Thanks sis ? (kandipaa sis)தில்லைநாயகி நிலவரசனுக்கு பைத்தியம் பிடிக்க வைத்தது சரியல்ல புனிதமான மருத்துவத் தொழிலில் இவள் நேர்மையைக் கடைபிடிக்கவில்லை
தில்லைநாயகியை வேலரசன் கொன்றது அவளுக்கு சரியான தண்டனைதான்
ரொம்பவே அருமையா ஒரு க்ரைம் நாவலை கொடுத்திருக்கீங்க
நாவல் போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
மீண்டும் அழகான அடுத்ததொரு நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
Thanks sis ☺☺அழகிய பதிவு
Thanks sis ☺(ethu athigam aanalum athu aapathu thaan sis)அருமையான பதிவு
அதிதீவிர அன்பு வெறியா மாறி வேலுவ இப்படி செய்து விட்டான்
Thanks nantha ☺☺☺Story last varai nala interesting ah kondupoitinga
Melum niraya nala stories eludha vazhthukkal?
Thanks sago☺☺Really amazing story sissy i like it very much
Kandippa contest la one of the best story pa
Epi ku epi suspense en bpya ethunuchu than also enjoyed much ?
Tanq sis for giving this story
All the best for ur upcoming stories
Super story. All the best for writing more and more stories.அனைவரும் வேலுவை கோவத்துடனும் அதிர்ச்சியுடனும் நோக்கினர். ஆனால் ஹர்ஷா ஆரம்பத்தில் வேலு பேச ஆரம்பிக்கும் போதே இதை ஓரளவுக்கு எதிர் பார்த்தான். அதனால் தொடர்ந்து,
“ ஆனா வேலு நீ சொல்றமாதிரி தில்லைநாயகியை கொன்னிருந்தா அந்த ஒற்றை கால் மண்டபத்துல ரத்த கறை கிடைக்கலையே” என கேட்க
“ முதல்ல நான் அத்தையோட உடலை புதைச்சுட்டு விஷத்தை எடுத்துட்டு வந்துட்டேன் சார். ஆனா அதுக்கு அப்புறம் தான் நினைவு வந்துச்சு ரத்த கறை அங்க இருந்தது. அதனால் காலையில சீக்கிரமே போய் அதை துடைச்சுட்டேன்” என கூற
“ அப்போ அந்த இடைப்பட்ட நேரத்துல தான் கதிர் சட்டையில் அந்த ரத்த கறை ஒட்டிருக்கும். வேலு எல்லாத்தையும் துடைச்சப்புறம் மறுபடியும் கதிர் வந்து பார்த்தப்போ அங்க எந்தவொரு ரத்த கறையும் இல்லாமா இருந்துருக்கும் இல்ல மச்சி” என கிஷோர் மெல்லிய குரலில் ஹர்ஷாவிடம் கூற
“ ஹ்ம்ம் ஆமா கிச்சா” என கூறிக்கொண்டிருக்கும் போதே அங்கே காவல் துறையினர் உள்ளே நுழைந்தனர்.
காவல் துறையை கண்டு அனைவரும் சற்று திகைக்க;
கிஷோர் ஹர்ஷாவிடம் “ யாரு மச்சி போலீஸ்க்கு சொன்னது??” என கேட்டான்.
“ நான்தாண்டா. இவன்தான் வனிதாவை கொல்ல பார்த்தான்ன்னு எனக்கு தெரிஞ்சவுடன் நான் போலீஸ்க்கு சொல்லிட்டேன். ஆனா அதுக்குள்ள இவன்தான் எல்லாரோட இறப்புக்கு காரணம்ன்னு அவனே ஒத்துக்கிட்டான்” என கிஷோரிடம் கூறிவிட்டு அங்கு நின்று கொண்டிருந்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை நோக்கி சென்றான்.
பின் அடுத்தடுத்த காரியங்கள் துரிதமாக நடைபெற்று வேலரசனை கைது செய்தனர்.
அதன் பின் வேலைக்காரர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு தங்கள் வேலையை காண செல்ல. அங்கு ஹர்ஷா, கிஷோர், ஆதிலிங்க மூர்த்தி, விசித்ரா, சதாசிவம் மற்றும் சரத் மட்டுமே அமைதியாக நின்று கொண்டிருந்தனர்.
அனைவரும் ஆளுக்கொரு சிந்தனையில் இருக்க கிஷோர், திடீரென,
“ ஏன் மச்சி இந்த வேலு எப்படி எல்லா உண்மையையும் ஒத்துக்கிட்டான்??” என ஹர்ஷாவிடம் கேட்க
அனைவரும் ஹர்ஷாவை நோக்கினர் பதிலுக்காக. அதனை கண்ட ஹர்ஷா,
“ கிச்சா இயற்கையிலேயே வேலு ரொம்ப நல்லவன் அவன் பண்ணுன ஒரே தப்பு மயிலரசி மேல இருக்குற பாசத்தை, உரிமையை காதலன்னு ஒரு தப்பான பிம்பத்தை கொடுத்து, அந்த பொய்யான பிம்பத்துக்கு உயிர் கொடுக்க உயிரோட இருக்குற மயிலரசியை கொன்னுட்டான்.
ஆனா இதை அவன் அறிஞ்சு செய்யல. ஒருவிதமான பாதிக்க பட்ட மனநிலையில் தான் பண்ணிருக்கான். அதே மாதிரி தில்லைநாயகியையும் சின்ன வயசுல இருந்த கோவம்தான் இப்போ அவனை கொல்ல வச்சுருக்கு. ஆனா ரெண்டு பேரையும் கொன்னுட்டாலும் அவனோட மனசுல கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் இருக்கு அதே மாதிரி பண்ணையார் குடும்பத்தை பழிவாங்கற உணர்ச்சியும் அதிகம் இருக்கு.
விசித்ராவை கொல்ல முடியாமா போன எரிச்சல் கோவம்ன்னு இருக்குறப்போ நான் வேலரசன்னு சொன்னவுடன் அவன் மனசுல எந்த ஒரு யோசனையும் இல்லாம மனசுல இருந்ததை கோவமா கொட்டிட்டான் போல” என ஹர்ஷா தன் யூகத்தை கூற
“ அவனை முதல்ல மனநிலை காப்பகத்துல சேர்க்கணும்டா”
“ நிச்சயம் அங்கதான் போவான்” என ஹர்ஷா கூறிவிட்டு ஆதிலிங்க மூர்த்தியிடம் சென்று,
“ சார் நாங்க வந்த வேலை முடிஞ்சு இன்னைக்கு சாயங்காலம் கிளம்புறோம்” என கூற
ஆதிலிங்க மூர்த்தி “ என்ன தம்பி உடனடியா கிளம்புறேன்னு சொல்றிங்க. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்ல”
“ இல்ல சார் வேலை இருக்கு இதுவே தாமதம். “
“ அப்போ விசித்ரா கல்யாணத்துக்கு சொல்றேன் தம்பி கண்டிப்பா ரெண்டு பேரும் வந்துடனும்” என ஹர்ஷா கிஷோர் இருவரையும் அழைக்க
“ கண்டிப்பா சார். அப்படியே வனிதா கதிர் கல்யாணத்தையும் சேர்த்து வச்சுடுங்க” என கிஷோர் கூறினான்
“ நிச்சயமா தம்பி. அப்புறம் நான் கேட்ட உதவிக்காக இங்க தங்கி இருந்து உண்மையை ரொம்ப சிரமப்பட்டு கண்டுபிடிச்சு என் மகளோட உயிரையும் காப்பாத்திருக்கிங்க ரொம்ப நன்றிப்பா ரெண்டு பேருக்கும்” என ஆதிலிங்க மூர்த்தி தன் கைகளை கூப்பி நன்றி தெரிவிக்க
“ என்ன சார் நன்றின்னு சொல்லிக்கிட்டு. எங்களால ஒரு உயிரை காப்பாத்த முடிஞ்சுச்சேன்னு சந்தோசப்படுறோம் சார். சரி அப்போ நாங்க கிளம்ப தயாராக்குறோம் சார்” என கூறி அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று கிளம்பினர் ஹர்சாவும் கிஷோரும்.
அவர்கள் சென்ற பின் ஆதிலிங்க மூர்த்தியின் முன் நின்ற சரத் தன் கைகளை கூப்பி,
“ மாமா என்னைய மன்னுச்சுடுங்க” என மன்னிப்பு வேண்டினான்.
“ என்ன சரத்???.. என்ன ஆச்சு???.. எதுக்கு மன்னிப்பு கேட்குற?????. என ஆதிலிங்க மூர்த்தி பதற
“ இல்ல மாமா உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ண சம்மதிச்சதுக்கு காரணமே என தங்கச்சி மஞ்சரிக்கு நிலவரசனை கல்யாணம் பண்ணி வைக்கத்தான். ஆனா இப்போ வேலரசனை பார்க்கும் போது ஒரு வேளை நிலவன் மஞ்சரியை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா நிச்சயம் அவளை அழிச்சுக்குவா இல்ல அவளை சார்ந்தவர்களை அழிச்சுருவா .
ஏன்னா மஞ்சரியும் கிட்டத்தட்ட வேலரசன் மனநிலையில் தான் இருக்கா. அதனால அவளுக்கு புத்தி சொல்லுறதை விட்டுட்டு அவளோட ஆசை நிறைவேற நாங்க என்ன பண்ணுறதுன்னு யோசிச்சோம்மே தவிர மத்தவங்களுக்கு மனசு இருக்குன்னு யோசிக்கல.
இப்போ சொல்றேன் மாமா நான் விசித்ராவை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிக்குறேன். நாளைக்கு நிலவன் மஞ்சரி கல்யாணம் ஆனாலும் சரி ஆகலைனாலும் சரி. இப்போ முதல் வேலை மஞ்சரியை கவுன்சிலிங் கூட்டிட்டு போறதுதான்” என சரத் கூறி முடித்து விசித்ராவை காண,
அவளின் முகம் பூவாய் மலர்ந்திருந்தது. சரத்தை விசித்ராவுக்கு பிடித்திருந்தாலும் சதாசிவம் கூறிய கடந்த காலம் மூலம் சிறு வருத்தம் ஏற்பட்டது. அது இப்பொழுத்து சரத் பேசியது மூலம் அந்த வருத்தம் அகல சந்தோசமாக தனது அறைக்கு சென்றுவிட்டாள் சிரிப்புடன்.
சரத் பேசிமுடித்த பின் ஆதிலிங்க மூர்த்தி அருகில் வந்த சதாசிவமும் “ என்னையையும் மன்னிச்சுடுடா” என கூற
“ என்னடா நீ மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் கேட்டுட்டு. சீக்கிரம் வீட்டுக்கு போய் தயாராகி வாடா. நாம போய் ஜோசியரை பார்த்து நல்ல முகுர்த்த நாளா பார்த்துட்டு வருவோம். என் ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்தையும் ஜாம் ஜாம்ன்னு நடத்தணும்” என சந்தோசமாக கூறினார்
பின் சதாசிவமும் சரத்தும் விடைபெற்ற பின் , “ அடுத்து அரசனை நல்ல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் குணப்படுத்தனும்” என எண்ணிக்கொண்ண்டு ஆதிலிங்க மூர்த்தி சந்தோசமாக தன் அறைக்கு சென்றார்.
ஹர்ஷாவும் கிஷோரும் அனைவரிடமும் விடைபெற்று மாலை அரங்கநாதபுரத்தில் இருந்து கிளம்ப பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்தனர்.
“ ஏன் மச்சி வனிதாவுக்கு இந்நேரம் யாரு கொலைகாரன்னு தெரிஞ்சிருக்கும்ல” என கிஷோர் ஹர்ஷாவிடம் கேட்க
“ ஹ்ம்ம் தெரிஞ்சிருக்கும்டா. ஆதிலிங்க மூர்த்தி இந்நேரம் வனிதாவை நேரடியா பார்த்து சொல்லிருப்பார்”
“ அப்போ இனிமே என் அப்பாதான் எல்லாம் பண்ணுனார்ன்னு சொல்லிக்கிட்டு இருக்காது”
“ ஆமாடா”
“ மச்சி இந்த வேலரசன் மாதிரி ஆளுங்க நிறைய பேரு இருக்காங்கள்ல. ஒரு தலையா காதலிச்சுட்டு மத்தவங்க ஒத்துக்கலைன்னு எதாவது ஒரு வகையில அவுங்களை காயப்படுத்துறதுன்னு”
“ ஹ்ம்ம் ஆமா கிச்சா குழந்தைகளை வளர்க்கும் போது மன கட்டுப்பாடோடு மத்தவங்க உணர்வுக்கு மதிப்பளிக்குறதை பத்தியும் சொல்லி வளர்த்தா வளர்ற சமுதாயம் நல்லா இருக்கும்”
“ நீ சொல்றதும் சரிதான் ஒரு வேளை வேலரசன் மயிலரசியோட உணர்வுக்கு மதிப்பு குடுத்திருந்தா இவ்வளவு இழப்புகள் தேவை இல்ல. ஆனா மச்சி வேலரசன் தில்லைநாயகியை கூட்டு சேர்த்ததுக்கு பதிலா சொர்ணம் பாட்டியை சேர்த்திருக்கலாம்” என கிஷோர் சலிக்க
“ ஏன்டா??...” என ஹர்ஷா சிரிப்புடன் கேட்க
“ இல்ல அந்த பாட்டிதான் இன்னமும் ஆதிலிங்க மூர்த்தி தான் காரணம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கு பண்ணையார் மேல அம்புட்டு பகை. ஆனா மச்சி ஒருநாள் நம்ம குடும்பத்தோட இந்த ஒற்றை கால் மண்டபத்தை பார்க்க வரணும்ண்டா” என கிஷோர்
“ ஆமா கிச்சா உண்மையிலயே இந்த அரங்கநாதபுரத்தில் இருக்குற கோவிலும் அந்த ஒற்றை கால் மண்டபமும் சுற்றி பார்க்க வேண்டிய ஸ்தலங்களில ஒன்னுடா. இந்த தடவை நம்மளால ஒழுங்கா சுத்தி பார்க்க முடியல. நீ சொன்ன மாதிரி ஒரு நாள் வரணும்” என ஹர்ஷா கூறிக்கொண்டிருக்கையில் பேருந்து வர அதில் ஏறி அமர்ந்தனர்.
பேருந்தில் அமைதியாக அவர்கள் பயணம் தொடர திடீரென,
“ மச்சி ஊருக்கு போனவுடன் உங்க அப்பா சொன்ன மாதிரி தனியா பிரைவேட் டிடெக்ட்டிவ் ஆரம்பிக்க போறியா” என கிஷோர் கேட்க
“ இல்ல கிச்சா ஊருக்கு போய் இன்னும் கொஞ்ச நாள் வேலை பார்த்துகிட்டே கத்துக்கலாம்ன்னு இருக்கேன்”
“ ஆனா மச்சி யாரோ யாரையோ காணோம்ன்னு சொன்னாங்கன்னு, யாரையுமே தெரியாத ஊருக்கு வந்து வேற யாரோ இறந்ததுக்கு காரணம் யாருன்னு யார் யார் மேலையோ சந்தேகப்பட்டு கண்டுபிடிக்குறதுக்குள்ள….” என கிஷோர் கூறிக்கொண்டே அருகில் இருந்த ஹர்ஷாவை காண
அவன் கண்களை மூடி இருக்க, “ மச்சி நான் பேசிகிட்டு இருக்கேன் நீவாட்டு பேசாம கண்ணை மூடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என கிஷோர் ஹர்ஷாவை எழுப்பி கேட்க
“ ஏன்டா பேசுறேன்னு என்னைய போட்டு குழப்பிக்கிட்டு இருக்க” என ஹர்ஷா கடிய
“ என்ன மச்சி சொல்ற நான் குழப்புறேனா??.. இத்தனை நாளு இந்த ஒற்றை கால் மண்டபம் கதையை…”
“ என்னது???.... கதையா!!!..... “
“ இல்ல இந்த ஒற்றை கால் மண்டபம் கேஸை என்ன குழப்பு குழப்புன்னு குழப்பி அதை படிச்சவங்களுக்கு இல்ல இல்ல கூட இருந்து பார்த்த எனக்கு எப்படி இருந்துருக்கும். அதான் சும்மா அப்படி பேசுனே. ஆனா மச்சி இந்த கேஸை முடிக்க இம்மூட்டு நாள் எடுத்திருக்க கூடாதுடா” என கிஷோர் கூறிவிட்டு கொட்டாவி விட ஹர்ஷா உறங்க ஆரம்பித்தான்.
அவர்கள் பயணம் தொடர நம் பயணம் இத்துடன் முடிவடைகிறது.
நன்றி… நன்றி….. Thanks…. Thanks….. for the supporting friends
உங்க supports இல்லைனா நிச்சயம் இந்த கதையை முடிச்சுருக்க முடியாது friends. என்னோட twin babies ரெண்டு பேருக்கும் five months இருக்கும் போது இந்த story contest la கலந்துக்கிட்டு எழுத ஆரம்பிச்சேன். இடையில இடையில நிறுத்திடலாம்ன்னு நினைக்கும் போது உங்களோட கருத்துக்கள் மட்டும் தான் என்னைய எழுதவச்சது. இப்போ என்னோட முதல் கதையை வெற்றிகரமா முடிச்சுட்டேன்,(but sorry for the delay updates friends)
Once again thanks for ur comments and likes and silent readers. thank u so much……
BY
R. நிரஞ்சனாதேவி சுப்ரமணி