Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவு

Advertisement

இறைவன்
இலவசமாக ஈந்த
இணையில்லா கொடை
கனவு

இயலாது என்ற
இயக்கம் கூட
இசைக்கோர்த்து மெட்டமைத்து
இன்பராகம் பாடும்

கண்கள் கண்டிரா தேசத்தில்
கால்கள் நடைபயிலும்
காவேரி நீர் முழுதும்
கல்லணை கொண்டு நிற்கும்

நிறைவேற முடியாது
நீர்த்துப் போன காதலும்
நிலைபெற்று குடும்பமாக
நித்தமும் ஜீவித்து லயிக்கும்

கனவுப் பட்டறையில்
கவிதை வடிவம் பெரும்
காற்றில் மனம்
கடினமின்றி பயணிக்கும்

விழியின் மறைவில்
விரலின் நுனியில்
வாலிபம் கூட முதுமையில்
வித்தியாசமின்றி விஞ்சி நிற்கும்

கனவு இல்லையென்றால் யெம்
காளையரின் ஏக்கங்கள் வெறும்
காகித கிறுக்கல்களாகவே
கருகி சாம்பல் பூத்திருக்கும்

கனவு
கடவுளின்
கருணையில் பூத்த
கவித்துவமான பரிசு

அன்புடன்,
பாரதிப்பிரியன்
 
Top