இறைவன்
இலவசமாக ஈந்த
இணையில்லா கொடை
கனவு
இயலாது என்ற
இயக்கம் கூட
இசைக்கோர்த்து மெட்டமைத்து
இன்பராகம் பாடும்
கண்கள் கண்டிரா தேசத்தில்
கால்கள் நடைபயிலும்
காவேரி நீர் முழுதும்
கல்லணை கொண்டு நிற்கும்
நிறைவேற முடியாது
நீர்த்துப் போன காதலும்
நிலைபெற்று குடும்பமாக
நித்தமும் ஜீவித்து லயிக்கும்
கனவுப் பட்டறையில்
கவிதை வடிவம் பெரும்
காற்றில் மனம்
கடினமின்றி பயணிக்கும்
விழியின் மறைவில்
விரலின் நுனியில்
வாலிபம் கூட முதுமையில்
வித்தியாசமின்றி விஞ்சி நிற்கும்
கனவு இல்லையென்றால் யெம்
காளையரின் ஏக்கங்கள் வெறும்
காகித கிறுக்கல்களாகவே
கருகி சாம்பல் பூத்திருக்கும்
கனவு
கடவுளின்
கருணையில் பூத்த
கவித்துவமான பரிசு
அன்புடன்,
பாரதிப்பிரியன்
இலவசமாக ஈந்த
இணையில்லா கொடை
கனவு
இயலாது என்ற
இயக்கம் கூட
இசைக்கோர்த்து மெட்டமைத்து
இன்பராகம் பாடும்
கண்கள் கண்டிரா தேசத்தில்
கால்கள் நடைபயிலும்
காவேரி நீர் முழுதும்
கல்லணை கொண்டு நிற்கும்
நிறைவேற முடியாது
நீர்த்துப் போன காதலும்
நிலைபெற்று குடும்பமாக
நித்தமும் ஜீவித்து லயிக்கும்
கனவுப் பட்டறையில்
கவிதை வடிவம் பெரும்
காற்றில் மனம்
கடினமின்றி பயணிக்கும்
விழியின் மறைவில்
விரலின் நுனியில்
வாலிபம் கூட முதுமையில்
வித்தியாசமின்றி விஞ்சி நிற்கும்
கனவு இல்லையென்றால் யெம்
காளையரின் ஏக்கங்கள் வெறும்
காகித கிறுக்கல்களாகவே
கருகி சாம்பல் பூத்திருக்கும்
கனவு
கடவுளின்
கருணையில் பூத்த
கவித்துவமான பரிசு
அன்புடன்,
பாரதிப்பிரியன்