் இருவருக்கும் விவாகரத்து நடந்தாலும் மிருதுளா லண்டனில் இருந்து வேலை செய்து கொண்டு இந்தியா திரும்பாமல் இருக்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் அந்த நாட்டை சேர்ந்த அலெக்ஸ் க்கு அவள் மீது ஈடுபாடு வருகிறது. மிருதுக்கு அலெக்ஸ் செய்த உதவியாலும் அவன் மீது மெல்லிய ஈர்ப்பு வந்தாலும் இருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் அவனை நெருங்க முடியாது போனாலும் அவன் நட்பை விரும்புகிறாள். அலெக்ஸ் க்கும் அவனது சில செயல்களால் அவளது நிம்மதிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற தயக்கம் ஏற்படுகிறது. இருவரின் விருப்பம் என்னவானது அவர்கள் குடும்பத்தின் நிலைமை என்ன என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார். சரோவின் முந்தைய கதையை போலவே தெளிவான எழுத்து நடை. தான் சொல்ல வந்ததை கச்சிதமாக தந்திருக்கிறார். அலெக்ஸ் அன்பும் மாற்றமும் அழகாக சொல்லியிருக்கிறார். கலைவாணி நல்ல அம்மா, அண்ணன் மகேந்திரன் கதாபாத்திரமும் யதார்த்தமாக இருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்கிறது. வாழ்த்துகள் மா.